செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த பழமையான கேக், பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டடத்தில் தங்கியுள்ளார். http://newuthayan.com/story/16/106-ஆண்டுகள்-பழமையான-கேக்-கண்டெடுப்பு-பழுதடையாமல்-இருக்கும்-அதிசயம்.html
-
- 0 replies
- 356 views
-
-
சுத்தம் செய்தபோது கிடைத்த லாட்டரி அமெரிக்காவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் 'நன்றி தெரிவிக்கும்' நாளை முன்னிட்டு, வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது கிடைத்த லாட்டரி சீட்டின் மூலம் தம்பதியருக்கு இந்திய மதிப்பில் சுமார் 12.7 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக சில லாட்டரி சீட்டுகள் கிடைத்தன என்கிறார் டினா எரென்பெர்க். கிடைத்த லாட…
-
- 0 replies
- 375 views
-
-
மனம் மட்டுமல்ல... உடலாலும் பொருத்தமானவர்கள் சுதாவும், குமரனும்! இருவரும் மாற்றுத்திறனாளிகள்; காதலித்து மணம் முடித்தவர்கள். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தங்கள் இல்லத்தில், அழகான வாழ்க்கையை சமீபத்தில்தான் ஆரம்பித்திருப்பவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னோம்! போலியோவால் பாதிக்கப்பட்டு கால்களின் செயல் இழந்த சுதா, மெல்லப் பேசினார். ‘‘என் சொந்த ஊர் வாலாஜா. காலுக்கு பதிலா, கடவுள் எனக்கு தைரியம் நிறையக் கொடுத்துட்டார். வாலாஜா, ராணிப்பேட்டை, சென்னைனு என் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிச்சேன். இப்போ காட்பாடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிக்கான பள்ளியில ஆசிரியரா வேலை பார்க்கிறேன். அதுக்காக காட்பாடியில ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தப்போ, தினமும் பள்ளி முடிந்ததும் சமையலுக்க…
-
- 0 replies
- 381 views
-
-
10 FEB, 2024 | 03:12 PM வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரை பல பாகங்களாக பிரித்து விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38 வயதுடையவர்களாவர். கம்பஹா குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காரானது அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வாகன வாடகை சேவை நிலையம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/176041
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவை…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு. இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான தீவு இது. அந்தமான் - நிக்கோபார் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதி. மியான்மருக்கும், இந்தோனேசியா…
-
- 0 replies
- 395 views
-
-
ரஷ்யாவில் நள்ளிரவில் பேய் வேடம் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்திய நபர் துப்பாக்கியால் சுடப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் விளாடிமர் டசபாவ் சொந்தமாக நகைச்சுவை இணையதளத்தை நடத்தி வருகிறார். இந்த இணையதளத்தில் அவர் பல்வேறு நகைச்சுவை வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார். இந்நிலையில் புதிய நகைச்சுவை காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்ட விளாடிமர், நள்ளிரவில் பேய் வேடமிட்டு, ஏமாளிகளுக்காக காத்திருந்தார். நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஒரு இளைஞர் வருவதை அறிந்த விளாடிமர் அவரை நோக்கி நடந்து சென்றார். ஆனால் பேய் வேடமணிந்த விளாடிமரைக் கண்டு சிறிதும் பயப்படாத அந்த இளைஞன், அவரை சரமாரியாக தாக்கினார். கிழே விழுந்த விளாடிமரை நோக்கி அந்த இளைஞ…
-
- 0 replies
- 231 views
-
-
பாகிஸ்தானின் மிகவும் பருமனான மனிதர் மருத்துவமனை குழப்ப நிலையால் உயிரிழப்பு! பாகிஸ்தானில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக சத்திரசிகிச்சை செய்துகொண்ட ஒருவர் மருத்துவமனையில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக கவனிப்பாரின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். லாகூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாதிக்காபாத் பகுதியை சேர்ந்த நூருல் ஹசன் சிறு வயதில் இருந்தே உடல் பருமன் அதிகரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது எடை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், 55-வது வயதில் சுமார் 330 கிலோ எடையுள்ள மனிதராக மாறிப் போனார். அவருக்கு எடை குறைப்புக்கான சந்திர சிகிச்சையை மேற்கொள்ள குடும்பத்தார் முயற்சித்து வந்தனர். இந்த தருணத்தில், பாகிஸ்தானின…
-
- 0 replies
- 804 views
-
-
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய வாகனம் – 35 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு) சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் 43 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய சாரதி தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாக விபத்து தொடர்பில் வாக்குமூலம் பெற முடியாமல் பொலிஸாரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1408264
-
- 0 replies
- 298 views
-
-
98 வயதிலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்! 8 வயதிலும் மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரான்ஸின் மேற்கு பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் செனேய் ஒரு வைத்தியர். 1951ஆம் ஆண்டில் முதன்முதலாக மருத்துவம் பார்க்க தொடங்கிய அவர், பரிஸ் புறநகர் பகுதியில் மருத்துவமனை திறந்து வாரத்துக்கு 2 நாட்கள் காலையில் சிகிச்சை அளித்து வருகிறார். பரிஸ் புறநகர் மக்களும், அவரிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 98 வயதிலும் மக்களுக்கு மருத்துவம் செய்து வரும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளது. http://athavannews.com/98-வயதிலும்-மக்களுக்கு-மரு/
-
- 0 replies
- 344 views
-
-
'தினமும் பீட்ஸா வாங்கும் வாடிக்கையாளர் 11 நாட்களாக வரவில்லை' - அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய பீட்ஸா நிலைய முகாமையாளர் தினமும் பீட்ஸா வாங்கும் வாடிக் கையாளர் ஒருவர் தொடர்ந்து 11 நாட்களாக பீட்ஸா வாங்காததை உணர்ந்த பீட்ஸா விற்பனை நிலைய முகாமை யாளர் ஒருவர், ஏதேனும் ஏற்பட்டி ருக்கலாம் எனக் கருதி, அவசர சேவைப் பிரிவின ருக்கு தகவல் கொடுத்ததன் மூலம் அவ் வாடிக்கை யாளரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் சலேம் நகருக்கு அருகிலுள்ள டொமினோ வர்த்தக நிலையக்கிளையில் கேர்க் அலெக்ஸாண்டர் எனும் வாடிக்கையாளர் ஏறத்தாழ தினமும் மாலை வேளைகளில் இணையத்தளம் மூலம் பீட்ஸா வாங்குவார். அண…
-
- 0 replies
- 284 views
-
-
துப்பாக்கி ஏந்திய இளம்பெண் 2 தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார் - கொண்டாடும் ஆப்கானிஸ்தான் சமூக ஊடகம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் Social Media சமூக ஊடகங்களில் வைரலான துப்பாக்கி ஏந்திய பதின் வயதுப் பெண். ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பதின் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தமது குடும்பத்தின் ஏகே 47 துப்பாக்கியை கையில் ஏந்திய இந்தப் பெண், இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்…
-
- 0 replies
- 319 views
-
-
சந்தையைக் கலக்கும் நீச்சல் உடை - 'Shocked Trump' ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ? On sale for $49.95 http://www.telegraph.co.uk/news/2017/06/22/shocked-trump-swimsuit-will-make-body-great/
-
- 0 replies
- 419 views
-
-
இராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, இராவணன் ஆட்சியின் போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்…
-
- 0 replies
- 331 views
-
-
-லக்மால் சூரியகொட சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண்ணின் நான்கு வயது இளம்பிள்ளையொன்று தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமானபோது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நான்குவயது சிறுவனின் பெற்றோர் இருவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒன்பது வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் மேன்முறையீடு தொடர்பாக இப்பிள்ளையின் தாய் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்கு கொண்டு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது தானும் தாயுடன் போகப்போவதாக அந்த சிறுவன் கதறியழதொடங்கினான். …
-
- 0 replies
- 603 views
-
-
-
- 0 replies
- 319 views
-
-
கண்டியிலிருந்து மகியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஆபாசப்படம் காண்பிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாச காட்சிகள் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் சிறுவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பயணிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் இதன் காரணமாக நடத்துனரிற்கும் பயணிகளிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை உருவானதை தொடர்ந்து பயணிகள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 524 views
-
-
பாட்னா, பீகார் மாநிலம் சிதாமார்கி மற்றும் மதுபானி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அட்டகாசம் செய்து, 6 பேரது உயிரை பலிவாங்கிய காட்டு யானை தனது இயற்கை வாழிடமான நேபாளம் நாட்டிற்கு சென்றது. பீகாரில் யானை தாக்கியதில் 4 பேர் காயமும் அடைந்தனர். இதுதொடர்பாக வனஅதிகாரி எஸ்.எஸ். சவுதாரி பேசுகையில், “நாங்கள் வெற்றிகரமாக காட்டு யானையை நேபாளத்திற்கு அனுப்பிவிட்டோம். மதுபானி மாவட்டம் ஜெய்நகரில் சர்வதேச எல்லையை அதிகாலை 2:30 மணியளவில் யானை கடந்துவிட்டது. நாங்கள் இதனை யானையின் பாத தடங்களை கொண்டு ஆய்வு செய்தோம்.” என்று கூறினார். மற்ற யானைகளுடனான மோதலையடுத்து காட்டு யானை இந்தியாவிற்குள் காட்டுப்பகுதியில் நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பீக…
-
- 0 replies
- 1.4k views
-
-
சட்டவிரோத மோட்டார்வண்டி நிறுத்தல் : டாங்கிகளால் அழிப்பு லித்துவேனிய தலைநகரான வில்நியுசில் அதன் நகரபிதா அங்கே சட்டத்தை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களை டாங்கி மூலம் நசுக்கினார். அதன் மூலம் தமது ஆத்திரத்தையும் கண்டிப்பான செய்தியையும் கூறியுள்ளார்.
-
- 0 replies
- 536 views
-
-
படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட இளைஞர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு விதையொன்று அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த 7-ஆம் தேதி வாகனமொன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர். போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்திய நிலையில், போலீஸாரின் கட்டளை சமிக்ஞையை மீறி வாகனத்தை அந்த ஓட்டுநர் செலுத்தியுள்ள…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு! 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய பெருவில் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த கோயிலுக்குள் கிடைத்துள்ளன. 131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் வாள்போன்ற புராதனப் பொருட்களும் ஏராளமாக கிடைத்துள்ளன. http://athavannews.com/3000-ஆண்டுகள்-பழைமையான-கோயில/
-
- 0 replies
- 269 views
-
-
கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக இலங்கையை வந்தடைந்த பயணியிமிருந்தே இந்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த மீட்பு மேற்கொள்ளப்பட்டது. 40 வயதுடைய அந்தப் பெண் பயணி, தனது பொதிகளில் பாம்புகளை மறைத்து வைத்திருந்தார். https://athavannews.com/2025/1446891
-
- 0 replies
- 96 views
-
-
அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோப்பு படம் நியூயார்க்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்ப…
-
- 0 replies
- 486 views
-
-
கிளிநொச்சியில் உடும்புகளை வேட்டையாடியவர் கைது – ஐந்து உடும்புகள் உயிருடன் மீட்பு! April 19, 2021 கிளிநொச்சி காட்டு பகுதியில் உடுப்புகளை இறைச்சிக்காக வேட்டையாடி வைத்திருந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வட்டக்கச்சி , இராமநாதபுரம் – புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிகாக நபர் ஒருவர் வீட்டில் வைத்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் ஐந்து உடும்புகளையும் உயிருடன் மீட்டதுடன் , வேட்டையாடிய நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரையும் , அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஐந்து உடும்புகளையும் கிளிநொச்சி நீதவான் நீ…
-
- 0 replies
- 376 views
-
-
-
- 0 replies
- 393 views
-