கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
ஹைக்கூ கவிதைகள்: "துயிலுமில்லம்", "தமிழர் பாரம்பரியம்" & "காட்சிக்கேற்ற" "துயிலுமில்லம்" "கார்த்திகை திங்கள் தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் துயிலும் இல்லங்கள்" அல்லது "துயிலுமில்லம் ஆலயமே தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் இன்று கார்த்திகை " [எடுத்துக்காட்டு: மாவீரர்களின் நினைவுகள் கண்களைக் கலங்க வைக்கின்றன சிதைக்கப்பட்ட கல்லறைகள் - முல்லை நிரோயன்] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................... …
-
- 0 replies
- 410 views
-
-
"நிலவுக்குள் நீயடி..!" "நிலவுக்குள் நீயடி நினைவில் நிறைந்தவளே நிம்மதி தேடி உன்னைத் தேடுகிறேன் முழுமதியே வருவாயோ அருகில்?" "கண்ணுக்குள் புதைந்த சித்திரமே மண்ணில் வாழும் இவனுக்கு பண்பு சொல்லாயோ காதல் பொழியாயோ?" "திங்கள் முகத்தில் திலகம் பதிக்க வரவா நான் தித்திக்கும் இளமை காதல் தேடுது கண்ணே மார்பைத் தழுவவா?" "நெஞ்சம் மகிழுதடி மஞ்சம் அழைக்குதடி வஞ்சகம் வேண்டாம் பெண்ணே கொஞ்சம் கருணை என்னிடம் காட்டினால் என்னடி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 252 views
-
-
with Public ஏப்ரல் 2, உலக சிறுவர் புத்தக தினம் புத்தகங்கள் சிறார்களின் தனி உலகம் புத்தகங்கள் முடிவில்லா வசீகரம் எல்லையற்ற பேரானந்தம் புத்தகங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம் புத்தகங்கள் ஆர்வமுள்ள சிறாருக்கு அளவற்ற மகிழ்ச்சி தரும் புத்தகங்கள் …
-
- 0 replies
- 369 views
-
-
மாறுமா? *********** தேர்தல் திருவிழாக் காலமிது-தன் தேவைக்கு வாக்குறுதி மழை கொட்டும் நேரமிது. வாசலுக்கு வந்துநிற்கும் வருங்கால.. தலைவர்களைப் பாருங்கள் வாக்குறுதிப் பொட்டலத்தை வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே தேன் இருக்கும் தினைமா இருகும் தித்திகும் பண்டங்கள் நிறைந்திருக்கும்-தமிழ் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்வதாய்-பல திட்டங்கள் எம்முன்னே கொட்டிக் கிடக்கும். வாக்குதனை வாங்கிப்போனபின்னோ? உங்களிடம்வெறும் வாய் மட்டுமேயிருக்கும். பசியிருக்கும் கியூவிருக்கும் பட்டினியே தொடர்திருக்கும் அரசமரத்தடியில் புத்தர் சிலையிருக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
"நீயின்றி நானில்லை" "நீயின்றி நானில்லை எதோ புலம்புகிறான் நீலவானின் கீழ் உணர்ச்சியில் உளறுகிறான் நீங்காத காதலென்று அவளுக்கு உறுதிகொடுத்து நீதியாய் நடப்பேனென்று சபதமும் செய்கிறான்!" "நீரின்றி உலகில்லை அவளின்றி அன்பில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நாடகம் ஆடுகிறான் நீலகண்டன் நானென்று நஞ்சு கக்குகிறான் நீச்சல் அடிக்கிறான் ஆசை முடியுமட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 443 views
-
-
"முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும் "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 505 views
-
-
"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு…
-
- 0 replies
- 369 views
-
-
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.5k views
-
-
தேசம் சுமந்தவர்கள்-பா.உதயன்- I am building this bridge for him!” உலகத்தின் இருள் இன்னும் மறையவில்லை மானிடத்தின் அழகிய வாழ்வை எல்லாம் ஏதோ ஒன்று பறித்து செல்கிறது .தங்கள் இறுதிக் கால வாழ்வை அமைதியாக களிக்க வேண்டிய காலத்தில் எதிர்பாராதவகையில் முதியவர்களை பறித்து எடுத்துப் போகிறது இருள் சூழ்ந்த காலம் ஒன்று.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக இந்த நகரங்களை தங்கள் தோள்களால் சுமந்து எழுப்பியவர்கள்.இதை நினைக்கும் பொழுது எல்லாம் அமெரிக்க கவிஞர் Will Allen Dromgoole எழுதிய (The Bridge Builder )பாலம் கட்டும் முதியவர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது .ஒரு முதியவர் எந்த வலிகளையும் பார்க்காமல் பாலத்தை கட்டிக்கொண்டு இருக்க அதன் வழியால் சென்றவர் அவரை பார்த்து ஏ முதியவரே நீ இந்த உல…
-
- 0 replies
- 858 views
-
-
உறவுகள் உறவுகள் இருந்தனர் ஒரு காலம் ஒற்றுமை இருந்தது பலகாலம் கூடியே வாழ்ந்தனர் ஒரு கூட்டில் குலைந்து இப்போ போயினர் சில காலம் அன்புடன் இருந்தனர் ஒரு காலம் அப்பன் அம்மை சொல் படி நடந்தனர் ஆயிரம் சண்டைகள் பிடித்தனர் ஒரு காலம் அடுத்த நாள் மறந்தே சிரித்தனர் இரவின் நிலவில் கதை பேசி கதையில் கனவுகள் கண்டு வந்தோம் இருப்பதை பகிர்ந்து உண்டு வந்தோம் இல்லாது இருந்தும் சிரித்து இருந்தோம் கருப்பையில் விதைத்தது விஷம் இல்லை நாம் உண்டது ஒன்றும் நஞ்சு இல்லை இரத்தத்தில் இருப்பது ஒரு வேர் தான் இது தான் விதி என அறியாயோ வாழ்வுகள் இருப்பது சில காலம் வருவதும் போவதும் ஒரு காலம் உறவுகள் என்பது தொடர் காலம் இதை நீ உணர்வாய்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புத்தகப்பையுக்குள் போதையா! ************************ புனிதம் நிறைந்த கல்விச்சாலைக்குள் போதை வஸ்துக்கள் புகுந்ததாம்-நாளை புவியையாழும் மாணவச்செல்வங்கள் போரின்றியே உடல்கள் நொருங்குதாம். கல்வியை கல்லறையாக்கின்ற கயவர்கள் காரியம் அங்கு நடக்குதாம்-பாலுக்கு காவலிருப்பதும் பூனைகளா?வென கான்போர் மனமெல்லாம் துடிக்குதாம். போதையைப் புகுத்தி போதனை கெடுக்கும்-அந்த போக்கிரிக்கூட்டத்தை அழிப்போம்-நாளை சாதனை செய்யும் மாணவச் செல்வங்கள்-கழிவில் சறுக்கி விழுவதை தடுப்போம். உண்ண உணவின்றி தவிக்கும் நிலை கண்டும் உணரவில்லையா மாணவ,இளையோரே! எண்ணிப்பாருங்கள் இன் நிலை நீடித்தால் எனியும் சுடுகாடாய் ஈழ…
-
- 0 replies
- 553 views
-
-
"பூவாசம் வீசுதே" "பூவாசம் வீசுதே நீலக் கருங்குயிலே பூத்து குலுங்குதே புன்னகை உன்னிலே! பூவையர் கண்களும் உன்னை நாடுதே பூரண சந்திரனும் வெட்கித் தலைகுனியுதே!" "மஞ்சள் ஆடையில் செக்கச் சிவந்தவளே மருண்ட விழியால் பூரிப்பு தாராயே! மகிழ்ச்சி பொங்குதே இடுப்புச் சிறுத்தவளே மடவரல் இடையை கூந்தலும் வருடுதே!" "மனம் மயக்கும் அழகு மலர்களே மணம் வீசி இதயத்தை தொடுகிறாயே! மங்கையின் கையில் ஏன்தான் போனாய் மந்திர மொழியால் உன்னை ஏமாத்துகிறாளே!" "பக்குவமாக இருந்து பூவை முகர்ந்து பல்வரிசைக் காட்டி சித்தம் கலக்குகிறாளே! பவளக் கொடியாளே உதட்டு அழகியே பல்லாயிரம் பூக்களும் உனக்கு நிகரில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தி…
-
- 0 replies
- 841 views
-
-
"களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே" "களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே ஒளிரும் அன்பிலே துள்ளுதே கவர்ச்சி எளிய நடையும் அன்னநடை ஆகுமே துளி துளியாய் கொட்டும் மழையிலே!" "கள்ளி இவளின் இடை அழகில் அள்ளி வீசுது கொள்ளை இன்பம் உள்ளம் நாடுது கட்டி அணைக்க வெள்ளம் போல பாசம் பொங்குதே!" "விழிகள் இரண்டும் எதோ பேசுது ஆழி முத்துக்களும் ஈர்ப்பு இழக்குது தோழியாக்க மனது எனோ துடிக்குது அழியாத உறவு இது ஒன்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 253 views
-
-
"மண்ணைப் போல யாரு மில்லையே !" & "முதுமையும் இளமையும்" "மண்ணைப் போல யாரு மில்லையே !" "மண்ணைப் போல யாரும் இல்லையே மறந்து இன்று இப்படி சொல்லுகிறாய்! மண்ணும் பெண்ணும் வாழ்வின் சுவாசமே தாய்மை பண்பினை போற்றிடும் தெய்வங்களே!" "மண் இருந்தால் மரம் வளரும் மரம் வளர்ந்தால் நாடு செழிக்கும்! மங்கை இருந்தால் மழலை தவழும் மழலை மலர்ந்தால் உலகம் பிழைக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "முதுமையும் இளமையும்" "காவோலை விழ க…
-
- 0 replies
- 716 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
"உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை "உடற்பயிற்சி மிகினும் குறையினும் உடம்பு பாதிக்குமே! உள்ளம் சீராகி தெளிவுபெறுவதும் உண்மை நன்மையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 818 views
-
-
2004 ம் ஆண்டின் இயற்கையின் கோரத்தாண்டவம் சுணாமியாக அடித்து எம் உறவுகளை பறிகொடுத்த 16 ஆண்டுகளின் நினவாக..அன்று எனது மனத்துயரத்தை கவிதையாய் எழுதிப் படித்திருந்தேன் அன்றைய ஆறாக் கவலையை இன்றும் உங்களுடன் ..பசுவூர்க்கோபி https://www.youtube.com/user/PasuvoorkGobi
-
- 0 replies
- 821 views
-
-
'மாற்றம் மாறாதது' "காதல் தந்த பார்வையும் மங்கும் காமம் தந்த உடலும் கூனும் காடுகள் அழிந்து நகரங்கள் தோன்றும் காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது" "காலியான குளமும் நிரம்பி வடியும் காசுகள் தொலைந்து வறுமை வாட்டும் காவலர்கள் கூட கொள்ளை அடிப்பர் காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது" "உற்சாகம் தரும் வெற்றியும் தோல்வியாகும் அற்புதமான உடலும் கருகிப் போகும் முற்றத்து துளசியும் வெறிச் சோடும் மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது" "ஏற்றமும் இறக்கமும் மனதை மாற்றும் ஒற்றுமை குலைத்து பகையைக் கூட்டும் குற்றம் இழைத்தவனும் அரசன் ஆவான் மாற்றம்…
-
- 0 replies
- 329 views
-
-
ஈழத்து சிறுமியின் டயறி மே 18ம் நாள் மே 18 ம் நாள் காலை பொழுது ஒன்றில் கையில் இரத்தங்களுடன் கடந்து போகின்றன பேரிரைச்சலோடு இராணுவ வண்டிகள் சாம்பல் மேடுகளை தாண்டியபடி அந்த ஊழியின் கடைசி தினம் அன்று பாதி பாண் துண்டை என் தம்பியின் கையில் கொடுத்து விட்டு நானும் தம்பியுமாக அம்மாவை பார்த்தபடி அந்த பதுங்கு குழியில் என்று தொடங்கும் அவளது டயரி குறிப்பு அன்று ஒரு நாள் அந்த நாசி படைகளுக்கு அஞ்சியபடி அந்த அவுஸ்வைஸ் சிறையில் இருந்து எழுதிய சிறுமி அன்னா பிராங்கின் யுத்த கால டயரி குறிப்புகள் போலவே இருந்தன .
-
- 0 replies
- 1.1k views
-
-
"சொர்க்கம் போக ஆசை பட்டேன்!" "சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன் பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !" "ஊர் பெரியாரைக் கும்பிட்டு கேட்டேன் தர்மமும் தானமும் செய் என்றான் ஏர் பிடித்தவனைக் கேலியாய்க் கேட்டேன் தர்மமும் தானமும் மிஞ்சியது என்றான் !" "தூர்ந்த கேணியை திருத்திக் கட்டினேன் தேர்த் திருப்பணிக்கு அள்ளிக் கொடுத்தேன் தர்ம சாலை கட்டித் திறந்தேன் ஊர்ப் பலகையில் பெயரும் போட்டேன் !" "மார் தட்டி சத்தம் போட்டேன் கார் அனுப்பி கூட்டம் சேர்த்தேன் மோர் ஊற்றி விழா நடத்தினேன் சீர் திருத்த அறிக்கை விட்டேன் !" "கார் காலம் கோடை ஆக தேர்தல் ஒன்று நாட்டை சூழ சேர்த்த …
-
- 0 replies
- 381 views
-
-
ஊனம் காண இரக்கமாக நாணம் தோன்ற ஏக்கமாக தானம் செய்ய விருப்பமாக சினம் புரிவது எதிர்ப்புமாக கவனம் சிதற திருப்பமாக நவீனம் தருவது தீமையாக (அ) நன்மையாக யாவும் அதை கையாலும் புலன்களின் அனுமானம் அதுவே வழிவாகுக்கும் வினைகளின் தொடக்கம் விதியையும் மதியால் வெல்லலாம் என்பது சிலரின் செயல் வழக்கம் என்பதுவமாக...
-
- 0 replies
- 732 views
-
-
சன்னல்: -இது ஒஸ்லோவில் 1990 டிசம்பர் எழுதப்பட்ட கவிதை. நண்பர் பேராசிரியர் ஒய்விண்ட் புக்ளரூட் சன்னல் கவிதையை நோர்வீஜிய மொழியாக்கம் செய்தார். சன்னலின் நோர்வீஜிய மொழியாக்கம் நோர்வீஜிய வெளிவிவகார அமைச்சின் ’நோராட்’ இதழில் வெளிவந்தது. இலக்கிய ஆர்வமுள்ள பெண்மணி செல்வி. நினி ரொப் எனது விசா அலுவலராக அமைந்தது அதிஸ்ட்டம் என்றே சொல்ல வேண்டும். சன்னல்கவிதை அவரைக் கவர்ந்ததது. அதனால் அவர் இக்கவிதையை குடிவரவு திணைக்கள் அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சு நீதி அமைச்சு அதிகார்களுக்கு பிரதி அனுப்பினார். இதனால் என் செல்வாக்கு உயர்ந்ததது. மட்டக்களப்பு அபிவிருத்தி தொடர்பான என்கட்டுரையின் பங்களிப்பின் அடிப்படையில் நோராட் என்னை தென்னாசிய நிபுணர் என கடிதம் தந்தது, அதன் அடிப்படையில் எனது கலைஞர்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
"அன்பே ஆரமுதே" "அன்பே ஆரமுதே கரும்பே தேனே இன்பம் பொழியும் அழகு தேவதையே துன்பம் போக்கும் கருணை மாதே இன்னும் ஏன் தயக்கம் உனக்கு?" "மாசறு பொன்னே வலம்புரி முத்தே பாசம் கொட்டும் பெருங்குடி மகளே வாசம் வீசும் கூந்தல் அழகியே நேசம் கொண்டு அருகில் வருவாயோ?" "காதல் என்பது காமம் அல்ல மோதல் பிறக்கும் இடமும் அன்று சாதல் எம்மை அணுகும் வரை இதயம் சேரும் ஒற்றுமை நட்பே!" "உணர்வு ஒன்றி இருவரும் கலந்து உள்ளம் நாடும் இனிய உறவில் உணர்ச்சி தவிர்த்து நிலை அறிந்து உண்மை வாழும் இருவரின் பற்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 281 views
-
-
யார் இவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள் இவர்கள் முகம் ஞாபகத்தில் கூட இல்லையே எம் ஒவ்வொரு சறுக்கல்களிலும் கைகொடுத்ததாக நினைவில்லையே ஒருநேர உணவுக்கே நாம் திண்டாடியோது ஓடி வந்து உதவிய முகங்களில் இவர்கள் முகம் இருந்ததில்லையே போகவழி தெரியாமல் பரிதவித்தபோது எம் கைபிடித்து வழிகாட்டிய - அந்த நல்ல மனிதர்களில் இவர்கள் ஒருவரேனும் இல்லையே அடுக்கடுக்காய் வந்த சவால்களை சமாளிக்க நாம் திணறியபோது நம்பிக்கை கொடுத்த நாலுமனிதர்களுள் இவர்கள் நிழல்கூட வந்ததில்லையே இப்போது மட்டும் எப்படி ஓ..! இப்போது புதிதாய் பார்வை பெற்ற முன்னாள் குருடர்களோ இவர்கள் உறவு முறை சொல்கிறார்கள் உறவென்றும் சொல்கிறார்கள் மறுபக்கம் விமர்சனமும் செய்கிறார்கள் அவர்கள் அகராதியில…
-
- 0 replies
- 980 views
-
-
"எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?" / "What are we masters of, cunning woman?" "பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை, வஞ்சகி உனக்கு ஏனடி பாசாங்கு, ஏதுக்கடி போலி வாழ்வு? மனிதனின் உண்மை தேவையை, பாசாங்கு உணராது வஞ்சகி பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!" "அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி? விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா, பேரழிவை உண்டாக்கவா மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா, வஞ்சகி? கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல, பெண்ணே!" "உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல, ஒரு துளியே, வஞ்சகி ? கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவ…
-
- 0 replies
- 414 views
-