தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10296 topics in this forum
-
அ.தி.மு.க.,வில் கும்மாங்குத்து: வளர்மதி - நிர்மலா லடாய் அ.தி.மு.க., சசிகலா அணியில் இருந்த பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, நேற்று பன்னீர் அணிக்கு மாறினார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை சி.ஆர். சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, நிர்மலா, 'பன்னீர்செல்வம், நமக்கு எதிரி அல்ல; அவரை நம்மோடு சேர்த்தால், நன்றாக இருக்கும்; பிரச்னை தீர்ந்து விடும்' எனக் கூறி உள்ளார். அதை கேட்ட சி.ஆர்.சரஸ்வதி, 'பன்னீர்செல்வத்தை எதிரி இல்லை என்று, எப்படி கூறலாம…
-
- 0 replies
- 582 views
-
-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுக்கு, வெறும், 30 ஆயிரம் ஓட்டுகள் தான் கிடைக்கும்' என, உளவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதால், சசிகலா அணியினர் உற்சாகம் இழந்துள்ளனர். அதனால், இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில், போட்டியில் இருந்து விலக, தினகரன் முடிவு செய்திருப்பதாக, சசி ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல், ஏப்., 12ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில் தினகரன், பன்னீர்செல்வம் அணி சார்பில், மதுசூதனன் மற்றும் ஜெ., அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மூன்று பேரும், நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல…
-
- 0 replies
- 237 views
-
-
ரஜினி சந்திப்பில் என்ன நடந்தது? - கலகலக்கிறார் கங்கைஅமரன் "நான், தேர்தலில் போட்டியிடுவதை தெரிந்த ரஜினியே என்னைப் போனில் அழைத்து தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், என்னைச் சந்திக்க அவர் இன்று மதியம் எனக்கு அழைப்புவிடுத்ததால் அங்கு சென்றேன்" என்றார் பா.ஜ.க.வேட்பாளர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், சினிமா இயக்குநர் எனப் பல பரிணாமங்களிலிருந்து திடீர் அரசியல் பிரவேசம் ஏன்? "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயமாகக் கருதுகிறேன். தேர்தல் களத்தில் போட்டியாளனாக இருப்பது என்னுடைய முதல் அனுபவம். ஆனால், வாக்காளராக இதுவரை என்னுடைய ஜனநாயகக் கடமையைச் செய்திருக்கிறேன். ஒரு வாக்காளனின் எண்ணம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும…
-
- 0 replies
- 450 views
-
-
நிர்மலா பெரியசாமி ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்! ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர், அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி - சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்டு உள்ளது. இந்நிலையில், சசிகலா அணியில் இருந்த நிர்மலா பெரியசாமி இன்று ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார். ஓ.பி.எஸ் அணியில் இணைந்த பின்னர் நிர்மலா பெரியசாமி, 'இனி தொண்டர்களை எந்தவித மனத்தடையும் இன்றி சந்திப்பேன். ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கு சந்தேகம் உள்ளது. அதை தெளிவுபடுத்த வேண்டும். உண்மையான துரோகி யார் என்பது ஆர்.கே.நகர் தேர்தலில் தெரியவரும்' என்று கூறியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அ.தி.மு.க-வில் உள்கட்சி குழப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. …
-
- 0 replies
- 309 views
-
-
அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது. சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, 'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' …
-
- 1 reply
- 370 views
-
-
'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, தமிழகத்துக்கு எப்போது எல்லாம் வருகைப்புரிந்தார் என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் நெல்லை வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ போராளியுமான பிரம்மா கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. நெல்லை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ. போராளியுமான பிரம்மா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் தொடர்பாக பல ஆர்.டி.ஐ. கேள்விகளை கேட்டுள்ளார். கடந்த 19…
-
- 0 replies
- 640 views
-
-
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுகிறார்களா 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்?! - பி.ஜே.பியின் அடுத்த அதிரடி சசிகலா அணியிலிருந்து ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆறு எம்எல்ஏ-க்கள் மாற சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களை அணி மாற்றும் வேலையில், பி.ஜே.பி தலைமைக்கு நெருக்கமான காவிவேட்டி அணிந்த மனிதர் ஈடுபட்டுவருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் அதிகார மோதல் வலுவடைந்துள்ளது. இதன்விளைவு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இருப்பினும், சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி ஆட்சியை அமைத்துவிட்டார். அவரது தலைமையிலான அமைச்சரவை, நிதிநிலை பட்ஜெட்டையும் தாக்கல்செய்துவிட்டது. மழை நின்ற பிறகும் …
-
- 0 replies
- 359 views
-
-
கன்டெய்னரில் வந்த பணம்! சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் விளக்கம் என்ன? நாட்டின் முதல் குடிமகனில் இருந்து கடைசிக் குடிமகன் வரையில், ஒரே அளவுகோலில்தான் நீதி பரிபாலனம் செய்யும் நீதிமன்றம் இயங்குகிறது. அதேவேளையில், நீதிமன்ற அவமதிப்பு என்கிற விஷயமும் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. கோர்ட் அவமதிப்பை அதிக அளவில் செய்வது, உயரிய பொறுப்பில் இருப்பவர்களே என்பதுதான் வேதனையான தகவலும்கூட.சென்னை போலீஸ் கமிஷனராக மூன்றாவது முறை பொறுப்பில் இருக்கும் ஜார்ஜ், இரண்டாவது முறையாக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தைச் செய்தது, அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகர போலீஸ…
-
- 1 reply
- 691 views
-
-
மிஸ்டர் கழுகு: திருப்புமுனை தருமா திருவண்ணாமலை பூஜை? கழுகார் உள்ளே நுழைந்ததும் சூடான சூப் கொடுத்தோம். ‘‘வரவேற்பு பலமாக இருக்கிறதே?’’ என்றபடி சிரித்தார் கழுகார். நாமும் சிரித்தோம். சூப்பை அருந்தும்போது அவருக்கு இருமல் வந்தது. ‘‘யாரோ நினைக்கிறார்கள்” என்றோம். ‘‘உமக்கு முழுக் கதையும் தெரிந்திருக்கிறது” என்று சொல்லி மீண்டும் சிரித்தார். நாம் பதில் சொல்லவில்லை. சூப்பை முழுமையாக அருந்தி முடித்தப் பிறகு, ‘‘சுவை நன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ‘‘திருவண்ணாமலையை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் இருக்கும் ஓரக்கண்டியம்மன் கோயிலுக்கு வந்து சென்ற மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டார்!” ‘‘தினகரனின் அ…
-
- 1 reply
- 854 views
-
-
இரட்டை இலையை தக்கவைக்க... டி.டி.வி. தினகரனின் ஆயுதம்! அ.தி.மு.க தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கான கெடு புதன்கிழமை முடிவடைகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இரட்டை இலையைத் தக்கவைக்க கடைசி ஆயுதமாக தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடம் தனித்தனியாகக் கடிதம் வாங்கியுள்ளார். அந்தக் கடிதங்களை எல்லாம் தொகுத்து, இத்தனை பேரின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது. தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்ற கடிதத்துடன் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் முன்னேற்பாடுகளில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஆதரவுக் கடிதங்களை தினகரன் தரப்பில் 2…
-
- 0 replies
- 482 views
-
-
தனிக்கட்சி தொடங்குகிறார் தீபாவின் கணவர் மாதவன்! தீபாவின் கணவர் மாதவன் புதியதாக கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் மாதவன். அப்போது அவர், 'புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன். தீபா பேரவை நடத்துகிறார். நான் கட்சி நடத்த இருக்கிறேன். அது பற்றி விரைவில் அறிவிப்பேன். நான் கட்சி தொடங்க இருப்பது பற்றி தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்துள்ளன. எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும்போது மக்களிடம் அறிவிப்பேன். தீபா தன்னிச்சையாக செயல்படவில்லை. …
-
- 7 replies
- 1.3k views
-
-
ஓ.பி.எஸ்., அணிக்கு ஓடிவிடுவேன்!: சசிகலா தரப்பு எம்.எல்.ஏ., மிரட்டல் கோவை:தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ள கோவை, சூலுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கனகராஜ், 'அணி மாறி விடுவேன்' என, முதல்வருக்கு எதிராக அதிரடி பேட்டி அளித்துள்ளார். கோவை, செட்டிபாளையம் அடுத்துள்ள பெரியகுயிலி கிராமத்தில், ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. ஜல்லி கிரஷர்கள் அதிகளவில் இயங்கும் இப்பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 40 - 50 வயதுடைய கூலி தொழிலாளி கள் இருவர் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். கடந்த, இரு நாட்களுக்கு முன், பாறைகளை உடைக்க வெடி வைப்பதற்காக, இயந்திரம் மூலம் துளையிட்டனர்…
-
- 0 replies
- 504 views
-
-
அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி தொடர்பாக, தேர்தல் கமிஷன் நாளை மறுநாள், முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது. 'தேர்தல் கமிஷனின் முடிவு, சசிகலாவின் பதவியை பறிக்கும்; எங்களுக்கு சாதகமாக இருக்கும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி உற்சாகம் அடைந்துள்ளது. இந்த முடிவை எதிர்பார்த்துள்ள, சசிகலா அணியில் தற்போது உள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பலர், அணி மாற தயாராகி வருகின்றனர். 'அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என, அறிவிக்கக் கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். இதற்கு விளக்கம் கோரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியது. சசிகலா சார்…
-
- 0 replies
- 341 views
-
-
அரசு அலுவலகங்களில் ஜெ., படத்தை அகற்றாதது ஏன்? பதில் அளிக்க தலைமை செயலர் மறுப்பு 'அரசு அலுவலகங்களில், முன்னாள் முதல்வர் ஜெ., படம் ஏன் அகற்றப்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு, தலைமை செயலர் பதில் அளிக்க மறுத்து விட்டார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, ரவி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்கள் அளிக்கக் கோரி, தலைமைச் செயலருக்கு விண்ணப்பித்தார். அவர் கேட்ட கேள்வி எதற்கும், பதில் தரப்படவில்லை. கேள்விகள் என்ன? * முதல்வர் பழனிசாமி, பிப்., 20ல், ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இவை, எந்த நிதியில…
-
- 0 replies
- 275 views
-
-
"காசு பணம் துட்டு மணி மணி" படு பயங்கரமாய் கலாய்க்கும் நாளிதழ் (வீடியோ) "காசு பணம் துட்டு மணி மணி" என பிரபல நாளிதழ் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. சசிகலா அணியினரை படு பயங்கரமாய் கலாய்த்துள்ளார்கள். காட்சிகள் மாறுவதற்கு காரணம் மணி மணி என்பதை உணர்த்தும் இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=89338
-
- 0 replies
- 594 views
-
-
கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்! கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் உடல்நலக்குறைவால், உயிரிழந்துள்ளார். லண்டனில், தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென்று கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 82. இதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம்தான் சந்திரஹாசனின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்த இரண்டு மாதங்களில் சந்திரஹாசனும் உயிரிழந்துள்ளார். http://www.vikatan.com/n…
-
- 2 replies
- 474 views
-
-
காஞ்சிபுரம், மார்ச் 17 (டி.என்.எஸ்) பொறியியல் மாணவரை தாக்கிய வழக்கில், மேல்மருவத்தூர் அடிகளாரின் மகனும், கல்லூரி தாளாருமான செந்தில் குமார் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார் கல்லூரி தாளாளராக உள்ளார். இவர் தன் கல்லூரியில் படிக்கும் மாணவன் விஜய் என்பவரை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் சிகிச்சைகாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் செந்தில்குமார் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம…
-
- 4 replies
- 723 views
-
-
கேரளா தீவிரம்; தமிழகம் அலட்சியம்! மழைநீரை சேகரிக்கவும், நீர்நிலைகளை பராமரிக்கவும் கேரளா மாநிலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகம் அலட்சியம் காட்டி வருகிறது.
-
- 0 replies
- 381 views
-
-
நான்கு கட்சிகள் சேர்ந்து உருவான மக்கள் நலக் கூட்டணி உடைந்தது. ஓராண்டே ஒன்றாக இருந்த நிலையில், பல விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டமாரானது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது என, அடம் பிடித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி, தனித்து வேட்பாளரை அறிவித்ததால், இந்த நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின; ஒருங்கிணைப் பாளராக, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ செயல் பட்டார்.இக்கூட்டணியில், தே.மு.தி.க., - த.மா.கா., ஆகிய கட்சிகள், பின்னர் இணைந்தன. ஆனால், தேர்தலில் இக்கூட்டணி படுதோல…
-
- 0 replies
- 256 views
-
-
சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி! சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளம் வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம்காட்டியவர் அஸ்வின். 2003ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை ரேஸ்களில் அஸ்வின் காட்டிய திறமை அபாரமானது. தொடர்ந்து சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியவர். அவருடைய மறைவு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம்:…
-
- 2 replies
- 954 views
-
-
பன்னீர் அணியினர் சுறுசுறுப்பு ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா அக்காள் மகன் தினகரனை தோற்கடிக்கும் முனைப்பு டன், பன்னீர்செல்வம் அணியினர், ஓட்டுச் சாவடிக்கு, 14 பேர் என, 'பூத் கமிட்டி' அமைத்து, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர். ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரு அணியினரும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், களம் இறங்குகின்றனர். சசிகலா அணி சார்பில், தினகரன்; பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். இருவரும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, தே…
-
- 0 replies
- 358 views
-
-
தினகரனுக்கு கோர்ட் 'கிடுக்கிப்பிடி': அன்னிய செலாவணி மோசடி வழக்கு சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜரான தினகரனின் கோரிக்கையை, மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்ததால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியரான, சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதம் அடிப்படையில், சென்னையில், பெயரளவில் செயல்பட்டு வந்த, பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில், 2.20 கோடி ரூபாயை எடுத்து, கோடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் தினகரன் பயன்படுத்தினர். அத்துடன், 'ஜெஜெ டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதி களை ஏற்படுத்து…
-
- 0 replies
- 298 views
-
-
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், பணம் பட்டுவாடாவை,தினகரன் கோஷ்டி இப்போதே துவங்கி விட்டது. முதற்கட்டமாக, 3,000 ரூபாய்; அடுத்த கட்டத்துக்கு, 2,000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. பட்டுவாடா செய்தவர்களை, பன்னீர் அணியினர் விரட்டிப் பிடிக்க முயன்ற போது, அவர்கள் தப்பியோடினர். மனு தாக்கல் துவங்கிய மறுநாளே, பட்டுவாடா துவங்கியது, தொகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சசிகலா அணி சார்பில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் களம் இறங்கி உள்ளார். அவருக்கு எதிராக, பன்னீர் அணி சார்பில், அ.தி.மு.க., அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் போட்டியிடுகிறார். தி.மு.க., சார்பில், பகுதிச்…
-
- 0 replies
- 207 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்: மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் ஓ. பன்னீர்செலவ்வம்(இடது), வி.கே.சசிகலா( வலது). | கோப்புப் படம். அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பினார். …
-
- 2 replies
- 352 views
-
-
தேனியில் ஓ.பி.எஸ். கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தேனி: தேனி அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அருகே உள்ள கரும்பு காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர். மேலும் இந்த தாக்குதலில் ஓ.பி.எஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வே…
-
- 0 replies
- 349 views
-