தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
தேர்தல் கமிஷனில், சசிகலா, தினகரன் பெயருடன், ஏற்கனவே தாக்கல் செய்த, அ.தி.மு.க.,வினரின் பிரமாண பத்திரங்களுக்கு மாற்றாக, இருவரின் பெயரும் இல்லாத, புதிய பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வது குறித்து, முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். இதன் மூலம், அரசுக்கு, மன்னார்குடி சொந்தங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்க, அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அத்துடன், பன்னீர் அணியுடனான இணைப்பு நிச்சயம் என்றும், முதல்வர் உறுதியாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில், சசிகலா அணி மற்றும் பன்னீர் அணியினர், தாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என்பதை நிரூபிக்க, லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களில், கட்சியினரிடம் கையெழுத்த…
-
- 0 replies
- 508 views
-
-
அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன் என, மூன்று அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அந்தக் குழப்பத்தை சாதகமாக்க, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்; அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், வியூகம் வகுத்துள்ளார். 'கோடிகள் குவிக்க, இது தான் சரியான தருணம்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பேரம் பேசி வருகின்றனர். இதனால், தவித்து வரும், முதல்வர் பழனிசாமி, தி.மு.க.,வின் தந்திரத்தை முறியடித்து, ஆட்சியை தக்க வைக்க, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.பின், அவரை முதல்வர் பதவியிலி ருந்து, ர…
-
- 0 replies
- 360 views
-
-
மிஸ்டர் கழுகு: “ஆட்சியைக் கலைத்தால் ஆயுள் முழுக்க சிறை!” மிரட்டிய பி.ஜே.பி... பதுங்கும் தினகரன்? ஒரு சிறுவனைப் போன்ற குதூகலத்துடன் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை சுற்றியபடி வந்த கழுகாரைப் பார்க்க விநோதமாக இருந்தது. ‘‘இதைச் சுழற்றி விளையாடுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்! விஜயகாந்த் விட்ட பம்பரத்தின் 2.0 வெர்ஷன் என்று இதைச் சொல்லலாம். உலகம் முழுக்கப் பள்ளிக் குழந்தைகளின் விருப்ப விளையாட்டாக இது மாறியிருக்கிறது. ‘குழந்தைகளின் மன அழுத்தத்தை நீக்கும், கற்றல் குறைபாட்டுக்குத் தீர்வு தரும்’ என்றெல்லாம் பல பள்ளிகளில் ஆசிரியர்களே இதைக் குழந்தைகளுக்கு வாங்கித் தரச் சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இதை விளையாடும் குழந்தைகளுக…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஆடி போயி ஆவணி வரட்டும் ஜெயலலிதா காலில் அமைச்சர்கள் விழுந்து வணங்கும் போதெல்லாம் அதனை விமர்சிக்காதவர்கள் யாரும் இல்லை.. ஆனால், அந்த இராணுவ கட்டுப்பாடுதான் அ.தி.மு.க.வை கம்பீரமாக சிதறாமல் வைத்திருந்தது என்பது அவரது மறைவின் பின் அமைச்சர்கள் நடந்து கொள்ளும் முறைமைகளில் தெளிவாக விளங்குகிறது. ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு மாறுவது போல அ.தி.மு.க.வுக்கு உள்ளேயே எம்.எல்.ஏ.க்கள் அணிமாறுகின்றனர். இதையெல்லாம் தடுத்து கட்சி மீண்டும் நிலையானதாக மாறவேண்டுமெனில் சிறந்த தலைமைத்துவம் ஒன்றின் தேவைப்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஜெயலலிதா என்ற ஆளுமையின் மறைவு தமிழகத்துக்கு மட்டும் வெற்றிடத்தை ஏற்பட…
-
- 0 replies
- 637 views
-
-
''அ.தி.மு.க-வில் இப்போது நடப்பதெல்லாம் நாடகம்தான்!'' - போட்டுடைக்கிறார் ஈ.ஆர். ஈஸ்வரன் ப்ரேக்கிங் நியூஸ்களால் மறுபடியும் ஊடகத்தை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க அணிகள். 'கட்சிக்கும் ஆட்சிக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தலைமை' என்று அமைச்சர்கள் அறிவித்த அடுத்த நொடியே, அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை அறிவிக்கிறார் டி.டி.வி தினகரன். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்போ, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிறார். 'ஓவியாவுக்கு என்னதான் ஆச்சு?' என்று விடைதெரியாமல் அவஸ்தைப்பட்டு வரும் தமிழக மக்கள் மத்தியில், 'இப்போது அ.தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது?' என்ற குழப்பக் கேள்வியும் சேர்ந்துள்ளது. இந்த நிலையில், ''அ.தி.மு.க-…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழ் தேசியம் பற்றி திரு திருமாவளவன்
-
- 0 replies
- 429 views
-
-
spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% முதல்வர் பழனிசாமி அரசை கண்டித்து, அ.தி.மு.க., பன்னீர் அணியினர், சென்னையில், 10ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.சொந்த கட்சியினரே,எதிர்க் கட்சியாகும் வினோதம் அன்று, அரங்கேற உள் ளது.அன்றைய போராட்டத்திற்கு,மாநிலம் முழுவதும் உள்ள…
-
- 0 replies
- 405 views
-
-
அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: டி.டி.வி தினகரன் அதிரடி! அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து டி.டி.வி தினகரன் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய வேண்டும் என்று தினகரன் தெரிவித்தார். இதற்காக 60 நாள்கள் காலக்கெடு விதித்தார். அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டி.டி.வி தினகரன் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப் பயணம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, அ.தி.மு.க அம்மா அணியின் அமை…
-
- 1 reply
- 574 views
-
-
பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்புகளை விழுங்கும் சிறுபான்மை பார்ப்பனர்கள்! “தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருந்தாலும், தற்போது அரசியல், வேலைவாய்ப்புகளில் பார்ப்பனர்கள் அதிகம் இல்லை’’ என்ற பத்திரி சேஷாத்திரிகளின் புலம்பல் ஒரு பக்கம். 4 சதவீதம் உள்ள நாங்கள் 60 சதவீத பதவிகளை அனுபவித்து வருகிறோம் என்று இணையத்தில் ஒரு பார்ப்பனரின் திமிர் மிகுந்த பதிவு மறுபக்கம். எத்தனைக் காலத்திற்கு இடஒதுக்கீடு? இனி இடஒதுக்கீடே வேண்டாம் என்று சில அரைவேக்காடுகளின் கோரிக்கை இன்னொரு பக்கம். மத்தியில் மதவாத பா.ஜ.க. ஆட்சி பெரும்பான்மையுடன் அமைந்தது முதல் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்குக் காரணமான இடஒதுக்கீட்டை எப்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
‘நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா #VikatanExclusive சிறையில் சசிகலாவைச் சந்தித்த தினகரனிடம், 'நான் நலமாக இருக்கிறேன், ஆனால் சிறை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியவில்லை' என்று கண்ணீர்மல்கக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க, நேற்று தினகரன் சென்றார். ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகே அவருக்கு சசிகலாவைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. சீருடையில் வந்த சசிகலாவிடம் பேசியிருக்கிறார் தினகரன். சிறையில் நடக்கும் விவரங்களை சசிகலா, கண்ணீருடன் சொல்லியிருக்கிறார். தினகரன், ஆறுதலாகச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வெளியில் வந்திருக்கிறார். இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில், …
-
- 2 replies
- 809 views
-
-
அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அ.தி.மு.க பொக்ச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது சிறைத் தண்டனையில் உள்ளார். அதன் பின்னர் அந்த கட்சி உடைந்து தற்போது மூன்று அணியாக உள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் யார்? துணை பொதுச்செயலாளர் யார் என்று கேள்விகள் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தேர்தல் …
-
- 0 replies
- 385 views
-
-
இரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்திருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை புதன்கிழமையன்று இரவு திடீரென அகற்றப்பட்டது. இதற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் ராதாகி…
-
- 2 replies
- 929 views
-
-
மதுரை:பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவை சந்தித்த நான்கு அமைச்சர்களை, தகுதி இழப்பு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு, 'நோட் டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்ததை தடுக்காத, முதல்வர் பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த வர் தாமரைக்கனி. அ.தி.மு.க.,வில் போட்டியிட, 'சீட்' ஒதுக்காததால், தி.மு.க.,வில் இணைந்தார்; கடைசி வரை, தி.மு.க.,வில் இருந்தார். இவரது மகன் ஆணழகன், பன்னீர்செல்வம் அணியில் உள்ளார். ஆட்சேபமில்லை உயர் நீதிமன்ற மதுரை கி…
-
- 0 replies
- 266 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை பரிசீலிக்கக் கோரும் சசிகலாவின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல் சசிகலா - PTI ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா,…
-
- 2 replies
- 285 views
-
-
முரசொலி பவளவிழா... அரசியல் கூட்டணியின் அச்சாரமா? மக்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்த வெறும் துண்டறிக்கையாக தி.மு.க தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டதுதான் முரசொலி. துண்டறிக்கை, வாரஇதழ், பின் நாளேடு என பல்வேறு வடிவங்களை எட்டி தற்போது தனது 75 ஆண்டுகாலப் பயணத்தை வெற்றிகரமாக கடந்திருக்கிறது தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி! இதற்காக வருகிற ஆகஸ்ட் 10, மற்றும் 11-ம் தேதிகளில் முரசொலி பத்திரிகைக்கு பவள விழா கொண்டாடுவதற்கு தி.மு.க. தலைமை பிரமாண்ட ஏற்பாடு செய்துள்ளது. வியாழக்கிழமை கலைவாணர் அரங்கத்திலும், வெள்ளிக்கிழமை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலும் இதற்கான விழா நடைபெற உள்ளது. 10.08.1942-ல் தனது 18-வது வயதில் கருணாநிதியால…
-
- 0 replies
- 537 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அழகிரி இந்திய ஊடகங்களிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் “விடுதலைப் புலிகளால் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம். காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர் மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது. அதேபோல விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் நலனோடு இணைக்கக்கூடாது. தீவிரவாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது, “வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்” என்…
-
- 1 reply
- 493 views
-
-
சிறையில் முறைகேடு: ரூபாவிடம் ரகசிய விசாரணை பெங்களூரு:பெங்களூரு மத்திய சிறையில், நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையிலான குழுவினர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபாவிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா, பெங்களூரு மத்திய சிறையை ஆய்வு செய்து, சிறையில் சட்ட விரோத சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவிக்கும், அ.தி.மு.க., சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக்கின் தெல்கி போன்றோருக்கு, வி.ஐ.பி…
-
- 0 replies
- 428 views
-
-
குட்கா விவகாரத்தில் சிக்கிய, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக் களை, வருமான வரித்துறை முடக்கியதால், அவரது அமைச்சர் பதவிக்கு, மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் பணம் வினியோகம் நடந்ததாகக் கூறி, வருமான வரித் துறையினர் அவர் வீட்டில், 'ரெய்டு' நடத்தியபோதும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இப்போது, அவரை அமைச்சர வையில் இருந்து வெளியேற்றும்படி, கட்சி யினரிடமிருந்தே, முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அரசியல் குழப்பங்கள் தீர்ந்த பின், முதல்வர் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், சுகா…
-
- 0 replies
- 617 views
-
-
முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன் புதிய கருத்து முந்திச் செல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலம் புதிய கருத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது கருத்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். ஊழல் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து இருப்பதாக விமர்சித்து இருந்தார். இதற்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். கமல்ஹாசன் பற்றி விமர்சித்தனர். ஆதாரம் இல்லால் குறை சொல்லக்கூடா…
-
- 1 reply
- 453 views
-
-
என்னை கட்சி அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை: சசிகலாவை சந்தித்த தினகரன் பேட்டி கட்சி தலைமை அலுவலகத்திற்குள் வர விடாமல் என்னைத் தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கூறியுள்ளார். பெங்களூர்: பெங்களூர் சிறைச்சாலையில் அ.தி.மு.க. பொதுச்செயலலாளர் சசிகலாவை, துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சிறையில் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தேன். மற்ற கைதிகளுக்கு எப்படி உணவு தரப்படுகிறேதா அதேபோல்தான் சசிகலாவுக்கும் வழங்கப்படுகிறது. சசிகலாவு…
-
- 1 reply
- 650 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் புரட்சி... சசிகலா குடும்பம் நீக்கம்? ‘‘ஆகஸ்ட் 5-ம் தேதி அதிர்ச்சிகளை நோக்கி அ.தி.மு.க போய்க்கொண்டிருக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். அது, இரண்டு மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கொடுத்த கெடு நாள் என்பது நினைவுக்கு வந்தது. “டி.டி.வி. தினகரன் என்ன திட்டம் வைத்துள்ளார்?’’ “ஆகஸ்ட் 4-ம் தேதியோடு டி.டி.வி. தினகரன் விதித்திருந்த 60 நாள் கெடு முடிகிறது. ‘கட்சி நடவடிக்கைகளை வெளிப்படையாகத் தொடங்குங்கள்; செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டுங்கள்’ என்று அவரைச் சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் இப்போதே கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டனர். தினகரனும் ஆகஸ்டு 5-ம் தேதியை அதிரடி சரவெடியாக்கிவிட வேண்டும் எனத்…
-
- 0 replies
- 1.6k views
-
-
'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில்,அவருக்கு சொந்தமான, குவாரி உள்ளிட்ட மொத்த சொத்துகளையும், வருமான வரித்துறை முடக்கி உள்ளது. அவரின், 92 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளது. சென்னையில், 'குட்கா' ஆலை நடத்திய, மாதவ்ராவ் உட்பட, சிலரது வீடுகளில், 2016 ஜூலை, 8ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய டைரியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக, 2015ல் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகளுக்கு, மாதவ்ராவ் தொடர்ந்து லஞ்சம் தந்த விபரம் தெரிய வந்தது. இதையடுத்து, தொடர் …
-
- 1 reply
- 439 views
-
-
மத்திய அமைச்சராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்? அதிமுக இரு அணிகளும் இணைய பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் ஆவதாக செய்தி வெளியாகியுள்ளன. தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு அதிமுக இரு அணிகளும் இணைய பேச்சு நடத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கடந்த ஒரு மாதத்தில் முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பிரதமர் நரேந்திர மோடியை 3 முறை சந்தித்துப் பேசின…
-
- 0 replies
- 893 views
-
-
அணிகள் இணைப்பு குறித்து ரகசிய பேச்சு: தினகரனை ஒதுக்கிவிட்டு அதிமுகவை கைப்பற்ற தீவிரம் - முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் 2 நாளில் முக்கிய முடிவு தினகரனை கட்சிக்குள் வரவிடாமல் தடுத்து கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் அதிமுகவின் இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக ஓபிஎஸ் அணியுடன் முதல்வர் பழனிசாமி அணியினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான தினகரன், கடந்த ஜூன் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அவரை தங்க தமிழ்ச்செல்வன்,…
-
- 0 replies
- 207 views
-
-
தொடர் சலசலப்பு: கமல் பயணிக்கும் பாதை எது? கடந்த சில நாட்களாக ஊடகங்களில் நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற யூகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கும் நிலையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர் கிளப்பிவரும் தொடர் சர்ச்சைகள் அதற்கு வலுச்சேர்த்து வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாதை தெரிகிறதா? பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியது இந்த யூகத்துக்கு பலம் சேர்ப்பதாகவே அமைந்தது. தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கமல் வெளியிட்டு வரும் கருத்துக்களும், அவர் எத்திசையில் பயணிக்க உள்ளார் என்ற வினாவை எழுப்பியது. …
-
- 0 replies
- 270 views
-