Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. பந்துல 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார் இதற்கு முன்னர், மிளகாய் பயிர்ச்செய்கையில் அதிக வருமானம் பெற்ற இரு விவசாயிகளும் திரப்பனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் 50 இலட்சமும் …

  2. சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது, ஹூவாங்கின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மகள் இணையத்தில் வெளியிட்ட பதிவில், “பற்களை பிடுங்கிய பி…

  3. மும்பை, மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு கடலில் விழுந்த கல்லூரி மாணவியை காப்பாற்ற முயன்ற வாலிபரையும் அலை இழுத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் கல்லூரி மாணவிகள் 3 பேர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க பின்னால் சென்ற கோவந்தி என்ற மாணவி கால் தவறி கடலில் விழுந்தார். இதனை கண்டு மாணவியை காப்பாற்ற ரமேஷ் என்பவர் கடலில் குதித்துள்ளார்.அவரையும் கடல் அலை இழுத்து சென்றது, கடலில் விழுந்த இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://www.dailythanthi.com/News/India/2016/01/09162713/Mumbai…

  4. மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி! மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய மாணவியொருவரே சம்பவத்துடன் தொடர்புற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினமான இன்று (23) அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கர்ப்பிணியான இவர், கர்ப்பிணி என தெரிவிக்காது வயிற்று வலி என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில்…

  5. பந்தயத்தின்போது தீப்பற்றிய கார் : ஜப்பானில் சம்பவம் By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 01:46 PM ஜப்பானில் நடைபெற்ற காரோட்டப் பந்தயத்தின் போது காரொன்று தீப்பற்றி அழிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹையுண்டாய் (Hyundai) அணியின் கார் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியது. அக்காரின் சாரதிகளான ஸ்பெய்னைச் சேர்ந்த டெனி சோர்டோ மற்றும் கென்டிடோ கரேரா ஆகியோர் போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மரங்கள் அடர்ந்த வீதியொன்றின் ஊடாக இக்கார் சென்றுகொண்டிருந்தபோது அது திடீரென தீப்பற்றியது. காரின் சாரதி டெனி சோர்டோ இதுதொடர்பாக கூறுகையில், காரின் ஆசனங்களுக்கு இடையிலிருந்து பெற்றோல் வாசனையும் தீயும் வருவதை த…

  6. கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழப்பு! மகன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பு கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார் எனவும், இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய …

  7. உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ) அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் இராட்சத பூசனிக்காய் படகில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 46 வயதான அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தனது தோட்டத்தில் இராட்சத பூசணிக்காய்களை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ஒன்றை வளர்த்த அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் குறித்த பூசனியை படகாக மாற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த படகினைப் பயன்படுத்தி கொலம்பியா ஆற்றில் சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர் அந்த படகில் பயணித்துள்ளார். 26 மணி நேர…

  8. வீடொன்றில் தங்கப் புதையல் தோண்டுவதற்கு முயன்ற ஏழு பேர் கைது ShanaJune 11, 2022 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் எடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மின் பயன்பாடு அற்ற டெட்ட…

  9. ஏற்றுமதித் தொழிற்துறையைச் சுற்றியுள்ள சவால்கள் தொடர்பாக அநுரகுமார திசாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் அரசாங்கம் கவிழும் என்ற பிரச்சாரம் நகைச்சுவைத் தனமாகும் – அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவிப்பு வடக்கில் இராணுவத்திடமிருந்த காணிகள் விடுவிக்கப்படும் சில சந்தர்ப்பங்களில், தென்பகுதி அரசியல்வாதிகள் சிலர் அதற்கு எதிராகக் இன்றும் கருத்துத் தெரிவிப்பதாக வட மாகாண கருத்து தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்

    • 0 replies
    • 156 views
  10. காணொளிக் குறிப்பு, அறுவை சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி அறுவைச் சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த யானை நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்காவில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்தது. இந்த யானைக்கு பிஜயகஜ் என்று பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையில் யானையால் குட்டி ஈன முடியாததை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சை செய்தாலும் குட்டி யானை உயிருடன் பிறக்குமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். https://www…

  11. படக்குறிப்பு, சார்லஸ் மெவேசிகா தனது பிரிட்டன் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினார், மேலும் தான் ஒரு முன்னாள் லண்டன் பேருந்து ஓட்டுநர் என்று கூறினார். கட்டுரை தகவல் ருனாகோ செலினா பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன் 16 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன துபையின் மிக கவர்ச்சியான பகுதிகளில் செயல்பட்டு, பெண்களை சுரண்டி வரும் ஒரு பாலியல் வர்த்தகக் கும்பலின் தலைவர் பிபிசி புலனாய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டன் முன்னாள் பேருந்து ஓட்டுநர் என சொல்லிக் கொள்ளும் சார்லஸ் மெவேசிகா, மாறுவேடத்தில் இருந்த எங்களது செய்தியாளரிடம் ஒரு பாலியல் ரீதியான விருந்துக…

  12. யாழ். பல்கலை மாணவிகள், தங்கியிருந்த வீட்டின் மீது... தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதக் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1282208

  13. மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர். இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்து உள்…

  14. உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் குருந்தூர் மலை பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் இருவரும் விடுதலை வடக்கு வைத்தியசாலைகளில் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டு

    • 0 replies
    • 155 views
  15. கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்! கொழும்பு, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரியில் வைத்து வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரத்தினபுரி பொலிஸின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிலியந்தலையில் உள்ள தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்…

    • 1 reply
    • 155 views
  16. இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சி…

  17. 2025; தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள். உலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள், மனிதர்களுடன் அன்னிய தொடர்பு, விளாடிமிர் புட்டின் மீதான கொலை முயற்சி, பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனங்களைச 2025 ஆம் ஆண்டுக்கு கணித்துள்ளனர். இவர்கள் 470 வருட இடைவெளியில் பிறந்திருந்தாலும், நவீன வரலாற்றில் இதுவரை நடக்காத சில பெரிய நிகழ்வுகளை இருவரும் கணித்துள்ளனர். பாபா வங்கா (Baba Vanga) பாபா வங்…

  18. பட மூலாதாரம்,FACEBOOK/KANGALA WILDLIFE RESCUE படக்குறிப்பு,வலேரி, நாய் கட்டுரை தகவல் எழுதியவர், பிராண்டன் ட்ரெனன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டின் காட்டுப் பகுதிகளில், சுமார் 500 நாட்களைக் கழித்தபின் 'மினியேச்சர் டாஷண்ட்' என்ற வகையை சேர்ந்த ஒரு நாய் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதியில் உள்ள கங்காரு தீவில் 'வலேரி' என்ற பெயர் கொண்ட அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நாட்கள் 'இரவும் பகலும்' செலவழித்ததாக கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்கள் செய்த ஒரு கேம்ப்பிங்க் (camping) பயணத்தின்போது வலேரி நாய் தங்களிடமிருந்து ொலைந்து போனதாக அதன் உரிமையாளர்கள் …

  19. Published By: RAJEEBAN 09 NOV, 2023 | 06:02 AM யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர். யேமனின் கரையோர பகுதியில் இந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதிஅரேபிய ஆதரவு குழுவிற்கு எதிராக 2015 முதல் போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளனர் - ஈரான் இவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றது. https://www.virakesari.lk/article/168860

  20. பைடன் மனைவியுடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து டிரம்ப் குசும்பு The photo’s caption reads, “A fragrance your enemies can’t resist!” அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், தன் வாசனை திரவிய பொருட்களின் விளம்பரத்துக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில்லுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலதிபரான டிரம்ப், தன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது விளம்பரப்படுத்துவார். உயர் ரக கை கடிகாரங…

  21. வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 …

  22. அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு புவியியலாளர் கால்டெராவின் விளிம்பில் வெப் கேமராவை சரிபார்க்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ்கா ஜில்லட் பதவி, பிபிசி செய்தி அமெரிக்காவின் ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை மிகச் சரியான தருணத்தில், ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பியதைத் தொடர்ந்து பூங்கா நிர்வாகம் புதிய எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. "அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை தனது குடும்பத்தினரை விட்டு தள்ளிச் சென்று கண்ணிமைக்கும் நொடியில் கிலாவியா எரிமலையின் 400 அடி…

  23. Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 05:03 PM தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இரண்டு வயது ஜேர்மன் ஷெப்பர்ட் “கமாண்டர்” என்ற நாயை என்ன செய்வது என்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் தகவல் தொடர்பு பணிப்பாளர் எலிசபெத் அலெக்சாண்டர், வெள்ளை மாளிகை பணியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதி…

  24. Published By: RAJEEBAN 14 FEB, 2024 | 10:14 AM கொவிட்பெருந்தொற்று காலத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அவசரசேவை பிரிவிற்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்களின் உதவி கிடைக்காததால் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. 23 வயது இலங்கையரான சச்சிந்த பட்டகொடகே நவம்பர் 2020இல் ஐந்து நாட்களில் மூன்று தடவைகள் அடிலெய்ட் ரோயல் மருத்துவமனைக்கு அழைப்புவிடுத்ததும் தனக்கு இருமல் உள்ளதாகவும் இருமும்போது இரத்தம் வருவதாக தெரிவித்ததும் அதற்கு சில நாட்களின் பின்னர் அவர் உயிரிழந்தமையும் மரணவிசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 2020 இல் அடிலெய்டிற்கு குடிபெயர்ந்த சச்சிந்த தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்துள்…

  25. அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் வேகாசில் இருந்து நேற்று மதியம் 2 மணி அளவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார். விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து விமான நிலையம் விரைந்த பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும், பயணி கூறியதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.