தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா? அமைச்சர் காமராஜுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் சாட்டையடி 'நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை' என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 'அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா' என்று கண்டனம் தெரிவித்தது. எஸ்.வி.எஸ்.குமார் என்ற ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடிசெய்ததாக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவுசெய்யுமாறு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது. அதன்படி, வழக்கு உச்சநீதிமன்ற…
-
- 0 replies
- 234 views
-
-
திராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை` வ கீதாஎழுத்தாளர் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலம் என்று நாம் கூறிக்கொண்டாலும், எம்.ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதிக காலம் ஆட்சி செலுத்தியுள்ளது. திமுகவின் ஆட்சிக்காலத்தை எடுத்துக் கொண்டால் அது தொடக்கத…
-
- 0 replies
- 479 views
-
-
மிஸ்டர் கழுகு: கார்டன் சுவர்கள்... காட்டன் கவர்கள்! ‘‘‘பாகுபலி பார்ட்-2’ பார்த்தேன். ‘தமிழ்நாடு பார்ட்-2’ மாதிரி இருந்தது’’ என்றபடி அமர்ந்தார் கழுகார். சினிமா கதையையும் நாட்டு நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, செய்திகளுக்குத் தாவினார். ‘‘இரட்டை இலைக்கு விலை பேசிய வழக்கில் டெல்லி போலீஸிடம் சிக்கிய தினகரன், சென்னைக்கும் டெல்லிக்கும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்தபோது அவரது அடையாறு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மற்றபடி மூன்று நாட்களும் அவர் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில்தான் உட்கார வைக்கப் பட்டிருந்தார். சென்னை வந்த டெல்லி போலீஸிடம், தினகரன் பற்றிய பல விவரங்களை நிறையப் பேர் கொடுத்துள்ளனர். எனவே, த…
-
- 0 replies
- 817 views
-
-
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளையா? - கேரள சாமியாரிடம் 24 மணி நேரம் தீவிர விசாரணை கோடநாடு பங்களா வாயில் | கோப்புப் படம். கோடநாடு காவலாளி கொலை வழக் கில் கேரளாவைச் சேர்ந்த சாமியார் சிக்கியுள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்…
-
- 0 replies
- 266 views
-
-
தினகரனுக்கு மேலும் சிக்கல் அமலாக்க துறையும் வழக்கு பதிவு spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% புதுடில்லி:அன்னிய செலாவணி மோசடி வழக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்…
-
- 0 replies
- 236 views
-
-
'சசி' நிம்மதியை குலைத்த கோடநாடு கொலை! கோடநாடு எஸ்டேட் கொள்ளை விவகாரம் குறித்து தகவல் அறிந்ததும், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கள நிலவர தகவல்களை சொல்லக் கூட, ஆளில்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ஜெ., தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை, உறவினர்கள் சந்திக்கக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனினும், அள…
-
- 0 replies
- 297 views
-
-
அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க... முடியுமா? அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்த மனுக்கள், தேர்தல் கமிஷனின் பரிசீலனையில் உள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா, பொதுக்குழு கூடி அதிரடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான சர்ச்சை கேள்விகளுக்கு, சட்ட நிபுணர்கள் விரிவான பதிலளித்து உள்ளனர். பொதுச் செயலராக இருந்த, ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுக்குழு கூடி, சசி கலாவை பொதுச் செயலராக நியமித்தது. ஆனால், அ.தி.மு.க., சட்ட விதிகளின் படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான், பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த விதியை மாற்றவோ…
-
- 0 replies
- 397 views
-
-
மிஸா முதல் முள்ளிவாய்க்கால் வரை... கருணாநிதியின் காலக்கண்ணாடி! நான் சென்னைக்கு மாற்றலாகியிருந்த 2015-ம் ஆண்டு. அது அவரின் 92-வது பிறந்தநாள். கோபாலபுரம் வீட்டின் முன் அதிகாலையிலேயே திரளானோர் கூடியிருக்க, மஞ்சள் நிற நைந்து போன சேலையில், கையில் கசங்கிய சுருக்கு பையோடு, ஒரு முதிய பெண்மணி நின்றுகொண்டிருந்தார். அவருக்கு எப்படியும் 85 வயதிருக்கும். அவர் கண்களின் தவிப்பும், எதிர்பார்ப்பும் என்னை ஏதோ செய்ய, நெருங்கி சென்று பேசினேன். ‘நான் தூத்துக்குடியில் இருந்து வாரேன். சின்ன வயசா இருக்குறப்போ இருந்தே அவர் பேச்சை கேட்டுட்டு வாரேன். என் பொழப்புக்கு பிரச்னையில்லை. ஊருல ரோட்டோர இட்லி கடை வச்சிருக்கேன். இன்னைக்கு தலைவரோடு பிறந்தநாளில்ல. அதான் ஊருல சாம…
-
- 1 reply
- 802 views
-
-
‘அடித்துக் கொள்ள வேண்டிய நேரமா இது?!’ - வெளியாகிறதா சசிகலா அறிக்கை?! #VikatanExclusive ‘அணிகள் இணைப்பு' என்ற பெயரில், அ.தி.மு.கவில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். ' ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால், அ.தி.மு.க மூன்று துண்டுகளாக சிதறிப் போய்விட்டது. தற்போதுள்ள சூழலைக் கவனத்தில் கொண்டு, நாளை அறிக்கை வெளியிட இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றார் சசிகலா. பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் வாங்கிய கையோடு, கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் தேர்வு செய்…
-
- 0 replies
- 328 views
-
-
ஈழ தமிழர்கள் பிரச்சினை குறித்து மு.க.ஸ்டாலின் ஐ.நா.வில் உரையாற்ற உள்ளார் ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவில் ஜூன் 12ம தேதி நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் உரையாற்ற, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியான அறிக்கையில், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் இந்த ஆண்டுக்கான ஐ.நா. அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திமுகவும், டெசோ அமைப்பும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் ஐ.நா.வில் பதிவாகி அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக திமுக எ…
-
- 0 replies
- 336 views
-
-
கொடநாடு எஸ்டேட்டில் இப்போது என்ன நடக்கிறது?- நேரடி அனுபவம்! #SpotReport #VikatanExclusive மர்மங்கள் புதைந்துகிடக்கிற இரும்புக் கோட்டையாக விளங்கும் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அறைகளில் கொள்ளை அடிக்கப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருந்த சூழலில், கொடநாடு எஸ்டேட்டுக்குள் நாம் ஊடுருவினோம். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரம் கிழக்கு நோக்கிப் பயணித்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை அடைந்து விடலாம். ஆனால், அங்குள்ள பல்வேறு தடுப்பு கேட்களையும், கண்காணிப்பு காவலர்களையும் கடந்து, அந்த எஸ்டேட்டுக்கு உள்ளே செல்வது அ…
-
- 0 replies
- 452 views
-
-
“வெடிகுண்டு லாரி... அ.தி.மு.க கொடியுடன் கார்! குடவாசலில் என்ன நடந்தது?” #NewsChat 58 டு 60 வயது... அரசு ஆணை ரெடி? தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. 6,800 டாஸ்மாக் கடைகள் மூலம் வருடத்துக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துவந்தது. அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டு தற்போது 2,600 கடைகள்தான் இயங்குகின்றன. இதுதவிர, இலவசப் பொருட்களுக்கு ஆகும் செலவுகள் தனிக்கதை. இதுஒருபுறமிருக்க... மறுபுறம், தற்போது அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் கணிசமானவர்கள் விரைவில் ஓய்வுபெற இருக்கிறார்கள். அவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கவேண்டிய சலுகைகளைச் செட்டில் செய்ய அரசிடம் பணம் இல்லை. அதனால், ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 6…
-
- 0 replies
- 334 views
-
-
அதிகாரத்தை கைப்பற்றப் பயன்படுத்திய சினிமா மீது திராவிடக் கட்சிகள் செலுத்தத் தவறிய தாக்கம் - கட்டுரை தியடோர் பாஸ்கரன்திரைத்துறை ஆய்வாளர் தமிழ்நாட்டில் சினிமா-அரசியல் தொடர்பு சுதந்திரப் போராட்டத்தின் போதே ஆரம்பித்து விட்டது. படத்தின் காப்புரிமைAVMPRODUCTIONS Image captionதிரைப்படத்துறையில் திருப்புமுனை - `பராசக்தி` சினிமாவின் சகல பரிமாணங்களையும் அரசியலுக்கு முதலில் பயன்படுத்திய காங்கிரஸ் தொடங்கி வைத்த இந்த ஊடாட்டம் திராவிட இயக்க ஆட்சி காலத்தில் உச்சக்கட்டத்தை எட்டியது. கே.பி.சுந்தரம்பாள், நாகையா போன்ற பல சினிமா நடிகர்கள், காங்கிரஸுக்கு தங்களது ஆதரவைத் தந்ததுடன் …
-
- 0 replies
- 297 views
-
-
‘இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்’ - ஓ.பி.எஸ். அணியினர் உறுதி! தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை மாதத்திற்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு நாட்களாக அ.தி.மு.க. அணியில் இருந்தவர்கள் 'கருத்து' சொல்வதாக சண்டையை உருவாக்கிக் கொண்டிருந்தனர். தற்போது வரை அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இப்போதோ, இரு அணிகளின் தலைவர்களே 'இனி நாங்கள் சேரமாட்டோம்' என்பதை தங்களின் பேச்சால் உறுதிப்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 30-ம்தேதி சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, 'எங்களிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், கட்சியும்- ஆட்சியும் எங்களிடமே இருக்கிறது. யார் வந்தாலும், போனாலும் கவ…
-
- 0 replies
- 389 views
-
-
மந்திரிகளின் நாளுக்கு ஒரு பேச்சு, செயலால் கடுப்பு தனித்து செயல்பட பன்னீர் அணியினர் முடிவு சசிகலா அணி அமைச்சர்களின் பேச்சு, நாளுக்கு ஒரு விதமாக இருப்பதாலும், அதற்கு மாறாக, அவர்களின் செயல்பாடுகள் உள்ளதாலும், இணைப்பு பேச்சு நடத்துவது பிரயோஜனமாக இருக்காது என, பன்னீர் அணியினர் கருதுகின்றனர். அதனால், தனி அணியாகவே செயல்பட முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளையும் முடுக்கிவிட்டு உள்ளனர். அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இருதரப்பிலும் சிலர் ஆசைப்பட்டனர். பன்னீர் அணியினரோ, 'சசிகலா குடும்பத்தை, முழுமையாக நீக்க வேண்டும்; ஜெ., மறைவில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, நி…
-
- 0 replies
- 196 views
-
-
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை- 3 சூட்கேஸ்களில் இருந்தது என்ன?: சசிகலாவிடம் விசாரிக்க திட்டம் கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா அறையில் 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. அதில் என்ன இருந்தது தொடர்பாக சசிகலாவிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொடநாடு எஸ்டேட்டுக்குள் கடந்த 24-ந் தேதி அதிகாலை புகுந்த கும்பல் ஜெயலலிதா அறையில் இருந்த 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.இதை தடுத்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரை தாக்கி விட்டு கும்பல் தப்பி ஓடியது. தகவல் அறிந்து போலீசார்…
-
- 1 reply
- 616 views
-
-
15 நாள் நீதிமன்றக் காவல்! திகார் சிறையில் டி.டி.வி.தினகரன் அடைப்பு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி மாவட்ட நீதிமன்றம். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே 5 நாள் விசாரணை முடிந்த பின்பு இன்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவ…
-
- 1 reply
- 466 views
-
-
சசிகலா கணவர் நடராஜனுடன் திருநாவுக்கரசர் ‘திடீர்’ சந்திப்பு: காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு சசிகலா கணவர் நடராஜனுடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேதாரண்யம் வந்தார். அங்கு உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உப்பு அள்ளும் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் தஞ்சை வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிக…
-
- 0 replies
- 462 views
-
-
ரூ. 50 கோடி லஞ்சம் வழக்கு: தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கம் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனை கைது செய்த போலீசார் அவரது 5 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ…
-
- 0 replies
- 449 views
-
-
அவர் பேசக்கூடாதுனு சொல்லிவிட்டார்! கலகலத்த அமைச்சர் வேலுமணி இரு அணிகளின் பேச்சுவார்த்தை பற்றி மீடியாவில் பேசினாலே பிரச்னை அதிகமாகத்தான் ஆகிறது என்று கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதுதொடர்பாக அதிகமாக பேட்டிக்கொடுக்காதீர்கள் என்று முதலமைச்சரே சொல்லியிருக்கிறார் என்று தெரிவித்தார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இருஅணிகளின் பேச்சுவார்த்தை பற்றி மீடியாவில் பேசினாலே பிரச்னை அதிகமாகத்தான் ஆகிறது. அதிகமாக பேட்டிக்கொடுக்காதீர்கள் என்று முதலமைச்சரே சொல்லியிருக்கிறார். நேரடியாக பேசும்போதுதான் கோரிக்கைகள் வைப்பது சரியாயிருக்கும். மீடியாவில் நாங்கள் சொல்லி, அவர்கள் சொல்லி வேறுவிதமான சூழ்நிலை உ…
-
- 0 replies
- 514 views
-
-
யார்? கோடநாடு கொள்ளையில் உண்மையான...குற்றவாளிகள் யார்? அவிழாத மர்ம முடிச்சு;அவசரமாக முடித்த போலீஸ் கோடநாடு எஸ்டேட் கொலையில் தொடர்புடைய உண்மையான, 'மாஸ்டர் மைண்ட்'களை, அரசியல் நெருக்கடி காரணமாக தப்பிக்கவிட்டுள்ள போலீசார், கூலிப்படையினரை மட்டும் கணக்கில்காட்டி, வழக்கை மூட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களா அறைகளில் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா, என்பது குறித்து, புலனாய்வு ஏஜென்சிகளின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மத்திய உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளனர் நீலகிரி அ.தி.மு.க.,வினர். 'கடந்த, 23ம் தேதி நள்ளிரவு, நீலகிரி…
-
- 0 replies
- 850 views
-
-
ஓட்டம்? ஜெ., பங்களா கொள்ளை; முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்? கோடநாடுக்கு கூலிப்படையினரை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மரக்கடத்தல், 'மாபியா' கும்பலின் தலைவன், முன்கூட்டியே வெளிநாடுக்கு தப்பியோடியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்து, கோர்ட்டில் சமர்ப்பித்த சொத்து பட்டியலில், வரிசை எண், 166ல் இடம் பெற்றிருந்தது, 900 ஏக்கர் பரப்புள்ள, கோடநாடு எஸ்டேட். ஜெ., மறைவுக்கு பின், இது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த எஸ்டேட்டை விட, 99 அறைகள், 48 ஆயிரம் சதுர அடி பரப்பில், அங்கு …
-
- 0 replies
- 420 views
-
-
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 ஆண்டு போட்டியிட தடை கமிஷன் அதிரடி பரிந்துரை புதுடில்லி: 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில், 'ஓட்டு போடுவதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னமும் கிடைக்காததால், …
-
- 1 reply
- 353 views
-
-
சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் குறித்து, வருமான வரித்துறை விசாரணையை துவக்கியுள்ளது. இவரது, 'ஜாஸ்' சினிமா நிறுவனத்திற்கு, 1,000 கோடி ரூபாய் முதலீடு வந்தது பற்றியும், அவரது மலைக்க வைக்கும் அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சசிகலா, தினகரன், விவேக் என, அதிரடி நடவடிக்கை தொடர்வதால், சொத்துக்கள் பறிபோகுமோ என திவாகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட, சசிகலா சொந்தங்கள் பலரும் பீதியில் உள்ளனர். அ.தி.மு.க.,வின் தலைமை பதவி மற்றும் முதல்வர் பதவியை கைப்பற்றும் வகையில், திட்டமிட்டு, அசுர வேகத்தில் காய் நகர்த்திய சசிகலா, தினகரன் ஆகியோர், அதே வேகத்தில் சிறைக்கு சென்றனர். 'இதனால், அவர்களின் குடும்ப ஆதிக்கம், இனி கட்சிக்குள் இருக்காது' என்ற நம்…
-
- 0 replies
- 316 views
-
-
கனிமொழி முதல் விஜயபாஸ்கர் வரை... ஆள்பவர்களுக்கு வந்த சிக்கலும் ஆண்டவன் தரிசனமும்! நாட்டு மக்களின் வழக்குகளை தீர்த்துவைக்கவேண்டியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் அவர்களே வழக்குகளுக்கு ஆளாகி கோவில் கோவிலாக ஏறி இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக. அரசியல்வாதிகள் தங்களின் பிரச்னைகளுக்கென பிரத்யேக கோவில்களில் வழிபாடு செய்வதுண்டு. மறைந்த ஜெயலலிதாவுக்கு ராசியாக கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில், சைதாப்பேட்டை குறுங்காலீஸ்வரர் என பல கோவில்கள் சொல்லப்பட்டாலும் தலைமைச் செயலகத்தின் வெளியே உள்ள கோட்டை நாகாத்தம்மன் அவரது நம்பிக்கைக்குரிய கோவில். அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது அவரது வாகனம் சில நிமிடங்கள் கோவில் …
-
- 0 replies
- 535 views
-