Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ’ஜெயலலிதாவை பார்த்து பேசியதாக பொய்தான் சொன்னோம்’ - திண்டுக்கல் சீனிவாசன் பல்டி ’ஜெயலலிதாவை பார்த்து பேசியதாக பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபனாக பேசியுள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் இன்று இரவு நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு, விஷயத்துக்குள் வந்தார். '' டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் வாக்கு சேகரிக்கும்போது சசிகலா படத்தை போடாதது ஏன்?. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. எங்களை பார்க்க சசிகலா குடும்பம் …

  2. ஜெயலலிதா மரணத்தில் இன்னும் விலகாத 16 மர்மங்கள்! 'தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கப்படும்' என அறிவித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'எந்த நீதிபதி விசாரணையைத் தொடங்கப் போகிறார்?' என தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ‘75 நாள்களாக ஜெயலலிதாவைச் சுற்றி என்ன நடந்தது? அவர் இயற்கையாகத்தான் இறந்தாரா?' என்ற சந்தேகம் இன்றளவும் பொதுமக்கள் மத்தியில் உலவி வருகிறது. 'எங்கள் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்…

  3. “தினகரன் அணியில் முதல்வரின் ஸ்லீப்பர் செல்ஸ்!” - பரபர பின்னணி #VikatanExclusive தினகரன் அணியிலிருக்கும் பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைய 30 நாள்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தார் தினகரன். 'ஆகஸ்ட் புரட்சி' என்று காத்திருந்த தினகரனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தின…

  4. ஜெயலலிதா நினைவிடத்தில் சீன தூதர் அஞ்சலி தமிழகம் வந்த சீன தூதர் தனது குடும்பத்தாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவுக்கான சீனதூதராக இருப்பவர் லோ சாஓஹுய். 1985-ல் ஆசியா வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்ற இவர் 1989 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் இருந்தார். 1989 முதல் 1993 வரை சீனத்தூதரகத்தின் இரண்டாவது செயலராக பதவி வகித்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை வட அமெரிக்காவில் சீன வெளியுறவு அதிகாரியாக பணியாற்றினார். 96 ஆம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை அமெரிக்காவிற்கான சீனத்தூதரக அலுவலக இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார். 2006 முதல் 2016 வரை பல்வேறு நாடுக…

  5. கோபத்தில் ஆளுநர்: ஆட்சியை கலைக்க குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்? கோபத்தில் ஆளுநர்: ஆட்சியை கலைக்க குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்? தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவரது பெயர் கெட்டுவிட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அவர் மீது ஆளுநர் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக வட்டாரத்தில் ஆளுநரின் கோபம் தொடர்பாகவும், ஆட்சியை கலைக்க அவர் ஆலோசித்திருப…

  6. உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு தமிழக அரசுக்கு உப்பா, சர்க்கரையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்பது அரசியல் வட்டாரத்தில் விடைகாண்பதற்கு கடினமான விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தகுத…

  7. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓராண்டாகத் தமிழகம்! கடந்த ஆண்டு இதே நாளில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. பல ஊகங்களும் எழுந்தன. மக்கள் குழப்பத்தில் மூழ்கினார்கள். 2016 செப்டம்பர் 21-ல் சென்னை மெட்ரோ ரயில் சேவையைக் காணொலி மூலம் தொடங்கி வைத்ததே ஜெயலலிதா மக்கள் மேடையில் உயிரோடு தோன்றிய கடைசி காட்சி. அவர் மருத்துவமனையில் சேர்ந்தது தொடங்கி இன்று வரை, கடந்த ஓராண்டாகத் தமிழகமே தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறது! இத்துடன், கடந்த ஓராண்டாகவே மாறிவரும் நம்ப முடியாத அரசியல் காட்சிகளைக் கண்டு மக்கள் அருவ…

  8. தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல் தாம் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது என தெரிவித்துள்ள அவர் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடதுசாரியா, வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். என்னைப் பொருத்தவரை கறுப்ப…

  9. செப்.21, 2016: ஜெயலலிதா பொதுவாழ்வின் கடைசி நாள் இன்று செப்டம்பர் 21, 2016 அன்று தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 200 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெயலலிதா மறைந்து 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இன்றைய நாள் அவருக்கு மிக முக்கியமான நாளாகும். ஜெயலலிதா முதல்வராக தான் மறைவதற்கு முன் கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி நடந்தது கடந்த ஆண்டு இதே நாளில்தான். செப் 21, 2016-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதற்கு பல மாதங்கள் முன்பே தனது உடல் நிலை காரணமாக செயல்…

  10. செந்தில்பாலாஜி உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டின் பின்னணி! கரூரில் உள்ள செந்தில்பாலாஜி உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், தொழிற்சாலைகள், மில்கள் என்று 13 இடங்களில் இதுவரை ரெய்டு நடந்து வருகிறது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, கர்நாடகாவின் குடகு ரிசார்ட்ஸில் தங்கியிருக்கிறார். அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை தருவதாகச் சொல்லி ஆறு கோடி வரை பணம் வசூலித்ததாக அவர்மீது புகார் படிக்கப்பட்டது. அந்தப் புகார் இப்போது விஸ்வரூபம் எடுக்க குடகு ரிஸார்ட்ஸில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்…

  11. “நம்பி மோசம் போய்விட்டேன்!” - கொந்தளிக்கும் சசிகலா #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியை ரத்துசெய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, சசிகலா எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தற்போது, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர்மீது சசிகலா கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுக்குழுவில் அ.தி.மு.க வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான், அவரை அந்தப் பதவியிலிருந்த…

  12. 'கெஜ்ரிவாலைச் சந்தித்தது ஏன்?' - கமல்ஹாசன் விளக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாகக் கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் - கமல்ஹாசன் சந்தித்துப் பேசினர். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் ஆலோசனையில்…

  13. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி: செல்லாது என தெரிந்தே பிறப்பித்த உத்தரவு தலைமைச் செயலகம் | கோப்புப் படம் தமிழகத்தில் ஆளும் கட்சியின் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருப்பது, செல்லாது என தெரிந்தே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என அதிமுக எம்.பி.க்கள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் கே.பழனிசாமியை பதவி நீக்கம் செய்யக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தமிழக ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் திமுக வலியுறுத்தியது. மேலும் இது தொடர்பாக சென்னை உயர்…

  14. நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறியாத அப்பாவி என்றால் அப்பல்லோ மருத்துவமனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹேமநாதனின் கதை ஒரு சான்று! சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த உண்மைச் சம்பவம் இது! இப்படியெல்லாம் நடக்குமா என்று எவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் அநீதியும் கூட! நோய்வாய்ப்பட்ட தனது தாயாரை அப்பல்லோவில் சேர்க்கிறார் திரு.ஹேமநாதன். சேர்க்கும் போது அந்த தாயாருக்கு மூக்கில் இருந்து கொஞ்சம் ரத்தம் வந்தது, அவ்வளவே. பிறகு தலைக்கு எம்.ஆர்.ஐ-ஸ்கேன், இலட்ச ரூபாய்களில் நடந்த பல்வேறு சோதனைகள், அந்த தாயாரின் கபால ஓட்டை பிரிக்கும் அறுவை சிகிச்சை, நினைவு…

  15. அன்று உத்தரப்பிரதேசம்... இன்று தமிழகம்... பி.ஜே.பி. பின்னணியில் என்னவெல்லாம் செய்கிறது? நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 1951-ல் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்திலிருந்து ஒருமுறைகூட பி.ஜே.பி. தனியாக தேர்தலில் நின்று மக்களவைக்கு வெற்றிபெற்றதில்லை. 1998 மற்றும் 1999 காலகட்டத்தில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு முறையும் அது கழகக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்த இரு பெரிய திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் விஜயகாந்த்-ன் தே.மு..தி.க. மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து பி.ஜே.பி. சந்தித்த 2014 மக்களவைத் தேர்தலில், அக்கட்சி கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்தத் தொகுதியின் எம்.பி. பொன் …

  16. 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும்! 2ஜி வழக்கு தொடர்பாக தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்து இருந்தார். அதன்படி 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் இன்று அறிவிக்க உள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் போது 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை சிபிஐ விசாரணை நடத்தியது. …

  17. நவராத்திரி கொலுவில் ஜெயா பொம்மை நவராத்திரி பண்டிகைக்காக வைக்கப்படும் கொலுவில் இந்த ஆண்டின் புதிய வரவாக வந்துள்ள ஜெயலலிதா பொம்மைக்கு டுவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அரசு திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தவறு என்றும் இது தவறான முன்னுதாரணம் என்றும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட மு…

  18. திருமுருகன் காந்தி, உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து... ஹைகோர்ட் அதிரடி. கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கடந்த மே 23-இல் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.எனினும் அந்த 4 பேர் மீதான குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில் ஜாமீன் கோரிய இவர்களது மனுக்கள் …

  19. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...?! "நல்லதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்" என்றார் பெரியார். அப்படியான மாற்றங்கள்தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முதலமைச்சர் பதவிக்கான சண்டை, ஓ.பன்னீர்செல்வத்தில் தொடங்கி தற்போது எடப்பாடி பழனிசாமியில் வந்துநிற்கிறது. ஆனால், இரண்டுபேரும் மல்லுக்கு நின்றதும்... நிற்பதும் மன்னார்குடி தரப்பிடம்தான். ஜெ., மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா முதல்வராக விரும்பியதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் மன்னார்குடி தரப்பிடமிருந்து வி…

  20. அழியப் போகும் ஆடல் கலை ! “ஆடல் கலையே தேவன் தந்தது” இது வெறும் சினிமா பாடல் வரிகள் மட்டுமே இல்லை. நாம் கற்கால மனிதர்களாக இருந்தபோதே இணையை கவர்வதற்கும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் உடல் அசைவுகளின் மூலம் அதாவது ஆடல் முறைகளின் வழியே மட்டும் அதனை நிகழ்த்தினோம். அதன் வெளிப்பாடாகவே இறை நம்பிக்கையில் கூட ஆடல் கலைக்கென தனி இறைவனையே கொண்டிருந்தோம். படம்: flickr அப்படிப்பட்ட நாம் தான் இன்றைய அவசர, அறிவியல் சூழலில் நம்முடைய அத்தனை கலைகளையும் அழித்துக்கொண்டிருக்கின்றோம். ஆம், 15 வருடங்களுக்கு முன் நம் தமிழக கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்திலும் இரவு நேர கேளிக்கைக்காகவும், அதோடு நம் வரலாற்றை வரும்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற …

  21. கோர்ட் தீர்ப்புக்கு பின் ராஜினாமா முடிவு! அடுத்தகட்டம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு சென்னை:''கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவை, நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் தெரிவிப்போம். அதுவரை, 'சஸ்பென்ஸ்' நீடிக்கட்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார். தினகரன் அணியின், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், அரசு விழாவை அரசியல் மேடையாக்கும் குதிரை பேர அரசுக்கும், தலைமைச் செயலர். டி.ஜி.பி., ஆகியோருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட…

  22. பழைய பலத்தை இழந்து வருகிறதா தி.மு.க ? | Socio Talk | Current Status of DMK கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவால் கட்சியை அவரால் பெரும் அளவு கவனிக்க முடியாமல் ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஸ்டாலின் இயக்கும் தி.மு.க இப்போது தனது பலத்தை இழந்து வருகிறது என கூறப்படுகிறது. கருணாநிதி நலமாக இருந்தால் இப்போது நடக்கும் அ.தி.மு.க ஆட்சியை களைத்து இருப்பாரோ? இப்போது உள்ள தி.மு.கவின் நிலை என்ன தெரியுமா? அழகிரி முதலமைச்சரானால் என்ன ஆகும் தமிழகம். மேலும் பல கேள்விகளும், விடைகளும்.

  23. முதல்வர் கமல்... அமோக ஆதரவு... ஆனால், களம் காணவேண்டும்! #VikatanSurveyResult தமிழக அரசியல்குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 'கேரள முதல்வருடனான சந்திப்பு, விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திப்பது என முழு நேர அரசியல்வாதியாக மாறிக்கொண்டிருக்கிறார் கமல்' என்ற தகவல்களும் வலம் வருகின்றன. 'தனிக்கட்சி தொடங்குவேன்' எனவும் அவர் பேசியிருக்கிறார். கமல்ஹாசனின் அரசியல் வருகைகுறித்து மக்கள் மத்தியில் உலவும் சில கேள்விகளைத் தொகுத்து வழங்கி இருந்தோம். இதற்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் சர்வேயில் கலந்துகொண்டு வாக்குகளை அளித்திருந்தனர். அதன் முடிவு இங்கே... 1) கமல்ஹாசனின் கோபத்தில் பொதுநலன் இருப்பதாகக் கருதுகிறீர்களா? …

  24. தகுதிநீக்கம்: நாளை விசாரணைக்கு வருகிறது சபாநாயகர் தனபாலுக்கு எதிரான வழக்கு தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரின் எம்.எல்.ஏ-க்கள் பதவியை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இந்த நிலையில், 19 பேரின் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க வேண்டும் என்று அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உங்கள்மீது ஏன்…

  25. பழனிசாமி அதிரடியில், 'பணால்' ஆன சசி குடும்பம் முதல்வர் பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை, சசிகலா குடும்பத்தினரை மிரள வைத்துள்ளது. ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 21 பேர் உதவியுடன், முதல்வர் பழனிசாமியை மிரட்டி பணிய வைக்க, சசிகலா குடும்பத்தினர் முயற்சித்தனர். அவர், மிரட்டலுக்கு பயப்படாமல், பொதுக்குழுவை கூட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியிலிருந்து, சசிகலாவை துாக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்த தினகரன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார். முதல்வராக இருந்த ஓ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.