Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமா?" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கேட்டுள்ளது. Image captionஉயர்நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலி…

  2. ''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?'' பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி குறித்து முன்னுக்குப்பின் முரணாக வரும் அறிவிப்புகளால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யிலும் இதே குழப்பம் நிலவுகிறது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரோடு நட்பு பாராட்டினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா. பிறந்த நாள்களின் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி வந்தார்கள். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, சென்னை வந்து அந்த விழாவில் பங்கேற்றதுடன் ஜெயலலிதாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. அதன்பிறகு 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பிரதமர…

  3. சசிகலா குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்'சென அம்பலமாகி வருகின்றன. தினகரன் - திவாகரன் இடையே வெடித்த குடும்பத்தில் கடும் கசமுசா ஏற்பட்டுள்ளது.இதை, திவாகரன் மகன், ஜெயானந்த், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரின் 'பேஸ்புக்'பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்திற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு சென்றதும், மோதல் அதிகரித்தது. சசிகலா அறிவுரைப்படி, அவரது அக்கா மகன் தினகரன், புதிய கட்சியை துவக்கி உள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியில் தன் மகனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி தினகரன் தனித்து செயல்பட்டு வருகிறார். இது, த…

  4. அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது - ரஜினிகாந்த் பாரதிராஜா உள்ளிட்ட பலர் உங்களை எதிர்க்கிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். #Rajinikanth நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக அரசியல் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று இரவு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. …

  5. ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை கிராம பெண்கள் ஆபத்தை அறியாமல் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி உணவுக்காக கைகளால் இறால் மீன்களை பிடிக்கின்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமம். அங்குதான் இ…

  6. தமிழர்களுக்குள்ள பாதுகாப்பு என்ன? - பண்ருட்டி இராமச்சந்திரன் விசேட செவ்வி இலங்கை இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் பணியாற்றியவரும் முழுநேர அரசியலுக்கு விடைகொடுத்துள்ள போதும் அ.தி.மு.க.வில் தற்போதும் செயற்பட்டு வருகின்றவரும் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருப்பவருமான மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழகம் மற்றும் இலங்கையில் நிலவும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டுள்ளமையை உணர்கின்றீர்களா? கமல், ரஜினியை வருகையை எப்படி பார்க…

  7. ஆசிரியர் செல்லாத தீவு: பள்ளிக்கு தினம் படகில் செல்லும் மாணவர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழக-ஆந்திர எல்லையோரத் தீவுக் கிராமத்தில் வாழும் மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்ல படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கும், ஆந்திரப் பிரதேசத…

  8. மிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா? - தமிழக அரசை மிரட்டிய டெல்லி! “நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா?’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம். ‘‘கவர்னர் மாளிகையைச் சூழ்ந்திருக்கும் நிர்மலாதேவி சர்ச்சையில், பல ஆதாரங்களையும் ஆவணங்களையும் தமிழக அரசு எடுத்து வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். நிர்மலாதேவி பேசிய ஆடியோ கசியத் தொடங்கிய மார்ச் முதல் வாரத்திலேயே, அவருடைய போன் உரையாடல்கள், எதிர்முனையில் பேசியவர்களின் விவரங்கள், யார் யாருடன் எவ்வளவு நேரம் பேசினார் என்ற கணக்கு என அனைத்தையும் ரகசியமாக அள்ளி…

  9. கள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி? வரலாறு காணாத அவமானத்துடன் தமிழகத்திலிருந்து டெல்லி திரும்பியிருக்கிறார் நரேந்திர மோடி. ஆயுதக் கண்காட்சியைத் திறந்துவைக்க வந்த மோடிக்கு எதிராகக் கறுப்பு என்ற நிறத்தையே ஆயுதமாக ஏந்தியது தமிழகம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசின் அலட்சியம், ‘ஸ்கீமா, காவிரி மேலாண்மை வாரியமா?’ என்ற வார்த்தை விளையாட்டு விளையாடிய வஞ்சகம், ஆறுவாரக் கெடு முடிந்தபிறகு உச்சநீதிமன்றத்தை அணுகிய மமதை, கர்நாடகத் தேர்தல் ஆதாயத்துக்காகத் தமிழர்களின் முதுகில் குத்திய துரோகம்... என எல்லாவற்றுக்கும் எதிராக எழுந்த எதிர்ப்புதான் கறுப்பாய் மாறியது. ஒரு பிரதமர் பயங்கரவாதிகளுக்கு பயந்து பாதுகாப்பை நாடலாம். ஆனால், நரேந்திர மோ…

  10. “புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!” எம்.கணேஷ், படங்கள்: வீ.சக்தி அருணகிரி ``நல்லா இருக்கீங்களா தாத்தா?’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார் வைகோ. அவள் கையில் வைத்திருந்த தண்ணீர்ச் செம்பை வாங்கிக் குடித்துவிட்டு, ‘`நல்லா இருக்கேன். நல்லா படிக்கணும்… சரியா?’’ என்று சொல்லிவிட்டுக் கீழிறக்கி விடுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடந்து நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் ஒரு நாள் நடந்துகொண்டே பேச ஆரம்பித்தேன். ``இந்த நடைப்பயணம் உங்களின் பத்தாவது நடைப்பயணம். தேனி மாவட்ட மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?’’ “போராட்டக்குணம் கொண்ட இந்த மக்களுக்க…

    • 4 replies
    • 2k views
  11. எச்.ராஜாவின் சர்சைக்குரிய ட்வீட்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு, தி.மு.க. போராட்டம் கள்ள உறவில் பிறந்த குழந்தை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை குறிப்பிடும் வகையில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா தெரிவித்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. தி.மு.க. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. எச். ராஜா இன்று காலையில் பதிவுசெய்த ஒரு ட்விட்டர் குறிப்பில், "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், ப…

  12. கவர்னரை மிரட்டும் கவர்ன்மென்ட்? - ஆபாச ஆடியோ... அதிரும் ராஜ்பவன்! ‘யாரை மிரட்டுவதற்காக அந்த ஆடியோ வெளியானது’ என்ற கேள்விதான் அதிகார மட்டத்தில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலோ, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலோ முக்கியப் பதவியைக் கைப்பற்றுவதற்காக சில காரியங்களைப் பார்த்து வந்தார். அந்தப் பதவியைக் குறிவைத்து இருக்கும் மற்றவர்கள் நிர்மலாதேவியை மாட்டிவிடுவதற்காக இந்த ஆடியோவை லீக் செய்தார்கள்’’ என்கிறது ஒரு தரப்பு. ‘‘மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசும் ஆடியோ வெளியானால் அதிகம் அவமானப்படப் போவது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். கவர்னரை அவமானப்படுத்த வேண்டும் என்று அதிகார…

  13. இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதா 20 நிமிடம் பேசினாரா: விசாரணையில் கேள்வி சென்னை:''சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 டிச., 3ல், எய்ம்ஸ் மருத்துவர்களுடன், ஜெயலலிதா, 20 நிமிடம் பேசினார். மறுநாள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுஉள்ளது,'' என, சசிகலா வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் தெரிவித்தார். ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், சசி உறவினர்கள், கிருஷ்ணப்பிரியா, விவேக் மற்றும் ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த, டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி,வெங்கட்ரமணன், அரசு மருத்துவர், சுவாமிநாதன் ஆகியோரிடம், நேற்று குறுக்கு விசாரணை நடந்தது.விசாரணைக்கு பின், ராஜா செந்துார் பா…

  14. நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 1 #Neutrino 1930 ம் ஆண்டு. சுவிட்சர்லாந்த் நாட்டின் ஜூரிச் நகரத்தைவிட்டு சற்று தூரத்தில் அமைந்திருந்தது அந்த ஆய்வுக் கூடம். வெளியில் பனி பொழிந்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர். ஆனால், ஆய்வுக் கூடத்தின் உள்ளே சற்று கதகதப்பாகத் தான் இருந்தது. ஆய்வுக் கூடம் பெரிதாக இருந்தாலும், அங்கு ஒருவர் மட்டுமே இருந்தார். அவருக்கு வயது முப்பதிருக்கலாம். முன் தலையில் சின்ன வழுக்கை இருந்தது. முடியை அழுத்தி பின்புறமாக படியும் வகையில் வாரியிருந்தார். கம்பளித் துணியால் ஆன, கால்வரை நீண்டிருந்த கருப்பு நிற கோட்டை அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு டேபிளில், மஞ்சள் நிறத்திலான ஒரு அட்டையைப் படித்துக் கொண்டிருந்தார்.…

  15. Sterlite ஆல் ஏற்படும் தமிழ்நாட்டின் எதிர்காலம்

    • 0 replies
    • 603 views
  16. காவிரி என்பது வெறும் நீரல்ல! காவிரிப் படுகைக்கு என்று ஒரு ரசனை. அங்கே சிருங்காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். சங்க காலத்திலிருந்து மருத நிலத்தின் அடையாளமே அதுதானே! பேசும்போது சங்கதிகளை அசட்டுத்தனமாகப் பிட்டுவைக்காமல் தொட்டுத்தான் காட்டுவார்கள். தன்னையே குறியாக வைத்ததுபோல் பிறரையும் பேசும் கேலிப்பேச்சு உண்டு. முழுத் தத்துவமாக அது முற்றாவிட்டாலும் அங்கு ஒரு தத்துவமும் உண்டு. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டும் எளிமையில் உடம்பை உதறிவிட்டுப் போவார்கள். “இந்த ஆக்கையைச் சுட்டுப்போட்டால் என்ன?” என்று தன் உடம்பிலிருந்தே விலகி நின்று அதைச் சபித்துக்கொள்வார்கள். வயிற்றுக்கு மட்டுமே சோறிட்…

  17. மிஸ்டர் கழுகு: “இந்த நேரத்தில் போகணுமா?” ‘‘டெல்லிக்கு பிரதமர் திரும்பிச்சென்ற பிறகுதான் வருவேன்’’ என்று காலையிலேயே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். பிரதமரின் விமானம், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கழுகார் வந்து சேர்ந்தார். ‘‘சென்னை விமான நிலையப் பகுதியில் கொந்தளிப்பான நிலையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பிரதமர் மோடி வந்து இறங்கினார். அவரை வரவேற்க அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து காத்திருந்தனர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும். சிரித்த முகத்தோடு அவர்கள் இருவரும் மோடியை வரவேற்றனர். ஆனால், எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து வந்த ரிப்போர்ட், மோடியை மூட் அவுட் ஆக்கியிரு…

  18. வைகோவின் மருமகன் தீக்குளிப்பு; சீமான் கட்சியினர் மீது குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தன் மருமகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்து, தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு சீமான் கட்சியினர் வெளியிடும் மீம்ஸ்களே காரணம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். வைகோவின் மனைவி ரேணுகாவின் அண்ணன் ராமானுஜத்தின் மகனான சரவணன் சுரேஷ் என்பவர் இன்று கா…

  19. புரட்சிகரப் பாடகர் கோவன் திருச்சியில் வீட்டு பூட்டு உடைத்து கைது புரட்சிகரப் பாடகர் கோவன் திருச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை, பாடல் வடிவில் வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் பாடி வருபவர். இவர் பிரதமர், மற்றும் முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதாக குற்றம்சாட்டி திருச்சி பொலிசார் கோவனை கைது செய்துள்ளனர். மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர், பாடகர், சமூகச் செயற்பாட்டாளர் என பன்முக செயற்காட்டாளரான கோவன். நாட்டுப் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அரசின் அடக்குமுறைகளை கண்டித்து, பாடல் வடிவில் மக்களிடையு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கோவன், மக்கள் க…

  20. தத்துவார்த்த புரிதல் தேவை - திருமுருகன் காந்தி பிரத்தியேக செவ்வி ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் மே17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தினைச் சேர்ந்த சமுக ஆர்வலருமான திருமுருகன் காந்தி பூகோள அரசியல் போட்டிக்குள் யுத்தகாலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து நீதியைப் பெற்றுக்கொள்ளுதல், உள்ளிட்ட தமிழர்களின் விடயங்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- யுத்த நிறைவின் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழகத்தில் கரிசனைகள் குறைந்து செல்லும் அதேநேரம் குழப்பகரமான சூழலொன்றும் காணப்படுகின்றதே? …

  21. மிஸ்டர் கழுகு: பச்சைக்கொடி... கறுப்புக்கொடி... பரபரக்கும் காவிரிக் கொடி! எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்த கழுகார், அதைவிட வேகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னையில் தமிழகம் கொந்தளித்துக் கிடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான நிலையில் உள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்குப் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு உள்ளது. இந்தச் சூழலில், ‘சென்னை அருகே திருவிடந்தையில் மத்தியப் பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறும் டிஃபென்ஸ் எக்ஸ்போவுக்கு வரும் பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டுவோம்’ என்று அறிவித்தார் ஸ்டாலின். இந்த அறிவிப்பு, தமிழகத்தின் இன்றைய இக்கட்டான சூழல்…

  22. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்திறங்கிய மோடி..! #wewantcmb #liveupdate பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார். மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட…

  23. 'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திருப்பூரில் 80 வயது முதியவர் முத்துசாமி மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பனைமரம் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் . தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை இனி பேசப் போவதில்லை என்பதே முதியவர் முத்துசாமி எடுத்…

  24. ‘‘காவலர்களை தாக்குவது வன்முறையின் உச்சம்! இந்த கலாச்சாரத்தை கிள்ளி எறிய வேண்டும்’’ - ரஜினி ட்வீட் ரஜினிகாந்த்: கோப்புப்படம் காவலர்களை தாக்குபவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும் என, ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமை, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அன்றைய தினம் மாலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் அ…

    • 11 replies
    • 970 views
  25. கர்நாடகப் பேருந்தை அடித்து உடைத்த நாம் தமிழர் கட்சியினர்..! பெங்களூரு செல்லக்கூடிய கர்நாடகப் பேருந்திலிருந்த கன்னட எழுத்துகளை நாம் தமிழர் கட்சியினர் தார் பூசி அழித்து கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று சென்னையில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் ஒரு பகுதியாக, கடலூரிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் கர்நாடகப் பேருந்தை வழிமறித்த ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.