Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

 

விதிமுறைகள்:

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  8. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
  9. யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  1. அன்று ஐரோப்பிய நாடொன்றுக்கு போய்க்கொண்டிருந்தோம் 2 மணித்தியாலய வாகன ஓட்டத்துக்கு பின் ஒவ்வொருமுறையும் வாகனத்தை நிறுத்தி நடப்பது ஓய்வெடுப்பது ஏதாவது சாப்பிடுவது எனது வழமை. அதன்படி ஒரு உணவகத்துக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தும் போது எமது வாகனத்துக்கு பக்கத்தில் அதி உயர் விலையான சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது அதன் விலை 3 லட்சம் ஈரோக்களாவது இருக்கும்.. எனவே எமது வாகனத்திலிருந்து இறங்கும் போது பக்கத்து வாகனத்தில் முட்டாதபடி இறங்கினோம் அப்பொழுது தான் ஒரு விடயத்தை கவனித்தோம் காரினுடைய முன் பக்கம் (எஞ்சின் உள்ளபகுதி) திறந்து வைக்கப்பட்டிருந்தது. நான் மக்களுக்கு சொன்னேன் இந்தக்காருடைய சொந்த…

  2. சித்திரையைப் பர்சோனிபை (personification) செய்து எல்லோரும் சித்திரையாளாக்கி விட்டார்கள். அதனால் எனக்கும் சித்திரையென்னும்போது பழைய சின்னமேள நாட்டியத்தாரகை சித்திராவின் நினைப்புத்தான் வருகிறது. அந்தப் பெண் இப்போது கிழவியாகிச் செத்தும் போனாளோ தெரியாது. அதற்கென்ன நாட்டியத்தாரகை பத்மினியை யாராவது கிழவியாகவா நினைத்து எழுதுவார்கள் பேசுவார்கள் அப்படித்தான் இதுவும். சித்திரை வந்தாள் நித்திரையில் ஆழந்திருந்தேன் நீண்ட துயில் ரா முழுதும் தத்திமித்தா தையெனும் ஓசை – அட எத்திசையில் வுருகிறது என்று புலன் போனதங்கே சித்திரையாள் என்னிடம் வந்தாள். கட்டழகி மொட்டழகிற் கச்சைகட்டித் துள்ளி நட மிட்டதனை எங்ஙனம் சொல்வேன் - பிடித் த…

    • 3 replies
    • 1.7k views
  3. Started by yakavi,

    உயிரே! உனக்கேன் என்னோடு பந்தம். .? வசந்தங்கள் உன்னோடு சொந்தம். எனக்கேன் உன் மீது மோகம் ...? இந்த விடை தெரியாத வினாக்கு விடை தேடலே என் வாழ்க்கையாய்போனது. நீ சில வேளைகளில் கண்ணைக் சிமிட்டும் போது ! அந்த நொடி சிதறி கிடந்த என் கவிதைகள் எழுந்து தடுமாறின. உன் விழிகள்இரண்டும் பேசியதால் என் உதடுகள் ஊமையானது. என் இதயம் ! உன் நினைவுகளை கூவிச் சென்றது. விடைபெறும் தருணத்தில் உன்னிடத்தில் சொல்ல விட்டு போகின்றேன். ஆனால் ! என்னுடன் வர மறுக்கின்றது. என் மனசு.......... நரகவேதனை என்றால் என்ன? என்பைத அப்போதுதான் உணர்கிறேன், அந்த நொடி என் மெளனங்களை படித்து பார். ஓராயிரம் அர்த்தங்களை செல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.