செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
மைத்திரி விலகவுள்ளார்? July 12, 20157:25 am ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கியதைத் தொடர்ந்து, தமது ஆதரவாளர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட ஜனாதிபதி மைத்திரியின் நிலை தற்போது இருதலைக்கொள்ளி எறும்பாக மாறியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவருக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சிகளும் ஆதரவாளர்களும் பிரிந்துசென்று, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுசேர்ந்துள்ளனர். மக்கள் ஆணையை மைத்திரி காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களும், தற்போது மைத்த…
-
- 0 replies
- 289 views
-
-
எனது புகைப்படம் நன்றாக இல்லை, வேறு படம் மாற்றுங்கள்; தேடப்படும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கோரிக்கை சந்தேக நபர் ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரி, பேஸ்புக் பக்கத்தில் சந்தேக நபரின் புகைப்படத்துடன் பொலிஸார் தகவல் வெளியிட்டனர். "இப்புகைப்படம் நன்றாக இல்லை, வேறு அழகான படம் போடுங்கள்" என சந்தேக நபரே பதில் அளித்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில பொலிஸார், டேனியல் டொமோன் எனும் சந்தேக நபரை தேடிவந்தனர். அந்நபர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டேனியலின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்…
-
- 0 replies
- 760 views
-
-
"பரோட்டா" வாங்கித்தராததால், நண்பனின்... கழுத்தை நெரித்துக் கொன்றேன். தச்சு தொழிலாளி பகீர் வாக்குமூலம். புதுச்சேரி: புதுச்சேரியில் பரோட்டா வாங்கிக் கொடுக்காததால் பெயிண்டர் ஒருவரை அவரது நண்பர் கொலை செய்துள்ளார். புதுச்சேரியில் உள்ள சித்தன்குடியைச் சேர்ந்த சுந்தரராஜன் மகன் மணிகண்டன்(22). பெயிண்டர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சாரம் ஞானப்பிரகாசம் நகரில் இருக்கும் கழிவுநீர் வாய்க்காலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மணிகண்டன் மர்ம மரணம் அடைந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனையில் ம…
-
- 0 replies
- 252 views
-
-
பாடையில் போன தாத்தாவுடன் செல்பி எடுத்த வாலிபர்! சவுதியில் இறந்தவரின் உடலுடன் செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர் குறித்து பரபரப்பாக பேசி வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் ஒருவர் இறந்தவர் உடல் தாங்கிய பாடையுடன் செல்பி எடுத்து பயமுறுத்தியுள்ளார். செல்பி என்பது ஒரு வகையான மன வியாதி என்று கூறி விட்டது ஆய்வு. ஆனாலும் செல்பி எடுக்க விரும்பாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஆளாளுக்கு எடுத்துத் தள்ளுகிறார்கள். செல்பி, குருப்பி என்று இது பல பரிணாம வளர்ச்சியையும் பார்த்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஒருவர் இறந்து போன தனது தாத்தாவின் உடலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போயுள்ளார். இவர் யார் எந்த ஊர்…
-
- 2 replies
- 635 views
-
-
நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனித இனம் பல்வேறு துறைகளில் புதுப்புது வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. ஏன் இன்னும் பல அபரிமிதமான வளர்ச்சியையும் சமூகம் காணப்போகிறது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்ற…
-
- 1 reply
- 11.3k views
-
-
பணக்காரர் என்பதை நிரூபிக்க பணத்துடன் விளையாடும் நபர்கள் சீனாவில் உள்ள 70 பணக்காரர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவர்கள் தான் பெரிய பணக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காக பணத்தை எரித்து மற்றும் நாசம் செய்து அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு பெரும் தொகையான பணத்தினை நாசமாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன அரசாங்கம் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இளைஞர் யுவதிகளை சமூக சேவையில் ஈடுபடுத்துவதற்கு சீன அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/10/பணக்காரர்-என்பதை-நிரூபிக்க-பணத்துடன்-விளையாடும்-நபர…
-
- 0 replies
- 1k views
-
-
லக்னோ: ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி. மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்…
-
- 6 replies
- 404 views
-
-
ஓடும் காரில் பெண் பயணியை பார்த்தபடியே சுய இன்பம் செய்த கால் டாக்சி டிரைவர்! டெல்லி: தனியார் கார் நிறுவன டிரைவர் வண்டி ஓட்டும்போதே, ஒருமாதிரியாக சிரித்தபடி, சுய இன்பம் அனுபவித்தார் என்று காரில் பயணித்த இளம் பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் சகீத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் சம்பவத்தன்று, பரிதாபாத்துக்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். 'டாக்சி பார் சுயர்' நிறுவனத்தில் இருந்து டாக்சி வந்துள்ளது. இந்நிலையில், பயணத்தின்போது பயங்கர அனுபவத்தை சந்தித்துள்ளார் அப்பெண். இதுகுறித்து இளம் பெண் கூறியதாவது: காரை தேவேந்திரகுமார் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். நான் சென்று சேர வேண்டிய பகுதிக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக இருந்து அவரது நடவடிக்க…
-
- 4 replies
- 908 views
-
-
நீங்கள் சாப்பிடுவது சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் அரிசியா? - செக் செய்வது எப்படி? மேகியை விடுங்க பாஸ். நாம் 3 வேளையும் உட்கொள்கிற உணவான அரிசியிலும் கைவைத்துவிட்டார்கள். அதுவும் எப்படி...? சீனாவில் ‘பிளாஸ்டிக் அரிசி’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய வழக்கறிஞர் சுக்ரிவா துபே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகள், வர்த்தகர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரிசியை விற்பனை செய்கிறார்களா என்று ரெய்டு நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.…
-
- 3 replies
- 1.4k views
-
-
தனி நபரின் வீட்டிலிருந்து பாரிய இராணுவத் தாங்கி, பீரங்கி மீட்பு இரண்டாம் உலக யுத்த கால இராணுவத் தாங்கியொன்றையும் பீரங்கியொன்றையும் தனி நபர் ஒருவரிடமிருந்து ஜேர்மனிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அரிய பொருட்களை சேகரித்து வைக்கும் வழக்கம் கொண்ட 78 வயதான நபர் ஒருவர் தனது வீடொன்றின் அடித்தளத்தில் 45 தொன் எடையுள்ள இராணுவத் தாங்கி, பாரிய பீரங்கி மற்றும் பல ஆயுதங்களை வைத்திருந்தார். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையொன்றின்போது இவற்றை ஜேர்மனிய அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் இராணுவ பொறியியலாளர்கள் அழைக்கப்பட்டு, அத்தாங்கியும் ஏனைய ஆயுதங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டன. மேற்படி நபரின் பெயர…
-
- 0 replies
- 329 views
-
-
கலவான பகுதியில் கணவனின் பையில் பெண் ஒருவரின் உள்ளாடை இருப்பதை கண்ட மனைவி கணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவன் கடைக்குச் சென்று மனைவிக்கு பாதனி ஒன்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்லும் வழியில் பொருட்கள் இருந்த பை பாரம் தாங்காமல் அறுந்துள்ளது. இந்நிலையில் குறித்த நபருக்கு வீதியால் சென்ற பெண் ஒருவர் உதவி செய்துள்ளதோடு, தனது பையையும் தவறுதலாக அவரிடம் விட்டுச் சென்றுள்ளார். இதை அவதானிக்காது குறித்த பையை வீட்டுக்கு கணவன் எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்துள்ளார். பையை திறந்து பார்த்த மனைவி, பையினுள் பெண்ணின் உள்ளாடை இருப்பதை அவதானித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த மனை…
-
- 1 reply
- 376 views
-
-
இனி உங்களால் உடைக்க முடியாது! சமூக வலைதளங்கள் வாயிலாக, உலகமே திரண்டு ஒரு நிறுவனத்துக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளது. அது எந்த நிறுவனம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? கோக்ககோலா? மான்சாண்டோ? கேஎஃப்சி?... கண்டிப்பாக நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள். சீல்டு ஏர் (Sealed Air) என்கிற பபில் விராப் ( Bubble Wrap) பேகேஜிங் கவர் தயாரிக்கும் நிறுவனம்தான் அது. பேகேஜ் செய்து அனுப்பப்படும் பெரிய இயந்திரங்கள் முதல் கையடக்க செல்போன் வரை பாதுகாப்பாக செல்ல பயன்படுத்தப்படும் இந்த Bubble Wrap-ஐ அனைவருமே பார்த்திருப்போம். காற்று நிரப்பப்பட்ட சிறு பிளாஸ்டிக் குமிழ் போன்ற அமைப்பைக் கொண்ட அந்த கவரை பார்த்ததுமே உங்களை அறியாமலே அந்த பபில்ஸை உடைத்து பொழுது போக்கியிருக்கிறீர்கள் என்றால்…
-
- 0 replies
- 325 views
-
-
தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்தி பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வியப்பூட்டும் ஒரு சோதனையை நேர்முகத்தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள காங்டான் மகாணத்தில் உள்ள காங்கோழு என்ற இடத்தில் சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் முதலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுகாதார பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தனது நிறுவனத்தில் 9 விற்பனை பிரநிதியை பணியில் அமர்த்த திட்டமிட்ட அந்நிறுவனம், அதற்கான நேர்முகதேர்வு ஒன்றையும் நடத்தியது. இ…
-
- 1 reply
- 223 views
-
-
இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது. ஆனால் தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் தலை கீழாக தொங்க விட்டு அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை http://www.jvpnews.com/srilanka/114453.html
-
- 11 replies
- 1.2k views
-
-
பிரபாகரன் – பொட்டு அம்மான் இருவரையும் தேட ஆரம்பித்த இன்டர்போல். July 02, 20159:57 am அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதையெல்லாம் விட முக்கியம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ. சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில சந்தோஷ தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை…
-
- 1 reply
- 661 views
-
-
கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய பிள்ளையார்! முல்லைத்தீவில் பரபரப்பு தகவல்!! [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 06:38.18 AM GMT ] முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமி தனது விளையாட்டுக் காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அந்தக் காருடன் கிணற்றினுள் வீழ்ந்து விட்டது. குறித்த கிணறு 12 அடி நீரைக் கொண்ட ஆழமான கிணறாகும். இருந்தும் சிறுமி அக் கிணற்றின் உள்ளே ஏதோ ஒரு ஆதாரத்தைப் பிடித்தபடி தனது அத்தையை அழைத்துள்ளாள். சிறுமியின் குரல் கேட்ட அத்தை கிணற்றினுள் பார்த்து விட்டு அலறி அடித்தபடி கிணற்றினுள் வாளியை வி…
-
- 0 replies
- 325 views
-
-
மகிந்தவை அச்சுறுத்தும் விடுதலைப் புலிகளின் ஆவி? [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 09:00.41 AM GMT ] மகிந்த ராஜபக்சவை ஆவிகளிடமிருந்து பாதுகாக்க அரசு மாதாந்தம் மூன்று கோடிக்கு மேல் செலவு செய்கின்றது. தனக்கு கொலை அச்சுறுத்தல், பயமுறுத்தல் என்பன விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி, இதில் இருந்து தன் உயிரை காப்பாற்றி கொள்ள அரசு தனக்கு மேலதிக பாதுகாப்பை கோரி இருந்ததையும், இதற்கு அரசு இவரின் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விபரங்களை கடந்த மாதம் பிரதமர் ரணில் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்ததையும் கண்டு நாட்டின் பொதுமகன் என்ற முறையில் அதிர்ச்சியடைந்தேன். காரணம் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஓர் முன்னாள் ஜனாதிபதி. அவருக்கு முன்னாள…
-
- 0 replies
- 356 views
-
-
க்ளைமாக்சில் வில்லன் துப்பாக்கியால் சுடும்போது கழுத்தில் போட்டிருக்கும் டாலரோ, பாக்கெட்டில் வைத்திருக்கும் பொருளோ ஹீரோவின் உயிரைக் காப்பாற்றுவதை பல தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனா இப்போ ஹீரோக்கள் எல்லாம் காஸ்ட்லியான ஐபோன் தானே பாக்கெட்ல வச்சிருக்காங்க, அதனால் எத்தனை ஐபோன் பாக்கெட்டில் இருந்தால் துப்பாக்கி தோட்டவிலிருந்து தப்பிக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த வீடியோ…. https://www.youtube.com/watch?v=DbVHe5A6rJs . - See more at: http://www.canadamirror.com/canada/45568.html#sthash.wA0fuakK.dpuf
-
- 0 replies
- 357 views
-
-
• இப்பொது புரிகிறதா? தேர்தலில் போட்டியிட ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள் என்று! இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ, salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத…
-
- 1 reply
- 376 views
-
-
சீனாவில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர, உணவு பறிமாறும் ஊழியர்கள் கவர்ச்சி உடையில் பணி செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் நகரில் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் வாடிக்கையாளர்களைக் கவர, நீச்சல் உடை அணிந்த அழகிகள் உணவு பறிமாற நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள், உணவுடன் இந்த கவர்ச்சி விருந்தையும் விரும்பியதாகவும் இதனால் ஹோட்டலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கவர்ச்சியான கட்டழகு கொண்ட ஆண்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/06/27/கவர்ச்சி-விருந்து
-
- 0 replies
- 317 views
-
-
தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார். ஆனால் ஒரு வயதுக்கூட ஆகாத கைக்குழந்தையுடன் இளம்பெண் காட்டுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். கொலம்பியாவில் உள்ள சோகோவின் குயிப்டோ என்ற இடத்திலிருந்து நுகுய் என்ற இடத்திற்கு பசிபிக் கடல் வழியாக ஒரு குட்டி விமானம் சென்றது. இந்த விமானம் அல்டோ பவுடோ என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை கர்லோஸ் மரியோ செபல்லோஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார். இதில் மரியா நெல்லி முரில்லோ (வயது 18) என்ற இளம்பெண் தன் கைக்குழந்தையுடன் சென்றார். இரண்டு என்ஜின் கொண்ட இந்த விமானம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இத்தகவல் கிடைத்…
-
- 0 replies
- 295 views
-
-
நம் சீரியல் நடிகைக்கு நிஜ வாழ்கையில் இது தான் நடக்கும். வீட்டில் கணவனின் கொடுமை பாருங்கள். June 26, 201510:37 am நம் சீரியல் நடிகைக்கு நிஜ வாழ்கையில் இது தான் நடக்கும். வீட்டில் கணவனின் கொடுமை பாருங்கள். http://www.jvpnews.com/srilanka/113904.html
-
- 0 replies
- 642 views
-
-
இந்தியாவில் கடல் நடுவில் இப்படி ஒரு ஆச்சர்ய விமான நிலையம் உள்ளது …எத்தனை பேருக்கு தெரியும் June 26, 20158:27 pm விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங்களுக்கு முன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்கள் மெர்ஸ்லாயிடுவாங்க. ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும். அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. அரேபிக் கடலில் இருக்கும் 36 தீவுகளைக் கொண்ட லட்சத்வீப், இந்திய மத்திய அரசால் இயங்கும் சுற்றுலாத் தலம். கப்பல்களில் மட்டுமே செல்ல முடிந்த அகட்டி தீவில், 1987-ல் விமான நிலையம் கட்டத் தொடங்கி, 1988-ல் முட…
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கைஅரசின் உள்ளக கசிவுகள் மரண தண்டனை பெற்றுச் செல்லும் ஆழ ஊடுருவும் படையணித்தலைவருக்கு இரட்டிப்புச் சம்பளமும் ராஜ போக வாழ்க்கையுமாம்.இவர் ஒரு தேசிய வீரர் கூட, இவர்களைப்போல இன்னும் பலர் சிறை செல்லவிருக்கின்றனர்.இப்படி இவர்கள் சிறை செல்வதால் வெளி நாட்டு போர்க்குற்ற இலங்கை மீதான அழுத்தங்கள் இல்லாமல் போகுமாம். கோத்தபாயா பின்வருமாறு புலம்பல்: 2009ல் ஆனந்தபுரத்தில் நடந்த சமரில் பல ராணுவத்தினரும் இந்திய ராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டார்கள்.அதன் பின் பெரியளவில் நேரடிச்சமர் எதுவும் நடக்கவில்லை.ஆகவே விடுதலைபுலிகள் பெருமளவில் தப்பிவிட்டார்கள்.இதனால் தான் ராணுவத்தினரை நாட்டைச் சுற்றி நிறுத்திவைத்துள்ளேன்வடக்கிலிருந்து ராணுவத்தினரை எடுத்தால் புலிகள் மீண்டும் வந்து …
-
- 0 replies
- 201 views
-
-
30 வருடங்களின் பின்னர் தாயைக் கண்டுபிடித்த இலங்கைப் பெண்: மனதை நெகிழவைக்கும் சம்பவம்! [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 11:52.51 AM GMT ] இலங்கையில் பிறந்து நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பெண்ணொருவர் அவரது தாயை தேடிக் கண்டுபிடித்த சம்பவமொன்று சந்தலங்காவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது 30 வயதாகும் அப்பெண் நெதர்லாந்து நாட்டில் பொறியியலாளராக இருப்பவரென தெரிவிக்கப்படுகின்றது. இவர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் எனவும் அவரும் அவரது சகோதரியும் 1985-03-04 அன்று சந்தலங்கா வைத்தியசாலையில் பிறந்ததாகவும் தெரியவருகின்றது. நிமலாவதி என்ற அவரது தாயாரால் இரண்டு குழந்தைகளையும் சுமார் 2 1/2 மாதங்கள் வரையே வளர்க்க முடிந்துள்ளது. பொருளாதார சிக்கலால் தவித்த அவர் …
-
- 0 replies
- 273 views
-