Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஹஜ் யாத்திரை... குறித்து, முக்கிய தீர்மானம் ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்பதில்லை என முஸ்லிம்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த நபர்கள் ஹஜ்ஜுக்கு தேவையான டொலர்களை தமது நண்பர்கள் மூலம் கொண்டு வந்தபின்னரே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருட ஹஜ் யாத்திரையில் 1,585 இலங்கையர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1285982

  2. நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர், பானுமதி. 40 வயதான அவர், சில வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து வெள்ளத்துரை என்பவருடன் குடித்தனம் நடத்தி வருகிறார். சபலம் கொண்ட தொழிலதிபர்களை சமூக வலைதளங்களில் தேடிக் கண்டுபிடித்து, முகநூல் நண்பர்களாகி ஏமாற்றி மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார், பானுமதி. 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்த விவரம் வெளியாகியுள்ளது. முகநூல் பழக்கத்தில் தொழிலதிபர்களை கடத்திய தம்பதி அவரிடம் அண்மையில் சிக்கிய சேலம் மாவட்டம், அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்யானந்தன் மூலமாகவே இந்த வில்ல…

  3. மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர். இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்து உள்…

  4. கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்! கொழும்பு, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரியில் வைத்து வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரத்தினபுரி பொலிஸின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிலியந்தலையில் உள்ள தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்…

    • 1 reply
    • 180 views
  5. Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை…

  6. ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றிய 10 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை- 16பேர் காயம்! பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பாக்லானில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் தளம் பகிர்ந்த காணொளியில், காயமடைந்தவர்களை மாகாண தலைநகர் புல்-இ-கும்ரி மருத்துவமனைக்கு அழைத்து வருவது காட்டப்படுகின்றது. அருகிலுள்ள வயலில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றிய அடுத்த நாளில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமிய அரச குழுவான (ஐ.எஸ் அம…

  7. மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி! மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய மாணவியொருவரே சம்பவத்துடன் தொடர்புற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினமான இன்று (23) அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கர்ப்பிணியான இவர், கர்ப்பிணி என தெரிவிக்காது வயிற்று வலி என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில்…

  8. மரணம் அல்லாத... கழுத்தை நெரிக்கும், குற்றவாளிகளுக்கு... ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த பிறகு பயத்தை கட்டுப்படுத்த அல்லது தூண்டும் முயற்சியில் தங்கள் நண்பர்களை கழுத்தை நெரிக்கும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். மரணம் அல்லாத கழுத்தை நெரித்தல் என்பது பொதுவாக யாரோ ஒருவர் கழுத்தை நெரிப்பது அல்லது வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் மூச்சுத்திணறல் திறனைக் கட்டுப்படுத்த அல்லது பயமுறுத்துவதை உள்ளடக்குகிறது மேலும், இது அரசாங்கத்தின்…

  9. யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது https://athavannews.com/2025/1416338

  10. ஐக்கிய நாடுகள் சபையில் போர் நடந்த இடங்களில் வேலை செய்தவருடன் ஆவுடையப்பன் செவ்வியின் போது ஆரம்பத்தில் பல நாடுகளில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். 17வது நிமிடத்திலிருந்து கச்சதீவு பற்றிய பேச்சு வருகிறது. மீன்பிடி பிரச்சனை பற்றியும் பேசுகிறார்கள். கச்சதீவை இந்தியா கொடுத்திருக்க கூடாது என்று வாதாடும் ஆவடையப்பன் ஒரு சுட்டக்காய் நாடு எப்படி இந்தியாவை மிரட்டி வாங்கிக் கொண்டது என்று ஆச்சரியப்படுகிறார். தமிழ்களுக்கு தமிழீழம் அமைவதை இலங்கை ஒத்துக் கொண்டாலும் இந்தியா ஒத்துக் கொள்ளாது என்று அடித்துக் கூறுகிறார். சீனாவில் இருந்து இலங்கை பாகிஸ்தான் நேபால் மாலைதீவு போன்றவையை எப்படி பிரித்து வைக்கலாம் என்பதில் இந்தியா முயற்சி உள்ளது. பாகிஸ்தானில் தோற்றுவிட்டோம். ம…

  11. ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஹுடா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தொடக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஜன்பத் மெட்ரோ நிலையத்திலிருந்து பாட்டா செக் வரை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் செய்தார். அவர் ஃபரீதாபாத் சிவில் நீதிமன்ற வளாக மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று பதர்பூர்-ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ விரிவாக்க வழித் தடத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஹெலிகாப்டரில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, அவர் திடீரென மெட்ரோ ரயிலில் பயணித்தார். ஜன்பத் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சுமார் காலை 10 மணிக்கு புறப்பட்டார். 32 கிலோ மீட்டர் தொலைவுடைய, விழா நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள பாட்டா செக் வ…

  12. தாதியின் அலட்சியத்தால் 10 பேர் உயிரிழப்பு! தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இச்சம்பவம் இடமபெற்றுள்ளது. குறித்த வைத்திய சாலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் திடீரென ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியொருவர் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய வலி நிவாரிணியான ஃபெண்டானில் (fentanyl) மருந்தைத் திருடி, அ…

  13. அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. பந்துல 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார் இதற்கு முன்னர், மிளகாய் பயிர்ச்செய்கையில் அதிக வருமானம் பெற்ற இரு விவசாயிகளும் திரப்பனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் 50 இலட்சமும் …

  14. பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரணின் குழந்தைப் பருவ புகைப்படம் கட்டுரை தகவல் முகமது ஜுபைர் பிபிசி உருது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோகம் நிரம்பிய இந்தக் கதை 17 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டார் ஜி10இல் உள்ள ஒரு சாலையில் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோது, 10 வயது சிறுமியான கிரண் ஐஸ்கிரீம் தேடி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது கிரணுக்கு ஐஸ்கிரீம் கிடைத்துவிட்டது, ஆனால் அவரது பெற்றோரும், அவரது குழந்தைப் பருவமும், அவரிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கஸூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண். கராச்சியில் உள்ள எதீ மையத்தில், பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரிடம…

  15. குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்? படக்குறிப்பு,பிரேமலால் மற்றும் அவரின் எக்ஸ்ரே படம் கட்டுரை தகவல் தாரகா சம்மனா பிபிசி சிங்கள சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் பல் துலக்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும் அதுவே ஆபத்தானதாக மாறியது என சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒன்றை தான் இலங்கையில் உள்ள பிரேமலால் எதிர்கொண்டார். சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பாகத்தை (bristle) மருத்துவர்கள் அகற்றி பிரேமலால் உயிரை காப்பாற்றினர். சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருந்த பிரேமலாலுடன் பிபிசி சிங்கள சேவை உரையாடியது. "ஜனவரி 23-ஆம் தேதி காலை குளியலறை சென்று பல் துலக்கிய போது எதிர்பாராதவிதமாக வழு…

  16. கனடாவில் உள்ள எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் “லூசி” சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக “Free the Wild” அமைப்பு தெரிவித்துள்ளது. லூசி எட்மண்டன் மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் அனாதை இல்லம் ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் 1977 இல் எட்மன்டன் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது .லூசி கனடாவிற்கு சென்ற போது லூசிக்கு வயது இரண்டு . சுவாசக் கோளாறால் தவிக்கும் “லூசி” தற்போது வாயால் சுவாசிப்பதாகவும், அதனால் லூசியை மயக்கமடையச் செய்ய முடியாது என்றும் மயக்கமருந்து கொடுத்தால் சுவாசம் நின்றுவிடும் என்றும் “Free the Wild” அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மயக்க மருந்து சாத்தியமற்றது என்பதால், சிகிச்சை அல்லது உடல்நிலையை சரிபார்க்க மேற்கொள்ளப்படும் சோதனைகளை லூசிக்க…

  17. வடமராட்சியில்... வீதியில் மயங்கி விழுந்த சிறுவன், உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளான். அதனை அவதானித்தவர்கள் சிறுவனை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்…

  18. அதிக நேரம் விளையாடிய கணவன் ; ஆண்குறியை அறுத்து கழிவறையில் வீசிய மனைவி தென்கொரியாவில் பெண்ணொருவர் தன் கணவர் கோல்ப் விளையாட்டில் அதிக நேரத்தினையும், கவனத்தையும் செலுத்தி வந்தமையினால் அவரின் ஆண்குறியை அறுத்து கழிவறையில் வீசிய சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் கோல்ப் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். நேரம், காலம் கடப்பது தெரியாமல் அதிக நேரம் தினமும் கோல்ப் மைதானத்தில் கழித்துள்ளார். இதனால், தனது 50 வயது கணவன் மீது கோபமடைந்த 54 வயதுடைய பெண் அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்த வேளையில் அவரின் ஆண்குறியை வெட்டி கழிவறையில் வீசியுள்ளார். மேலும், வலியால் துடித்த குறித்த கணவர…

  19. 4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி மனைவிக்கு வீடியோ அனுப்பிய தந்தை கைது. ஊவா- பரணகம பகுதியில் அமைந்துள்ள கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், மனைவி தனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் தான், மகனை தாக்கும் காட்சியை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தக் காணொளியை சந்தேக நபரின் மனைவி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா தோட்டம், மேல் பிரிவு – உடுபுஸ்ஸல்ல…

    • 1 reply
    • 177 views
  20. வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 12:28.19 பி.ப GMT ] மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.சர்வதேச அளவில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு ரத்தத்தை பரிமாற்றம் செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆண்டுக்கு 12 மில்லியன் நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தின் இருப்பு என்பது 8 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே தேவையானதாக இருந்து வருகிறது. இந்த பற்றாக்குறையை ப…

    • 0 replies
    • 177 views
  21. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் சீசர் ஒலால்டே. 18 வயதான இவர், தற்கொலைக்கு முயல்வதாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைக்க, அவரது வீட்டிற்கு பொலிஸ்விரைந்துள்ளது. சீசர் ஒலால்டேவின் தற்கொலையை தடுத்து நிறுத்திய நிலையில், அங்கு நிலவிய காட்சிகளால் பொலிஸாருக்கு அதிர்ச்சியும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில், சீசர் ஒலால்டேவை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பேரில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பொலிஸ்துறையினர், “சீசர் ஒலால்டே, அவரது பெற்றோர்களான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, அவரின் மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரைச் சுட்டுக் கொலை செய்திருக்கிறார். அவர்களைக் கொலை செய்தது ஏன் என சீசரிடம் நடத்த…

  22. எதிர்வரும் ஜூன் 11 முதல் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் – அதிகாரபூர்வ தகவல்கள் வெளியீடு அமெரிக்க வரிக் கொள்கை அவகாசம் முடிவதற்கு முன் இலங்கை உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – பேராசிரியர் சிறிமல் அபேரத்ன நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தொழில் சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதற்கு 17 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு தீர்மானம் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் - உதய கம்மன்பில சுட்டிக்காட்டு

  23. மனைவியை கொலை செய்த கணவன் கைது. வாத்துவை, வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் வாத்துவ, வேரகம பகுதியைச் சேர்ந்த இஷாரா நிஷாதினி சல்காது என்ற 29 வயதுடைய பெண் ஆவார். உயிரிழந்த பெண்ணுக்கு 6 மாதம் , 3 வயது மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக அவரது 37 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1420321

  24. இங்கிலாந்தில் இருந்து விடுமுறைக்கு வந்த குழந்தை கடலில் மூழ்கி உயிரிழப்பு – யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலில் நீராடச் சென்ற ஆறு வயதுக் குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக குழந்தை உட்பட பெற்றோர் அண்மையில் நாடு திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தாயும் தந்தையும் குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுச் சென்றதாகவும், அங்கு விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை தங்கியிருந்த உறவினரின் வீடு கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், குழந்தை யாருக்கும் தெரியாமல் கடலுக்கு நீராட…

  25. செல்ஃபி எடுக்க சென்று ரயிலில் மோதி தாயும் மகளும் பலி December 22, 2024 07:25 pm அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 18 வயதுடைய மகளும் 37 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் அவர்கள் மோதுண்டுள்ளனர். செல்ஃபி எடுக்கும்போத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.