Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மகிந்தவின் ஒரு முக்கிய பெண்ணின் குடியும் – கூத்தும் அம்பலம். July 16, 201510:54 pm Malsha Kumaranatunge மேல் மகாண சபை பெண் உறுப்பினர் ஆவார் விஜய குமாரதுங்கவின் மகளான இவருக்கு நாகரீகம் தெரியுமா அல்லது சிங்கள மக்களின் மகிமை தான் தெரியுமா இரண்டும் தெரியாமல் இலங்கைத் திரு நாட்டை அசிங்கப் படுத்திய இவரை அரசியலில் விட்டால் சிங்கள மக்களின் நிலை என்னவாகும்……. இன்று பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியம் என பலமான குரல்கள் எழும் நிலையில் இப்படியான அசிங்கங்கள் பாராளுமன்றம் சென்றால் என்ன நடக்கும் பாருங்கள் மக்களே…….. பலரும் நல்லாட்சி என சென்ற வேளை மகிந்தவுடன் சென்ற அனைவரும் அரையும் குறையும் அதற்கு இது நல்ல ஆதாரம்……. http://www.jvpnews.com/srilanka/116798.html

    • 0 replies
    • 431 views
  2. நேருக்கு நேராக வந்த விமானங்கள்: கண் இமைக்கும் நேரத்தில் பெரும் விபத்திலிருந்து தப்பிய பயணிகள் விமானம்[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 02:18.45 பி.ப GMT ] சுவிட்சர்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவ்வழியாக எதிர்பாராமல் வந்த சிறிய ரக விமானம் மீது மோத இருக்கும் பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.சுவிஸின் சூரிச் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் Swiss Jumbo Linos என்ற விமானம் நேற்று புறப்பட்டுள்ளது. ஓடுத்தளத்திலிருந்து மேலே கிளம்பிய சில நிமிடங்களில் விமான சென்ற பாதையில் எதிர்பாராமல் சிறிய ரக விமானம் ஒன்று குறுக்கிட்டுள்ளது. சிறிய ரக விமானத்தில் வந்த விமானிகள் பயணிகள் விமானத்தை கவனிக்க தவறியுள்ளனர். ஆனால், ஆபத்தை உணர்ந்த பயணிகள் வி…

    • 0 replies
    • 266 views
  3. பிரித்தானியாவில் இலங்கை உள்ளிட்ட அகதிகளுக்கான சலுகைப்பணம் குறைப்பு [ வெள்ளிக்கிழமை, 17 யூலை 2015, 11:13.23 AM GMT ] பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் வெளிநாட்டவர்களுக்கான சலுகைப்பணம் குறைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் கீழ் இலங்கையர்கள் உள்ளிட்ட அகதி அந்தஸ்த்து கோரும் அகதிகள் பாதிப்படையவுள்ளனர். இது தொடர்பான தகவலை பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இரண்டு பிள்ளைகளைக் கொண்ட அகதி குடும்பம் ஒன்றின் பெற்றோருக்கு இதுவரையில் 149.86 பவுட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. எனினும் இனிவரும் காலங்களில் 110.85 பவுண்களாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அகதிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகதிச் …

    • 0 replies
    • 142 views
  4. Chelvadurai Shanmugabaskaran கூகிள்(கோகுல்), மைக்ரோசாப்ட், முகநூல் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் நிரம்பிய இடமாகும். கையளவு மட்டுமல்ல கடவுளுக்கே கடன் கொடுக்கக்கூடிய வசதி படைத்தவர்கள் வாழும் இடம். அதிகாலையில் எழுந்து பழக்கப்பட்டதால் அன்றும் அதிகாலை ஐந்தரை மணியளவில் எழுந்து நகரின் நடுப்புறத்தில் அமைந்துள்ள கடைகள் அமைந்துள்ள தெருக்கள் ஓரமாக நடந்து கொண்டிருந்தேன். உயர்ந்த கட்டடங்கள், உயர்ந்த “பாம்” மரங்கள் அழகாக இருந்தன. காப்பிக் கடையை தேடியவாறு நடந்துகொண்டிருந்த என் கண்களில் சில காட்சிகள் தென்படவே சற்று அதிர்ச்சியுற்று அங்கேயே நின்றுவிட்டேன். அந்த நகரத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்களிலும், தெரு ஓரமாகவும், பூங்காக்களிலும் பல வசதியற்ற பலர் படுத்திருந்தனர். அவர்கள் வீடற்றவர்க…

    • 0 replies
    • 253 views
  5. மஹிந்தவின் வெற்றிக்கு இந்திய றோ தீவிரம்…? July 16, 201510:43 am முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால், அது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக…

  6. 58 வயது தாத்தாவின் 20 வயது மனைவி மாயம்…. July 15, 20151:20 pm தானேயில் 58 வயதுக்காரரை திருமணம் செய்த 20 வயது பெண் மாயமாகியுள்ளார். இதுபற்றி அவரது கணவர் 3 மாதத்திற்கு பிறகு போலீசில் புகார் கொடுத்து உள்ளார். தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் சதிஷ் ஆப்தே (வயது58). இவர் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று அம்ருதா என்ற 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிப்ரவரி 14–ந் தேதி காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த நிலையில் அம்ருதா திடீரென மாயமாகி விட்டார். அவர் கடந்த மார்ச் 31–ந் தேதி முதல் காணாமல் போய் விட்டதாக சதிஷ் ஆப்தே நவ்பாடா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் தனது வீட்டில் இருந்த குடும்ப நகைகளை திரு…

  7. நாயின்... காலைப் பிடித்து, தலைகீழாக சுற்றி தூக்கி வீசிய.... இளைஞர் கைது. டெல்லி: டெல்லியில் 21 வயது இளைஞர் ஒருவர் நாயை அடித்துத் துன்புறுத்துவதை வீடியோவாக எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அந்த நபரின் பெயர் ராகுல் குமார். 21 வயதாகும் அவர் விவேக் விகார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டிருந்தார். அதில் ஒரு தெரு நாயைப் பார்த்து அதை முதலில் அருகே போய் அதைத் தட்டிக் கொடுத்து கட்டித் தழுவுகிறார். பின்னர் அந்த நாயை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார். அதை அடிப்பதோடு, ஒரு காலைப் பிடித்துத் தூக்கி சுற்றுகிறார். பின்னர் படு வேகமாக அந்த நாயை தூக்கி ஒரு கார் மீது வீசுகிறார். அந்த நாய் வீறிட்டுக் கத்து…

    • 4 replies
    • 323 views
  8. சுவையான "பர்கர்" பரிமாறிய ஒபாமா: சந்தோஷத்தில் மூழ்கிய சிறுமி[ புதன்கிழமை, 15 யூலை 2015, 08:22.59 மு.ப GMT ] வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 9 வயது சிறுமிக்கு பர்கர் பரிமாறியுள்ளார்.சமீபத்தில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிகாகோவை சேர்ந்த 9 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுமி ஸ்ரேயா படேல் தனது தாயார் பிரீதி படேலுடன் கலந்து கொண்டார். விருந்தில் பல்சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன, அப்போது விருந்து நடைபெற்ற இடத்துக்கு திடீரென வருகை தந்த ஒபாமா, விருந்தில் உணவு பரிமாறுவதை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், சிறுமி ஸ்ரேயா படேலுக்கு ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் அவளுக்கு ‘கரம் மசாலா பர்கர்’…

    • 0 replies
    • 306 views
  9. சிறையிலிருந்து போதை பொருள் கடத்தல் மன்னன் தப்பியது எப்படி: வெளியான வீடியோ ஆதாரம் (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:27.46 மு.ப GMT ] மெக்சிகோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரன் Joaquin Guzman, 2வது முறையாக சிறையிலிருந்து தப்பியது அந்த சிறையில் இருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு பில்லியன் மதிப்பில் போதை பொருட்களை கடத்தி வந்த Joaquin Guzman என்ற குற்றவாளி கடந்த சனிக்கிழமை அன்று Altiplano சிறையிலிருந்து இரண்டாவது முறையாக தப்பியுள்ளான். சிறை அறையின் தளத்தை தோண்டி, பூமிக்குள் குகைப்போல சுமார் 1.5 கி.மீ தூரமுள்ள வழித்தடத்தை உருவாக்கி குற்றவாளி தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி சிறையிலிருந்து தப்பியது குறி…

    • 0 replies
    • 328 views
  10. உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…

    • 0 replies
    • 333 views
  11. நடுவீதியில் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல்… July 15, 201511:02 am நடுவீதியில் ஒரு தகராறு – காரோட்டும் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல் – அதிரடி காணொளி……. http://www.jvpnews.com/srilanka/116595.html ஆடம்பர வாகனமும் அதிகார தோரணையும் அள்ளி வீசும் இந்த அம்மே!அரசியல் வாதியா? அல்லது போதைக்கும்பலா? எதற்கும் ஒரு தகுதி தராதரம் வேண்டுமோ?

  12. டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்! [ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:20.29 AM GMT ] டக்ளஸ் தேவானந்தா ஒரு கோடீஸ்வரர்தான். இவர் வைத்திருக்கின்ற கோடீஸ்வர செல்வம் மக்களாகிய நீங்களே. என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சமூக சேவையாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இவர் வட்டுக்கோட்டையில் துணவி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு கூறினார். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு- யாழ். …

  13. சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை டி.வியிலோ, தியேட்டரிலோதான் பாத்திருப்போம், கொடுத்து வைத்த சிலர் காட்டில் கூட பார்த்திருக்கலாம். ஆனால் அதே சிங்கம் நடுரோட்டில் மானைக் கடித்துக் குதறி துவம்சம் செய்யும் காட்சியை இதற்கு முன் எங்காவது பார்த்ததுண்டா? இப்படி ஒரு அரிதினும் அரிதான சம்பவம் நடந்தது தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க்கில். அங்கு சிங்கங்களை பார்ப்பதற்காக பிரத்தியேக கார் சபாரி வசதி உண்டு. கடந்த வெள்ளியன்று, சுற்றுலாப் பயணிகள் அந்த காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு காட்டுமான் திடுதிடுவென சாலைக்குள் புகுந்து காரில் மோதியது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பாற்றுவதற்காக காரிலிருந்து இறங்கப் போன ஒருவரை பக்கத்தில் இருப்பவர் இழுத்து உள்ளே போட்டார். காரணம் அந்த மா…

    • 0 replies
    • 314 views
  14. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஸ்டாபோர்ட் நகரின் மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையின் மைய பகுதியில் திடீர் என விமானம் ஒன்று இறங்கி ஓடத்தொடங்கியது.இதை பார்த்த காரோட்ட்டிகள் அனைவரும் பயந்து அலறி தங்களது காரை ஓரமாக கொண்டு சென்றனர். இதை பார்த்த விமானி விமானத்தை சாலையின் மையத்தில் இருந்த புல்வெளிக்கு திருப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விமானத்தின் இறக்கை சேதம் அடைந்து உள்ளது என உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்தது ஸ்டாப்போர்ட் போலீஸ் கூறியதாவது:- சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானம் ரோட்டில் இறங்கியது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.அதை கிழக்கு கடற்கரை ஸ்கை டைவிங் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்து உள்ளனர்.திடீர் என என்ஜின் ச…

    • 0 replies
    • 316 views
  15. விதுரன் வில் உடைத்தது சரியா? வீஷ்மர் போர் தொடுத்தது சரியா? [ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 12:36.12 PM GMT ] [ வலம்புரி ] பாரதப்போர் தொடங்குவதற்கு முன்னதாக அரச சபையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகின்றது. கெளரவர் தலைவன் துரியோதனனின் அட்டகாசத்தைத் தாங்க முடியவில்லை. பாண்டவர்களை எதிர்ப்பதே தனது பணி என்று அவன் கருதியதால் வீஷ்மர், துரோணர், விதுரன் முதலான மூத்த தலைவர்களை அவன் கடிந்து கொண்டான். கெளரவர்-பாண்டவர் போர் நடப்பது உறுதி என்றாகி விட்ட நிலையில், துரியோதனனின் மன நிலையும் குழம்பியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் விதுரனைப் பார்த்து தகாத வார்த்தையால் துரியோதனன் திட்டுகிறான். இச்சந்தர்ப்பத்தில் விதுரன் தனது வில்லை எடுத்து சபையில் முறித்துவிட்டு இனி மேல் வில்லெடேன் என்று சத்த…

  16. இருபதாம் நூற்றாண்டிலும் சிலர் இன்னும் ஒரு ஊசி குத்திக்கொள்ள கூட பயந்து மருத்துவரிடம் போகாமல் தனக்குதானே சிகிச்சை செய்து கொள்வதுண்டு. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பத்தில் தற்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் பெருகிவிட்டன. பூசுமஞ்சள் வாங்க மளிகைக் கடைக்கு போவதுபோல தங்களது இல்லாத அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்துகொள்ள இப்போது இளம்வயது பெண்கள் டாக்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கோணல் மூக்கை நேராக்குவது, பெருத்துப் போன இடையை குறுக்கி, சுருக்கி ‘இஞ்சி இடுப்பழகி’ ஆவது, செயற்கை மார்பகங்களுக்கு சிலிக்கான் சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக இன்று லட்சக்கணக்கான பெண்கள் தகுதியும், திறமையும் வாய்ந்த டாக்டர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், எல்லா …

    • 0 replies
    • 344 views
  17. தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா! அமிர்தலிங்கத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சம்பந்தர் அய்யா. அமிர்தலிங்கத்தால் எம்.பி யாக்கப்பட்டவர் சம்பந்தர் அய்யா அந்த அம்ர்தலிங்கத்தையே இந்த தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டார் சம்பந்தர் அய்யா! கடந்தவருடம் அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தின்போது "அமிர்தலிங்கத்தின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று அறிக்கை விட்ட சம்பந்தர் அய்யா, இந்த வருடம் (13.07.15) எந்த அறிக்கையும் விடாத மர்மம்தான் என்னவோ? அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பா? (1) அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கமாட்டார். ஏனெனில் இந்திய ராணுவம் படுக…

    • 0 replies
    • 198 views
  18. மட்டு வாலிபனுக்கு சவுதியில் நடந்த கொடூரம்…. July 13, 20157:38 am சவுதிஅரேபியேவில் ரியாத் நகரில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். தற்போதும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளார். குறித்த இளைஞனின் ஆணுறுப்பு வழியாக நுழைந்த கம்பி அவரின் தோள்மூட்டுவரை கிழித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. http://www.jvpnews.com/srilanka/116220.html

  19. நிலவு படங்களில் 47 இடங்களில் மனித உருவ வடிவங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.ஒரு பாதையில் உருவாக்குவது போல் ஒரு உருவத்தை அடுத்து மற்றோரு உருவத்துக்கும் இடையே அதே அளவு இடைவெளியில் அந்த உருவங்கள் தெரிகின்றன. - See more at: http://www.canadamirror.com/canada/46114.html#sthash.W4Fe8jyr.dpuf

    • 0 replies
    • 323 views
  20. உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: உணவு பொருட்கள் மீது வரியை கூட்டுகிறதா பிரித்தானிய அரசு?[ திங்கட்கிழமை, 13 யூலை 2015, 06:32.33 மு.ப GMT ] பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் விதத்தில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள திரவ உணவுகள் மீது உள்ள வரியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரித்தானியாவில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மக்கள் பின்பற்றுவதில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சர்க்கரையின் அளவு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமானோர் எடுத்துக்கொள்வதால் ஒபிசிட்டி(Obesity) எனப்படும் உடல் பருமன் நோயிற்கு ஆளாகின்றனர். தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாததால், பல நோய்களு…

    • 0 replies
    • 311 views
  21. https://www.facebook.com/slupfa/videos/10153351355951259/ மருத்துவமனையில் சுசில் அனுமதிக்கப்பட்டதும் வேட்புமனுக்களை கைப்பற்ற ஓடிச்சென்ற மகிந்த JUL 14, 2015 | 1:36by கார்வண்ணன்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் பலருடைய வேட்புமனுக்களை கட்சி நிராகரித்திருந்த …

    • 0 replies
    • 348 views
  22. குவைத் வங்கியில் வெளிநாட்டை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் நாடு கடத்தினர். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத், பக்ரைன் ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது. குறிப்பாக புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வாகன ராேந்தில் காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர், அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவரை கைது…

  23. கனடா- அல்பேர்ட்டாவிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் குடியிருப்பு மனைக்குரிய ஒரு துண்டு நிலம் 10 டொலர்களிற்கு வழங்கப்படுகின்றது.டெலியா என்ற இக்கிராமத்தில் தற்போதைய மக்கள் தொகை 186. சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த விற்பனை இடம்பெறுகின்றது.டெலியா சிறிதாக இருந்தாலும் இங்கு நூல்நிலையம், பனி சறுக்கு ,உணவகங்கள் மற்றும் கிரடிட் யூனியன் போன்றன உள்ளன.இந்த சிறிய இடத்தில் வசிப்பதால் பெரிய நன்மைகள் உள்ளன என மேயர் டான் பன்குறொவ்ட் தெரிவித்துள்ளார்.பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் சைக்கிள்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார். வாழக்கைத் தரமும் சிறந்த இடமாகும்.டெலியா மற்றய சில சிறிய கிராமங்கள் மற்றும் ரவுன்களை போன்று தனி…

    • 5 replies
    • 432 views
  24. கடந்த 14-05- 2015 அன்று கொழும்பு மகஸீன் சிறைச்சாலையில் முன்னால் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் சுந்தரம் சதீஸ் கிணற்றடியில் வழுக்கிவிழுந்ததால் மரணமடைந்ததாக சிறைச்சாலை அதிகரிகள் தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனல் அவர் நஞ்சு உட்டப்பட்டு மரணத்தை தழுவியதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. அவர் வழுக்கி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட காயங்களும் சிறைச்சலையில் வைத்து அவர் தாக்கப்படிருகலாம் என்ற சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. மேலும் இச்சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அவருடன் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது தொடர்பில் இருந்த அப்புத்துரை நியாயராசா எனப்படும் சதீஸ்சினுடைய உறவினரை விசாரணைக்கு வரும்படி இராணுவத்தினர் என தம்மை அடையாளபடுத்தி சிலர் மேற்படி நப…

    • 0 replies
    • 500 views
  25. இலங்கை பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் மரணம்! July 12, 201511:27 am ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொழில் புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணொருவர் தாக்கியத்தில் மற்றுமொரு வீட்டுப் பணிப்பெண் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஃஹூஜிரா என்ற பிரதேசத்தில் இந்த பெண்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என ஐக்கிய அரபு ராஜ்ஜிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/116159.html

    • 0 replies
    • 261 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.