தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
அரசியல் நெருக்கடியில் தமிழக நிர்வாகம் முடக்கமா? முரளீதரன் காசி விஸ்வநாதன்செய்தியாளர் தமிழ்நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துவரும் நிலையில், தமிழக அரசு அதனை எதிர்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அரசு நிர்வாகம் முழுமையாக முடங்கியது. அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் எந்தவித அரசுப் பணிகளும் நடக்கவில்லையென்றே கூறலாம். அவரது மறைவுக்குப் பிறகுப் பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா பதவியில் இருந்…
-
- 0 replies
- 389 views
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் ரிலீஸ்... திடுக் எடப்பாடி! ‘டெல்லியில் மழை பெய்ததால் வெயில் குறைந்திருக்கிறது’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ். அவர் டெல்லியில் இருப்பதைப் புரிந்து கொண்டுப் போனில் பிடித்தோம். ‘‘டி.டி.வி.தினகரனுக்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்து விட்டதே?’’ என்றோம். ‘‘ஆமாம்! டெல்லி போலீஸ் ‘அந்த ஆதாரம் இருக்கிறது... இந்த ஆதாரம் இருக்கிறது...’ என இழுத்தார்களே தவிர, தினகரனைச் சிறையில் இன்னமும் வைத்திருக்கத் தேவையான காரணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. அதனால் சுலபமாக ஜாமீன் கிடைத்துவிட்டது. 41 நாள் சிறைவாசம் முடிந்து வெளியில் வந்திருக்கிறார் தினகரன்.” ‘‘இனி தீவிர அரசியலில் ஈடுபடுவாரா?’’ ‘‘அ.தி.மு.க-வில் உள்ள 122 எம்.எல்.ஏ-க்களில் தற்போது பல கோஷ்டிகள்…
-
- 0 replies
- 3.7k views
-
-
பழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம் முதல்வர் பழனிசாமி தரப்பினர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக, பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருவது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் அணி சார்பில், மனு அளிக்கப்பட்டு உள்ளது; இம்மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. குறுகிய காலத்திற்குள், முடிவெடுக்க முடியாததால், இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் ம…
-
- 0 replies
- 244 views
-
-
தினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம்...! 'அடிமைத்தனத்தை' ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு திகார் சிறையில் இருந்து, சென்னை திரும்பிய தினகரன், 'நான் தான், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர்; சசிகலாவை தவிர, வேறு யாராலும் என்னை நீக்க முடியாது' என அறிவித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது தலைமையை விரும்பாத அமைச்சர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் தினகரனை அடியோடு ஓரங்கட்டவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதற்காக, முழுவீச்சில் களமிறங்க ஆர்வமாக உள்ளனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் விதித்த நிபந்தனை காரணமாக, தினகரனை, கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக, ஏப்., 18ல், அமைச்சர்கள் அற…
-
- 0 replies
- 478 views
-
-
குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60 ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி ‘Very good speech’ - கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுச் சீட்டு இப்போது கிடைத்து, அதைக் கருணாநிதியின் கையில் கொடுத்தால் ஒருவேளை அவர் பேசும் சக்தியைப் பெற்று விடலாம். ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ். எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆகஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது. தந்தைக்கு வைர விழா எடுக்கிறார் தனயன். அதை …
-
- 14 replies
- 8k views
-
-
பேச ஆரம்பித்தார் கருணாநிதி.. யாரை பிடிக்கும் என்றதும் சொன்ன பதில் இதுதான்.. துரைமுருகன் உற்சாகம். திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை முன்னேறி வருவதாக அக்கட்சி மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு வைரவிழா நடைபெற உள்ள நிலையில் துரைமுருகன் பேஸ்புக்கில் இத்தகவலை தெரிவித்துள்ளார். துரைமுருகன் மேலும் கூறியதாவது:''தொண்டைக்குழி'' வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால் பேச இயலவில்லை... கடந்த இருதினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேச சொன்னார்கள். தலைவரிடம் உங்கள் பெயர் என்ன எனக்கேட்க ? "என் பெயர் கருணாநிதி'' என்றார். அடுத்ததாக உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க? ''அறிஞர் அண்ணா'' என…
-
- 5 replies
- 4.7k views
-
-
'பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 1. பத்திரிகையாளர் பள்ளி மாணவராக இருந்தபோதே பத்திரிகையாளர் அவதாரம் எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. சொல்லப்போனால், அதுதான் அவருடைய நீண்டநெடிய அடையாளமும்கூட. 15 வயதில் `முரசொலி' இதழைத் தொடங்கினார். அப்படிப் பார்த்தால், சுமார் 80 ஆண்டுப் பயணம் அவருடைய பத்திரிகை ஆசிரியர் பணி. பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் எனப் பன்முகம்கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சர், ஐந்து முறை எதிர்க்கட்சித் தலைவர், 74 திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்தவ…
-
- 5 replies
- 3.9k views
-
-
சென்னை சில்க்ஸ் தீவிபத்து: லாக்கரில் இருந்த 400 கிலோ தங்கம் என்னவானது? தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: க.ஸ்ரீபரத் இடிபாடுகளுக்குள் புதைந்துகிடக்கும் கன்டெய்னர்களில் சிக்கியுள்ள 400 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை மீட்பது குறித்து சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிர்வாகத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 31-ம் தேதி அதிகாலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ பிடித்தது. தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவி 7 மாடி கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. தீவிபத்தில் பலத்த சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி இன…
-
- 6 replies
- 3.9k views
-
-
''தலைவர் கேக் வெட்டுகிற வீடியோவை வெளியிடணும்!'' - உணர்ச்சி மயமாகும் உடன்பிறப்புகள் 2015-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, அதிகாலை 4 மணி. தமது பிறந்தநாளை முன்னிட்டு சி.ஐ.டி காலனி இல்லத்தில், மரக்கன்று ஒன்றை நடுகிறார் அவர். அருகிலிருந்த ராஜாத்தியம்மாள், சிறிய பாட்டிலில் பிடிக்கப்பட்ட தண்ணீரை அந்த கன்றுக்கு ஊற்றுகிறார். இதைக்கண்டு, ''பாத்துமா... ரொம்ப சிந்திடப்போகுது'' என்று கிண்டல் செய்கின்றனர் குழுமியிருந்த சீனியர் தலைவர்கள். அப்போது, ''தண்ணீர் சிந்தினால் தவறில்லை. கண்ணீர் சிந்தினால்தான் பிரச்னை'' என வெளிப்படுகிறது ஒரு கரகரத்த குரல். அனைவரும் அமைதியாக அடுத்த வார்த்தையை எதிர்பார்த்திருக்க, சில நொடி இடைவெளிக்குப் பிறகு, ''கருணாநிதி வீட்டில் பெண்கள் கண்ணீர்…
-
- 11 replies
- 2.7k views
-
-
புரசைவாக்கம் வணிக வளாகத்தில் தீ விபத்து: அலறியடித்து மக்கள் ஓட்டம்! சென்னையில் பரபரப்பான பகுதியான புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. புரசைவாக்கத்தில் சிட்டி மால் எனும் வணிக வளாகம் உள்ளது. எந்நேரமும் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும் வளாகம் அது. அங்குள்ள ஒரு துணிக்கடையில் இன்று திடீரென தீப்பற்றியது. எதிர்பாராத இந்த விபத்தால் மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். உடனடியாக வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள தீயணைப்பு மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விரைந்து செ…
-
- 0 replies
- 338 views
-
-
'நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை நெருங்கவிட மாட்டேன்...' ரஜினிகாந்த் பரபர பேச்சு! நடிகர் ரஜினிகாந்த், இன்று முதல் 19-ம் தேதி வரை தனது ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். அப்போது, அவர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். இதற்கான துவக்க நிகழ்ச்சியில், இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டார். அப்போது ரஜினி பேசுகையில், "இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனக்கு சகோதரர். ஒழுக்கம், சத்தியம், உண்மை ஆகியவற்றை அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். அவர், என்னை எப்போது பார்த்தாலும், 'உனது உடலைப் பார்த்துக்கொள், ரசிகர்களைப் பார்த்துப் பேசு, போட்டோ எடுத்துக்கொள்' என்று சொல்வார். அவர் சொன்னது இன்று நடந்துள்ளது. ஆ…
-
- 66 replies
- 8.5k views
-
-
'யாரும் நீக்கவில்லை... கட்சிப் பணியைத் தொடர்வேன்' : திகாரில் இருந்து வெளிவந்த தினகரன் அதிரடி! இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார், டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர், அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனு மீது, கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து, தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது, டெல்லி நீதிமன்றம். அவருடன் கைதான மல்லிகார்ஜுனாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவி…
-
- 1 reply
- 253 views
-
-
செல்வாக்கை சரிக்கட்டுமா சசிகலா அணி...? தினகரன் ஜாமீன் பின்னணி! ஆளுங்கட்சியாக இருந்தாலும் இருவேறு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றாக இணைக்கும் பணி, வேகமாக நடப்பது போல் வெளியில் தெரிந்தாலும் உள்ளுக்குள் என்னவோ வேறு கதை ஓடுகிறது. அவரவர் பலத்தைக் காண்பித்து கட்சி, ஆட்சி, இரட்டை இலை சின்னம் ஆகிய மூன்றையும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில்தான் இரண்டு அணிகளுக்குள் பந்தயம் நடக்கிறது... பந்தயத்தில் முந்திக் கொள்ளும் பாய்ச்சலில் சசிகலா அணியே முதலில் இருப்பதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.கவில் ஏற்பட்ட குளறுபடிகள் ஊரறிந்த ஒன்றே. அ.தி.மு.க என்றால் ஜெயலலிதா என்று இருந்து வந்த நிலை மாறி சசிகலா, நடராஜன், ஓ.பி.எஸ், டி.டி.…
-
- 0 replies
- 488 views
-
-
தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ... அப்துல் ரகுமான், காலமானார்.கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 80. மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அப்துல் ரகுமான், இன்று அதிகாலை பனையூரிலுள்ள தனது வீட்டில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார். 'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர…
-
- 14 replies
- 4.3k views
- 1 follower
-
-
அ.தி.மு.க-வில் தனி அணியானதா ‘நமது எம்ஜிஆர்’? அதிமுகவில் எந்த அணிக்கு உரிமை உள்ளது எனச் சட்டரீதியாக வழக்கு நடந்துவரும்நிலையில், அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளிதழ், திடீர்ப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரு வேறு அணிகளாக எதிரெதிர்த் திசைகளில் பயணித்தாலும், மத்திய பாஜக அரசை ஆதரிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கின்றன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருகைதருமாறு பிரதமர் மோடியை இரண்டு அணிகளின் தலைவர்களான - பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் டெல்லிக்குச் சென்று நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தனர். குறிப்பாக, மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் போன்ற ச…
-
- 0 replies
- 487 views
-
-
மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி! சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் கழுகார் நம்முன் ஆஜரானபோது அவருக்காக இளநீர் வைத்திருந்தோம். ஸ்ட்ரா போட்டு மெல்ல உள்ளே இழுத்த கழுகார், ‘‘ரஜினி அரசியல் தொடர்பான அனல், இதைவிட அதிகமாக அடிக்க ஆரம்பித்துள்ளது” என்றார். இளநீரை முடிக்கும்வரை காத்திருந்தோம். ‘‘கடந்த 20 வருடங்களாக பல்வேறு அரசியல் டயலாக்குகளைத் தனது படங்களில் பேசி வந்திருக்கிறார் ரஜினி. ‘நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்’ என்பது அவரது பிரபலமான டயலாக்குகளில் ஒன்று. அவர் சொன்ன ‘வரவேண்டிய நேரம்’ வந்துவிட்டதாகவே அவரது ரசிகர்கள் இப்போது நினைக்கிறார்கள். ‘இதுவரை தலைவர் சொன்னது எல்லாம் சும்மா. யாரோ தூண்டிவி…
-
- 2 replies
- 3.1k views
-
-
இலங்கையிலிருந்து கடத்திய தங்கத்துடன் இந்தியாவில் இருவர் கைது ; பிரதான நபரைத் தேடி வலைவீச்சு ராமேஸ்வரம் அருகே இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்கத்துடன் இருவரை கைதுசெய்துள்ள இந்திய மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் பிரதான சந்தேக நபரைத் தேடிவருகின்றனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி ஊடாக தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த இரண்டுநாட்களாக சுங்கத்துறை, மத்திய உளவுத்துறையினர் கியூ பிரிவு கடலோரக்காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர சோதணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று…
-
- 0 replies
- 374 views
-
-
முகப்புப் பகுதி இடிந்த நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: எல்.சீனிவாசன். சென்னை சில்க்ஸ் நான்கு மாடி கட்டிடத்துக்கு அனுமதி வாங்கிவிட்டு 8 மாடி கட்டியது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் நேற்று (புதன்கிழமை) காலை 4 மணியளவில் கடையின் தரை தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டனர். ஆனால்இரண்டாம் நாளான இன்றும் (வியாழக்கிழமை) தீயை முழுவதுமாக அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அரசு சார்பில் கட்டிடத்தை இடிக்க ஐவர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆர்.ப…
-
- 4 replies
- 724 views
-
-
தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: க.ஸ்ரீபரத் தீ விபத்துக்குள்ளான தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுப் பணித்துறை நிபுணர்கள் பொறியாளர்கள் ஆலோசனையின்படி மாலை 4 மணிக்கு கட்டிடம் இடிக்கப்படுகிறது. கட்டிடத்தை இடிக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது. கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி அப்பகுதியில் 200 மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. ரூ.420 கோடி இழப்பு: சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீப்பிடித…
-
- 0 replies
- 1.5k views
-
-
டிடிவி. தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவு வியாழக்கிழமையன்று அறிவிக்கப்படும்: டெல்லி நீதிமன்றம் டிடிவி தினகரன் | கோப்புப் படம். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி நீதிமன்றம் நாளை (வியாழன்) வெளியிடுகிறது. சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி இன்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பிக்கவிருந்தார். ஆனால் ஸ்டெனோகிராபர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் உத்தரவை இன்று பூர்த்தி செய்ய முடியாமல் போனது, எனவே உத்தரவு வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது. டெல்லி போலீஸாரால் ஏப…
-
- 1 reply
- 440 views
-
-
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்?: தமிழக அரசு ஆலோசனை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை பறிமுதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயை கோர்ட்டு அபராதமாக விதித்தது. அதுபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டு அறிவுற…
-
- 1 reply
- 429 views
-
-
மேலும் 2 வழக்குகளில் திருமுருகன் காந்தி கைது! 2016ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய வழக்கில், திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் மே 21 ஆம் தேதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கடந்த 29 ஆம் தேதி, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். இந்த நில…
-
- 0 replies
- 295 views
-
-
சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் உஸ்மான் சாலை. | படம்: க.ஸ்ரீபரத் சென்னை தியாகராய நகரில் விதி மீறல் கட்டிடங்கள் மீது இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லையென்றாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. விதிமீறல் கட்டிடங்கள் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக தியாகராய நகர் பகுதி திகழ்ந்து வருகிறது. தெற்கு மற்றும் வடக்கு உஸ்மான் சாலை…
-
- 0 replies
- 438 views
-
-
‘எதிரிக்கு எதிரி; நமக்கு நண்பன்!’ - சசிகலாவின் கூட்டல் கழித்தல் கணக்கு #VikatanExclusive அ.தி.மு.க-வில், சசிகலாவின் குடும்பத்தினரை ஓரம்கட்ட முடிவுசெய்துள்ள நிலையில், 'எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்' என்ற ரீதியில் அவர்கள் குடும்பத்துக்குள் சில வாக்குறுதிகளுக்கு சசிகலா தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அணிகள் உருவாகிவருகின்றன. சசிகலா, டி.டி.வி.தினகரன் சிறைக்குச் சென்ற பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், சுமுகத் தீர்வு எட்டப்படவி…
-
- 0 replies
- 453 views
-
-
கட்டிடத்தின் உள்ளே ஏற்பட்ட தீ விபத்தால் வெளியேறும் புகை. படம்: க.ஸ்ரீபரத் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க முடியாததால், தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இ…
-
- 0 replies
- 1.9k views
-