தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அழகிரி இந்திய ஊடகங்களிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் “விடுதலைப் புலிகளால் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம். காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர் மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது. அதேபோல விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் நலனோடு இணைக்கக்கூடாது. தீவிரவாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது, “வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்” என்…
-
- 1 reply
- 492 views
-
-
சிறையில் முறைகேடு: ரூபாவிடம் ரகசிய விசாரணை பெங்களூரு:பெங்களூரு மத்திய சிறையில், நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையிலான குழுவினர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபாவிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா, பெங்களூரு மத்திய சிறையை ஆய்வு செய்து, சிறையில் சட்ட விரோத சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவிக்கும், அ.தி.மு.க., சசிகலா, முத்திரைத்தாள் மோசடி வழக்கின் தெல்கி போன்றோருக்கு, வி.ஐ.பி…
-
- 0 replies
- 427 views
-
-
குட்கா விவகாரத்தில் சிக்கிய, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக் களை, வருமான வரித்துறை முடக்கியதால், அவரது அமைச்சர் பதவிக்கு, மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் பணம் வினியோகம் நடந்ததாகக் கூறி, வருமான வரித் துறையினர் அவர் வீட்டில், 'ரெய்டு' நடத்தியபோதும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இப்போது, அவரை அமைச்சர வையில் இருந்து வெளியேற்றும்படி, கட்சி யினரிடமிருந்தே, முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அரசியல் குழப்பங்கள் தீர்ந்த பின், முதல்வர் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், சுகா…
-
- 0 replies
- 612 views
-
-
முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன் புதிய கருத்து முந்திச் செல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலம் புதிய கருத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது கருத்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். ஊழல் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து இருப்பதாக விமர்சித்து இருந்தார். இதற்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். கமல்ஹாசன் பற்றி விமர்சித்தனர். ஆதாரம் இல்லால் குறை சொல்லக்கூடா…
-
- 1 reply
- 452 views
-
-
என்னை கட்சி அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை: சசிகலாவை சந்தித்த தினகரன் பேட்டி கட்சி தலைமை அலுவலகத்திற்குள் வர விடாமல் என்னைத் தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கூறியுள்ளார். பெங்களூர்: பெங்களூர் சிறைச்சாலையில் அ.தி.மு.க. பொதுச்செயலலாளர் சசிகலாவை, துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சிறையில் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தேன். மற்ற கைதிகளுக்கு எப்படி உணவு தரப்படுகிறேதா அதேபோல்தான் சசிகலாவுக்கும் வழங்கப்படுகிறது. சசிகலாவு…
-
- 1 reply
- 649 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் புரட்சி... சசிகலா குடும்பம் நீக்கம்? ‘‘ஆகஸ்ட் 5-ம் தேதி அதிர்ச்சிகளை நோக்கி அ.தி.மு.க போய்க்கொண்டிருக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். அது, இரண்டு மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கொடுத்த கெடு நாள் என்பது நினைவுக்கு வந்தது. “டி.டி.வி. தினகரன் என்ன திட்டம் வைத்துள்ளார்?’’ “ஆகஸ்ட் 4-ம் தேதியோடு டி.டி.வி. தினகரன் விதித்திருந்த 60 நாள் கெடு முடிகிறது. ‘கட்சி நடவடிக்கைகளை வெளிப்படையாகத் தொடங்குங்கள்; செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டுங்கள்’ என்று அவரைச் சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் இப்போதே கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டனர். தினகரனும் ஆகஸ்டு 5-ம் தேதியை அதிரடி சரவெடியாக்கிவிட வேண்டும் எனத்…
-
- 0 replies
- 1.6k views
-
-
'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில்,அவருக்கு சொந்தமான, குவாரி உள்ளிட்ட மொத்த சொத்துகளையும், வருமான வரித்துறை முடக்கி உள்ளது. அவரின், 92 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளது. சென்னையில், 'குட்கா' ஆலை நடத்திய, மாதவ்ராவ் உட்பட, சிலரது வீடுகளில், 2016 ஜூலை, 8ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய டைரியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக, 2015ல் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகளுக்கு, மாதவ்ராவ் தொடர்ந்து லஞ்சம் தந்த விபரம் தெரிய வந்தது. இதையடுத்து, தொடர் …
-
- 1 reply
- 434 views
-
-
மத்திய அமைச்சராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்? அதிமுக இரு அணிகளும் இணைய பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் ஆவதாக செய்தி வெளியாகியுள்ளன. தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு அதிமுக இரு அணிகளும் இணைய பேச்சு நடத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கடந்த ஒரு மாதத்தில் முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பிரதமர் நரேந்திர மோடியை 3 முறை சந்தித்துப் பேசின…
-
- 0 replies
- 892 views
-
-
அணிகள் இணைப்பு குறித்து ரகசிய பேச்சு: தினகரனை ஒதுக்கிவிட்டு அதிமுகவை கைப்பற்ற தீவிரம் - முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் 2 நாளில் முக்கிய முடிவு தினகரனை கட்சிக்குள் வரவிடாமல் தடுத்து கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் அதிமுகவின் இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக ஓபிஎஸ் அணியுடன் முதல்வர் பழனிசாமி அணியினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான தினகரன், கடந்த ஜூன் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அவரை தங்க தமிழ்ச்செல்வன்,…
-
- 0 replies
- 206 views
-
-
தொடர் சலசலப்பு: கமல் பயணிக்கும் பாதை எது? கடந்த சில நாட்களாக ஊடகங்களில் நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற யூகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கும் நிலையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர் கிளப்பிவரும் தொடர் சர்ச்சைகள் அதற்கு வலுச்சேர்த்து வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாதை தெரிகிறதா? பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியது இந்த யூகத்துக்கு பலம் சேர்ப்பதாகவே அமைந்தது. தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கமல் வெளியிட்டு வரும் கருத்துக்களும், அவர் எத்திசையில் பயணிக்க உள்ளார் என்ற வினாவை எழுப்பியது. …
-
- 0 replies
- 269 views
-
-
மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு எதிரொலி: முதல்வர் பழனிசாமி இன்று அவசர ஆலோசனை - கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சந்திக்கிறார் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சி நிர்வாகிகளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் கே.பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவை பொறுத்தவரை தற்போது 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைப்பு பல மாதங்களாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட ட…
-
- 1 reply
- 297 views
-
-
பெட்டிப் படுக்கையுடன் தயார் நிலையில் பேரறிவாளன்! வேலூர் மத்திய சிறையில் பெட்டிப் படுக்கையுடன் பேரறிவாளன் வெளியே வர தயார் நிலையில் இருக்கிறார். பரோலில் விடுவிப்பு குறித்து அரசின் உத்தரவுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். 26 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அவரை விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே, தனது மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் பரோல் வழங்க வேண்ட…
-
- 0 replies
- 458 views
-
-
(29/07/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Kamal Haasan | Thanthi TV
-
- 2 replies
- 677 views
-
-
'அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணையா விட்டால், ஆக., 5ல், முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்' என, மிரட்டல் விடுத்துள்ள தினகரன், ஆக., 4ல், அ.தி.மு.க., தலைமையகம் செல்ல வும், பின், தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு, 'செக்' வைக்கும் வகையில், கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தால், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க, முதல்வர் பழனிசாமி, வியூகம் வகுத்துள்ளார். இதன் மூலம், ஆட்சி மட்டுமின்றி, கட்சியை யும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, அவர்கள் தயாராகி வருகின்றனர்.'பன்னீர் மற்றும் பழனிசாமி என, அ.தி.மு.க.,வ…
-
- 1 reply
- 418 views
-
-
மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு! - தினகரன் மீண்டும் கைது? டெல்லியில் வட்டமடித்துவிட்டு அலுவலகத்தில் ‘லேண்ட்’ ஆன கழுகாரிடம் கேட்பதற்கு நிறையக் கேள்விகள் இருந்தன. பகிர்ந்துகொள்ள நிறைய தகவல்கள் அவரிடம் இருந்தன. கேட்க ஆரம்பித்தோம். ‘‘ஒரே நேரத்தில் தமிழக முதல்வர் இ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்களே... வரவழைத்ததும், சொல்லி அனுப்பியதும் என்ன?” ‘‘ஓ.பன்னீர்செல்வம் மீது ஆரம்பத்தில் பிரதமர் மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. காரணம், மோடியின் எதிர்பார்ப்புகளைப் பன்னீரால் பூர்த்திசெய்ய முடியவில்லை. ‘தன் பக்கம் 50 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்’ எனப் பொய்யான நம்பிக்கையைப்…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஏன்? அ.தி.மு.க., இரு அணி இணைப்பு தோல்வி... முதல்வர் பதவி எனக்கே' பழனிசாமி பிடிவாதம் 'முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்; பொதுச் செயலர் பதவியும் எனக்கே வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், அ.தி.மு.க., இரு அணி களின் இணைப்பு பேச்சு, தோல்வியில் முடிந் துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப் பிடி போடுவதால், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. 'அ.தி.மு.க.,வில், இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைக்கும்; தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, இரு அணிகளும் இணைய …
-
- 0 replies
- 494 views
-
-
இடைவெளி நிரப்பப்படுமா? தமிழக அரசியலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் இருபெரும் ஆளுமைகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்த ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கருணாநிதியின் முதுமை என்பன தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் 6 முறை ஆட்சிப் பீடம் ஏறிய ஜெயலலிதா தான் இறந்தாலும் கூட இன்னும் நூறாண்டுகள் அ.தி.மு.க. வாழும் என கூறினார். ஆனால் அவர் இறந்து ஓராண்டு நிறைவடைவதற்குள்ளேயே அக்கட்சி பல துண்டுகளாக சிதறி இன்று நிலையற்ற ஒரு ஆட்சியையே தமிழகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. வரட்சி, விவசாயிகள் தற்கொலை, நீட்தேர்வு, குடிநீர் தட்டுப்பாட்டு என்று பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்க…
-
- 0 replies
- 531 views
-
-
"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல் ம.கா.செந்தில்குமார், படங்கள்: எஸ்.பத்ரி நாராயணன், அருண் டைட்டன் கமல்... தமிழகத்தின் ஹாட் ஸ்டார். பரபரப்புச் செய்திகளின் பிக் பாஸ். அதிகாலையில் தட்டிவிடுகிற ட்வீட்டோ, ‘இன்னொரு ஃபைவ் ஸ்டார் ஜெயிலும் இருக்கு’ என நிகழ்ச்சிக்கு நடுவே அடிக்கிற கமென்ட்டோ அதிரடிக்கிறது. அப்ளாஸ் அள்ளுகிறது. புன்னகை மன்னனின் பெருஞ்சிரிப்பில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அனல் பறக்கின்றன. ‘‘நான் ஒண்ணும் புதுசாப் பேசலை.எப்பவுமே சொல்றதைத்தான் இப்பவும் சொல்றேன். 1985-ல் ஈழப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த நான், அன்றே அரசியலுக்கு வந்துட்டேன். ‘என்னய்யா இவன் பெரியவங்க இருக்கும்போது சின்னப்பய குரல் கொடுக்…
-
- 0 replies
- 4.1k views
-
-
'சசிகலாவுக்கு எதிரான புகாரில் சமரசம் கிடையாது': டிஐஜி ரூபா உறுதி படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடிஐஜி ரூபா கர்நாடக சிறை விதிகளை மீறி சிறப்புச் சலுகைகளை அனுபவித்ததாக அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக அளித்த அறிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று அம்மாநில காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ரூபா மொட்கில் தெரிவித்தார். இது குறித்து பிபிசி தமிழிடம் இன்று டிஐஜி ரூபா கூறுகையில், "பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பிய…
-
- 1 reply
- 754 views
-
-
திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம் எலியும், பூனையுமாக சமீபகாலம் வரை இருந்த, திவாகரனும், தினகரனும், திடீரென கை கோர்த்துக் கொண்டுள்ளது, முதல்வர் பழனி சாமி அணியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக தன்னை அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறைக்கு சென்றதும், அவர் குடும்பத்தில், அதிகார போட்டி தலை துாக்கியது. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. சசிகலா உதவியுடன், அ.தி.மு.க., துணை பொதுச்செயல ரான தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்; திவாகரனை ஒதுக்கினார். இரட்டை இலை சின்…
-
- 0 replies
- 357 views
-
-
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது நிரூபணம்.. கருவேல மரம் வெட்ட பிறப்பித்த தடையை.... நீக்கிய ஹைகோர்ட். தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வளந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களின் காரணமாக நிலத்தடி நீர் வளம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவைட வேண்டும் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று பிறப்பித்த உத்தரவில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பொதுநல மனு: …
-
- 0 replies
- 457 views
-
-
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் வெடிகுண்டு..! - அதிர்ச்சியில் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே இன்று (28-07-2017) காலை வெடிகுண்டு போன்றதொரு பொருள் கண்டெடுக்கப்பட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு, அ.தி.மு.க-வில் நெருக்கடி ஏற்பட்டபோது இரண்டு முறையும், ஜெ. மறைவைத் தொடர்ந்து ஒரு முறையும், ஆக மொத்தம் மூன்றுமுறை முதலமைச்சர் பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் சசிகலா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். ஓ.பி.எஸுக்கு ஆதரவு தெரிவித்துவரும் எம்.ப…
-
- 0 replies
- 382 views
-
-
'சோதனை என்ற பெயரில்...' - சிறையில் உறவுகளிடம் கலங்கிய சசிகலா #VikatanExclusive டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதி அஞ்சலியில் சசிகலா பங்கேற்க சிறைத்துறை அனுமதி மறுத்ததால், அவர் சோகத்தில் உள்ளார். மேலும், சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் சிறைத்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளால், சசிகலா மனவேதனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்ட சதி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி, சந்தானலட்சுமி. இவரின் மகளைத்தான் டி.டி.வி.தினகரன் திருமணம் செய்துள்ளார். சந்தானலட்சுமி, நேற்று சென்னையில் மரணமடைந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி, தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது. பரோலில் சசிகலா செல்ல சிறைத்துறையிடம் அனுமத…
-
- 0 replies
- 1k views
-
-
சசிகலா விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: முன்னாள் டிஐஜி ரூபா திட்டவட்டம் ரூபா டி.மவுட்கில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை யில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் படுகிறது. இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சசிகலா விடம் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர் என சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் கடந்த 13-ம் தேதி புகார் தெரிவித்தார். அதை மறுத்த முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ், “நான் சசி கலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் து…
-
- 0 replies
- 317 views
-
-
கலக்கம்! பன்னீருடன் மோடி சந்திப்பு பழனிசாமி அணி கலக்கம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணி நிர்வாகிகளை, பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசியது, பழனிசாமி மற்றும் தினகரன் அணியினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., மூன்றாக பிளவுபட்டுள்ளது. பன்னீர் அணிக்கு, பா.ஜ., ஆதரவு உள்ளது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி அணியினர், பிரதமருடன் நெருக்கம் காட்டினர். கலந்துரையாடல்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வப்போது டில்லி சென்று, பிரதமரை சந்தித்தனர்; மத்திய…
-
- 0 replies
- 572 views
-