தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
இடிபாடுகள் உரிமையில் சிக்கல்: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி திடீர் நிறுத்தம் சென்னை தியாகராய நகரில் தீ விபத்தால் முற்றிலும் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இருந்து அகற்றப்படும் இடிபாடு களுக்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் இடிக்கும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ இயங்கி வந்தது. 7 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்…
-
- 0 replies
- 400 views
-
-
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார். இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத சிறைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் தினகரன். நேற்று முன்தினம் சென்னை வந்த தினகரனை அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ளது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சியில் இருந்து என்னை யாரும…
-
- 2 replies
- 395 views
-
-
''தி.நகரில் மக்கள் நடமாட்டமே இல்லை...!'' -புலம்பும் சிறு வியாபாரிகள் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில், 'தி சென்னை சில்க்ஸ்' ஜவுளிக்கடையில் கடந்த புதன் கிழமை (31-5-2017) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில், தீயின் கோர நாக்குகள் ஜவுளிக்கடையின் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயை அணைக்கப் போராடினர். கட்டுக்கடங்காமல் எரிந்துகொண்டிருந்த தீயினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால், தீயணைப்பு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 36 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீ…
-
- 0 replies
- 380 views
-
-
பி.ஜே.பி-க்கு 'செக்': தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி? தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணி வைரவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருப்பது பி.ஜே.பி-க்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.. சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில், இதுவரை இல்லாதவகையில் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக அணி திரண்டு, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்கள். அத்துடன் அவர்கள், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் திறமைகளை எடுத்துரைத்ததுடன், 'விரைவில் தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவார்' என்றும் குறிப்பிட்டனர். தமிழக அரசியல்களத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு, …
-
- 0 replies
- 363 views
-
-
பரோல் கோரி சசிகலா திடீர் மனு தாக்கல்! சொத்துக்குவிப்பு வழக்கில் நான் ஆண்டுகள் சிறைத் தண்டனைபெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலா, பரோல் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூவரும் பெங்களூரு சிறையில் தண்டனைபெற்றுவருகின்றனர். சசிகலா சிறைக்குச் சென்றதை அடுத்து, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என…
-
- 1 reply
- 406 views
-
-
முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! கலகலக்கும் தலைமைச்செயலகம் முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகளுக்குள்ளும் மீண்டும் பனிப்போர் நடந்துவருகிறது. கட்சி இணைப்புகுறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. கட்சி நிர்வாகம், பதவி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சிக்கல் நிலவிவருகிறது. அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டுமென்றால், டி.டி.வி.…
-
- 1 reply
- 331 views
-
-
விபரீதம் ஏற்படும்! பெங்களூரில் பழனிசாமி அணியைக் கலங்கடித்த வெற்றிவேல் டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைக்க எடப்பாடி பழனிசாமி அணிக்கு அருகதை இல்லை என்று எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘முன்னர் அறிவித்தபடி டி.டி.வி.தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைச் ச…
-
- 0 replies
- 301 views
-
-
தீ மட்டும் தான் தி.நகரில் பிரச்சினையா? சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் தீயை அணைக்கும் வீரர்கள். | படம்: க.ஸ்ரீபரத் நண்பன் பிரகாஷின் தந்தை திடீரென காலமானார். மேற்கு மாம்பலத்தில் 40 ஆண்டுகள் வசித்தவர்.அதிகாலையிலேயே உயிர் பிரிந்து விட்டது. எப்படியும் நல்லடக்கத்திற்கு உடலை எடுத்துச் செல்ல நேரம் ஆகும் என்று 10 மணிக்கு வீட்டுக்குச் சென்றேன். அதற்குள் உடலை கண்ணம்மாபேட்டைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நண்பன் திரும்பி வந்த பின் ஆறுதல் கூறிவிட்டு ஏன்டா இவ்ளோ சீக்கிரம் எடுத்திட்டு போயிட்ட என்றேன். "இல்லடா எனக்கு கஷ்டமாதான் இருந்துச்சு, ஆனா 9 மணிக்கு மேல ஆயிடுச்சுன்னா ஏரியாவுல பயங…
-
- 0 replies
- 266 views
-
-
கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: ராகுல் காந்தி மகிழ்ச்சி..! கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநியின் 94-வது பிறந்தநாள் விழா நேற்று வைரவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய அளவில் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இன்று காலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடித்த பின்னர் சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்தார். ராகுல் காந்தியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாயிலில் சென…
-
- 3 replies
- 611 views
-
-
கழகங்கள்... பாதை மாறிய பயணங்கள்! 2017-ம் ஆண்டு இரு திராவிடக் கட்சிகளுக்கும் முக்கியமான ஆண்டு. காங்கிரஸ் என்ற தேசியக் கட்சியை வீழ்த்தி தி.மு.க ஆட்சியைப் பிடித்த 50-ம் ஆண்டு, கருணாநிதி சட்டமன்றத்துக்குள் நுழைந்த 60-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு என்ற மூன்று முக்கியத்துவங்கள் இந்த ஆண்டுக்கு உண்டு. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஜெயலலிதா உயிருடன் இல்லை. கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா மேடையில் அமரும் நிலையில் கருணாநிதி இல்லை. இப்படி ஒரு விழா நடைபெறுவதை உணரும் நிலையிலேயே அவர் இல்லை. காலம் விசித்திரமானதுதான்! கருணாநிதி தீவிரமாக அரசியல் செய்ய இயலாத இன்றைய நிலையில், தி.மு.க-வுக்கு என்று சில கடப்பாடுகள் உள்ளன. கருணாநிதி தன் அரசியல் வாழ்வில் பல…
-
- 0 replies
- 914 views
-
-
தமிழக அமைச்சர்கள் சிலரை மாற்றும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை விட, கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என, அவர் கருதுவதால், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், சட்டசபையில், வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்ப்போம் என, மிரட்டல் விடுத்துள்ளதாக வும், தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்; 34 நாட் களுக்கு பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரை, அ.தி.மு.க., அம்மா அணியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.பி.,க்கள், ஐந்து மாவட்ட செயலர்கள் வரவே…
-
- 0 replies
- 3.8k views
-
-
மே 17 இயக்கத் தலைவர், திருமுருகன் காந்தி.. குண்டர் சட்டத்தில் கைது. இலங்கையில் தனி ஈழம் கோரி போராடியதால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு தடையை மீறி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த தமிழர்களை மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து கொத்தாக கொன்று குவித்தது.தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அராஜகம், மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்களை மானப்பங்கப்படுத்தி, நிர்வாணப்படுத்தி கொன்றனர். சென்ன…
-
- 5 replies
- 1.2k views
-
-
பேசும் படங்கள்: கருணாநிதியை நேரில் சந்தித்த தேசிய தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய…
-
- 0 replies
- 965 views
-
-
மு.க.ஸ்டாலின் (இடது), தமிழிசை சவுந்தரராஜன் (வலது) | கோப்புப் படம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு நாடு தயாராகிவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, பதிலளித்துள்ள பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை, திமுகவின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தனி மனித உரிமையை பறித்த அவசர நிலை பிரகடனம் போன்ற நிலைமை இப்போது எங்கே இருக்கிறது, சாதாரண குடி மகனும் நாட்டின் பிரதமரையே விமர்சிக்க உரிமை இருக்கிறது. அன்று அவசர நிலை பிரகடனத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டாலின் அவர்களே அதை மறந்து பேசுவது வியப்பு, இதில் எங்கே சுதந்திர போராட்டம் வந்தது? அன்று நடந்த சுதந்திர போராட்டத்தில் திமுக வின் ப…
-
- 0 replies
- 314 views
-
-
ஜெ-சசி நிறுவனங்களின் பின்னல் வலை விளக்கப்படம் ஜெ-சசி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்கள் சென்னை தியாகராய நகரில் இருபுறமும் மரங்கள் வளர்ந்த, கவனத்தை ஈர்க்கும் எந்த அம்சமும் இல்லாத ஒரு வீதியின் அடுக்ககத்தில் ‘கியான்’ (GYAN) என்ற பெயர்ப் பலகை பளிச்சென்று கண்ணில் படுகிறது. ஓரிரண்டு காரணங்களைத் தவிர, அது ஒன்றும் கவனிக்கத்தக்க அடுக்ககம் அல்ல. கதவு எண் 12, கதவு எண் 16 என்ற இரு வீடுகள் மட்டும் சில தனியார் நிறுவனங்களின் பதிவுபெற்ற அலுவலகங்களாகத் திகழ்கின்றன. அந்நிறுவனங்கள், அஇஅதிமுக (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, அவருடைய…
-
- 0 replies
- 538 views
-
-
அரசியல் நெருக்கடியில் தமிழக நிர்வாகம் முடக்கமா? முரளீதரன் காசி விஸ்வநாதன்செய்தியாளர் தமிழ்நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துவரும் நிலையில், தமிழக அரசு அதனை எதிர்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அரசு நிர்வாகம் முழுமையாக முடங்கியது. அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் எந்தவித அரசுப் பணிகளும் நடக்கவில்லையென்றே கூறலாம். அவரது மறைவுக்குப் பிறகுப் பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா பதவியில் இருந்…
-
- 0 replies
- 391 views
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி! ‘டெல்லியில் மழை பெய்ததால் வெயில் குறைந்திருக்கிறது’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ். அவர் டெல்லியில் இருப்பதைப் புரிந்து கொண்டுப் போனில் பிடித்தோம். ‘‘டி.டி.வி.தினகரனுக்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்து விட்டதே?’’ என்றோம். ‘‘ஆமாம்! டெல்லி போலீஸ் ‘அந்த ஆதாரம் இருக்கிறது... இந்த ஆதாரம் இருக்கிறது...’ என இழுத்தார்களே தவிர, தினகரனைச் சிறையில் இன்னமும் வைத்திருக்கத் தேவையான காரணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. அதனால் சுலபமாக ஜாமீன் கிடைத்துவிட்டது. 41 நாள் சிறைவாசம் முடிந்து வெளியில் வந்திருக்கிறார் தினகரன்.” ‘‘இனி தீவிர அரசியலில் ஈடுபடுவாரா?’’ ‘‘அ.தி.மு.க-வில் உள்ள 122 எம்.எல்.ஏ-க்களில் தற்போது பல கோஷ்டிகள்…
-
- 0 replies
- 3.7k views
-
-
பழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம் முதல்வர் பழனிசாமி தரப்பினர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக, பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருவது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் அணி சார்பில், மனு அளிக்கப்பட்டு உள்ளது; இம்மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. குறுகிய காலத்திற்குள், முடிவெடுக்க முடியாததால், இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் ம…
-
- 0 replies
- 246 views
-
-
தினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம்...! 'அடிமைத்தனத்தை' ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு திகார் சிறையில் இருந்து, சென்னை திரும்பிய தினகரன், 'நான் தான், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர்; சசிகலாவை தவிர, வேறு யாராலும் என்னை நீக்க முடியாது' என அறிவித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது தலைமையை விரும்பாத அமைச்சர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் தினகரனை அடியோடு ஓரங்கட்டவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதற்காக, முழுவீச்சில் களமிறங்க ஆர்வமாக உள்ளனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் விதித்த நிபந்தனை காரணமாக, தினகரனை, கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக, ஏப்., 18ல், அமைச்சர்கள் அற…
-
- 0 replies
- 482 views
-
-
குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60 ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி ‘Very good speech’ - கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுச் சீட்டு இப்போது கிடைத்து, அதைக் கருணாநிதியின் கையில் கொடுத்தால் ஒருவேளை அவர் பேசும் சக்தியைப் பெற்று விடலாம். ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ். எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆகஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது. தந்தைக்கு வைர விழா எடுக்கிறார் தனயன். அதை …
-
- 14 replies
- 8.1k views
-
-
பேச ஆரம்பித்தார் கருணாநிதி.. யாரை பிடிக்கும் என்றதும் சொன்ன பதில் இதுதான்.. துரைமுருகன் உற்சாகம். திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை முன்னேறி வருவதாக அக்கட்சி மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு வைரவிழா நடைபெற உள்ள நிலையில் துரைமுருகன் பேஸ்புக்கில் இத்தகவலை தெரிவித்துள்ளார். துரைமுருகன் மேலும் கூறியதாவது:''தொண்டைக்குழி'' வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால் பேச இயலவில்லை... கடந்த இருதினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேச சொன்னார்கள். தலைவரிடம் உங்கள் பெயர் என்ன எனக்கேட்க ? "என் பெயர் கருணாநிதி'' என்றார். அடுத்ததாக உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க? ''அறிஞர் அண்ணா'' என…
-
- 5 replies
- 4.7k views
-
-
'பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 1. பத்திரிகையாளர் பள்ளி மாணவராக இருந்தபோதே பத்திரிகையாளர் அவதாரம் எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. சொல்லப்போனால், அதுதான் அவருடைய நீண்டநெடிய அடையாளமும்கூட. 15 வயதில் `முரசொலி' இதழைத் தொடங்கினார். அப்படிப் பார்த்தால், சுமார் 80 ஆண்டுப் பயணம் அவருடைய பத்திரிகை ஆசிரியர் பணி. பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் எனப் பன்முகம்கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சர், ஐந்து முறை எதிர்க்கட்சித் தலைவர், 74 திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்தவ…
-
- 5 replies
- 3.9k views
-
-
சென்னை சில்க்ஸ் தீவிபத்து: லாக்கரில் இருந்த 400 கிலோ தங்கம் என்னவானது? தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: க.ஸ்ரீபரத் இடிபாடுகளுக்குள் புதைந்துகிடக்கும் கன்டெய்னர்களில் சிக்கியுள்ள 400 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை மீட்பது குறித்து சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிர்வாகத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 31-ம் தேதி அதிகாலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ பிடித்தது. தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவி 7 மாடி கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. தீவிபத்தில் பலத்த சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி இன…
-
- 6 replies
- 3.9k views
-
-
''தலைவர் கேக் வெட்டுகிற வீடியோவை வெளியிடணும்!'' - உணர்ச்சி மயமாகும் உடன்பிறப்புகள் 2015-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, அதிகாலை 4 மணி. தமது பிறந்தநாளை முன்னிட்டு சி.ஐ.டி காலனி இல்லத்தில், மரக்கன்று ஒன்றை நடுகிறார் அவர். அருகிலிருந்த ராஜாத்தியம்மாள், சிறிய பாட்டிலில் பிடிக்கப்பட்ட தண்ணீரை அந்த கன்றுக்கு ஊற்றுகிறார். இதைக்கண்டு, ''பாத்துமா... ரொம்ப சிந்திடப்போகுது'' என்று கிண்டல் செய்கின்றனர் குழுமியிருந்த சீனியர் தலைவர்கள். அப்போது, ''தண்ணீர் சிந்தினால் தவறில்லை. கண்ணீர் சிந்தினால்தான் பிரச்னை'' என வெளிப்படுகிறது ஒரு கரகரத்த குரல். அனைவரும் அமைதியாக அடுத்த வார்த்தையை எதிர்பார்த்திருக்க, சில நொடி இடைவெளிக்குப் பிறகு, ''கருணாநிதி வீட்டில் பெண்கள் கண்ணீர்…
-
- 11 replies
- 2.7k views
-
-
புரசைவாக்கம் வணிக வளாகத்தில் தீ விபத்து: அலறியடித்து மக்கள் ஓட்டம்! சென்னையில் பரபரப்பான பகுதியான புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. புரசைவாக்கத்தில் சிட்டி மால் எனும் வணிக வளாகம் உள்ளது. எந்நேரமும் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும் வளாகம் அது. அங்குள்ள ஒரு துணிக்கடையில் இன்று திடீரென தீப்பற்றியது. எதிர்பாராத இந்த விபத்தால் மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். உடனடியாக வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள தீயணைப்பு மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விரைந்து செ…
-
- 0 replies
- 340 views
-