Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிச்சயமற்ற தமிழக அரசியல் களம்: யார் வேண்டுமானாலும் இறங்கி வெல்ல முடியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். பிபிசி-யின் கருத்துகள் அல்ல) தமிழக அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நிச்சயமற்று காணப்படுகிறது. இரு துருவ அரசியல் காலகட்டம் விடை பெறப்போகிறதா? எப்போது தேர்தல் வந்தாலும் அரியணை நமக்குதான் எ…

  2. கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்! - மு.க.ஸ்டாலின் பேட்டி படம்: பிரபு காளிதாஸ் - படம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார். திரும்பிப் …

  3. ’’எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா?’’ - மாணவர்கள் மத்தியில் கமல் பளீச் தலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரும் பிப்ரவரி 21-ம் தேதி `நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக் கமல் அறிவித்து, அதற்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனது இல்லத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த கம…

  4. மிஸ்டர் கழுகு: ஆட்சியைக் கலைக்க ரஜினி நிபந்தனை! - காய் நகர்த்தும் கவர்னர் குடியரசு தினத்தன்று காலையில், நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்திக்கொண்டு கம்பீரமாக வந்தார் கழுகார். எழுந்து நின்று சல்யூட் அடித்து, ‘‘ரஜினி தனது முதலாவது மக்கள் மன்றத்தைத் தைக் கிருத்திகை நாளன்று சென்னையில் ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறாரே... ஏதாவது விசேஷம் உண்டா?’’ என்று கேட்டோம். ‘‘ரஜினி படு ஸ்பீடில் போகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘இது வழக்கமான குடியரசு தினம் என்று நினைக்கவேண்டாம். தமிழக மக்களைச் சுரண்டும் குறுநில மன்னர்களிடமிருந்து விடுதலை வாங்கித்தர சபதம் எடுக்கும் நாள்’ என்று ரஜினி மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் சொன்னாராம். இப்போது, மன்றத்தில் உறுப்பினர் களைச்…

  5. கச்சதீவை மீட்டுத்தருமாறு “சிவசேனா” கடலில் இறங்கி போராட்டம் கச்சதீவை மீட்டுத் தரக்கோரி சிவசேனா கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவசேனா கட்சியின் மாநில துணைதலைவர் புலவன் போஸ் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற சிவசேனா கட்சியினர், மீனவர் நலனுக்காகவும் பாரம்பரிய தீவுகளில் ஒன்றான கச்சத்தீவை மீட்டுதரக்கோரி இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் இறங்கி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்பினர்கள் வருடம் தோறும் கச்சத்தீவை மீட்டுத்தரக்கோரி கடலில் இறங்கி தங்களது எதிர்பை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/29939

  6. ரஜினியும் கமலும் தெருவுக்கு வந்தால் தான் உண்மை நிலை தெரியும்: துரைமுருகன் அதிரடி பேட்டி கோவை: ரஜினியும் கமலும் தெருவுக்கு இறங்கி வந்தால் தான் உண்மை நிலை தெரியும். இப்போது அவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். கோவையில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்த காஞ்சி விஜயேந்திரருக்கு, தமிழ…

  7. ரஜினி, கமல், வைரமுத்து, விஜயேந்திரர்.... பின்னணி தெரியுமா? Chennai: ஜெயலலிதா மறைவு அதையொட்டிய அரசியல் மாற்றங்கள் மற்றும் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் என மக்கள் பிரச்னைகளில் ஆரம்பித்து, தற்போது நடிகர்களின் அரசியல் பிரவேச அறிவிப்புகள் வரை தொடர்ந்து செய்திகளால் பரபரத்துக் கொண்டேயிருக்கிறது தமிழகம். சமீபமாய் தமிழகத்தை தடதடக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்தச் செய்தி நிலவரங்கள் குறித்தும் அதன் பின்னணிகள் குறித்தும் கீழே காண்போம்.... ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சர்ச்சைகள் ஜெயலலிதா மறைவையடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலானது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டைத் தொடர்ந்து ரத்…

  8. அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம் அ-அ+ `நாளை நமதே' என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்ப…

  9. சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி 1 T3 Lifeஜனவரி 18, 2018 ப. ஜெயசீலன் “ஓடுகின்ற காளையின்மேல் லாவகமாய் தாவுகின்ற வித்தையை வீரமென்று பிதற்றுகின்ற மூடரே காளையின் கூர்கொம்பு குதத்தை கிழிக்க தேடுகையில் புழுதியில் புரள்வது எதனாலோ ?” மெரினாவில் நிகழ்ந்த தமிழக மக்களின் கும்பமேளா போன்ற ஒன்று கூடல் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. மக்களின் உணர்வுகளை எவ்வளவு எளிதாக ஊடகங்களால் தூண்டிவிடமுடியும் என்பதற்கும், மக்களின் தர்க்கமில்லாத அரசியல்மயப்படுத்தப்படாத உணர்ச்சிவேகத்தை சில தற்குறிகள் சில்லறைகள் எவ்வளவு எளிதாக பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதற்கும்(திருமுருகன் காந்தி போன்ற மக்கள் போராளிகளை சொல்லவில்லை), மக்க…

  10. "தமிழ்த் தாய் வாழ்த்துக்கு" மரியாதை தராத விஜயேந்திரர்... தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு. சென்னை: சென்னையில் நூல் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.இதில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபத…

  11. மிஸ்டர் கழுகு: பொல்லாத புதைகுழியில் பூங்குன்றன்! - சசி குடும்ப சொத்து வில்லங்கம் கழுகார் உள்ளே வரும்போதே சிந்தனைவயப்பட்டவராக இருந்தார். கண்களை மூடியபடி, ‘‘பெரிய இடத்து மனிதர்களிடம் நெருங்கவும்கூடாது; விலகவும்கூடாது. ‘தாமரை இலை தண்ணீர் மாதிரி பட்டும் படாமல் இருக்க வேண்டும்’ என்பார்கள். பேச்சுக்கு வேண்டுமானால் இதைச் சொல்லலாம். அது, நிஜத்தில் அத்தனை சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் நெருங்கியே ஆகவேண்டிய கட்டாயம் வரும். அதனால் கிடைக்கும் லாபங்கள் அதிகம். ஆனால், இப்படி நெருங்கிச் சென்றதன் காரணமாக பிரச்னைகளுக்கு ஆளாகி, பதுங்கிப் பதுங்கி வாழ்கிற வாழ்க்கை இருக்கிறதே... அப்பப்பா!’’ என்றார். ‘‘என்ன கழுகாரே, பீடிகை ரொம்ப நீள்கிறது?’’ என்றோம். ‘‘வேறொன்…

  12. நித்தியானந்தா பக்தைகளின் உளவியல்... மருத்துவ ஆராய்ச்சி சொல்லும் காரணம்! நித்தியானந்தம். வணக்கம். "மாணவர் சரத்பிரபு மர்ம மரணம்." "போக்குவரத்து ஊழியர் போராட்டம்." "பேருந்துக் கட்டணம் 40% உயர்வு. அதாவது, கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் சென்று வர ஒரு நாளைக்கு 66 ரூபாய் ஆனது." "பா. வளர்மதிக்கு பெரியார் விருது." "போராளி வளர்மதிக்கு விகடன் விருது" "ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மீண்டவர்களுக்கான நிவாரணம் இன்னும் சென்றடையவில்லை." "பியூஷ் மானுஷ் மீது ஈஷா வழக்குப் பதிவு. ஜக்கியே நேரடியாக மனுதாரர்களில் ஒருவராக இருக்கிறார்." இந்தச் செய்திகள் எ…

  13. சத்யசீலன் 'ஸ்பெக்ட்ரம்' ராஜாவான கதை! - 2ஜி புத்தகத்தில் ராசா உடைக்கும் ரகசியங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள `2G SAGA Unfolds' புத்தகம். Image caption2G SAGA Unfolds புத்தகம் "இந…

  14. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா? என்பது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #RajivCase #SupremeCourt புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வ…

  15. ஒரு கோடி உறுப்பினர்கள்... ரஜினியின் பிளான் ரெடி! ரஜினி மக்கள் மன்றத்தினர் பரபரவென உலா வருவதைப் பார்த்ததும் ‘என்னவோ திட்டம் இருக்கு’ என்று புரிந்தது. ‘ரஜினி எப்போது மக்களைச் சந்திப்பார்... எப்போது டூர் வருவார்?’ என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அதற்கான பணிகள் அசுர கதியில் நடந்துவருகின்றன. அதற்கு முன்னோட்டமாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பின்பக்கம் இருந்த கெஸ்ட் ஹவுஸ் மாற்றப்பட்டுவருகிறது. சுமார் 200 பேர் அமரும் அளவுக்கு மினி ஹால் ஆக மாற்றும் கட்டட வேலை நடக்கிறது. மண்டபத்துக்குள் வராமலே, ரசிகர்கள் இனி இந்த ஹாலுக்குள் வந்துபோக முடியும். இதுதான், ரஜினியின் புதுக்கட்சி அலுவலகமாகச் செயல…

  16. `இப்பிரச்னை முடிவுற்றதாகக் கருதுவோம்!’ - ஹெச்.ராஜா வேண்டுகோள் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக் கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் வருகைதந்து, ஜீயரை சந்தித்து மன்னிப்புக் கோரினார். இதுகுறித்து ஹெச்.ராஜா தன் ட்விட்டர்மூலம் கருத்து தெரிவித்துள்ளார். தினமணி நாளிதழ் ராஜபாளையத்தில் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை வாசித்தார். அது, தினமணி நாளிதழிலும் வெளியானது. அதில், ஆண்டாள் பற்றி வெளிநாட்டவர் எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைணவர்கள், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், வைத்தியநாதன், வைரமுத்துவுக்…

  17. தீவிர அரசியலில் ஈடுபடப்போறேன்... உதயநிதி ஸ்டாலின் திடீர் அறிவிப்பு.சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே அரசியலில் ஈடுபட்டதாகவும், தற்போது தீவிர அரசியலில் ஈடுபடும் நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி, திரைப்படங்களை தயாரித்து வந்தார். ஹீரோவாக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நிமிர் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின். தனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தைக்கு ஆதரவாக…

  18. திமுகவில் சலசலப்பு: துர்கா ஸ்டாலின் கோரிக்கையால் உண்ணாவிரதத்தை கைவிட்டாரா ஜீயர்? ஆண்டாள் குறித்த சர்ச்சை தொடர்பாக உண்ணாவிரதம் இருந்துவந்த திருவில்லிபுத்தூர் ஜீயர், மு.க. ஸ்டாலினின் மனைவி துர்காவின் கோரிக்கையின் பேரில் கைவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறியிருக்கும் விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதியன்று தினமணி நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் என அமெரிக்காவைச் சேர்ந்த ப…

  19. இலங்­கை­யி­ட­மி­ருந்து விடு­வி­யுங்கள்.! இலங்கை அரசால் கைது செய்து சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்கும் காரைக்கால் மீன­வர்­களை விடு­விக்க வேண்டும் என வெளி­யு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரா­ஜிடம் கண்ணீர் விட்டு கதறி அழு­த­ப­டியே மீன­வர்­களின் குடும்­பத்­தினர் மனு­கொ­டுத்­துள்­ளனர். காரைக்­காலில் 'பாஸ்போர்ட்' (கட­வுச்­சீட்டு) சேவை மையம் திறப்பு விழா நிகழ்­விற்கு வந்த மத்­திய வெளி­யு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு இறங்க முயற்­சித்தார். அப்­போது திடீ­ரென காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் சிலர் அவரை சூழ்ந்­து­கொண்­டனர். தீபா­வ­ளிக்கு முன்பு கட­லுக்கு மீன்­பி­டிக்க சென்ற காரைக்­காலை…

  20. `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்!' - கமல் சூளுரை சென்னையில், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்' என்று பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில், சில நாள்களுக்கு முன்னர் நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படித் தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து, அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தார். இப்படி நேரடி அரசியலில் முழுவீச்சில் இறங்கியுள்ள கமல், வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்…

  21. ரஜினி அரசியல்: 1-ஜெயிக்கிற குதிரை! ரஜினிகாந்த் | படம்: அருண் சங்கர். 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே!', 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே!'. இந்த வரிகளை ரஜினிக்கு முன்னதாக யாராவது அரசியல் தலைவர்கள் பேசியிருக்கிறார்களா. பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ எங்காவது எடுத்தாண்டு உள்ளார்களா? இதை வாசிக்கும் உங்களுக்காவது தெரியுமா? ரஜினியே இந்த வசன கோர்வை வாக்கியத்தை அமைத்துக் கொண்டாரா? அல்லது வேறு யாராவது வசனகர்த்தாக்கள் அவருக்கெனவே எழுதிக் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. இந்த வசனத்தை அவர் எப்போது பேச ஆரம்பித்தார் என்பதை அறிவீர்களா? இதை உங்களிடம் கேட்பது போலவே எனக்குத் தெரிந்த மூத்த ரஜி…

  22. ரஜினிக்காக ரெடியாகிறது தொகுதி! ‘‘நான் 25 ஆண்டுகள்தான் கர்நாடகாவில் வளர்ந்தேன். ஆனால், தமிழ்நாட்டில் 37 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். என்னை நீங்க பச்சைத் தமிழனா ஆக்கிட்டீங்க. வார்த்தைக்கு வார்த்தை என்னை ‘கன்னடர்’ என்று பேசி, சிலர் தமிழ்நாட்டிலிருந்து பிரித்துவைக்க ஆசைப்படுகிறாங்க. ஆனால், என் பூர்வீகம் தமிழ்நாடுதான். என் மூதாதையர், பெற்றோர் எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள். இன்றைக்கும் சிலர் அங்கு இருக்கிறார் கள். பிழைப்புத்தேடி பெங்களூரு போனதுதான் எங்கள் குடும்பம்’’ என்று முன்பு ஒருமுறை ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிகரமாகச் சொன்னார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டதும், நாச்…

  23. ராஜீவ் கொலை மர்மம் உடைக்கும் ‘தடா’ ரவி! தனு... அனுஜா - பொய் சொன்ன சி.பி.ஐ - சிவராசனுக்கு உத்தரவிட்டது சி.ஐ.ஏ ‘இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்துவிட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கிவிடுவேன். அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை…

  24. மிஸ்டர் கழுகு: கை கழுவுகிறதா டெல்லி? ‘‘மேடையில் ரஜினி, கமல். முன்வரிசை யில் நான்கு அமைச்சர்கள்... எப்படியிருக்கிறது இந்தக் காட்சி?’’ என்று கேட்டபடி வந்தார் கழுகார். ‘‘எங்கே இந்தக் காட்சி?’’ என்றோம். ‘‘எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்குப் பிறகு உருவாக்க நினைத்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படம், இப்போது அனிமேஷனில் தயாராகிறது. அதன் துவக்க விழாவின்போது நடந்த காட்சி இது. பிரபுதேவா வுடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை அவர் அழைத்திருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருந்தார். ரஜினி இருப்பதை அறிய…

  25. "கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடந்த போட்டியில் நான் பலியாகிவிட்டேன்" - ஆ.ராசா எனது அமைச்சகத்தில் மர்மமான விஷயங்கள் நடப்பதாகவும், அதிகாரிகள் என்னைத் தவறாக வழி நடத்துவதாகவும் அப்போதே காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா எச்சரித்தார் என முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2G Scam Unfolds என்ற புத்தகத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஆ. ராசா விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்திருந்தவரும் இவர் ஒருவரே. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நட்வர் சிங், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு மிட்டல் ஆகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.