Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமைச்சர்களை நீக்க எனக்கு அதிகாரம்: டிடிவி தினகரன் அறிவிப்பால் அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன். அமைச்சர்களை நீக்க துணைப் பொதுச் செயலாளரான எனக்கு அதிகாரம் உண்டு என டிடிவி தினகரன் அறிவித்துள்ளதையடுத்து அதிமுகவில் அதிகாரப் போட்டி வலுத்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்களும் கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக செயல்பட்டு வரு கின்றனர். இந்நிலையில், அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், டெல்லி த…

  2. முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேடப்பட்டுவந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், மேற்கு வங்க காவல்துறையினரால் கோவையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைTWITTER Image captionமுன்னாள் நீதிபதி கர்ணன் கோயம்புத்தூரில் கைது கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, செவ்வாய்க்கிழமை மாலை கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், பிபிசி தமிழிடம் இதை உறுதி செய்தார். தமிழக காவல்துறையின் உதவியுடன் மேற்குவங்க காவல் துறை அவரைக் கைது செய்துள்ளது.…

  3. தொடர் சந்திப்பு: சிறையில் சசி 'பிஸி' ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து, பா.ஜ., மேலிடத்திடம் சமரசம் செய்து கொள்ளலாம் என, சசிகலாவும், தினகரனும் கணக்கு போட்டனர். அக்கணக்கு, தற்போது தவிடு பொடியாகி உள்ளது. 'பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி, கட்சித் தலைமை முடிவு செய்யும்' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி பேசி, ஆதரவை உறுதி செய்துவிட்டார். இதன் மூலம், அ.தி.மு.க., - சசிகலா அணியின் தலைமை, முதல்வர் பழனிசாமி தான் என்பதை, பா.ஜ., வெளிப்படுத்தி உள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கக் கூடாது இதை தொடர்ந்து…

  4. பஞ்சாப் முதல்வரின் அதிரடி..! அலறுகிறது பா.ஜ.க.,, தமிழகமே இதையும் கொஞ்சம் பார்..! பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்துள்ளது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த அரசு பல அதிரடிகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் பாரதிய ஜனதா கட்சியின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆம் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று பிரதமர் தெரிவித்து விட்டு, அதனை உபி மாநிலத்தில் மட்டும் அவர்கள் ஆளும் மாநிலம் என்பதால் தள்ளுபடி செய்தார். தமிழக விவசாய…

  5. சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது தீ விபத்தில் நாசமான சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை முதல் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Image captionகோப்புப் படம் சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் என்ற மிகப் பெரிய துணிக் கடையில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி அதிகாலையில் தீ பிடித்தது. 100க்கணக்கான தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு நாட்களுக்கு மேலாக போராடி, இந்தத் தீயை அணைத்தனர். இதற்குப் பிறகு இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் துவங்கின. சுமார் 122 அடி உயரம் கொண்ட, ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் …

  6. தங்கர்பச்சான் மக்களின் மேல் கொள்ளும் கோவம்

    • 0 replies
    • 470 views
  7. வெளிநடப்பு செய்த ஆளுங்கட்சி எம்எல்ஏ! சட்டசபையில் பரபரப்பு ஆளுங்கட்சி எம்எல்ஏ-வான தங்கதமிழ்செல்வன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். அ.தி.மு.க தற்போது மூன்று அணிகளாக இயங்கி வருகிறது. இதில் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 32 பேர் டி.டி.வி தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான், ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடந்த வாரம் கூறியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அப்போது ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காதத…

  8. ஜெயலலிதா உயில் எழுதினாரா? தொடரும் போயஸ் வில்லங்கம்...! ‘ஜெயலலிதா’ என்ற ஆளுமையின் மறைவு, அவர் 30 ஆண்டுகளாக கட்டிக் காத்த அ.தி.மு.க-வை ஆட்டம் காண வைத்துள்ளது; அந்தக் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. ஜெயலலிதா அமைத்த ஆட்சி அதிகாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சார்ந்த குழப்பங்கள்தான் இன்றைக்கு தமிழக அரசியலையே இயக்கிக் கொண்டிருக்கின்றன. சீரியசான இந்தக் காட்சிகளுக்கு மத்தியில், ஜெயலலிதாவின் உறவுகள் நடத்தும் காமெடிக் காட்சிகளும் இடையிடையே வந்துபோகின்றன. ஜெயலலிதாவின் சொத்துகளை வைத்து நடத்தப்படும் அந்தக் காமெடிகளில், ‘ஜெயலலிதா உயில் எழுதி உள்ளார்’ என்று ஒரு தகவல் மையமாகக் கூறப்படும். கடந்த 11 ஆம் தேதி போயஸ் கார்டன், வேதா ந…

  9. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை! ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ஆர்.கே.நகர் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் புகாரால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர்…

  10. ராஜிவ் கொலை: நளினி உண்ணாவிரதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை புழல் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி, உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இந்தக் கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினி ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். நளினி, வேலூர் பெண்கள் சிறையில் இருந்துவருகிறார். தற்போது அவர், தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி, சிறைத்துறைக்கு, கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தனது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. புழல் சிறையில் இருந்தால், திருமணத்துக்கு உதவுவதற்கு ஏதுவாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். …

  11. “போயஸ் கார்டனை விட்டு வெளியேற வேண்டும்!” சசி குடும்பத்துக்கு தீபக் கெடு ஜெயலலிதா வாழ்ந்தவரை போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம், கம்பீரத்தின் உச்சமாகத் திகழ்ந்தது. அது, பொதுமக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இடம்; அ.தி.மு.க-வினருக்கு வழிபாட்டுத்தலம்; எதிர்க்கட்சிகளுக்குச் சிங்கத்தின் குகை. ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறை சென்றபிறகு அந்த இல்லத்தின் கம்பீரம் சிதையத் தொடங்கியது. கடந்த 11-ம் தேதி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபா பேரவை நிர்வாகி ராஜா ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டுக்குள் போட்ட நான்குமுனைச் சண்டை, தெருச் சண்டை ரகம். தீபா, தீபக் மோதலையடுத்து பல வாதங்கள் வதந்திகளாகப் பரவின. ‘‘போயஸ் கார்டன் வீடு குறித்து ஜெயலல…

  12. ஜெயலலிதா | கோப்புப் படம். ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ.6 கோடியை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிமுக வழங்கியது. முதல்வராக இருந்த ஜெய லலிதா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே 5 முறை யும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் 3 முறையும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித் தனர். அவர்கள் கொடுத்த ஆலோ சனைகளின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த 2 பெண் பிசியோ தெரபி நிபுணர்கள், ஜெயலலிதா வுக்கு பி…

    • 0 replies
    • 405 views
  13.  கூவத்தூர் குதிரை பேரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள்...விடாப்பிடி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்,ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - காங்., உள்ளிட்ட, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து, கூவத்துாரில் நடந்த குதிரை பேரம் தொடர்பாக, 'சிடி' ஆதாரத்துடன் முறையிட்டனர். 'லஞ்சம் கொடுத்தே நம்பிக்கை ஓட்டெடுப்பில், பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது; எனவே, அ.தி.மு.க., ஆட்சியை உடனே கலைக்க வேண்டும்' என்றும், வலியுறுத்தினர். தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு, பிப்., 18ல், நம்பிக்கை ஓட்டு கோரியது. அதில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க் களை, கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் த…

  14. வாய்ப்பில்லை? ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு... அ.தி.மு.க.,வின் 3 அணிகள் மோதலால் குளறுபடி அ.தி.மு.க., அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் ஆர்வமாக இல்லை. எனவே, ஜூலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த, வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்தல், 2016 அக்டோபரில்,…

  15. தீபா - தீபக் மோதல் பின்னணியில் தினகரன்: கார்டனில் நடந்த கலாட்டா சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கும், அவரது சகோதர ருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு, தினகரன் தரப்பினரே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது. ஜெ.,மறைவுக்கு பின், அவரது சொத்துக்களுக்கு, அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், உரிமை கொண்டாடி வருகின்றனர். சொத்துக்கள் தொடர்பாக, ஜெ., உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்த தகவல் எதுவும், இதுவரை வெளியாகவில்லை. தனிக்கட்சி தற்போதைய நிலையில், ஜெ., சொத்துக்கள் அனைத்தும், சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. தீபக்கும், அவர்களின்…

  16. கட்சி எங்களுக்கு... ஆட்சி பன்னீருக்கு...: சசி குடும்பம் யோசனை; பழனிசாமி கொந்தளிப்பு 'முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்' என, முதல்வர் பழனிசாமி கூறியது, சசிகலா குடும்பத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்தினர் கோலோச்சுவதை, பா.ஜ., தலைவர்கள் விரும்ப வில்லை. எனவே, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு, பன்னீர் அணியுடன் இணையும் படி, முதல்வர் பழனிசாமி தரப்பினருக்கு, அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தடைபட்டது ஆனால், முதல்வர் பதவியில் திடமாக அமர்ந்த பழனிசாமி, அதை துறக்க தயாராக இல்லை. இதன் காரணமாகவே, பன்னீர் அணியுடனான…

  17. மிஸ்டர் கழுகு: தினகரன் - திவாகரன்... திடீர் சந்திப்பு பின்னணி! ‘‘வெளியில் சண்டையிடுகிறார்கள், உள்ளே கூடிக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டு முழிப்பது என்னவோ ஆதரவாளர்கள்தான்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘யாரைச் சொல்கிறீர்கள்?” என்றோம். ‘‘சசிகலா குடும்பத்தைத்தான் சொல்கிறேன். மன்னார்குடியில் தினகரனுக்கு ஆதரவாக கடந்த 11-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் திடீரென ரத்தானதும், பேச்சாளர்கள் அவமானத்தோடு திரும்பியதும் தெரிந்த கதைதான். அதன் பின்னணியில் திவாகரன் இருந்தார். திரும்பிப் போகும்போது, கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘மன்னார்குடிக்கு இவர் ராஜான்னா, கர்நாடகாவுக்கு நான் ராஜா. என்னோட பவரை நான் அங்கே காட்டறேன்’ எனத் திவாகரன் பெ…

  18. இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம்.. பதறிய தி.நகர் மக்கள்! தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு எற்பட்டது. ஆனால், கட்டடத்தின் அந்தப்பகுதியைத் தாங்கள்தான் இடித்தோம் எனக் கட்டட இடிப்பு ஒப்பந்தக்காரர் பீர் முகமது பேட்டியளித்துள்ளார். சென்னை, தி.நகரில் மே 31 ஆம் தேதி, ஏற்பட்ட பெரும் தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாகச் சேதமடைந்தது. இதனால் வலுவிழந்த அக்கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இடிபாடு விழுந்து ஊழியர் ஒருவர் பலியானதால், கட்டட இடிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கட்டடம் இடிக்கும் பணி மீண்டும் துவங்கியது. கட்டட இடிப்புப் பண…

    • 2 replies
    • 524 views
  19. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்வுகள் 14.06.2017

  20. 'நாங்கள் பார்க்கத்தான் செய்கிறோம்; எதற்கும் ஒரு எல்லை உண்டு'- தமிழக அரசை எச்சரித்த நீதிபதி கிருபாகரன் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்கள் விஷமிகளா என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் பெண்களே போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் கொ…

  21. ‘எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம்!’ - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் தினகரனுக்கும் திவாகரனுக்கும் நீடித்து வந்த மோதல், தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. 'சசிகலாவை சந்திக்க தினகரன் முயற்சி செய்தபோதும், திவாகரன் அதற்கு இடையூறாக இருந்தார். 'குடும்பம் மற்றும் கட்சியைக் காப்பாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என சசிகலா வைத்த உருக்கமான வேண்டுகோளை இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள். இந்த சந்திப்பில், 'கட்சிப் பொறுப்பில் தினகரன் தொடர்வா…

  22. போயஸ்: ஒரு அதிகாரத் தோட்டத்தின் கதை! வேதா நிலையம், எண்: 81, போயஸ் தோட்டம், சென்னை, 600086. இதுதான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரபூர்வ முகவரி. கடந்த 30 ஆண்டு கால அதிமுகவின் அரசியல் முகவரியும் அதுதான். கடந்த 30 ஆண்டுகாலத் தமிழக அரசியல் சக்கரத்தின் மையப்புள்ளி. சில தருணங்களில் இந்திய அரசியலைத் தீர்மானித்த புள்ளி என்றும் சொல்லலாம். 1967-ல் சென்னையில் மனை வாங்கினார் ஜெயலலிதாவின் தாயும் பிரபல நடிகையுமான சந்தியா. அதனை அவரும் ஜெயலலிதாவும் தங்கள் ரசனைக்கு ஏற்பச் செதுக்கி, பிரம்மாண்ட இல்லமாக்கினர். புதுமனை புகுவிழா நெருங்கும் சமயத்தில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் சந்திய…

  23. ஆபத்தானவர்களின் பட்டியலில் பெயர்.. மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்குத் தடை!! மலேசியாவுக்குள் நுழைய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார் அவர். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ம.தி.மு.க தலைமைக் கழகம், 'மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு ஜூன் 10 சனிக்கிழமை மாலை பினாங்க…

  24. "நாம் தமிழர்" செல்வாக்கு அதிகரிப்பு.. சம பலத்தில் காங்., பாஜக + பாமக, தேமுதிக.. நக்கீரன் சர்வே By: Sutha Updated: Thursday, June 15, 2017, 12:02 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது. நக்கீரன் எடுத்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் யாருக்குப் பாதிப்பு என்றும், தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வேயில் கட்சிகளின் ஆதரவு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதுகுறித்த பார்…

  25. அ.தி.மு.கவுக்கு ஏன் உரிமை கொண்டாடுகிறார் தீபா?! - தேர்தல் ஆணையமும் தினகரனின் அச்சமும் #VikatanExclusive மீண்டும் தினகரனைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், தினகரனின் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி. 'சசிகலா எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியிலேயே அ.தி.மு.கவின் மற்ற அணிகள் இணைய இருக்கின்றன. சசிகலா எதிர்ப்பு மட்டும்தான் வலுப்பெறும்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். அண்ணா தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் ஒதுங்கி இருந்தேன். அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாததால், மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.