Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நடராஜன் குறித்து சேதுராமன் பகீர் தகவல்! உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் அதிர்ச்சி இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள்தான் சிஎம்; எங்களுக்கு ஒரு தலையணை போதும் என்று நடராஜன் தனது நெருக்கமானவர்களிடம் பேசியதாக அகில இந்திய முவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். உண்ணாவிரத மேடையில் இவ்வாறு அவர் பேசியது பன்னீர்செல்வத்தை அதிர்ச்சியடைய வைத்தது. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரத மேடையில்…

  2. சங்கர மடத்துக்கு ரகசியமாக வந்த டி.டி.வி.தினகரன் டி.டி.வி.தினகரன் அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தார். கட்சியினர் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக திடீரென வந்த அவர் 5 நிமிடம் மட்டுமே அங்கிருந்துவிட்டு திரும்பிச் சென்றார். சங்கரமடம் வந்த டி.டி.வி.தின கரனின் பயணம் மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டிருந்தது. கட்சியினருக்கோ, செய்தியாளர் களுக்கோ தகவல் தெரிவிக்கப் படவில்லை. இதுகுறித்து அறிந்த செய்தி யாளர்கள், போலீஸார் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: தினகரன் சங்கர மடம் வருவது எங்களுக்கே கடைசி நேரத்தில்தான் தெரிந்தது. அவர் மடத்துக்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தார். …

  3. 'ஜூன் மாதம் முதல் ஆபரேஷன் தமிழ்நாடு!’ - அ.தி.மு.க-வை அலறவிடும் மோடி வியூகம்! உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில், இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டை நோக்கி பா.ஜ.க-வின் கவனம் திரும்பும். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலைச் சற்று தள்ளி வைத்திருந்தார் பிரதமர். இனி, வரப்போகும் நாட்கள் அ.தி.மு.க-வுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதான கட்சியின் எம்பி அவர். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவரை நேற்று சந்தித்தார். 'தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க அணியில் சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏத…

  4. திரிசங்கு நிலையில் அ.தி.மு.க... திணறும் தினகரன்! “இருபத்தி ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் இல்லாமலேயே அதிகாரம் செலுத்த முடிந்த நம்மால், அதிகாரம் நேரடியாக கைக்கு வந்தபின் அதை முழுமையாக செயல்படுத்த முடியாத துரதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளதே” என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறது ஒட்டுமொத்த சசிகலா உறவினர்கள். இதனால் திக்..திக்..என்ற நிலையில் தினகரன் இருந்து வருகிறார். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட அ.தி.மு.க என்ற இயக்கத்தையும், நான்கரை ஆண்டுகால தமிழகத்தின் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தையும் சசிகலா குடும்பம் இனி முழுமையாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துமா, செலுத்தாதா? என்ற குழப்பத்துக்கு இன்னும் சில தினங்களில் விடை கிடைத்துவிடப் போகிறது. ஆம்! ஐந்து மாநில சட்டமன்றத் த…

  5. எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?' - ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சீறிய முதல்வர் பழனிசாமி! கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த சசிகலா அணி எம்எல்ஏ-க்களிடம் வாக்குமூலம் பெற்றதற்குப் பரிசாக, வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பதவிகள் வழங்கப்படாமல், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உள்கட்சிp பூசல் காரணமாக பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. சசிகலா அணியில் இருந்த எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட் டிருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த எம்எல்ஏ-க்களும், எம்பி-க்…

  6. மிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ-க்கள் காட்டில் அடைமழை ஆரம்பம்! கழுகார் வரும்போதே ஜெயலலிதா பற்றிய மருத்துவ அறிக்கைகளையும் கொண்டுவந்திருந்தார். ‘‘மறுபடி மறுபடி அறிக்கைகள் வெளியிட்டு மாட்டிக் கொள்கிறார்கள். இந்தச் சுழலில் இருந்து இந்த ஆட்சியும் அ.தி.மு.க-வும் அப்போலோவும் விடுபடவே முடியாது” என்றபடியே செய்திகளைக் கொட்டினார். ‘‘தமிழக கவர்னர் நியமனத்தில் மத்திய அரசு இப்போதுதான் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதாம். கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு மூத்த பி.ஜே.பி நிர்வாகிகளின் பெயர் பட்டியல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டேபிளில் பல மாதங்களாகத் தூங்குகிறது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாகத்தான், அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்களாம். இடையில், உத்தரப்பிரதேச மாநில சட…

  7. சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் நில மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடி புகார்கள் உள்ளது. குறிப்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் 6க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில், டெல்லியில் கட்டுமான நிறுவன தொழிலதிபரான திலிப் என்பவரிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ரூ.10 கோடியை பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கி உள்ளார். ஆனால் சொன்னபடி தொழிலதிபருக்கு கடன் பெற்று தரவில்லை ஆனால் கடன் பெற்று தருவதற்கான கமிஷனை மட்டும் பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். இதுகுறித்து திலிப் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். …

  8. ஜெ., மரணம் : 14 கேள்விகளுக்கு பதில் இல்லை! : முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி ''அப்பல்லோ அளித்த முதல் தகவல் அறிக்கைக்கும், தற்போது வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு, 14 கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., நியமன பொதுச் செயலர் விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ஜெ.,வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகும் நிலையில், தினகரன் மன்னிப்பு கடிதத்தை யார் ஏற்றது? தேர்தல் நடத்தி, புதிய பொதுச் செயலர் நியமிக்கப்படும் வரை, கட்சியை வழிநடத்தும் பொறுப்பு, கட்ச…

  9. இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது! தமிழக மீனவரை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றதையடுத்து, இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையிலிருந்து 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 10 மீனவர்களை, இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் காரைக்கால் கொண்டு செல்லப்படுகின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/82991-ten-srilankan-fishermen-arrested.html

  10. இன்றைய உண்ணாவிரதத்தின் மூலமாக, அ.தி.மு.க.,விலும், பொதுமக்களிடத்திலும், தங்களுக்கு உள்ள பலத்தை காட்டும் முயற்சியில், பன்னீர் அணியினர் தீவிரமாக உள்ளனர். அதேநேரத்தில், கூட்டம் அதிகம் குவியாமல் தடுக்க, சசிகலா தரப்பினர், எல்லா வகையிலும் சதி வேலைகள் செய்துள்ளனர். உண்ணா விரதத்தை தொடர்ந்து, லோக்சபாவில், ஜெ., மரண சர்ச்சையை கிளப்ப, பன்னீர் ஆதரவு, எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கிஉள்ளார். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர் கள் மற்றும் பொதுமக்களிடம், ஆதரவு கிடைத் துள்ளது. சசிகலா குடும…

  11. இன்றைய தமிழ்நாடு போராட்ட நிலவரங்கள் - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - ஒகேனக்கல். விவசாயிகள் போராட்டம் - ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்கள் - தாமிரபரணியை காக்க வாருங்கள் இளைஞர்களே... அழைக்கிறார் நல்லக்கண்ணு - வாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள் அடுத்து வர இருப்பவை.. - நீட் தேர்வு பிரச்சனை. - ரேசன் பொருட்கள் வழங்கபடாமை .. - காவிரி நீர் சிக்கல் - விவசாயிகள் தற்கொலை சிக்கல் - பவானி அணை பிரச்சனை .. - நியூட்ரினோ சிக்கல் . - பாலாறு பிரச்சனை .. - மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கு மேல் ATM கார்டு பயன்படுத்தினால் - அபராத…

  12. 'மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா' - எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'செப்டம்பர் 22-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தார். இரவு 10 மணிக்கு அவர் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டார். நீர்சத்து , நீரிழிவு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அப்போலோவில் காவிரி பிரச்னை பற்றி விவாதித்தார். அவரைக் காப்பாற்ற அனைத்து மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவரது இதயம் செயலிழந்தது குறித்த…

  13. சசிகலாவுக்கு எதிராக விசாரணைக் கமிஷன்! - எடப்பாடி பழனிசாமியை எகிற வைக்கும் கடிதம் #VikatanExclusive முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரத்தில், 'சசிகலா மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக விசாரணைக் கமிஷன் அமையுங்கள்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ஆர்.கே.நகரில் நலத்திட்ட பணிகள், மாவட்டங்களில் சுற்றுப் பயணம் என இடைத்தேர்தல் பிளஸ் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'அம்மாவுக்குக் கிடைத்த வரவேற்பு எங்களுக்கும் கிடைக்கும்' என்ற நம்பிக்கையி…

  14. பன்னீர் அணியை பலமிழக்க செய்ய கோடநாடு அதிகார மையம் தீவிரம்! ஊட்டி, : பதவி, பண ஆசை காண்பித்து, பன்னீர்செல்வம் அணியை பலமிழக்கச் செய்யும் முயற்சியில், கோடநாடு அதிகார மையம் தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி, அ.தி.மு.க.,வில், சசிகலாவின் ஆலோசனையில், கோடநாடு எஸ்டேட் மேலாளர், அதிகார மையமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட, இவரின் ஆலோசனை படியே, தேர்தல் பணிகள் நடந்தன.சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், கோடநாடு அதிகார மையம் பலமிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலாவின் உறவினர் தினகரன், கோடநாடு எஸ்டேட் அதிகார மையத்தை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். வ…

  15. அரசியலுக்கு வருகிறார்..... நடிகர் கமல்? ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை!நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தமது கருத்துகளை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கமல்ஹாசனின் ரசிகர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதற்கும் கண்டன…

    • 2 replies
    • 451 views
  16. 'சசி அண்ட் கோ'வின் ஆட்டம் ஆரம்பம் பழனிசாமி பெயரில் சொத்து அபகரிப்பு திருப்பூர்: 'முதல்வர் பழனிசாமியின் உறவினர் என கூறி மிரட்டி, பிரச்னைக்குரிய சொத்தை அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கேயத்தைச் சேர்ந்த இளம்பெண், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வட்டமலையைச் சேர்ந்தவர் விதுலா; சட்டக் கல்லுாரி மாணவி. தன் தந்தையின் பெயரில் உள்ள, 'பேராசிரியர் சுந்தரம் அறக்கட்டளை'யின் செயலராக உள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலமும், அதில், 1 ஏக்கரில் உள்ள கட்டடமும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்…

  17. “ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்டபோது...” - மர்மம் உடைக்க வருகிறது சி.பி.ஐ ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சில இருண்ட பக்கங்கள் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இருக்கும் 12 எம்.பி-க்கள் கடந்த 27-ம் தேதி அன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ‘குற்றவாளியை நெருங…

  18. ''மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியிருக்கேன்...பழிவாங்கவும் பட்டிருக்கேன்''! - சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், சர்ச்சைகள் இன்றி அமைதியுடனும் அடக்கத்துடனும் அரசு உயர் பொறுப்புகளில் பணியாற்றி, சமீபத்தில் ஓய்வுபெற்றவர் சாந்த ஷீலா நாயர் ஐஏஎஸ். மதிக்கத்தக்க பெண்மணியாக அரசுப் பொறுப்புக்கு வர நினைப்பவர்கள் பலருக்கும் இவர் முன்னுதாரணம். தன் 43 ஆண்டுகால ஐஏஎஸ் பணி அனுபவத்தையும், தான் எதிர்கொண்ட பல சவாலான தருணங்களையும் கனிவான குரலில் பணிவாகப் பேசுகிறார். "நான் பிறந்தது கேரளாவின் திருவனந்தபுரத்தில். அப்பா மிலிட்டரியில இருந்ததால, இந்தியாவின் பல ஊர்களில் படிச்சு வளர்ந்தேன். ஆனா, அதிகமா வசிச்சது சென்னையிலதான். இங்க குயின் மேரிஸ் கல்லூரியி…

  19. ‘என்னை அழிக்க நீங்களே போதும்!’ - குடும்பத்தில் கொந்தளித்த தீபா தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு வரும் அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பேரவையின் நடவடிக்கைகளும் தீபா குடும்பத்தினரின் தலையீடுகளும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 'எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும், ஜெயலலிதாவைப் போல மீண்டு எழுவேன்' என வேதனை கலந்த முகத்துடன் பேசுகிறார் தீபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 'தலைமையேற்க வாருங்கள்' என தீபாவின் பின்னால் ஒரு கூட்டம் கூடியது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் பன்னீர்செல்வம் முரண்பட்ட பிறகு, அவர் பின்னால் அ.தி.மு.க நிர்வாகிகள் அணிவகுத்தனர். 'நானும் பன்னீர்செல்வமும் இரு கரங்களாக…

  20. என்னை எதிர்ப்பது யாருயா? விழிபிதுங்கி நிற்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ. சசிகலா ஆதரவாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் போகும் இடமெல்லாம், அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், அவரது கொடும்பாவியை எரித்தும் போராட்டம் நடக்கிறது. தன்னை எதிர்ப்பது தீபா ஆதரவாளர்களா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா, பொது மக்களா என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார், கொறடா. எம்.எல்.ஏ-க்கள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்ததால், மக்கள் கடும் கோபத்தில் இருந்துவருகிறார்கள். அதன் வெளிப்பாடாகத் தொகுதிகளுக்கு வரும் எம்.எல்.ஏ-க்களை மக்கள் சிறைப்பிடிப்பது, கறுப்புக்கொடி காட்டி முற்றுகையிடுவது எனப் பல விதத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிற…

  21. "ஜெ.வீட்டு பணிப்பெண் எங்கே?" - ஓ.பி.எஸ் வீட்டில் விடிய விடிய ஆலோசனை! ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து வருகிறார். சென்னை அடையாறு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ஆலோசனைக் கூட்டம் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "நேற்று இரவிலிருந்து இப்போ வரைக்கும் கூட்டம் நடந்துட்டு இருக்கு. கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'அப்போலோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை மத்திய-மாநில அரசுகள் விளக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், ப…

  22. பெட்டிகளுடன் வலம் வரும் சசி ஆதரவு கும்பல் : ஓட்டம் பிடிக்கும் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம் அணியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க, பிள்ளை பிடிக்கும் கும்பலை போல, சசிகலா ஆதரவு மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகி கள் சுற்றி வருகின்றனர். பணப்பெட்டிகளை காட்டி, அவர்களை கவரவும் முற்பட்டுள்ளனர். இதை பார்த்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர். அந்த மனு தொடர்பாக அனுப்பிய நோட்டீசுக்கு, சசிகலா சார்பில் தினகரன் அளித்த விளக…

  23. ஜெ., உடல் வலிக்கு சசி கொடுத்த மாத்திரை எது? கோடநாட்டில் பணியாற்றிய டிரைவர் சந்தேகம் 26 'முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, அ.தி.மு.க.,வின் பன்னீர் அணியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த அணியைச் சேர்ந்த, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், 'மாடியிலிருந்து ஜெ., தள்ளி விடப்பட்டதாக' பகிரங்கமாக சந்தேகம் கிளப்பியுள்ளார். கொலை முயற்சி இந்நிலையில், கோடநாட்டில் பல ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றிய திவாகர், 42, அங்கு நடந்த பல்வேறு விஷயங்களை பற்றி கேள்வி எழுப்பி, ஜெ., மரணம் குறித்…

  24. மிஸ்டர் கழுகு: அரசர் பதவிக்கு ஆபத்து! கை நிறைய புத்தகங்களோடு திடுமென வந்து நின்றார் கழுகார். ‘‘இந்த ஆண்டு பிறந்த நாளில் தனக்குப் புத்தகங்கள் பரிசளிக்குமாறுச் சொல்லிவிட்டார் ஸ்டாலின். அதனால், அறிவாலயத்தைச் சுற்றியிருக்கும் புத்தகக் கடைகளில் நல்ல வியாபாரம்’’ என்றார். ‘‘பிறந்த நாள் விழாவில் புதிய முகங்கள் தென்பட்டனவே?’’ என்றோம். ‘‘பிறந்த நாள்அன்று காலையில் தனது வீட்டில் கேக் வெட்டி, அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்க கோபாலபுரம் போனார் ஸ்டாலின். ஆனால், கருணாநிதி ரெடி ஆகாமல் இருந்ததால், அங்கிருந்து நேராக அண்ணா அறிவாலயம் வந்துவிட்டார். மதியம்தான் மீண்டும் அவர் கோபாலபுரம் போய் அப்பாவைப் பார்த்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார். …

  25. காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க - இந்த வாரம் கட்சிகளின் கோஷ்டி சண்டை வாரம்! பிரேக்கிங் நியூஸ்கள் இல்லை, அதிரடி அரசியல் திருப்பங்கள் இல்லை. ஆனாலும் இந்த வாரம் தமிழர்களுக்கு செம டைம்பாஸாகத்தான் இருந்தது. காரணம், இத்தனை நாட்களாக எதிர் தரப்போடு முட்டி மோதிய கட்சிகள் இப்போது தங்கள் கட்சிகளுக்குள்ளேயே மல்லுக் கட்டுகின்றன. 'மிஸ் என்னைக் கிள்ளிட்டான்' ரகத்தில் இருந்து செம சீரியஸான புகார்கள் வர அரசியல் கட்சிகளுக்குள் அனல் பறக்கின்றன. அவற்றை பற்றிய சின்ன ரீகேப் இது. காங்கிரஸ்: கட்சிக்குள் சண்டை என்றால் முதலிடம் இவர்களுக்குத்தானே. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்ற நாளில் இருந்தே அவர் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக (அ.தி.மு.கவே யாருக்கு ஆதரவுன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.