தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு.. லயோலா கருத்து கணிப்பு!! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என லயோலா முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பு ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு என்று கருத்து கணிப்பு நடத்தியது. தற்போதுள்ள அரசியல் சூழலில் தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி இருக்கிறதாம். இந்த கருத்து கணிப்பு நடத்திய லயோலா முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், செய்தியாளர்கள் சந்திப்பில் த…
-
- 0 replies
- 634 views
-
-
மிஸ்டர் கழுகு ‘வருமான வரி ரெய்டு தகவல்களைச் சேகரிப்பதில் பிஸியாக இருக்கிறேன். செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறேன்’ எனத் திரையில் கழுகாரின் மெசேஜ் ஒளிர்ந்தது. அடுத்தடுத்த நிமிடங்களில் வரிசையாகக் கொட்டின தகவல்கள்... ஆர்.கே. நகர் தொகுதியில், 2015 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016 பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது, தேர்தல் வேலைக்காக வந்த கட்சியினர் முகாமிட்ட கல்யாண மண்டபங்கள்தான், இப்போது டி.டி.வி.தினகரன் தரப்பின் தேர்தல் முகாம்களாக உள்ளன. இப்படி, 13 கல்யாண மண்டபங்கள் செயல்படுகின்றன. ஒரு மண்டபத்தில் 500 பேர் வரை உள்ளனர். இவர்களுக்கு தினமும் கல்யாண மண்டபங்களிலேயே பிரியாணி தயாரிக்கப்படுகிறது. இதற்காக வேலூர், ஆம்பூர் போன்ற ஊர்களில் இருந்து …
-
- 0 replies
- 1.2k views
-
-
“நான் இவரிடம்தான் பணம் கொடுத்தேன்...!” : விஜயபாஸ்கர் வாக்குமூலம் நேற்று (08.04.2017) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பிறந்த நாள்! பாவம், மனுஷன் ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார். விஜயபாஸ்கரின் வீடு, ஆபீஸ்... என்று ஆரம்பித்து அவரது நண்பர்கள், உறவினர்கள், உதவியாளர்கள் ஆகியோரது வீடுகள் மற்றும் அவரது சொந்தக் கிராமத்து வீடு... என்று மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து, ரெய்டின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறி சில டாக்குமெண்டுகள் தொலைக்காட்சிகளில் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் செய்தது யார்? தொலைக்காட்சிகளில் வெளியான டாக்குமென்டுளில், 'ஆர்.கே நகர் தொகுதியில்…
-
- 0 replies
- 359 views
-
-
காசா... மாஸா... - வெல்லப்போவது யார்? ப.திருமாவேலன், படங்கள்: ஸ்ரீனிவாசுலு `தி.மு.க கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை’ என ஆர்.கே.நகர் தொகுதியைச் சொல்வார்கள். எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கைப்பற்றியபோது சென்னைத் தொகுதிகளில் இங்கு மட்டும்தான் அ.தி.மு.க வென்றது. ஐசரிவேலன் எம்.எல்.ஏ ஆனார். இங்குதான் இப்போது ஓட்டுவேட்டை நடக்கிறது. டி.டி.வி.தினகரன் கோட்டைக்குள் செல்ல, ஓட்டைப் போட்டுத் தரப்போகிறார்களா ஆர்.கே.நகர்வாசிகள் என்பதற்கான போட்டியே இந்தத் தேர்தல். லயன்ஸ் கிளப் தேர்தல்கூட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆர்.கே நகருக்கு மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நடக்கிறது. `இது நீங்கள் விரும்பாத தேர்தல்’ என, வெற்றிவேலைப் பதவி விலகவைத்துவிட்டு நின்றபோது ஜெய…
-
- 0 replies
- 543 views
-
-
பா.ஜ., மீது சசி அணி பாய்வது ஏன்? அ.தி.மு.க., சசிகலா அணிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரான சசிகலா, முதல்வராக முயற்சித்த போது, அவரை பதவியேற்க அழைக்காமல், கவர்னர் தாமதம் செய்தார். அதன் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக, சசிகலா குடும்பத்தினர் சந்தேகித்தனர். சசிகலா பதவியேற்புக்கு முன், சொத்து குவிப்பு வழக் கில், உச்ச நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்ததால், அவர் சிறை சென்றார். பின், அவர் ஆதரவாளரான பழனிசாமி முதல்வரானார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கும் படி, அ.தி.மு.க., பன்னீர…
-
- 0 replies
- 360 views
-
-
முந்தய அடுத்து சென்னை, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, தினகரன் கோஷ்டியினர் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான முக்கிய ஆவணத்தை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள னர். இதன் மூலம், தேர்தலுக்காக எவ்வளவு பணம், யாரால் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரிடம், வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், ஆட்சி அதிகாரத்தில் தொடர முடியும் என்ற கட்டாயத்தில், தினகரன் அணியினர் உள்ளனர். அதனால், வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன. பணம்…
-
- 2 replies
- 364 views
-
-
பன்னீர் அணிக்கு புது 'டிவி' ஜெயா, 'டிவி'க்கு போட்டியாக, அம்மா என்ற பெயரில், 'டிவி' துவக்கும் பணியில், பன்னீர்செல்வம் அணி மும்முமாக ஈடுபட்டு வருகிறது. ஜெயலலிதா இருந்த போது, அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையாக, 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழும், ஜெயா, 'டிவி'யும் செயல்பட்டன. அவர் மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா, பன்னீர்செல்வம் என, இரு அணிகளாக பிரிந்துள்ளது. ஜெயா, 'டிவி'யும், நாளிதழும், சசிகலா வசம் உள்ளன. இதையடுத்து, 'நாமும், 'டிவி' சேனல் துவக்க வேண்டும்' என, பன்னீர்செல்வத்திடம், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.அதனால், முன்னாள் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, 'டிவி' சேனலை விலைக்கு வாங்கி, 'அம்மா' என்ற பெயரில், 'டிவி' சேனலை துவக்குவது குறித்…
-
- 0 replies
- 305 views
-
-
ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... முடிவு யார் கையில்?! ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... நடக்காதா என்பது டெல்லியில் இன்று (08-04-17) மாலை நடைபெற உள்ள தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. மேலும், பணத்துடன் ஆர்.கே.நகரில் சிலர் பிடிபடவும் செய்தார்கள். ஆர்.கே.நகர் தேர்தலை பணமில்லாத் தேர்தலாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் இருந்தாலும் பணம் கொடுப்பதைத் தடுக்கமுடியாமல் கையைப் பிசைந்து நின்றது. வாக்காளர்களுக்குப் பணம்வரும் வழிகளை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வந்த தேர்தல் ஆணையம், தமிழக அமைச்சர்கள…
-
- 12 replies
- 1.7k views
-
-
நீதி ஜெயாவின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் உயில் இல்லாத ஜெயா வின் சொத்துக்களை எவரும் அனுபவிக்க முடியாது. உலகிலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. அங்கு நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது. இதனை இந்தியா மட்டுமல்ல முழு உலகமே அறியும். மக்களுக்கு ஏதும் பிரச்சினை வந்தால் அல்லது அரசியல் ரீதியான பிரச்சினைகள் தலைதூக்கினால் அதற்கு தீர்வுகாண நீதிமன்றத்தையே நாடுகின்றனர். அண்மையில் நெடுஞ்சாலைகள் அருகிலுள்ள டாஸ்மார்க் சாராயக் கடைகளை அகற்ற நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் அ…
-
- 2 replies
- 530 views
-
-
ஆர்.கே. நகர் யாருக்கு? - மெகா சர்வே எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ இல்லாமல் பிரதமர் அல்லது முதல்வர் பதவியில் ஒருவர் இடைத்தேர்தல்களில் களமிறங்கினால், ஒட்டுமொத்தப் பார்வையும் அந்தத் தொகுதியின் மீது குவியும். அப்படியான இடைத்தேர்தல் இல்லை ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது. ஆனாலும் இது, பல மடங்கு கவனத்தை இந்தியா முழுமைக்கும் ஈர்த்திருக்கிறது. தெருக்கள் எங்கும் கண்காணிப்புக் கேமராக்கள், அரசு வாகனங்கள் நுழையத் தடை, கூடுதல் பறக்கும் படைகள், துணை ராணுவம், தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி முதல், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வரையில் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், சிறப்புத் தேர்தல் அதிகாரி எனத் தேர்தல் கமிஷன் காட்டும் அதிரடிகள் இதுவரை நடக்காதவை. ஒரு சட்டசபை தொகுதியின் இட…
-
- 1 reply
- 953 views
-
-
‘ரெய்டு’கள் இத்தோடு நிற்காது: தென் மாநிலங்கள் மீது கவனத்தை திருப்பும் பாஜக - ஓ.பி.எஸ். அணிக்கு அரவணைப்பு; சசிகலா அணியை அலறவைப்பு விஜயபாஸ்கர் வீட்டில் முன்னால் திரண்ட கூட்டம். படம்: ம.பிரபு உத்தரபிரதேச தேர்தலில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி தந்த தெம்பை அடுத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது தனது கவனத்தை திருப்புகிறது பாஜக. அதன் ஒரு அதிரடிதான் அமைச்சர் விஜயபாஸ் கருக்கு எதிரான ‘ரெய்டு’ நட வடிக்கை என்று கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய ஆறு மாநிலங்களில் மொத் தம் 130 எம்.பி-க்கள் உள்ளனர். இதில் இப்போது பாஜக-வுக்கு 22 எம்.பி-க்கள் மட்டுமே உள்ளனர். வரும் …
-
- 0 replies
- 233 views
-
-
தீ விபத்தில் இருந்து தப்பினார் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து ஊழியர்களின் உதவியுடன் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் ட்வீட் செய்ய, ரசிகர்கள் அவரை நலம் விசாரித்தனர். இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். மூன்றாவது மாடியில் இருந்து இறங்கியுள்ளேன். இப்போது நலமாக உள்ளேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதவிய ஊழியர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களின் அன்புக்கும் நன்றி' எனக்கூறியுள்ளார். Kamal Haasa…
-
- 0 replies
- 337 views
-
-
முந்தய அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை. அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் வீட்டிலும், 'ரெய்டு' நடத்தப்பட்டு உள்ளது. இவர்கள் பதுக்கிய பணத்தை கண்டறிய, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் …
-
- 5 replies
- 2.1k views
-
-
தன்னைப் பற்றி ஜெயலலிதா சொன்னவை... தற்போது அவருக்கு நடப்பவை..! தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அரிதாக வழங்கிய சில நேர்காணல்களில் தன்னைப் பற்றிப் பகிர்ந்திருந்த வார்த்தைகளோடு, இன்றைய அரசியல் சூழல் காட்சிகளைப் பொருத்திய இந்தப் புகைப்படத் தொகுப்பு... வருத்தம், அதிர்ச்சி, ஆதங்கம், ரௌத்திரம் கடத்தக்கூடியது. ஓர் ஆளுமையின் இறப்புக்குப் பின்னான இந்தக் காட்சிகள், வாழ்வின் நிலையாமையை உணர்த்துபவையும்கூட! 1. ''ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவது!" - ஜெ. ஜெயலலிதா (1999, சிமி கேர்வலின் 'ரான்டவு (rendezvous)' தொலைக்காட்சி நிகழ்ச்சி) உங்கள் பிணத்துக…
-
- 0 replies
- 307 views
-
-
அண்ணா சந்தித்த முதல் தேர்தலும்... அண்ணா வழி வந்தவர்களின் ஆர்.கே.நகர் தேர்தலும்! 2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, தேர்தலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தினார் அழகிரி. இதைச் சமாளிக்க முடியாமல் கதறின மற்ற கட்சிகள். இடைத்தேர்தல்கள் என்பது வெறும் தேர்தலாக இல்லாமல் திருவிழாக்களாக பார்க்கப்பட்டது திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின்னர்தான். தி.மு.க.வின் இந்த வியூகத்தால் அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களை புறக்கணித்தன எதிர்க்கட்சிகள். வேறு வாய்ப்பே இல்லாமல், ஆளுங்கட்சித் தரப்பே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒரு இடைத்தேர்தலுக்கு இத்தனை பணத்தை வாரி இறைப்பார்களா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி, 'திருமங்கலம் ஃபார்முலா' என இடைத்தேர்தலுக்கு புதிய …
-
- 0 replies
- 549 views
-
-
ஆர்.கே நகரில் ‘சாமி கும்பிட்டாச்சா’னு கேட்டா என்ன அர்த்தம் தெரியுமா? ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 12-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டி.டி.வி. தினகரன், மருது கணேஷ், மதுசூதனன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைத்துள்ளது. ஆர். கே. நகருக்கு விசிட் செய்த போது, 'ஓட்டுப் போடுறதுக்கு காசு வாங்குறாங்களே' என புலம்பும் மக்களை பார்க்க முடிந்தது. 'சிலர் பணத்தை வாங்கினாலும் என் விருப்பப்படியே வாக்களிப்பேன் ' என்கின்றனர். 'கிடைக்கும் பணத்தை ஏன் விடணும்' என்பது பலரது கருத்து. புதிதாக யார் தலை தெறிந்தாலும்... …
-
- 0 replies
- 400 views
-
-
"தில்லாலங்கடி தினகரன்..?” தினகரன் வழக்குகள் குறித்த முழுமையான ஆவணங்கள் வெளியீடு! ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 -ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 'தில்லாங்கடி டி.டி.வி.தினகரன் தான், ஆர் கே நகர் வேட்பாளரா ?' என்ற கையேடு ஒன்றை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 'ஹாவாலா தினகரன்தான் ஆர். கே. நகர் தொகுதியின் வேட்பாளரா ?'என்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இப்போது, சட்டப்பஞ்சாயத்து இயக்கமும் தினகரனின் முறைகேடுகள் குறித்து கையேடு வெளியிட்டிருப்பது மேலும் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதுவரை தினகரன் இழுத்தடித்து வந்த வழக்குகள் மற்றும் அந்நியச்செலவாணி மோசடி…
-
- 0 replies
- 603 views
-
-
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை! மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், வருமான வரித்துறை சோதனை தமிழகத்துக்கு ஏற்பட்ட தனிகுனிவு என்றார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் வேட்பாளர் டி…
-
- 6 replies
- 1.3k views
-
-
கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் - ஆர்.கே.நகரில் பதற்றம்! ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இப்போதுதான், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இடைத்தேர்தலுக்கே உரித்தான கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் போன்றவை அரங்கேறியுள்ளன. ஆர்.கே.நகர் நேதாஜி நகர் ஏரியா-வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பகுதியில் தான் ஏப்ரல் 6-ம் தேதியான நேற்று, ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனும் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தனர். அதனால் இரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது பலத்தை காட்ட ஆட்களை திரட்டி வைத்து இருந்தனர். ஒரு பிரசார வேனில் ஜெயலலிதா பேச்சுகள் ஒளிப…
-
- 0 replies
- 578 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணம் பட்டுவாடா கட்டுக்கடங்காமல் போனதால், கிடுக்கிப்பிடி போடும் விதமாக, அதிரடிக்கு பெயர் போன, விக்ரம் பத்ராவை, சிறப்பு தேர்தல் அதிகாரியாக, தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதன் மூலம், பட்டுவாடா விவகாரத்தில், மவுனம் சாதித்த, லக்கானி ஓரங்கட்டப்பட்டு உள்ளார். அத்துடன், தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 70 நுண் பார்வையாளர் களும், ஆர்.கே.நகரில் வலம் வரத் துவங்கி உள்ளனர். சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 12ம் தேதி நடக்கிறது. அங்கு, 62 பேர் போட்டியிட் டாலும், அ.தி.மு.க., - பன்னீர் அணி, சசிகலா அணி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கையும் களவுமாக சசிகலா அணி வேட்பாளர் தினகர…
-
- 0 replies
- 410 views
-
-
தினகரன் மீதான 'பெரா' வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு சென்னை:அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் மீதான, அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. வெளிநாட்டில் பணம் 'டிபாசிட்' விவகாரத்தில், தினகரன் மீது, அன்னிய செலாவணி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத் தில், விசாரணை யில் இருந்தன.இரண்டு வழக்குகளில் இருந்தும், தினகரனை விடுவித்து, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதி…
-
- 0 replies
- 381 views
-
-
கணக்கு எடு... காசு கொடு... ‘மிஷன் 100 கோடி’ தொப்பிக்காரரு வர்றாருடோய்! மேஜிக் கலைஞர்கள் அழகான தொப்பி வைத்திருப்பார்கள். அதிலிருந்து எது எதையோ எடுத்துக் காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். இடைத் தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில், டி.டி.வி.தினகரன் ஆட்களின் தொப்பியிலிருந்து பணம் மட்டுமில்லை... இன்னும் எது எதுவோ வந்து கொட்டுகின்றன. தொகுதி மக்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். எந்த மாநிலத்தையும்விட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. இடைத்தேர்தலும் பணப்பட்டுவாடா வும் இங்கு ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஏற்கெனவே பின்பற்றும் டெக்னிக்குகள் மட்டுமின்றி, ஜெயலலிதா இறந்துவிட்டதா…
-
- 0 replies
- 456 views
-
-
ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை வைத்து ஓ.பி.எஸ் அணியினர் நூதன பிரசாரம்! ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ் அணி சார்பில் திறந்த நிலை வாகனம் மூலம் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அவரது வாகனத்தின் முன்பு, ஜெயலலிதா இறந்த பின்னர் ராஜாஜி ஹாலில் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது போலவே, ஒரு மாதிரி சவப்பெட்டியை பொருத்தி அதில் ஜெயலலிதா பொம்மையை செய்து வைத்து, அவர் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கெனவே, ஓ.பி.எஸ் அணியினர் 'ஜெய…
-
- 3 replies
- 1.4k views
-
-
பன்னீர்செல்வம் அணியின் 5 வேன்கள் பறிமுதல்! ஆர்.கே.நகரில் போலீஸ் அதிரடி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக ஐந்து வேன்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சொந்தமான வேன்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க இரண்டாக பிரிந்து போட்டியிடுகிறது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மேலும் தி.மு.க சார்பில் மருதுகணேஷும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களாக, ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வரு…
-
- 0 replies
- 419 views
-
-
'குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் #VikatanExclusive மதுபானக் கடைகளின் இழப்பை ஈடுசெய்வதற்காக, நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு எதிராக இன்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறது பா.ம.க. இன்று மதியம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் பா.ம.க பாலு. 'குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத்தான் மாநில அரசு விரும்புகிறது' என வேதனை தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்…
-
- 1 reply
- 463 views
- 1 follower
-