Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டில்லியில் தமிழக மந்திரிகள் ஆலோசனை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் எப்போது எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், நம்பிக்கை ஓட்டெடுப்பு, பொதுக்குழு என மூன்று விஷயங் களும், ஒரே நேர்கோட்டில் வந்து நிற்பதால், இவற்றை எளிதாக கையாளுவது குறித்த அறிவுரைகளை, தமிழக அமைச்சர்கள், டில்லியில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டா ரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், அ.தி.மு.க., வைச் சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரிடம் மனு அளித்து விட்டு, புதுச்சேரி புறப்பட்டுச் சென்றதிலிருந்தே, முதல்வர் பழனிசாமி தலை மையிலான அரசு, ஆட்டம் காணத் த…

  2. காபந்து, குதிரை பேரம்.... தமிழக அரசியலை இயக்கும் 10 வார்த்தைகள்! #HallOfShameADMK “அரசியல் அபிலாஷைகளை வளர்த்துக்கொள்வது பெரும்பாவம்... அரசியல் பேசுவது பெருங்குற்றம்... அரசியல் கட்சிகளில் சேர்வது மனித தன்மையற்றச் செயல்...” என்று பேசி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை இப்போது விழிப்படைந்துவிட்டது. இனியும் அரசியலை யாரோ ஒருவரின் தனிப்பட்ட சொத்து என்று கருதி விலகிச் செல்லக்கூடாது என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டுவிட்டது. அரசியல் பயில விரும்புகிறது. அரசியல் குறித்து உரையாட பேரார்வம் கொள்கிறது. தேர்தல்... வாக்கு வங்கி அரசியலைக் கடந்து களத்தில் இறங்கி மாற்று அரசியல் செய்ய விரும்புகிறது. அவர்களுக்கு ஏற்றார் போலத்தான் இப்போது தமிழக அரசியல் களமும் இருக்கிறது. இப்பட…

  3. ஜீவ சமாதி அடைய உண்ணாவிரதம் ஆரம்பிப்பு ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி முருகன், வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். துறவி ஆடைகளுடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன். சிறைத்துறை தலைவருக்கு, கடந்த மாதம் மனுவொன்றை, வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். அம்மனுவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தனது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது. சிறை வாழ்க்கையை வெறுப்பதாகவும் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 17ஆம…

  4. ' நினைவை மீட்டுக் கொடுத்த திருமாவுக்கு நன்றி!' - கிட்டாரால் கலங்கிய பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வந்திருக்கிறார் பேரறிவாளன். அரசியல் கட்சித் தலைவர்களுடன் தினம்தோறும் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கொடுத்த கிடார் இசைக் கருவி பேரறிவாளனை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ' முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவை மீட்டுக் கொடுத்திருக்கிறார் திருமா' என நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார் பேரறிவாளன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், நீண்ட இழுபறிக்குப் பிறகு பரோலில் வெளிவந்திருக்கிறார். ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் தங்கியிருந்து, …

  5. “எனக்கு 19... உனக்கு 21” எடப்பாடியின் எலிமினேஷன் எம்.எல்.ஏ-க்கள்! ‘சட்டசபையைக் கூட்டி பலத்தை நிரூபித்தாக வேண்டும்’ என்கிற கட்டத்தை நோக்கி நகர்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு. ‘‘50 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்’’ என டி.டி.வி.தினகரன் தரப்பு சொல்லிக்கொண்டிருக்க, ‘‘113 எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் இருக்கிறார்கள்’’ என்கின்றனர் எடப்பாடி தரப்பினர். சபாநாயகர் தவிர்த்து மொத்தமுள்ள அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 134-தான். பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு 117 எம்.எல்.ஏ-க்கள் பலம் தேவை. அது இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். ‘‘இந்தச் சூழலில், தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க கோரிக்கைகளை ஏற்று கவர்னரோ, நீதிமன்றமோ ஏதாவது உத்தரவ…

  6. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருடன் நாளை சந்திப்பு: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்துகின்றனர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். - படம். | பிடிஐ. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை (ஆகஸ்ட் 31) சந்திக்க இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட…

  7. மிஸ்டர் கழுகு: அழைப்பு போகும்... ஆனா போகாது! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘அ.தி.மு.க பொதுக்குழுவுக்கான வேலைகள் தொடங்கிவிட்டதா?” என்ற கேள்வியைப் போட்டோம். ‘‘அ.தி.மு.க பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த மண்டபத்தில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி, அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடி, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இப்போது அதே மண்டபத்தில் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவைக் கட்சியை விட்டே நீக்க இருக்கிறார்கள். பொதுக்குழுவில் சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ள…

  8. Started by நவீனன்,

    குழப்பம்! தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள் இரட்டை இலையை மீட்க யோசனை கேட்பதில் தடுமாற்றம் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த பிரமாண வாக்குமூலங்களை திரும்பப் பெறு வதா, வேண்டாமாஎன்பது குறித்து, டில்லியில் யாரிடம் யோசனை கேட்பது என்ற குழப்பத் தில், தமிழக அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். கட்சிக்குள் ஏற்பட்டுள்ளஉச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்ட துவங்கியுள்ளனர். தமிழகத் தில், அ.தி.மு.க., வில், தினமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தேர்தல் ஆணை யத்தை பொ…

  9. ஸ்லீப்பர் செல்லில் அமைச்சர் நடராஜன்? : சசிகலா புகழ்பாடும் மொபைல் பேச்சு அம்பலம் திருச்சி: 'சசிகலாவை எல்லாம் பதவியை விட்டு எடுக்க மாட்டோம்' என, அமைச்சர் நடராஜன் மொபைல் போனில் பேசியது, 'லீக்' ஆகியுள்ளதால், அவர், தினகரனின், 'ஸ்லீப்பர் செல்'களில் ஒருவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர், சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன். சமீபத்தில், தினகரனை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, இவரது மாவட்ட செயலர் பதவியை பறிப்பதாக, தினகரன் அறிவித்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக மொபைல் போனில், தினகரன் ஆதரவாளருடன் நடராஜன் பேசியது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விபரம…

  10. Started by நவீனன்,

    தினகரன் அணியை சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது, கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ள நிலையில், அவர்களில், 11 பேர், முதல்வர் பழனிசாமி விரித்த வலையில் விழுந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த, 11 பேரின் குடும்பத்தினருடன், மூத்த அமைச்சர் ஒருவர் நேரில் நடத்திய ரகசிய பேச்சில், இந்த உடன்பாடு உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது மட்டும், கட்சித் தாவல் தடை சட்ட நடவடிக்கை கைவிடப்படலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், கவர்னரிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், 19 பேர் க…

  11. 49 'ஸ்லீப்பர் செல்' எம்.எல்.ஏ.க்கள்! அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடக்கும்? #HallOfShameADMK அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 49 எம்.எல்.ஏ.க்கள் கணக்கில் வரவில்லை என்கிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வெற்றிவேல் சொல்வது போல், அவர்கள் 'ஸ்லீப்பர்செல்' எம்.எல்.ஏ.க்களா என்ற பரபரப்பு எதிரணி முகாமில் பற்றிக் கொண்டிருக்கிறது. அது பொதுக்குழுவில் வலுவாக எதிரொலிக்கலாம் என்கிறார்கள்தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில், அ. தி.மு.க. 135, தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக், 1 மற்றும் காலி இடம் 1 (ஜெ.ஜெயலலிதா இறப்பு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி)…

  12. ‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது!’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் #VikatanExclusive முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களும் சசிகலா குடும்பத்தைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. ‘ஜெயா டிவியைக் கைப்பற்றும் முயற்சி ஒருக்காலும் நடக்காது. என்னை மிரட்டிப் பணிய வைக்க ரெய்டு பயத்தைக் காட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் குடும்ப உறவுகளிடம் கொதித்திருக்கிறார் ஜெயா டி.வி நிர்வாகி விவேக் ஜெயராமன். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம…

  13. வித்யாசாகர் ராவ்: உண்மையில் ஒரு 'கவர்னர்' தானா ? | Socio Talk | Governor Vidhyasagar Rao

  14. ஜெயா டி.வி யாருக்குச் சொந்தம்? வைரலாகும் ஜெயலலிதா வீடியோ! ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நடந்த போட்டி தற்போது ஜெயா டி.வி-யைக் கைப்பற்றுவதில் வந்து நிற்கிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து அவரைத் துணை முதல்வராக்கி, சசிகலா குடும்பத்துக்குச் சவால் விட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக, நேற்று அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்களில்,' ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் கழகத்தின் சொத்துகள். அவற்றை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தினகரன் நியமனங்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தாண்டி பரபரப்பை ஏற்…

  15. அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்துள்ள சூழ்நிலையில் தினகரன் தரப்பினர் தணி அணியாக செயல்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூடிவரும் நிலையில் இருத…

  16. செங்கொடி- மூன்று சேய்களைக் காத்த அன்னை- கவிஞர் வாலியின் தீர்க்கதரிசனம்! பெற்ற மகனின் உயிர்காக்க ஒரு தாய் போராடுவதில் எந்த ஆச்சர்யமில்லைதான். ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இருபது வயதுப் பெண், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தன் உயிரை தீக்கு திண்ணக் கொடுத்த அதிசயம் இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்ந்தது. அவள்தான் காஞ்சிபுரம் செங்கொடி. இருபத்து ஏழு வயது நிரம்பிய தமிழ் உணர்வாளர். கூடப் பிறந்தால்தான் தொப்புள் கொடி உறவா... இல்லையில்லை... தமிழர் என்ற அடையாளத்துக்குள் வரும் அத்தனை பேரையும் தன் தொப்புள் கொடி உறவாக மதித்த இளம் பெண். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உயிரைக் காக்க தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில…

  17. ரெய்டுகளின் ரிசல்ட் என்ன? - அன்புநாதன் முதல் விஜயபாஸ்கர் வரை... ஒரு கட்சி பல அணிகளாக உடைவதையும், அந்த அணிகள் மீண்டும் இணைவதையும்விட, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியவை வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டுகள்தான். கடந்த 16 மாதங்களில், 10-க்கும் மேற்பட்ட ரெய்டுகளைத் தமிழகத்தில் வருமான வரித்துறை நடத்தியுள்ளது. பல ரெய்டுகளின்போது, கட்டுகட்டாகப் பணம், தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனாலும், சேகர் ரெட்டி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதைத் தவிர யார் மீதும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படியென்றால், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அச்சுறுத்திப் பணிய வைப்பதற்கு மட்டுமே இந்த ரெய்டுகள…

  18. இன்று மாலை கூடுகிறது உரிமைக்குழு: தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் புறக்கணிப்பால் அதிமுக பலம் குறைந்தது தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்களை சட்டபேரவைக்குள் கொண்டு வந்தது குறித்து திமுக உறுப்பினர்கள் பற்றி விசாரிக்க உரிமைக்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் உறுப்பினராக இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் கூட்டத்தைப் புறக்கணிப்பால் அதிமுக பலம் குறைந்தது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், அமைச்சர் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். …

  19. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கையை ஏற்று இவரை ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணை தற்போது வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேரறிவாளனின் தாயார் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தன. அந்த வகையில்…

    • 13 replies
    • 1.2k views
  20. முருகன் பாணியில் நளினி... சிறையில் தொடரும் உண்ணாவிரதம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்தியச் சிறையில் இருக்கும் நளினி இன்று காலை முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதிக்கு அனுமதி வேண்டும் என்று கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி, அவரது உண்ணாவிரத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நளினி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ''இன்று முதல் நளினி உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாக வந்துள்ள தகவல் உண்மைதான். முருகன், தன் உண்ணாவிரதத்தை கைவிடும் வரை நள…

  21. ராஜீவ் மரணம்: தொடரும் பரமபத விளையாட்டு! “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்பட்ட வெடிகுண்டு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்... அதுபற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை முகமை (MDMA) இத்தனை ஆண்டுகளில் நடத்திய விசாரணைகள் என்ன? இதுபற்றி மத்திய அரசு முழுமையான அறிக்கை தரவேண்டும்’’ என இப்போது கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு குறித்த விசாரணை அறிக்கையை, கடந்த 23-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. ராஜீவ் மரணம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், அந்த வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசியாக இருக்கும் பேரறிவாளன் தொடுத்த வழக்கில்தான் இப்படிப் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். உ…

  22. மீண்டும் ரிசார்ட்டுக்கு படையெடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்! புதுச்சேரி நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதே ரிசார்ட்டுக்கு கூடாரத்தை மாற்றியிருக்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் ”பீச் ரிசார்ட்டில்” தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி 100 அடி சாலைய…

  23. தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. .தி.மு.க., தலைமையகத்தில், இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறிக்க, முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபை உரிமை குழு கூடி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது. இந்த இரு கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்ப லாம் என்பதால், ஆளும் கட்சி தொண்டர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும், முடிவுகளை அறிய ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில், தற்ப…

  24. 'ஸ்டாலின் - டி.டி.வி. தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி' - சுப்பிரமணியன் சுவாமி ஆருடம் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இணைந்து இன்னும் சில நாள்களில் கூட்டணி ஆட்சியமைப்பார்கள் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரவித்துள்ளார். அ.தி.மு.க-வில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. பிரிந்திருந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்தனர். இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தை கட்சியை விட்டு நீக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். டி.டி.வி. தினரனுக்கு தற்போது 23 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. ஏற்கெனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது புதுச்சேரி ரிசார்ட்டில்…

  25. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி பறிப்பு சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி தினரன் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் வெளியிடுகிறேன் என்று துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என்று கூறிய தினகரன் ஏற்கனவே வைத்திலிங்கம், முக்கிய அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.