Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை வைத்து ஓ.பி.எஸ் அணியினர் நூதன பிரசாரம்! ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ் அணி சார்பில் திறந்த நிலை வாகனம் மூலம் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அவரது வாகனத்தின் முன்பு, ஜெயலலிதா இறந்த பின்னர் ராஜாஜி ஹாலில் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது போலவே, ஒரு மாதிரி சவப்பெட்டியை பொருத்தி அதில் ஜெயலலிதா பொம்மையை செய்து வைத்து, அவர் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கெனவே, ஓ.பி.எஸ் அணியினர் 'ஜெய…

  2. அண்ணா சந்தித்த முதல் தேர்தலும்... அண்ணா வழி வந்தவர்களின் ஆர்.கே.நகர் தேர்தலும்! 2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, தேர்தலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தினார் அழகிரி. இதைச் சமாளிக்க முடியாமல் கதறின மற்ற கட்சிகள். இடைத்தேர்தல்கள் என்பது வெறும் தேர்தலாக இல்லாமல் திருவிழாக்களாக பார்க்கப்பட்டது திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின்னர்தான். தி.மு.க.வின் இந்த வியூகத்தால் அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களை புறக்கணித்தன எதிர்க்கட்சிகள். வேறு வாய்ப்பே இல்லாமல், ஆளுங்கட்சித் தரப்பே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒரு இடைத்தேர்தலுக்கு இத்தனை பணத்தை வாரி இறைப்பார்களா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி, 'திருமங்கலம் ஃபார்முலா' என இடைத்தேர்தலுக்கு புதிய …

  3. ஆர்.கே நகரில் ‘சாமி கும்பிட்டாச்சா’னு கேட்டா என்ன அர்த்தம் தெரியுமா? ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 12-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டி.டி.வி. தினகரன், மருது கணேஷ், மதுசூதனன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைத்துள்ளது. ஆர். கே. நகருக்கு விசிட் செய்த போது, 'ஓட்டுப் போடுறதுக்கு காசு வாங்குறாங்களே' என புலம்பும் மக்களை பார்க்க முடிந்தது. 'சிலர் பணத்தை வாங்கினாலும் என் விருப்பப்படியே வாக்களிப்பேன் ' என்கின்றனர். 'கிடைக்கும் பணத்தை ஏன் விடணும்' என்பது பலரது கருத்து. புதிதாக யார் தலை தெறிந்தாலும்... …

  4. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை! மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், வருமான வரித்துறை சோதனை தமிழகத்துக்கு ஏற்பட்ட தனிகுனிவு என்றார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் வேட்பாளர் டி…

  5. "தில்லாலங்கடி தினகரன்..?” தினகரன் வழக்குகள் குறித்த முழுமையான ஆவணங்கள் வெளியீடு! ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 -ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 'தில்லாங்கடி டி.டி.வி.தினகரன் தான், ஆர் கே நகர் வேட்பாளரா ?' என்ற கையேடு ஒன்றை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 'ஹாவாலா தினகரன்தான் ஆர். கே. நகர் தொகுதியின் வேட்பாளரா ?'என்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இப்போது, சட்டப்பஞ்சாயத்து இயக்கமும் தினகரனின் முறைகேடுகள் குறித்து கையேடு வெளியிட்டிருப்பது மேலும் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதுவரை தினகரன் இழுத்தடித்து வந்த வழக்குகள் மற்றும் அந்நியச்செலவாணி மோசடி…

  6. கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் - ஆர்.கே.நகரில் பதற்றம்! ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இப்போதுதான், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இடைத்தேர்தலுக்கே உரித்தான கல்வீச்சு, மண்டை உடைப்பு, சாலை மறியல் போன்றவை அரங்கேறியுள்ளன. ஆர்.கே.நகர் நேதாஜி நகர் ஏரியா-வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பகுதியில் தான் ஏப்ரல் 6-ம் தேதியான நேற்று, ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனும் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தனர். அதனால் இரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது பலத்தை காட்ட ஆட்களை திரட்டி வைத்து இருந்தனர். ஒரு பிரசார வேனில் ஜெயலலிதா பேச்சுகள் ஒளிப…

  7. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணம் பட்டுவாடா கட்டுக்கடங்காமல் போனதால், கிடுக்கிப்பிடி போடும் விதமாக, அதிரடிக்கு பெயர் போன, விக்ரம் பத்ராவை, சிறப்பு தேர்தல் அதிகாரியாக, தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதன் மூலம், பட்டுவாடா விவகாரத்தில், மவுனம் சாதித்த, லக்கானி ஓரங்கட்டப்பட்டு உள்ளார். அத்துடன், தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 70 நுண் பார்வையாளர் களும், ஆர்.கே.நகரில் வலம் வரத் துவங்கி உள்ளனர். சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 12ம் தேதி நடக்கிறது. அங்கு, 62 பேர் போட்டியிட் டாலும், அ.தி.மு.க., - பன்னீர் அணி, சசிகலா அணி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கையும் களவுமாக சசிகலா அணி வேட்பாளர் தினகர…

  8. தினகரன் மீதான 'பெரா' வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு சென்னை:அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் மீதான, அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. வெளிநாட்டில் பணம் 'டிபாசிட்' விவகாரத்தில், தினகரன் மீது, அன்னிய செலாவணி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத் தில், விசாரணை யில் இருந்தன.இரண்டு வழக்குகளில் இருந்தும், தினகரனை விடுவித்து, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதி…

  9. கணக்கு எடு... காசு கொடு... ‘மிஷன் 100 கோடி’ தொப்பிக்காரரு வர்றாருடோய்! மேஜிக் கலைஞர்கள் அழகான தொப்பி வைத்திருப்பார்கள். அதிலிருந்து எது எதையோ எடுத்துக் காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். இடைத் தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில், டி.டி.வி.தினகரன் ஆட்களின் தொப்பியிலிருந்து பணம் மட்டுமில்லை... இன்னும் எது எதுவோ வந்து கொட்டுகின்றன. தொகுதி மக்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். எந்த மாநிலத்தையும்விட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. இடைத்தேர்தலும் பணப்பட்டுவாடா வும் இங்கு ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஏற்கெனவே பின்பற்றும் டெக்னிக்குகள் மட்டுமின்றி, ஜெயலலிதா இறந்துவிட்டதா…

  10. பன்னீர்செல்வம் அணியின் 5 வேன்கள் பறிமுதல்! ஆர்.கே.நகரில் போலீஸ் அதிரடி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக ஐந்து வேன்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சொந்தமான வேன்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க இரண்டாக பிரிந்து போட்டியிடுகிறது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மேலும் தி.மு.க சார்பில் மருதுகணேஷும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களாக, ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வரு…

  11. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தினகரன் அணியினர், நேற்று முன் தினம் இரவு துவங்கி, விடிய விடிய பணத்தை வாரி இறைத்தனர். இது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம், அரசியல் கட்சிகள் சரமாரி புகார் தெரிவித்துள்ளதால், இடைத்தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், ஏப்., 12ல் நடக்க உள்ளது. தி.மு.க.,வில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., வின் பன்னீர் அணியில், மதுசூதனன்; சசிகலா அணியில், தினகரன் உட்பட, 62 பேர் போட்டி யிடுகின்றனர். அ.தி.மு.க., இரு அணிகளாக களம் காணும் நிலையில், தினகரனுக்கு, தொகுதியில் பலத்த எதிர்ப்பு உள்ளது. ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த, தேர்தலில், தினகரன் வெற்றி பெற வேண்டிய …

  12. 'குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன் #VikatanExclusive மதுபானக் கடைகளின் இழப்பை ஈடுசெய்வதற்காக, நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு எதிராக இன்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறது பா.ம.க. இன்று மதியம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் பா.ம.க பாலு. 'குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத்தான் மாநில அரசு விரும்புகிறது' என வேதனை தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்…

  13. ஜெ.வுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம் முக்கிய தகவல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும்இ மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் செலுத்த வேண்டிய 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது குற…

  14. சசிகலா சந்திப்பில் விதிமீறல் சிறை துறை குட்டு அம்பலம் பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, பார்வையாளர்கள் விதிகளை மீறி சந்திக்க, சிறைத் துறை அனுமதித்துள்ள தகவல், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பிப்., 15ல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 'அன்று முதல், சசிகலாவை, யார் யார், எப்போது, எந்த நேரத்தில் சந்தித்து பேசினர்' என, பெங்களூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிறைத் துறை…

  15. "100 மடங்கு வேகத்துடன் போராடுவோம்".... நெடுவாசல் மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது! சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய போராட்டத்தை விட 100 மடங்கு வேகத்துடன் போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் எச்சரித்த நிலையிலும், அதைப் புறம் தள்ளும் வகையில் மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடவுள்ளது. 22 நாட்கள் மிகப் பெரிய வீரியத்துடன் நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வந்தனர். ஜல்லிக்கட்டுக்காக வீரத்துடன் போராடியது போலவே விவசாயிகள், கிராமத்தினரின் இந்தப் போராட்டமும் மிகப் பெரிய ஆதரவைப் பெற்று நடந்தது. கடைசியில் பொன். ராதாகிருஷ்ணனை வைத்து அந்தப் போராட்டத்தைக் கலைத்தது மத்திய அரசு. மத…

  16. ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா வீடியோ! #VikatanExclusive இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் களம் காணும் இத்தொகுதியில் வேட்பாளர்கள் பரபரப்பாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்கள். இந்நிலையில் அதிமுக (அம்மா ) அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் அணி நேற்றுமுதல் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யத்துவங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தந்த பகுதிகளைப்பொறுத்து வாக்காளர்களுக்கு தலா 2000 முதல் 4000 வரை பணம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்தப் பகுதிக்கென ஒதுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அதிகாலையில் வீடுவிட…

  17. இலங்கை மீனவர்கள் 7 பேர் இந்தியாவில் கைது.! இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, 5 ஆயிரம் கிலோ கிராம் மீனுடன் 7 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18734

  18. மிஸ்டர் கழுகு: ‘என்னமோ திட்டம் இருக்கு...’ ‘‘வெயிலுக்கு இதமாக தொப்பிகூட போட முடியவில்லை. ஆர்.கே. நகர் பக்கம் போனால், ஒருவித ‘எதிர்பார்ப்போடு’ நம்மைப் பார்க்கிறார்கள்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘எல்லா கெடுபிடிகளையும் மீறி, ஆர்.கே. நகரில் பணம் பாய்கிறதாமே?” என்றோம். ‘‘ஆமாம்! இடைத்தேர்தல் சோதனைகளும் கெடுபிடிகளும் இந்த அளவுக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆளும்கட்சி மிரண்டு போய்தான் இருக்கிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று படை பட்டாளங்களைக் குவித்திருந்தாலும், அவர்கள் தயங்கித் தயங்கியே வேலை செய்கிறார்கள். அவர்களிடம் வழக்கமான இடைத்தேர்தல் உற்சாகம் இல்லை. சென்னை போலீஸ் ஆணையர் கரன் சின்ஹா, தொகுதிக்கே வந்து நேரடி ஆய்வுகள்…

  19. கத்திக் குத்து, கலவரம், அதிகாலை 4 மணி! - ஆர்.கே.நகரில் படரும் ‘திடீர்’ அபாயம் #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் பிரசார செயல்பாடுகளை, அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றன தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.' அதிகாலை நான்கு மணிக்குத்தான் பண விநியோகத்தைத் தொடங்குகின்றனர் தினகரனின் ஆட்கள். நேற்று பண விநியோகத்தைத் தடுத்ததற்காக தி.மு.க மாணவர் அணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. கலவர சூழலில் இருக்கிறது ஆர்.கே.நகர்" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன…

  20. இவர்கள்தான் 'அலிபாபா 40 திருடர்கள்'!- பொன்.ராதாகிருஷ்ணன் விளாசல் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். லட்சக்கணக்கான பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக, சசிகலா அணியைச் சே…

  21. தினகரன், பன்னீர் அணியினர் சமூக வலைதளங்களில் மோதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கடும் போட்டி நிலவுவதால், சசிகலா அணியினருக்கும், பன்னீர் அணியினருக்கும் இடையே, சமூக வலைதளங்களில், மோதல் அதிகரித்துள்ளது. ஆர்.கே.நகரில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, தினகரன் அணியினர் நினைத்த னர். அதற்கு மாறாக, பன்னீர் அணியினருக்கு, ஆதரவு அதிகமாக இருப்பது, அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பன்னீர் அணி நிர்வாகிகளை, கடுமையாக விமர்சிக்க துவங்கி உள்ளனர். விழா ஒன்றில், பன்னீர் அணியைச் சேர்ந்த, முன்னாள்அமைச்சர் பாண்டியராஜன், தி.மு.க., - எம்.பி., கனிமொழ…

  22. ’என்னாது... 3 ஆயிரம் ரூபாய்தானா...!’ தினகரனுக்கு அதிர்ச்சியளித்த ஆர்.கே.நகர் ஆர்.கே.நகர்த் தொகுதி வாக்காளர்களுக்கு மூவாயிரம் ரூபாய் சசிகலா அணியினர் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. பணம் கொடுக்கச் சென்றவர்களிடம் இவ்வளவுதானா என்று சலிப்புடன் சிலர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் படுபிஸியாக உள்ளனர். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கு ஓட்டு கேட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு வாக்குறுதியோடு அன்பளிப்பும் சில வேட்பாளர்கள் தரப்பிலிருந்து அள்ளி வீசப்படுகின்றன. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் கருணாம…

  23. இரட்டை இலை முடக்கத்தில்... ரஜினிக்கு மீண்டும் துளிர்விடுகிறதா அரசியல் ஆசை...?! 'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' என்ற கோஷம் மீண்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் வலுக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் அனுபவம் என்ற வார்த்தையைத்தான் இதுவரை தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துவைத்திருக்கிறது. ஆனால் 'அரசியல் ஆசை அனுபவம்' என்ற புதிய வார்த்தையை கண்டுபிடிக்கப்பட்டது ரஜினிக்குப்பிறகுதான். 1995 ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடந்த சமயம், 'பாட்ஷா' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கிய இடம்பெற்ற இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்றைக்கு அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன். உணர்ச்சிப் பூர்வமான மனிதரான ரஜினி மேடையில் ஆர்.எம் வீ…

  24. இந்திய மீனவர்களின் கோரிக்கை: கச்சைதீவை முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை..! இந்திய மீனவர்களின் கோரிக்கையை இலங்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில், கச்சைதீவு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக மீனவ சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவ சங்க தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இன்று இடம்பெற்றுள்ள மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தின் போது பேசியுள்ள மீனவசங்க தலைவர்கள், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை …

  25. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் சதி: துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு தம்பிதுரை எம்.பி. படம்: எல். சீனிவாசன் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக ஓபிஎஸ் அணி மீது மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை புகார் கூறினார். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை தம்பிதுரை நேற்று சந்தித்து, ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அணியினர் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிப்பதற்காகவே பல சதித்திட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு கட்சியின் மூன்றில் ஒரு பகுதியினர் பிரிந்து சென்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.