அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
அதிக சத்துகளும், இயற்கையாகவே நறுமணமும், அதிக சுவையும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகை. இதர அரிசி ரகங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அளவு பெரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இதர பாரம்பரிய அரிசி ரகங்களை விடவும் பாஸ்மதி அரிசி தனிச் சிறப்பு கொண்டது. புவியியல் ரீதியாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த பருவ நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். பிரியாணி மற்றும் புலாவ் உணவுக்கு பொருத்தமான அரிசி வகை என்பதால் அரபு நாடுகள் அதிக அளவு இறக்குமதி செய்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டமாற்று முறையிலான வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது கமாடிட்டி சந்தையிலும் பாஸ்மதி அரிசி வர்த்த…
-
- 0 replies
- 394 views
-
-
தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி) நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை ,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தும்மும்போது வெளியேறும் , சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இந்த திரவம், திரைகளாக , குவியல் குவியலாக, பைகளாக, மணி மணியாக வெளியேறுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது. இந்த வழிமுறை முக்கியமானது ஏனென்றால் இது கடைசியாக வெளிவரும் நீர்த்திவலைகளின் பல்வேறு அளவுகளை அதுதான் தீ…
-
- 1 reply
- 673 views
-
-
பறவையைப்போன்ற ரோபோக்களை உருவாக்குவதில் முதல்கட்ட வெற்றி! ---------------------------------------------------------------------------------------------------------------------------------- வானில் பறப்பது கடினமான செயலா? பறவைகள் மட்டும் எப்படி எளிதாக பறக்கின்றன? பறவையின் சின்னஞ்சிறு உடல், பறப்பதற்கேற்ப சிறப்பாக பரிணமித்துள்ளது. ஆனால் அதை முழுமையாய் மீளுருவாக்க மனித தொழில்நுட்பவியலாளர்களால் இதுவரை இயலவில்லை. அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் முதல் முயற்சியாக கலிபோர்னியாவின் ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முழு கட்டிடத்தையே ஒதுக்கி பறப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் பறவைகளி…
-
- 0 replies
- 458 views
-
-
பறவைகள் பறப்பதே ஓர் அதிசயம். அப்படி என்றால், சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’ (frigate birds) அதிசயமே அசந்து போகும் அதிசயம் அல்லவா? ‘கப்பல் கூழைக்கடா’, ‘கடற்கொள்ளைப் பறவை’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் பறவையைப் பற்றிய வியக்க வைக்கும் புதிய தகவல்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உணவின்றி, தண்ணீரின்றி, ஓய்வு உறக்கமின்றி, தரையிறங்காமல் தொடர்ந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடியவை என்று உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். காரணம், இதன் இறகுகள் நீர் ஒட்டும் தன்மையைக் கொண்டவை. எனவே, வாத்துபோலத் தண்ணீரில் மிதந்து ஓய்வெடுக்கவோ, முக்குளிப்பான் போலத் தண்ணீரில் மூழ்கி மீனைப் பிடிக்கவோ இதனால் முடியாது. சாப்பிடாமல் கொள்ளாமல…
-
- 2 replies
- 563 views
-
-
நிறுவனம் டிரைவர் இல்லாத காரை சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னமும் அமெரிக்காவில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான். கூகுள் நு டோனோமி (Nu Tonomy) என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் இந்நிறு வன செயலியை (App) பயன்படுத்தி இந்த டாக்சி சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு குறிப் பிட்ட வழித்தடத்தில் இந்தக் கார் சேவையை இயக்குகிறது. தொடக்கத்தில் இந்த கார் பய…
-
- 0 replies
- 394 views
-
-
வாட்ஸப்பின் பிரைவஸியை பறிக்கிறதா ஃபேஸ்புக்? என்ன செய்யலாம் நாம்? கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக தனது Privacy policy-ஐ மாற்றியிருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும், பயனாளிகளின் மொபைல் எண் மற்றும் அக்கவுன்ட் குறித்த தகவல்களை இனி தனது தலைமை நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கடந்த 25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வாட்ஸ்அப். இதனை அடுத்து, வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இதுகுறித்த புதிய பிரைவசி பாலிசி மற்றும் நிபந்தனைகளை அனுப்பி, நமது மொபைல் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டும் வருகிறது. இதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? 1.வாட்ஸ் அப்பை, 19 மில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் நிறுவனம்…
-
- 0 replies
- 486 views
-
-
தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் அபார வெற்றி கண்டவர்: ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்! இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த சாதனையாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மதுரைக்காரரான கருப்பையா முத்துமணி. உலகிலேயே முதல்முறையாக சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா ஆகிய நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ள இவரை மருத்துவ உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இவரது கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் கருப்பையா முத்துமணி (51). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. மதுரை …
-
- 0 replies
- 411 views
-
-
தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இரண்டு இலட்சம் முதல் பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மனிதர்கள் (தமிழர்கள், திராவிடர்கள், இந்தியர்கள், ஆசியர்கள். உலக மாந்தர்கள்..) – மூதாதையர் வாழ்ந்த குடியம் குகைகளுக்கு (Kudiyam Caves) கல்விப் பயணம், அறிவு சுடர் நடுவம் சார்பில் திட்டமிட்டோம். இணையத்தை தட்டினால் போக வர 14 கி.மீ காட்டு ஒற்றையடி மலைபாதை நடைபயணம் என்று காட்டியது பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆஸ்த்துமா நோய், கால் ஊனம்.. நடக்கமுடியுமா..? கேள்விகள் வந்து வந்து எச்சரித்தது. இதையும் மீறி இந்த மலைக்குகைக்கு போக வேண்டுமா என்ற கேள்வியும் எழுவது இயல்புதான்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா ..சரணம் அப்ப்பப்பா… என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண்…
-
- 0 replies
- 846 views
-
-
இங்கிலீஷ் பேச வராது, என்ன பண்றது?', 'இவ்ளோ நாள் கழிச்சு எங்கே போய் இங்கிலீஷ் படிக்கிறது? ஆயிரத்த குடு, ரெண்டாயிரத்த குடு' னு பணம் தான் வீணாகும்' இப்படி நினைப்பவரா நீங்கள்? உங்கள் இங்கிலீஷ் வாத்தியார் உங்க கூடவே இருந்தா எப்படி இருக்கும்? அதுவும் நீங்கள் விரும்பும் நேரத்தில் தமிழ் வழியாகவே உங்களுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தால்? அந்த வேலையைத் தான் செய்கிறது கல்ச்சர் அல்லீயின் 'ஹலோ இங்கிலீஷ்' (Hello English) ஆண்டிராய்டு செயலி, அதுவும் இலவசமாக. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம், அதுவும் அடிப்படை இலக்கணத்தில் இருந்து. இலக்கணம் என்றவுடன் பயந்து விடாதபடிக்கு, அன்றாடம் நாம் பேசும் வாக்கியங்களில் இருந்தே ஆங்கில இலக்கணம். அதுவும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் பல எடுத்துக்காட்டு…
-
- 0 replies
- 873 views
-
-
நௌகட்டில் புதுசா என்ன இருக்கு? #AndroidNougat கிட்காட் (K) ,லாலிபாப் (L), மார்ஷ்மெல்லோவ் (M) என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப் பொருட்களின் வைப்பதுதான் கூகுளின் வழக்கம். அதில் அடுத்த வெர்ஷனுக்கு, இந்திய உணவான 'நெய்யப்பம்' என்றுதான் பெயரிடப்படும் என நாம் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு 'நௌகட்' எனப் பெயரில் ட்விஸ்ட் வைத்தது கூகுள். தற்போது அந்த 'நௌகட்'-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது கூகுள். நௌகட் (N) அப்டேட் முதலில் கூகுளின் நெக்சஸ் டிவைஸ்களில், பீட்டா பயன்பாட்டிற்கு வரும் எனவும், பிறகு அனைத்து போன்களிலும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக நெக்சஸ் 6, நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் 9, நெக்சஸ…
-
- 0 replies
- 560 views
-
-
இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலர் மண்புழுவை ஏன் வளர்க்க வேண்டும்? அவைதாம் மண்ணிலேயே இருக்கின்றனவே என்றும், வெளிநாட்டு புழுக்கள் நமக்கு எதற்கு (கலப்பின மாடுகளைப் போல) என்று கூறுபவர்களும் உள்ளனர். பொதுவாக மண்புழுக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, மண்ணின் மேல்புறத்தில் சாணத்தை உண்டு, தம்மைப் பெருக்கிக்கொள்ளும் சாணப்புழுக்கள். இவை ஏராளமான கழிவை உண்ணும் திறன் பெற்றவை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை என்று கருதப்படுபவை. இவற்றில் இரண்டு இனங்களை நமது பண்ணையாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஒன்று Eisenia fetida , மற்றொன்று Eudrilus eugeniae. இந்த இரண்டும் வெளிநாட்டு புழுக்கள் என்று சொல்லப்பட்டால…
-
- 0 replies
- 573 views
-
-
இரண்டு காசா மாணவர்களால் உருவாக்கப்பட்ட சூரிய சக்தி வாகனம். இஸ்ரேலால் உணவு. பெற்றோல் என்பனவற்றுக்கு மாற்றீடாக இக்கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. https://www.facebook.com/XinhuaNewsAgency/videos/1355154344512006/
-
- 0 replies
- 649 views
-
-
உலகிலேயே அதிநவீன மோதிரம் Touch HB Ring. இது காதலர்களுக்கும் தம்பதியர்களுக்குமான மோதிரம். இதை அணிந்து கொண்டால் உங்கள் அன்புக் குரியவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும். போன், ஸ்கைப் என்று எத்தனையோ கருவிகள் உறவுகளுக்கு இடையே இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடுகின்றன. ஆனால் அவற்றைவிட இந்த மோதிரம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் கணவனும் மனைவியும் தனித்தனியாக இருந்தாலும் மோதிரத்தின் மூலம் அவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும்! அருகில் இருப்பது போலவே தோன்றும். ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, கணவன் அல்லது மனைவியின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். பிறகு மோதிரத்தை அழுத்தினால் இதயத் துடிப்பைக் கேட்கலாம். இந்…
-
- 1 reply
- 640 views
-
-
விண்ணிலிருந்து, பூமிக்கு அனுப்பும் தகவல்களை திருட முடியாத வகையில், உலகில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி, சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜிகுவான் மையத்திலிருந்து, 'மிசியஸ்' என பெயரிடப்பட்ட செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், ஒளியின் வேகத்தை விட விரைவாக, பூமிக்கு தகவல்கள் அனுப்பி வைக்கும்.எனவே, இதிலிருந்து அனுப்பப்படும் தகவல்களை இடைமறித்து திருட முடியாது என கூறப்படுகிறது. உலகில் முதல் முறையாக, இந்த வகை செயற்கைக்கோளை தயாரித்து, சீனா, சாதனை படைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் எடை, 600 கிலோ. http://www.seithy.com/breifNews.php?newsID=163683&category=Worl…
-
- 0 replies
- 616 views
-
-
-
- 7 replies
- 967 views
-
-
சமீபத்தில், தனது சர்வதேச விண்வெளி நிலையத்தின் நேரடி ஒளிபரப்பில் எதோ ஒரு விசித்திரமான பொருள் காட்சியளிக்கவும் நேரலையை நாசா துண்டித்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது. பின் அது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட காரியமில்லை என்று நாசா விளக்கமளித்து இருந்தாலும் அதை பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பவில்லை, இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் முதல்முறை நிகழவில்லை. நாசாவில் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் கூட ஏலியன் சார்ந்த உண்மைகள் அமெரிக்க அரசு மற்றும் நாசாவினால் மறைக்கப்படுவதாக தகவல்கள் அளித்துள்ளனர். ஆனால், எதற்கும் செவி கொடுக்காமல் தனது பணிகளையும் ஆய்வுகளையும் நாசா தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியாக, நாசா வேண்…
-
- 1 reply
- 359 views
-
-
உங்களுக்கு எதிரே நின்றுகொண்டிருக்கும் உங்கள் காதலி, அல்லது காதலன் ஒரு நானோ நொடிக்கு முந்தையவர்! இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில். "பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கே?" என்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறி குண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரியக் குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் ஒரு இடத்தில் தொடங்கவில்லை, காலத்தில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுக…
-
- 1 reply
- 493 views
-
-
பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார். மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால…
-
- 19 replies
- 5.3k views
-
-
அபாயமானதாக கருதப்படும் சீமை கருவேல மரங்களை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த மரங்களை அழித்து, மீண்டும் வளர விடாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து, பலவழிகளில் அரசு ஆராய்ந்து வருகிறது; நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 'சீமை கருவேலம் எனப்படும் வேலி காத்தான் மரங்கள், தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. இதன் அருகில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் கிடையாது. 'இதன் இலைகளை, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை. விறகுக்காக மட்டும் பயன்படும் இந்த மரங்களால், சுற்றுச்சூழல் கெடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்' என, இயற்க…
-
- 2 replies
- 572 views
-
-
900 மில்லியன் திறன்பேசிகளில் அன்ட்ரொயிட் bug என அச்சம் மில்லியன் கணக்கான அன்ட்ரொயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளில், திறன்பேசியினுடைய தரவின் கையாளுகையை முழுமையாக ஹக்கர்களுக்கு வழங்கும் மோசமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க நிறுவனமான Qualcomm-இனால் தயாரிக்கப்பட்ட chipsetகளில் இயங்கும் மென்பொருள்களிலேயே Checkpoint ஆராய்ச்சியாளர்களினாலேயே மேற்கூறப்பட்ட bugsகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Qualcomm processorsகளானவை, ஏறத்தாழ 900 மில்லியன் அன்ட்ரொயிட் திறன்பேசிகளில் இருப்பதாக Checkpoint நிறுவனம் தெரிவிக்கிறது. எவ்வாறெனினும், தற்போது இணையத் திருடர்களினால் மேற்கொள்ளப்படும் இணையத் திருட்ட…
-
- 0 replies
- 562 views
-
-
தொலைபேசி கேபிள்களில் ஒட்டுக் கேட்க முடியும், ஒளியியல் கேபிள்களில் அது முடியாது தண்ணீருக்குள் மூழ்கியவாறு மேலே பார்த்தால் ஒரு குறிப்பிட்ட திசையில், கீழேயிருக்கிற பொருட்கள் எல்லாம் தெரியும். இதற்கு ‘முழு அகப் பிரதிபலிப்பு’ என்ற நிகழ்வே காரணம். அடர்த்தி மிகுந்த ஓர் ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஓர் ஊடகத்துக்குள் ஒளி புகும்போது, எடுத்துக்காட்டாகத் தண்ணீருக்குள்ளிருந்து காற்றுக்குள் ஒளி புகும்போது, தண்ணீர்ப் பரப்பில் ஒளிபடும் கோணம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலிருந்தால், ஒளி நீர்ப்பரப்பில் பிரதிபலிக்கப்பட்டு நீருக்குள்ளேயே பாயும். அந்தக் கோணம் ‘மாறுநிலைக் கோணம்’ எனப்படும். பாலைவனங்களில் கோடைக் காலத்தில் தோன்றும் கானல் நீர், வைரங்களின் சுடரொளி போன்றவற்றுக்கு …
-
- 0 replies
- 661 views
-
-
சிங்கப்பூரில் சோதிக்கப்படவுள்ள தன்னியக்க வாடகைக் கார்கள் தானாக செலுத்தப்படும் வாடகைக் கார்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் ஒப்பந்தமொன்றுடன், உலகின் முதலாவது ஸ்மாட் தேசமாக மாற சிங்கப்பூர் தயாராகியுள்ளது. தானியங்கி வாகனங்களை சோதிப்பதற்கு, தொடக்க நிறுவனமான nuTonomyயுடன் ஒப்பந்தமொன்றை கடந்த மார்ச் மாதத்தில் சிங்கப்பூர் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது, வணிக நிலையங்களில் பயணிகளைக் காவிச் செல்வதற்கான சிறிய, தானியங்கி வாடகைக் கார் அணியொன்றை Delphi Automotive அறிமுகப்படுத்தியுள்ளது. சாரதியில்லாத வாடகைக் காரின் மூலம் மூன்று ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான மைலொன்றுக்கான பயணத்தின் செலவை 90 சதங்கள் ஐக்கிய அமெரிக்க டொ…
-
- 0 replies
- 535 views
-
-
நமது ஸ்மார்ட் போன்கள் பொதுவாகவே மோசமான பேட்டரி திறன் உடையவையாகவே நம்மால் கணிக்கப்பட்டுவரும் போதிலும், பேட்டரியின் திறன் மோசமடைவதில் நமது பங்கும் உள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இடையிடையே சார்ஜ் போடுவதைவிட ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக தீரும் முன்பாக சார்ஜ் போடுவதே சிறந்த முறையாக லித்தியம்-இரும்பு பேட்டரி தயாரிப்பவர்களும், அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு ஏற்படும் 'stress' எப்படி அவர்களது வாழ்நாளை குறைக்கக் கூடியதோ, அதேபோல், நமது ஸ்மார்ட் போன்களை கையாளுல் மற்றும் முறையற்ற வகையில் சார்ஜ் போடுவதால் பேட்டரிகளுக்கு ஏற்படும் 'stress' அதன் திறனையும், ஆயுளையும் குறைக்கக் கூடியது என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்துள்…
-
- 2 replies
- 489 views
-
-
இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்: ஸ்நேப்சாட்டின் க்யூட் வெர்ஷன் இன்ஸ்டாகிராம் என்ற புகைப்பட பகிர்வு தளம், தனது புது அப்டேட்டில், 'இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்' என்ற புதிய வசதியை வெளியிட்டு இருக்கிறது. ஸ்நேப்சாட்டில் இருப்பது போல், இனி இன்ஸ்டாவிலும், புகைப்படங்களை வைத்தே கதை சொல்ல முடியும். இன்ஸ்டாகிராம் ஆப் வந்ததும், அது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதுவும் ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க், இன்ஸ்டாவை வாங்கியதால், அதன் மேல் பலருக்கும் ஈர்ப்பு அதிகமானது. இன்ஸ்டா படங்களை, தொடர்ந்து ஃபேஸ்புக்கில் விளம்பரமாக வைத்ததால், அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கபாலி வசூல் வேகத்தில் உயர்ந்தது. 2012-ம் ஆண்டு ஏப்ரலில், இன்ஸ்டாவை ஃபேஸ்புக் வாங்கி இருந்தது. ஆனால், 2011-ம் ஆண்ட…
-
- 0 replies
- 353 views
-
-
திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள மியாவாக்கி முறை காட்டைப் பற்றிக் கேட்டறியும் அப்பகுதி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள். “இடைவெளி இல்லாத அளவுக்கு நெருக்கமாக மரங்கள் வளர்ப்பதுதான், ஜப்பானின் பிரபலத் தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’ அறிமுகப்படுத்திய காடு வளர்க்கும் முறை. அவர் முன்வைத்த சூழலியல் கோட்பாடு சார்ந்து காடு வளர்க்கும் முயற்சியைத் திருப்பூரில் முன்னெடுத்துள்ளோம்” என்கிறார்கள் லீலம்- ஜெ.ரூபன் தம்பதி. இருவரும் திருப்பூர் கணியாம்பூண்டியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர்கள். சுற்றுச்சூழல் நாளையொட்டி, திருப்பூரில் மியாவாக்கி முறையில் 12,200 சதுர அடியில் 3,200 மரங்களை நெருக்கமாக நட்டு வளர்த்துவருகின்றனர். இயற்கையாக நாம் பார்க்க…
-
- 0 replies
- 686 views
-