Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கருணாநிதி, மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட உணவு குழாய் மாற்றப்பட்ட பின்னர் வீடு திரும்புவார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.கருணாநிதி கடந்த 7 மாதங்களாக முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன் தமிழரசு ஆகியோர் அப்போது உடனிருந்தனர். இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் …

  2. முதலமைச்சரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்? - கமல் கேள்வி தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளை ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். தமிழக அரசில் உள்ள ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு டிஜிட்டல் வடிவில் புகார் அனுப்புங்கள் என்று தமிழக மக்களுக்கு கமல் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் அதிகாரபூர்வ இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டைகள் குறித்தும் கமலின் ட்விட்டரில் பதிவிட்டார். இந்தநிலையில், கமலின் மற்றொரு ட்வீட் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப…

  3. "ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவன் நான்"- எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் தினகரன் பேச்சு மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எற்பாடு செய்யப்பட்டிருந்தது. அ.தி.மு.க மூன்றாகப் பிரிந்த பிறகு, ஒ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 14 எம்.எம்.ஏ-க்கள் மற்றும் 5 எம்.பி-க்கள் பங்கேற்றனர். விழாவில் கூடியிருந்த மக்களிடம் தினகரன் பேசியது: "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்…

  4. ‘தலைவர் நாடாள வரப்போகும் கதை கேட்கப்போகிறோம்!' - திருச்சிக்குப் படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்! ரஜினிகாந்தின் அரசியல் பயணம் அவசியம் என்பதை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு திருச்சி அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் தமிழருவி மணியன் தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. `இந்த மாநாட்டில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்களும் கலந்துகொள்ள வேண்டும்' என்று ரஜினி ரசிகர் மன்ற தலைமையகத்திலிருந்து அனைவருக்கும் ரகசிய உத்தரவு சென்றுள்ளது. அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர், மாவட்ட நிர்வாகிகளை போன் மூலம் தொடர்புகொண்டு, `தலைவரை அரசியலுக்கு அழைக்கும் சிறப்பு மாநாடு இது. இதில் ஒவ்வொர…

  5. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க நினைத்தால் அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்: - ராதாரவி பேச்சு [Monday 2017-08-14 08:00] தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க நினைத்தால் அதற்கு 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்’’ என தூத்துக்குடியில் நடந்த கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகர்.ராதாரவி பேசினார்.தூத்துக்குடி, தாளமுத்து நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேசிய நடிகர் ராதாரவி, ‘’ ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி, தீபா அணி என பல அணிகளாக அ.தி.மு.க பிளவுபட்டுக் கிடக்கிறது. தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிச்சுட்டா ஓ.பி.எஸ் அணி நம்ம பக்கம் சேர்ந்துடும், அதை வச்சு இரட்டை இலை சின்னத்தை மீட்…

    • 0 replies
    • 398 views
  6. ராஜீவ் ஏன் கொல்லப்பட்டார் ? அதனால் ஆதாயம் அடைந்தவர்கள் யார் ?

    • 0 replies
    • 531 views
  7. சிறையில் இருந்து சசிகலா கண்ணீர் கடிதம் 'அ.தி.மு.க., என்ற இரும்புக்கோட்டையில், விரிசல் விழுந்து விடக்கூடாது. முன்பை விட, உறுதியாக செயல்பட்டு கட்சியையும், தமிழகத் தையும் காக்க வேண்டும்' என, சிறையில் இருந்தபடி, முன்னாள் முதல்வர், ஜெ.,யின் தோழி சசிகலா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள, கண்ணீர் கடிதம்: ஜெயலலிதா நம்மோடு இருந்தால், நாம் எவ்வாறு உணர்வோமோ, அந்த உணர்வோடு தொண்டர்கள் கட்சியில், தாயின் பரிவை, பாதுகாப்பைதொடர்ந்து இனியும் உணரலாம். நம் கண் முன், ஜெ., காட்டிய லட்சிய பாதை, விரிந்து கிடக்கிறது. அதில், அ.தி.மு.க., என்ற, இந்த கட்…

  8. தினகரன் Vs எடப்பாடி! யார் 420 ‘ச்சீ 420(போஃர் ட்வென்ட்டி)’ எனத் தமிழ் திரைப்படங்களில் காதலி, காதலனை செல்லமாகத் திட்டும் காட்சிகள் பிரபலம்; ‘420 பீடா’ ரகம் பரவலாக அறியப்பட்ட லகிரி வஸ்து; ராஜ்கபூர் ‘ஸ்ரீ420’ என்ற பெயரில் ஹிந்திப் படம் ஒன்றை தயாரித்தார். என்றளவிலும், அடிக்கடி 420 பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டிகளின் மூலம் 420 என்ற வார்த்தை அகில இந்தியப் பிரபலமாகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு நாட்களாக 420 என்பது வைரலாக வலம் வந்தது. 420-ல் அப்படி என்னதான் இருக்கிறது? நீயும் 420... நானும் 420... அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நியமனம் செல்லாது என தம…

  9. மிஸ்டர் கழுகு: “எப்போதும் கவிழ்ப்பேன்!” - ‘மூக்குப்பொடி’ தினகரன் - ‘தேசியக்கொடி’ எடப்பாடி சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகளைப் பார்வையிட்டுவிட்டு வந்த கழுகார், ‘‘கோட்டை வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது’’ என்று சொன்னபடி அமர்ந்தார். ‘‘கோட்டை உறுதியாக இருக்கிறது. ஆனால், முதல்வர் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதே?’’ என்றோம். ‘‘ஆமாம்! ‘எந்த நேரமும் ஆட்சியைக் கவிழ்ப்பேன்’ என்று சொல்லி வருகிறார் தினகரன். சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்குமுன், டெல்லி கொடுத்த வேலைகளை வேகமாக முடிக்கவேண்டிய நிர்பந்தம் எடப்பாடிக்கு. இப்போது அந்த வேலைகளைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்.” ‘‘அதுதான் தினகரன்…

  10. தினகரன் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் செல்வார்களா? - அதிமுகவில் நடக்கும் கடைசி நேர குழப்பங்கள் டிடிவி தினகரன் - கோப்புப் படம் மதுரை மாவட்டம், மேலூரில் நாளை தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்களும், தொண்டர்களும் பங்கேற்க செல்வதை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க முதல்வர் பழனிசாமியின் உத்தரவுக்காக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் காத்திருக்கிறார்கள். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நாளை மேலூரில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த வாரம் வரை முதல்வர் பழனிசாமியும், தினகரனும் கருத்து வேறுபாட…

  11. ''முடிவுக்கு வருகிறதா மன்னார்குடி ராஜ்ஜியம்?”- குழப்பத்தில் குடும்பங்கள்! முப்பது ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம், இப்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாகத் தளர்ந்துபோகும் நிலையை மன்னார்குடி உறவுகள் உணர்ந்துள்ளார்கள். ஆனாலும், கட்சியைக் கைப்பற்ற உச்சகட்ட போராட்டத்துக்குத் தயாராகிவருகின்றன மன்னார்குடி உறவுகள். பன்னீருக்குப் பதிலாக சசிகலா குடும்பத்தினால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட எடப்பாடி பழனிசாமி அந்தக் குடும்பத்துக்கு எதிராகத் திரும்புவார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் எந்தத் தினகரன் வெற்றிக்காக... வீதிவீதியாக யார் எல்லாம் களம் இறங்கினார்களோ, …

  12. அ .தி .மு .க வால் மலருமா தாமரை? தேசிய கட்­சி­களை உள்ளே விடாமல் 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக கோலாட்சி நடத்­திய திரா­விட கட்­சி­களை உடைத்து தமி­ழ­கத்தில் தன் கால்­களை வேரூன்ற பெரும் பிர­யத்­த­னத்தை பா.ஜ.க. தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்­றது. ஜெய­ல­லிதா மற்றும் கரு­ணா­நிதி என்ற இரு அரண்கள் இருக்கும் வரையில் தமி­ழ­கத்தில் எந்த தேசிய கட்­சி­யாலும் கால் ஊன்ற முடி­ய­வில்லை.. குறிப்­பாக பா.ஜ.க.வினால் முடி­ய­வில்லை.. இந்­நி­லையில் தற்­போது இந்­தி­யாவின் அனைத்து மாநி­லங்­க­ளிலும் வேறூன்ற துடிக்கும் பா.ஜ.க. தமி­ழ­கத்தில் தன் கால்­களை பதிக்க பகீ­ரத பிர­யத்­தனம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றது. கடந்­த ­கா­லங்­களில் தொடர்ச்­சி­யாக பல வரு­டங்கள் மத்தியில் காங்­கிர…

  13. ”சந்தா கேட்டார் பிறகு மன்னிப்பு கேட்டார்..!” - ம.தி.மு.க கூட்டத்தில் வைகோ ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஓபன் மைக்கில் தொண்டர்களிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திருச்சியில் ம.தி.மு.க மகளிர் அணி, மாவட்டச் செயலாளர் ஆலோனைக் கூட்டம், வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நேற்றும் இன்றும் நடத்திவருகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. நேற்று காலை நடந்த ம.தி.மு.க மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு மாலை 4 மணியிலிருந்து ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்களான சேரன், வெல்லமண்டி சோமு, உயர்ம…

  14. ''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார். சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 'அ.தி.மு.க., துணை பொதுச் செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது, சட்ட…

  15. முரசொலி: திராவிட முரசு! தி முகவின் கட்சி இதழான ‘முரசொலி’ தனது 75-வது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. 60 ஆண்டு காலம் ஒரு நாள் விடாமல் தினசரி இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. கட்சியின் தலைவரான மு.கருணாநிதி தான் இந்தப் பத்திரிகையின் நிறுவனர். அச்சு ஊடகம் வழியாக அரசியல்ரீதியாகக் குரல் கொடுப்பதென்பது நவீன யுகத்தில் அமெரிக்காவில் வெளியான ‘ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ்’ கட்டுரைகளின் மூலம் குறிப்பிடத் தகுந்த விதத்தில் தொடங்கியது. 1861-ல், பிற்பாடு பிரான்ஸின் பிரதமராக ஆகவிருந்த ஜோர்ஜ் க்ளமான்ஸோ தனது இடதுசாரிக் கருத்தியலைப் பரப்புவதற்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து…

  16. தற்காப்பு முக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம் ‍ - உலக நாயகன் கமலின் கம்பீரமான பேச்சு.

    • 0 replies
    • 292 views
  17. தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: ஸ்டாலின் தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "அதிமுகவில் பிளவு ஏற்பட்டதில் இருந்து தமிழகத்தில் அசாதரண சூழல் நிலவுகிறது. இந்த அசாதரண சூழலால் பொதுமக்…

  18. ‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’ இன்னும் இரண்டே வாரங்களில், நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய அரசியல் கட்சி, கொடி, கொள்கைகளை அறிவிப்பார் என்று, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில செய்திச் அலைவரிசையில், “ரஜினிநேதா (தலைவர் ரஜினி) அரசியல் வருகை” என்ற தலைப்பில், ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள், தமிழருவி மணியன் போன்ற தலைவர்களிடம் பேசி, ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்தது. இவர்களில், இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் கட்சி அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் ரஜினி கட்சியின் கொள்கைகள் என்னவென்பது குறித்தும் விரிவாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். “இன்னும் 2 வாரங்களில், ரஜினி தனத…

    • 7 replies
    • 920 views
  19. ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது! மத்திய அரசு திட்டவட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012ல் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 14 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்படுவதால் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீ…

  20. அ.தி.மு.க-வில் ஆதிக்கம்... பலிக்குமா பி.ஜே.பி-யின் சக்கர வியூகம்? எதிரியை ஒரு வளையத்திற்குள் சிக்க வைத்து, அதில் இருந்து வெளியேற முடியாமல் செய்து வீழ்த்துவதே போரில் சக்கர வியூகம். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது நடப்பது போரும் அல்ல; மத்தியில் ஆளும் பி.ஜே.பி. மேற்கொண்டுள்ள மோடி வித்தை சக்கர வியூகமாகவும் தெரியவில்லை. "அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய வேண்டுமானால், சசிகலா குடும்பத்தினரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்; ஜெயலலிதா மரணத்திற்கு தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை நடத்தப் பரிந்துரை செய்ய வேண்டும்" என்று முக்கியமான இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பா…

  21. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதனால், அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த வழக்கை, வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பேரறிவாளன் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக அர…

    • 0 replies
    • 358 views
  22. 'தினகரனின் அறிவிப்புகள் கட்சியைக் கட்டுப்படுத்தாது..!' எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் ’தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்பட்டுத்தாது’ என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/98644-ttvdinakaran-and-sasikala-sacks-from-admk.html

  23. புரட்சியின் வித்து தனிச்சிந்தனையே:டுவீட்டரில் நடிகர் கமல் கருத்துப்பதிவு சென்னை:விம்மாமல், பம்மாமல் ஆவன செய், புரட்சியின் வித்து தனிச்சிந்தனையே என டுவீட்டரில் கருத்துப்பதிவு வெளியிட்டுள்ளார் நடிகர் கமல். டுவீட்டரில் வெளியிட்டுள்ள கருத்துப்பதிவு விம்மாமல் பம்மாமல், ஆவன செய்.... புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.... ஓடி எனைப்பின் தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே. .. கூடி நட, வெல்வது நானில்லை நாம்...... பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே... மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான். இவ்வாறு அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் நடிகர் கமல் http://www.dinamalar.com/news_detail.asp?id=1831…

  24. ஆளுநரை சந்திக்க தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் முடிவு! இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி, 'கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நியமனம் சட்டவிதிகள்படி செல்லாது. அவர் நியமித்த கட்சியின் புது நிர்வாகிகளின் பதவிகளும் செல்லாது' என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தஞ்சாவூரில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டவிதிகளின்படிதான் தன்னை பொதுச்செயலாளர் சசிகலா நியமித்ததாக சொன்னார். இந்த நிலையில், அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் எழுப்பிய ஒரு கேள்விக்கு தேர்தல் கமிஷன் அளித்த பதில் வைரலாக இன்று மாலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறத…

  25. சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு? முதல்வர் பழனிசாமி அடுத்த 'மூவ்' முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், இன்று டில்லி செல்வதால், இரு அணிகள் இணைப்பு பேச்சில் நீடிக்கும் இழுபறி, முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. அதற்கு வசதியாக, சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைய வேண்டும் என, பா.ஜ., மேலிடம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.