Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்கக் காத்திருக்கும் அந்த '10 அமைச்சர்கள்'! ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனதில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் 10 அ.தி.மு.க அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள், எந்நேரமும் எடப்பாடி அரசுக்கு எதிராகத் திரும்பலாம் என்பதுதான் இப்போது கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக். அந்த அமைச்சர்களோடும் அவர்களுக்கு நெருங்கியவர்களோடும் டி.டி.வி.தினகரன் டீம் பேசி வருகிறது. சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் விதித்த மூன்று நிபந்தனைகளில், ‘ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவது’ என்ற கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டார் முதல்வர் எ…

  2. மிஸ்டர் கழுகு: இணைப்பு முடிந்தது! கவிழ்ப்பு ஆரம்பம்! கழுகார் முகத்தைப் பார்த்ததும், ‘‘ஒருவழியாக ஒன்று சேர்ந்து விட்டார்களே?” என்றோம். ‘‘ஆம்... இணைப்பு முடிந்தது! அடுத்து கவிழ்ப்பு வேலைகள் ஆரம்பம்” என்றார் கழுகார். ‘‘அதற்குள்ளாகவே கவிழ்ப்பா?” ‘‘ஒன்று சேர்ந்தது எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தானே? தினகரன் இன்னமும் உறுமிக்கொண்டுதானே இருக்கிறார்! ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் அவருடைய ஆதரவாளர்கள் இறங்கிவிட்டார்களே...” என்று பீடிகை போட்டவரிடம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம். ‘‘ஆறு மாதங்களுக்கும் மேலான தர்மயுத்தம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது எப்படி?’’ ‘‘தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களிடமும் மக்களிடமும் நியாயம் கேட்டதைவிட, டெ…

  3. ‘முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா?!’ - கொதி கொதித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் #VikatanExclusive மீண்டும் ஓர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ‘முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்' என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அளித்த கடிதத்துக்கு இன்னமும் ஆளுநர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. ‘என்னை தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். முதல்வரை தேர்வு செய்வது என் வேலையா?' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். சென்னை, வானகரம் பொதுக் குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, கட்சி எம்.எல்.ஏக்களால் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏக்க…

  4. பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம்: கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம் டிஐஜி ரூபா அளித்தார் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான வாயிலில் கையில் பைகளுடன் நுழையும் வீடியோ பதிவை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம், ஐபிஎஸ் அதிகாரி ரூபா அளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், …

  5. 'எங்கே கருணாஸ்..?' - தேடுதல் பணியில் தினகரன் அணி 'என்னுடைய ஆதரவு தினகரனுக்குத்தான்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே நேரிடையாகத் தெரிவித்தவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் கருணாஸைத் தேடி வருகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். அ.தி.மு.க-வில் அணிகள் இணைந்த பிறகு, அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கொடி பிடித்துள்ளனர். ஆளுநர் வித்யாசாகரைச் சந்தித்த தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ-க்கள் தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். அதில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். இந்த ஆட்சிக்கு ந…

  6. ரஜினி குடும்பத்தின் ஆஸ்ரம் பள்ளி திறப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தாக்கல் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் குத்தகை அடிப்படையில் இடத்தைப் பெற்று எங்கள் சங்கம் சார்பில் ஆஸ்ரம் பள்ளி நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் வரை வாடகை பாக்கி இல்லாதபோதும், நில உரிமையாளர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி பள்ளி நுழைவுவாயிலை பூட்டிவிட்டனர். இதற்காக ரூ. 6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடந்தது. பள்ளி பூட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வழ…

  7. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிகரித்தால் சட்டப்பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சி அமல்? - பாஜக போடும் புதிய திட்டம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சட்டப்பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதத்தில் கூறியுள்ளனர். இவர்கள் தவிர அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின…

  8. சென்னையையும் தாக்கியது "ப்ளூவேல் கேம்" விபரீதம் - 7வது மாடியிலிருந்து குதித்த மாணவி. சென்னையையும் தாக்கியுள்ளது "ப்ளூவேல் கேம்" விளையாட்டு. விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது. படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ப்ளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பல உயிர்களைப் பறித்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து அறிமுகமான இந்த விபரீத விளையாட்டுக்கு தொடர்ந்து இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். பல சுற்றுக்களைக் கொண்ட இந்த விளையாட்டின் இறுதிச் சுற்று மரணம் என்பதுதான் மிகக் கொடுமையானது, கோரமானது. ஆனால் இந்தக் கோர விளையாட்டுக…

  9. அ.தி.மு.க அணிகள் இணைப்பு: அதிமுக-வின் மூன்று அணிகளும் தனித்தனியே ஆலோசனை #LiveUpdate *ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். *முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. *இதனிடையே டிடிவி தினகரன் சென்னை அடையாறு இல்லத்தில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு, பின்னர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது…

  10. சசி காலில் விழுந்த மந்திரிகள் படம் தினகரன் அணி திடீர் வெளியீடு சசிகலா குடும்பத்திற்கு எதிராக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படத் துவங்கி உள்ளதால், ஆத்திரமடைந்துள்ள தினகரன் ஆதரவாளர்கள், முதல்வர் மற்றும் அமைச்சர் கள், சசிகலா காலில் விழும் படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மோதல் தினகரன் ஆதரவாளர்கள், கடந்த மாதம் வரை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஅணியில் உள்ளவர்களை, கடுமையாக தாக்கி, சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை புகழ்ந்தனர்.அவர்களின் அறிவிப்பு களை, உடனுக்குடன் சமூக வ…

  11. இரண்டு வருடங்களுக்கு பின் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்க உள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அவரது உடல் நலமும் விசாரித்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை தி.மு.க. தலை…

  12. ஜெ. மரணத்தின் மர்மங்கள்: விசாரணையில் உண்மைகள் வெளிவருமா ? | Socio Talk | ஒரு நாட்டின் முதலமைச்சர்கே இந்த நிலைமை என்றால் ஒரு சாமானிய மக்களின் நிலை... 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 மரணமடைந்தார். இது இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஜெ. வின் மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா என்று கண்டு அறிய விசாரணை கமிஷன் ஒரு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த முதலமைச்சர் ஆரம்பித்துள்ளார். ஜெ.வை ஏன் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை, அ.தி.மு.க உறுப்பினர்களின் பொய்யான தகவல்கள் மற்றும் பல. இந்த விசாரணை கமிஷன் மூலம் என்னென்ன உண்மைகள் வெளிவர போகுது என்று பார்ப்போம்.

  13. `இதுதான் தர்மயுத்தமா?` ஓ.பி.எஸ். மீது சமூக வலைதளத்தில் கேள்விக்கணை! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைடிவிட்டர் தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அதிமுக அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயல…

  14. சசிகலா மறுசீராய்வு மனுமீது இன்று விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்டோர் தாக்கல்செய்த மறுசீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்தது. ஆனால், விசாரணை நடத்தும் நீதிபதிகள் குழுவில், ரோஹிண்டன் நாரிமன் இடம்பெறுவதற்கு சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினத்துக்கா…

  15. 25 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நாளை ஆதரவை வாபஸ் பெற்றால்.. ? சென்னை: தினகரன் ஆதரவு 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பின் போது ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ் அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைந்துவிட்டன. இதற்கு தினகரன் ஆதரவு 25 எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த 25 எம்.எல்.ஏக்களும் இன்று ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். ஆதரவு வாபஸ்? ஆளுநருடனான இச்சந்திப்பின் போது எடப்பாடி அரசுக்கான ஆதரவை தாங்கள் …

  16. அதிமுக அரசுக்கு தினகரன் சவாலா?: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் துணை முதல்வராக ஒபிஎஸ் பதவியேற்பு ஆகியவை இன்று (திங்கள்கிழமை) நடந்துள்ள சூழலில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு, அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் செயல்பாடு, சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். படத்தின் காப்புரிமைTWITTER இது குறித்து சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான பெர்னார்ட் சாமி பிபிசி தமிழிடம் கூறுகையில், "தனக்கு ஆதரவாக ஏராளமான உறுப்பினர்கள் இருப்பதாக டி.டி.வி.தினகரன் கோருவது அரசியலமைப்பு ரீதியில் ஏற்புடையதாக இருக்காது. அவரது கருத்…

  17. ``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா``- யாரைச் செல்கிறார் கமல்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைIKAMALHAASAN அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், ``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.`` எ…

  18. அதிமுக அரசை வீழ்த்த தயாராகும் திமுக மு.க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக அரசை வீழ்த்துவதற்கான முயற்சிகளை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படு கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசிலும், அதிமுகவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்த, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கே.பழனிசாமி முதல்வரானார். அவரது அரசுக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து வருகின்றனர். 11 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப்…

  19. சிதறும் துதிபாடிகள் தினகரன் அதிர்ச்சி இரு அணிகள் இணைப்பு பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதால், தினகரன் அணியிலிருந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமி அணிக்கு ஓட்டம் பிடித்துள்ளதால், தினகரன் அதிர்ச்சி அடைந்துஉள்ளார். சமீபத்தில், மதுரை மேலுாரில், தினகரன் அணி நடத்திய, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு எம்.பி.,க்கள் பங்கேற் றனர். தன்னிடம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களின் மூலம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, நெருக்கடி தரலாம் என, தினகரன் கருதினார். நேற்று முன்தினம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், அவரது அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 1…

  20. பன்னீர்செல்வம் அணி ஆலோசனை நிறைவு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு #LiveUpdate நேரம் 9.00: பன்னீர்செல்வம் தரப்பில் நடந்த ஆலோசனை நிறைவு. விரைவில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேரம் 8.45: முதல்வர் வீட்டில் நடந்த ஆலோசனையை முடித்துவிட்டு, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், அன்பழகன் ஆகியோர் புறப்பட்டனர். நேரம் 8.30: மெரினா கடற்கரையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா சமாதிக்கு இரண்டு பூங்கொத்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நேரம் 8.10: பன்னீர்செல்வம் அணியினர் மூன்று நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பில் அமைச்சரவையி…

  21. 'அமாவாசையும், அட்டைக்கத்தியும்...': அ.தி.மு.க இணைப்பு குறித்து நமது எம்.ஜி.ஆர் விமர்சனம்! ஜெயலலிதா மறைவில் இருந்தே அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் அதிரடி கருத்துகளை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசியலில் பி.ஜே.பி-யின் ஆதிக்கங்கள் குறித்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கருத்து வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, 'காவி அடி, கழகத்தை அழி' என்று தலைப்பிட்டு வந்த கவிதை மத்திய அரசை நேரடியாகக் கடுமையாகத் தாக்கியிருந்தது. இதையடுத்து, நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, அ.தி.மு.க-வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் ம…

  22. ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, அரசுடமையாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கியுள்ளது. தாசில்தார் தலைமையில், நேற்று வருவாய் துறையினர், வீட்டையும், நிலத்தையும் அள விட்டனர். சட்ட பிரச்னை ஏற்படும் முன், இழப் பீடு விஷயத்தில், அரசு முந்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சென்னை,போயஸ்கார்டன் பகுதியில்,மறைந்த முதல்வர், ஜெ., வசித்த, 'வேதா நிலையம்' வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில், ஜெ., இருந்த போது பணியாற்றிய ஊழியர்கள் தங்கியுள்ள னர். சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வீடு உள்ளது.அவர்களிடமிருந்து வீட்டை மீட்டு, நினைவிடமாக மாற்ற வேண்டும் என, அ.தி. மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அ.தி. மு.க., - பன்னீ…

  23. நினைவு இல்லமாகுமா போயஸ் கார்டன்... எடுபடுமா எடப்பாடி பழனிசாமி கணக்கு?! ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் நடப்பு அரசியல் சூழலில் எடுக்கப்பட்ட இந்த அறிவிப்புக்குப்பின் மிகப்பெரிய அரசியல் உள்ளது என்கிறார்கள். போயஸ்கார்டனில் 81, இலக்கமிட்ட வேதா இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகளைப் பார்த்த இல்லம். இளமைக்காலம் துவங்கி அவரது இறப்பின் இறுதி நிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு. ஜெயலலிதா என்ற தமிழகத்தின் முக்கிய ஆளுமையின் மறைவுக்குப்பின் அதனுடன் இன்றுவரை ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பி…

  24. பத்திரிகையாளர் ஞாநி பத்மஸ்ரீ கமலுக்கு எழுதிய பகிரங்க கடிதம் இது நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா? மாட்டீர்களா? என்று ஒரு பெட்டிங்கே நடந்துகொண்டிருக்கும் நேரம் இது. நான் நீண்ட நாட்களாகவே அரசியலில் இருந்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சமூக நிகழ்வுகள் பற்றிப் பொதுவெளியில் கருத்துச் சொல்லும் எவரும் அரசியலில் இருக்கிறார்கள் என்பதே நிஜம். அப்படிக் கருத்துச் சொல்பவராக நீங்கள் தொடர்ந்து இருந்து வருகிறீர்கள். அப்படியானால் இதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை, அதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை என்று சிலர் கேட்பது அசட்டுத்தனம்தான். கருத்துச் சொல்லாமல் இருப்பதும் அரசியல்தான் என்பது புரியாதவ…

    • 3 replies
    • 627 views
  25. ஜெயலலிதாவின் கடைசிப்பயணம்! மனதளவில் அனாதையாக தன் பாதுகாவளரின் கைபிடித்து குழந்தைபோல நடந்து செல்லும் காட்சி..... கடைசியாக ஒருமுறை ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.