துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
351 topics in this forum
-
கிளிநொச்சி விஸ்வமடுவில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் லயன் மாவட்டம் 306-B1 இன் கொழும்பு மத்தி லயன்ஸ் கழகத்தினால் யுத்தத்தினால் அவையவங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. பல நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் யுத்தத்தினால் அவையவங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள், கோழிக்குஞ்சுகள், துவிச்சக்கர வண்டிகள், ஊன்றுகோல்கள், வங்கி சேமிப்புகணக்கு புத்தகங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது தகவலுக்கு நன்றி Chelvadurai Shanmugabaskaran
-
- 0 replies
- 640 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி. மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ்அவர்கள் மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து சுந்தரதாஸ் அவர்கள் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கான வசதிகள் ஏதுமற்ற நிலமையில் எம்மிடம் உதவி கோரியிருந்தார். இவருக்கான முதல்கட்ட உதவியினை கருணையுள்ளம் கொண்ட எழிலி பொன்னுத்துரை அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/
-
- 0 replies
- 706 views
-
-
இத்தாலி பலர்மோ தமிழ் தேசிய மாணவர் கூட்டமைப்பு திருவையாறு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் உதவி என் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடை பெற்ற நிகழ்வில், இத்தாலி பலர்மோ தமிழ்த் தேசிய மாணவர் கூட்டமைப்பு கிளிநொச்சி திருவையாறு மாணவர்களின் ஒரு பகுதியினருக்கு நேற்று அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளனர். கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான குமாரசிங்கம், சுவிஸ்கரன், ஓய்வுநிலை அதிபரும் சமுக அபிமானியமான ராஜேந்திரம், திருவையாறு கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், வடமாராட்சி கிழக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந், எனது செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ…
-
- 0 replies
- 526 views
-
-
யாழ் கட்டப்பிராய் வறிய குடும்பத்திற்கு முதற்கட்டமாக உதவிய ஜப்னா மின்னல்
-
- 0 replies
- 697 views
-
-
வாசிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். ஒக்ரோபர் மாதம் கணக்கறிக்கை.
-
- 0 replies
- 869 views
-
-
முன்னாள் போராளிக்கு புலம்பெயர் உறவுகளால் வாழ்வாதார உதவி! வடக்க மாகாணம் முழுவதும் மாவீரர் தினத்தையொட்டி முன்னாள் போராளிகளுக்கும், மாவீரர்களின் குடும்பங்களுக்கும் பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள், சுய தொழில் உபகரணங்கள் என்பன பொது அமைப்புக்களாலும் புலம்பெயர் உறவுகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த தனது இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதாரத்தை கொண்டுநடத்துவதற்கான படகு மற்றும் இயந்திரம் என்பன நேற்று (சனிக்கிழமை) மாலை வழங்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் பின்னர் தமது இரண்டு கால்களையும் இழந்த நிலையிலும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேறு ஒருவருடன் கூலித் தொழிலாளியாக கடற்தொழிலில் ஈடு…
-
- 0 replies
- 1.4k views
-
-
யுத்த களத்திலிருந்து ஒரு சமையல் புத்தகம் கீதா சுகுமாரன் https://www.facebook.com/palmeraprojects/ https://www.palmera.org/handmade/ அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது அடைஇடைலக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் போர்க்களத்தில் கணவனை இழந்தபின் விதவை வாழ்நிலையைப் பற்றிய இப் புறநாநூற்று வரிகள் (புறம் 246) பெரிதும் அறிந்ததுதான். இங்கே நெய் தீண்டாமல், நீரிலிருந்து பிழிந்தெடுத்த சோறும் எள்ளின் விழுதும் கலந்த உணவே அந்தப் பெண்ணின் நலிவுற்ற வாழ்முறையின் உடலாகச் செயல்படுகிறது. தனக்குக் கிடைக்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் 3வது முன்னேற்றம் ஒக்ரோபர் மாதம் கணக்கறிக்கை :- http://hmclk.com/p121.html
-
- 0 replies
- 480 views
-
-
நேசக்கரம் ஆதரவில் எழுவான் அபிவிருத்திச் சங்கம் உருவாக்கம் மன்னாரில் போரால் பாதிப்புற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக நேசக்கரம் பிறைட் பியூச்சர் உப அமைப்பான ‚'எழுவான்' அபிவிருத்திச் சங்கத்தின் முதலாவது ஒன்று கூடலும் முதலாவது தொழில் முயற்சிக்கான உதவி வழங்கலும் 23.03.2013 அன்று நடைபெற்றது. மன்னார் தேனுடையான் கிராமத்தில் உருவாக்கப்பட்ட 'எழுவான்' அபிவிருத்திச் சங்கமானது வடக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் தனது சேவையை எதிர்காலத்தில் அதிகரித்து தமிழ் மக்களின் பொருளாதார கல்வி மேம்பாட்டை நோக்கிய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கிலே உருவாக்கம் பெற்றுள்ளது. மன்னார் தேனுடையான் ஞானவைரவர் கோவில் தலைவர் வீ.தினேஸ்வரன் தலைமையில் 23.03.2013 அன்று முதலாவது ஒன்று கூடல் இடம…
-
- 0 replies
- 636 views
-
-
சர்வதேச சிறுவர்தின நிகழ்வு சர்வதேச சிறுவர்தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பும் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய தொழில் வழிகாட்டல் பிரிவும் இணைந்து 01.10.2013 அன்று மட்டக்களப்பு விபுலானந்தா முதியோர் இல்லத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வினை நடாத்தியிருந்தது. நிகழ்வில் 50பாடசாலை மாணவர்களுக்கு நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு 21500ரூபா பெறுமதியான 50 புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்திருந்தது. 18முதியோர்களுக்கான பரிசுப்பொருட்களை பாடுமீன் லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபி அவர்களும் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வியதிகாரி சுபா சக்கரவர்த்தி , மட்டக்க…
-
- 0 replies
- 639 views
-
-
தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டம். தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டத்தின் கீழ் 23.09.2014 அன்று தன்னாமுனை கிராமத்தில் வாழும் போசாக்கு குறைந்த குழந்தைகளில் 41 குழந்தைகளுக்கான போசாக்குணவு வழங்கலும் கருத்தரங்கும் நடைபெற்றது. வறுமையும் போரின் தாக்கங்களும் ஆரோக்கியம் குறைந்த குழந்தைகளைக் கொண்ட கிராமங்களின் தேன்சிட்டு உளவள அமைப்பின் பணிகள் பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒருமுறை பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அம்மக்களின் குறைகள் தேவைகளை கேட்டறிந்து செற்படும் திட்டத்தில் தேன்சிட்டு உளவள அமைப்பின் பிரதிநிதிகள் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். புரட்டாதி மாதம் மாளைய தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவிலிருந்து கருணையாளர் ஒருவர்…
-
- 0 replies
- 557 views
-
-
தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு. மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனாம்வெளி கிராமத்தில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தேன்சிட்டு உளவள அமைப்பின் ஒருநாள் விழிப்பணர்வு செயலமர்வு 06.03.2014அன்று நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் உதயசிறீதர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை , கிராமசேவையாளர் கோகுலன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா , நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பாளர் ரஜிக்காந்தன் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜெனன் அவர்களும் பங்கேற்றிருந்தார்கள். இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்றலில் மிகவும் பின் தங்கிய…
-
- 0 replies
- 569 views
-
-
சீமெந்துக்கல் விற்பனை ஆரம்பம். July 30, 2013 தொழில்கள் Edit This எமது Hand made creators (pvt)Ltd தொழில் நிறுவனத்தின் முதல் முயற்சியாக சீமெந்துக்கல் உற்பத்திக்கான முதலீட்டாளர்களை இணைத்து உருவாக்கிய தொழில் நிறவனமானது 23.07.2013 அன்று மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எமது முதல் முயற்சியில் 377405,00ரூபா முதலிடப்பட்டு 12 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் 15வீடுகளுக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.இனிவரும் நாட்களில் இரவு வேலையும் ஆரம்பமாகவுள்ளது. மேலும் ஒரு தொகுதியினருக்கான வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இம்முயற்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கி முதலிட்டோர் விபரம் :- 1) கஜீபன் (கனடா) 38.130,…
-
- 0 replies
- 626 views
-
-
நீங்கள் படித்த நூல்களை எங்கள் மாணவர்களுக்குத் தாருங்கள். வெளிநாடுகளில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அல்லது பல்கலைக்கழகப் படிப்பை முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பழைய நூல்களை (ஆங்கில நூல்கள்) தாயகத்தில் பல்கலைக்கழகப் படிப்பை தொடங்கியிருக்கும் மாணவர்களுக்கு தந்துதவுங்கள். மருத்துவம், எந்திரவியல் துறைகள் தொடர்பான நூல்கள் எமது மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. புதிய நூல்களை வாங்கிப்படிக்கும் வசதி பல மாணவர்களிடம் இல்லை. எனவே உங்களது பாடநூல்களை இம்மாவணவர்களுக்கு வழங்கியுதவுங்கள். நீங்கள் வழங்கும் நூல்கள் சுழற்சி முறையில் மாணவர்கள் பயன்படுத்தி பயனடைவார்கள். நூல்களை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gma…
-
- 0 replies
- 460 views
-
-
நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள். நேசம் இலவச கல்வித்திட்டத்தில் 2013 புலமைப்பரிசில் தோற்றிய அதிகூடிய சிறப்பச் சித்தியடைந்த 337 மாணவர்களுக்கான கௌரவிப்பினைச் செய்யவுள்ளோம். (அம்பாறை - 77மாணவர்கள், வெல்லாவெளி – 134 மாணவர்கள் ,மன்னர் 33 மாணவர்கள் , மட்டக்களப்பு – 51 மாணவர்கள் ,மூதூர் – 42 மாணவர்கள்) இம்மாணவர்கள் 337 பேருக்கும் சேமிப்புக்கணக்கை ஆரம்பித்து மாணவர்களுக்கான சேமிப்பை ஊக்குவிக்கவும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபாவை வைப்பிலிட்டு வழங்கவும் , கௌரவிப்பு ஞாபகக்கிண்ணம், மற்றும் அடிப்படை கற்கை உபகரணங்களையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இம்மாணவர்களுக்கான ஆதரவினை உறவுகளிடமிருந்து வேண்டுகிறோம். தலா ஒரு மாணவருக்கு 1…
-
- 0 replies
- 422 views
-
-
அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் நினைவாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உதவி கிளிநொச்சி உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழக்தின் ஆதரவில் அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் (அப்பையா) 4ம் ஆண்டு நினைவாக லண்டனினல் வசிக்கும் அவரது மகன் கிளிபேட் குலநாயகத்தின் நிதிப்பங்களிப்புடன் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு கடந்த 24ம் நாள் சிவநகர் அ.த.க.பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் இராசரட்ணம் தலைமையில் நடைபெற்றது. என்னுடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா மற்றும் அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன்(அப்பையா) ஆகியோரின் குடும்பத்தினர், ஓய்வுநிலை அதிபர் நாகலிங்கம், கிளிநொச்சி கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயம் பரந்தன் அ.த.க.பாடசாலை அதிபர், உழவர் ஒன…
-
- 0 replies
- 452 views
-
-
மாலதி படையணி போராளியின் இன்றைய அவல நிலை!! தூக்கிவிடுவார்களா புலம்பெயர் தமிழர்கள்?? 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் போராளியின் இன்றைய வாழ்க்கை, அவளுக்கு மட்டுமல்ல அவளைப் பார்ப்போருக்கும் கண்களில் கண்ணீரை வரவளைக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு ஓலைக்குடிசையில் வறுமையின் உச்சத்தில் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை சந்தித்தது ஐ.பீ.சி. தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சிக் குழு. இதய பலவீனம் உள்ளவர்கள் தயவுசெய்து இந்த ஒளியாவனத்தை பார்க்கவேண்டாம். இந்தப் பெண்ணுக்கு உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்: 0094212030600 https://www.ibctamil.com/lifestyl…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும். போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மண்டுர் 16ம் வட்டாரத்திலுள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அடிப்படை கல்வி உபகரணங்கள் கோரப்பட்டுள்ளது. இப்பிரதேசமானது கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பிரதான இடங்களில் ஒன்றாகும். கல்வித் தரத்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் பின்தங்கிய நிலமையில் இருந்து வரும் இப்பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமையால் பள்ளி செல்லும் மாணவர்களின் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது. கற்கை உபகரணங்கள் , பாதணிகள் , உடைகள் இல்லாத நிலமையில் உள்ள 16மாணவர்களுக்கும் புலம் பெயர் உறவுகளிடம் உதவியைக் கோருகிறோம். ஒரு மாணவருக்கு 10€தே…
-
- 0 replies
- 534 views
-
-
மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மலையர்கட்டு கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 43 பேருக்கான அடிப்படை கற்கை உபகரணங்களும் பாதணிகளும் வழங்க வேண்டியுள்ளது. இப்பாடசாலைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்ட எமது அமைப்பின் பணியாளர்களின் அவதானிப்பில் இக்கிராமம்; போரால் பாதிப்புற்ற கிராமங்களில் அதிக பாதிப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் யாவற்றிலும் தேவைகளை அதிகம் எதிர்பார்த்து இருக்கும் இக்கிராமத்தில் வறிய நிலமையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலமையில் வாழ்கின்றனர். தொடர் இடப்பெயர்வு யுத்தம் அனைத்தாலும் பாதிப…
-
- 0 replies
- 422 views
-
-
மாற்றுத் திறனாளிகளின் நண்பன் We Can அறக்கட்டளைநிறுவனம் உள்நாட்டுப் போரைநாம் மறந்துபோனாலும் அதுதந்துவிட்டுச் சென்றஆறாதஉடல் மற்றும் உளகாயங்களால் தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். பிறப்பால் உடல் அங்கவீனமானவர்களைவிடகொடியபோரால் அவயவங்களை இழந்தவர்கள் வடக்கில் அதிகம். மன்னார் மாவட்டத்திலேமாந்தைமேற்கில்தான் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பேர் உள்ளனர். மாந்தைமேற்கின் மாற்றுத் திறனாளிகள் மண்மீதுபற்றும் இனத்தின் மீதுகாதலும் கொண்டவர்கள்.உடலளவில் பாதிப்படைந்தவர்களாக இருந்தாலும் உளரீதியில் மிகப் பலசாலிகள். இவர்களுக்கானவாழ்வை WeCan என்னும் அறக்கட்டளை அமைப்பு கட்டமைத்து வருகின்றது. காலம் முழுக்க சுய தொழிலை மேற்கொள்ளத் தேவையான உதவியை மாற்றுவலுவுள்ளோருக்கு அளித்…
-
- 0 replies
- 705 views
- 1 follower
-
-
ஜெனிவாவில் இருந்து ஒளி உதவும் கரங்கள் கண்ணகைபுரம் மாணவர்களுக்கு உதவி புலம்பெயர்ந்து உறவுகள் தாயகத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் பொருட்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன் உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக ஜெனிவாவிலிருந்து உதவும் உறவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கிளிநொச்சி அக்கராயன் கண்ணகைபுரம் கிராமத்தின் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.கரைச்சி பிரதேசபை உறுப்பினர் தயாபரன் தலையமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் எம்முடன் கண்ணகைபுரம் அ.த.க.பாடசாலை அதிபர் கரைச்சி பிரதேசபை உறுப்பினர்களான் அன்ரன்டானியல் சுப்பையா அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறீ செயலாளர் கதிர்மகன் அமைப்பாளர் கரன் கட்சியின் செயற்பாட்டாள…
-
- 0 replies
- 461 views
-
-
செய்யத் துணிக கருமம் - கருணாகரன் இவளுக்கு இரண்டு கால்களுமில்லை. வயது 29. இன்னும் திருமணமும் ஆகவில்லை. முன்பு போராளியாக இருந்தாள். யுத்தம் அவளுடைய கால்களைத் தின்றுவிட்டது. புனர்வாழ்வு முகாம்வரை சென்று மீண்டவளின் முன்னே, புதிய வாழ்க்கைச் சவால்கள் நிற்கின்றன. அவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்வதென்று அவளுக்குப் புரியவில்லை. கால்களும் கைகளும் உருப்படியாக இருப்பவர்களாலேயே வாழ்க்கையை எதிர்கொள்ளக் கடினமாக இருக்கும்போது கால்களில்லாதவளால் ஓரடி நகர முடியுமா? அப்படியென்றால், அவளின் கதி என்ன? இதுதான் பெரிய கேள்வியே. இப்படிப் பலர் இந்த மாதிரியான நிலைமையில், இந்த மாதிரியான கேள்விகளின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிற…
-
- 0 replies
- 491 views
-
-
ஜேர்மன் ’உதயம்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி! ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாழ்வாதார உதவிக்கான பொருட்கள் மற்றும் ஆடு வளர்ப்பிற்கான ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி புச்சாக்கேணி பிரதேசத்தில் அந்நிறுவனத்தின் கிழக்கு மாகாண செயற்பாட்டாளர் எம்.டிலான் தலைமையில் நடைபெற்றது. இதன் போது புச்சாக்கேணி பிரதேசத்தில் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் வாழ்கின்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாடுக்கான 50 ஆயிரம் ரூபா செலவிலான கடை அபிவிருத்திக்கான பொருட்களும் ஆடு வளர்ப்பிற்காக 50 ஆயிரம் ரூபா செலவில் நான்கு ஆடுகளும் வழங்கி வ…
-
- 0 replies
- 558 views
-
-
நிவாரண பணிக்கு உதவுங்கள்; உள்நாடு, புலம்பெயர் மக்களிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை 56 Views தொடரும் பயண தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியைச் செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும், வழங்கப்படும் நிதிக்கான பற்றுச…
-
- 0 replies
- 838 views
-
-
ஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்! இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியும் தற்போது பல்கலைக்கழக மாணவனாக கல்வி பயிலும் ஒருவரின் வீடு. எங்களுக்காக போராடிய ஒரு போராளியின் வீடு இது. அண்மையில் பூநகரி கறுக்காய் தீவு பகுதிக்குச் சென்றபோது இந்த முன்னாள் போராளி மாணவனை சந்திக்க முடிந்தது. சத்தமில்லாது, சாதனை பயின்ற இந்த சாதனையாளரின் முகத்தில் அப்பியிருந்த வேதனைதான் முகத்தில் அறைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், போரின் இறுதியில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு, தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் தனக்குக் கிடைத்த…
-
- 0 replies
- 933 views
-