Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது: முதல்வர் நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டியளித்தபோது தமிழக அரசு, தனது விஷ்வரூபம் படம் விவகாரம் குறித்து பேசினார். தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசு நான்காண்டுகளுக்கு தொடரக்கூடாது, பொதுத் தேர்தல் வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் கூறினார்.இதற்கு அ.தி.மு.க. சார்பில் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் கருத்துக்கு பதில் அளித்தார். இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி புரி…

    • 0 replies
    • 425 views
  2. டில்லியில் இன்று நசீமை சந்திக்கிறார் பன்னீர்: பொது செயலர் விவகாரத்தில் இறுதி விசாரணை ஆர்.கே.நகர் தொகுதியில், நாளை மனு தாக்கல் துவங்க உள்ளதால், அ.தி.மு.க., பொதுச் செயல ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்பதை, விரைவாக அறிவிக்கும்படி, தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து வலியுறுத்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று டில்லி செல்கிறார். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, தேர்தல் நடத்தி, கட்சி உறுப்பினர்களால், பொது செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், சசிகலா அவ்வாறு தேர்வு செய்யப்படவில்லை. ஐந்து ஆண்டுகள்மேலும், பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுபவர், கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப…

  3. ஜெ., மரண சர்ச்சையில் சி.பி.ஐ., விசாரணை : லோக்சபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல் புதுடில்லி: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சை கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும்' என, லோக்சபாவில், அ.தி. மு.க., - எம்.பி., வலியுறுத்தினார். பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று லோக்சபாவில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, அ.தி. மு.க., - எம்.பி., சுந்தரம் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனை யில், 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.முதலில், நீர்ச் சத்து குறைவு, காய்ச்சல் என்றனர். ஆனால், திடீ ரென, அவருக்கு பல்வ…

  4. பொதுச்செயலர் பதவியை தக்க வைக்க சசி கும்பல் தந்திரம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் வந்தால், வெற்றி பெற வசதியாக, புதிதாக, 20 லட்சம், அ.தி.மு.க., உறுப்பினர் அட்டைகள் அச்சிட, சசிகலா குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளனர். சசிகலா, பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்க கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளனர். அதை ஏற்று, சசிகலா நியமனம் செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், பொதுச்செயலர் பதவிக்கு, தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். பொதுச்செயலர் பதவிக்கு,பன்னீர் அணியினர் போட்டியிடுவர். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, கட்சியில் உள்ள…

  5. 'நெட்டிசன்'களிடம் வறுபடும் பள்ளிக்கல்வி அமைச்சர் கோவை: 'டிவி' கேமராமேன்களுடன், மாணவியர் பொதுத் தேர்வு எழுதும் அரங்குக்குள் சென்ற, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை, 'நெட்டிசன்'கள் வறுத்தெடுக்கின்றனர். தமிழகம் முழுக்க, மார்ச் 2ல், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. சென்னை, எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் முதல் தாள் தேர்வு பணிகளை ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அப்போதைய செயலர் சபிதா ஆகிய இருவரும் சென்றனர். கடும் விமர்சனங்கள் கூடவே, அனைத்து, 'டிவி' கேமராமேன்களும் அழைத்துச்செல்லப்பட்டனர். தேர்வு அ…

  6. உதிர்கிறதா இரட்டை இலை? எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆர். மனைவி என்றாலும், எம்.ஜி.ஆருக்குப் பின் அவரைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தோற்கடிக்கப்பட்டார். ஜெயலலிதா 21 தொகுதிகளில் வெற்றிபெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல்வர் ஆனார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அதன் பின் எனக்கு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார் ஜானகி. கட்சி ஜெயலலிதா வசம் போனபோது, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னமும் திரும்பக் கிடைத்தது. 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த அனுதாப அலை காரணமாக அதிமுக கூட்டணி மிகப் பெரும்பான்மையைப் பெ…

  7. தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக இரண்டு நபர்களை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ம் தேதியன்று முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் க…

  8. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை? ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல்ஆணையத்திடம் கொடுத்துள்ள புகார்தான் தமிழக அரசியலில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது.'அ.தி.மு.க-வில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருப்பவரை மட்டுமே கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும்' என்ற கட்சியின் விதிகளை ஓ.பி.எஸ். அணி தங்களின் புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் புகாருக்கு பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை…

  9. ‘அம்மா இடத்தில் நீங்கதாண்ணே...!’ - தினகரனை மிரள வைக்கும் அமைச்சர்கள் 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் யார்?' என்பதை நாளை அறிவிக்க இருக்கிறது அ.தி.மு.கவின் ஆட்சி மன்றக் குழு.' தென் மண்டலத்தில் போட்டியிடுவதைக் காட்டிலும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்றால், அம்மா இடத்தில் நீங்கள் அமரலாம்' என டி.டி.வி.தினகரனுக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தி.மு.க வேட்பாளரை இன்று மாலை அறிவிக்க இருக்கிறது தி.மு.க. ' ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு 59 ஆயிரம் வாக்குகளை வாங்கிய சிம்…

  10. தமிழ்நாட்டு குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் - வைரமுத்து தமிழ்நாட்டில் படிக்கின்ற குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற ஒரு கருத்து வந்தாலொழிய இன்னோரு தலைமுறை தமிழுக்குள் போக முடியுமா என்பது தெரியாது என்று பிபிசி தமிழ் நேரலைக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். தற்கால தமிழ் கல்வியின் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைரமுத்து, இனமும், மொழியும் வளர வேண்டும் என்றால் அந்த தாய் மொழியை பேசக்கூடிய மக்கள் மொழியை பேண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ''மனிதர் இல்லாவிட்டால் மொழி ஏது, இனம் இல்லாவிட்டால் மொழி ஏது, மொழிதான் இனத்திற்கு பெயர் வைக்கிறது. ஆனால் இனம் தான் மொழ…

  11. ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., உறவினர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஜெ., அண்ணன் மகள் தீபாவும், எம்.ஜி.ஆர். உறவினர் சுதா விஜயனும் போட்டியிடுகின்றனர். சேவல் சின்னம் கேட்கிறார் தீபா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, சேவல் சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். அது கிடைக்காவிட்டால், மீன், தராசு, உழைக்கும் கை ஆகிய சின்னங்களில், ஒரு சின்னத்தை பெறுவதற்கான ஆலோசனையை, தன் ஆதரவாளர்களுடன் நடத்தியுள்ளார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், …

  12. ஆர்.கே.நகரில் போட்டி: பன்னீர் அணியில் இணைத்த திலகவதி பேட்டி முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஒரு பொறுப்பான பிரஜையாக, அந்த சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டும் என, உள்ளத்தில் குமைந்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு, விடையளிக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் இருந்ததால், அவருக்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்து, அவர் பின்னால் நின்று அரசியல் செய்ய ஆசைப்பட்டு, அவர் தலைமையை ஏற்று செயல்பட முடிவெடுத்தேன் என்று, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி கூறினார். சிறப்புப் பேட்டி தமிழக கா…

  13. மீனவர் சுட்டு கொல்லப்பட்ட இடம் அருகே சீனா சார்பில் கட்டுமான பணி நடக்கிறது: தமிழிசை மீனவர் சுடப்பட்ட இடத்தின் அருகில் சீனா சார்பில் கட்டுமான பணிகளும் நடக்கிறது. எனவே விசாரணை நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியில் கூறியுள்ளார். வேலூர்: வேலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வேலூர் மண்டிவீதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலா…

  14. அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும்: கமல்ஹாசன் சென்னை: அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்திலிருந்தே நடிகர் கமல்ஹாசன் சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாகவும் அதிரடியாகவும் தெரிவித்து வருகிறார். தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்க…

  15. ஆர்.கே. நகரில் போட்டியிட எனக்கு தொல்லை: தீபா சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு தொல்லை கொடுக்கின்றனர் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது மக்களின் விருப்பமே . சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதாவில் அண்ணன் மகள் தீபா கூறுகையில் : ‛‛இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடுவேன். பேரவையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்த பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், ஜ…

  16. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சசிகலா அணியில் கோகுல இந்திரா, ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டி? இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சசிகலா அணியில் கோகுல இந்திராவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியுடன் முடிகிறது. இத் தேர்தலில் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் தவிர, ஜெய லலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தனியாக போட்…

  17. ஓ.பன்னீர்செல்வம் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு அணியாக பிரிந்துள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தவர் ஆவார். பன்னீர்செல்வம் அணிக்கு ஏற்கெனவே11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அருண்குமாரின் வருகையால், ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/83443-coimbatore-north-constituency-mla-arunkumar-supports-panneerselvam-camp.html

  18. ஓட்டுக்கு துட்டு ’நோ’! ஒரே குடும்ப ஆட்சி ‘நோ’! மக்களாட்சிக்கு ’யெஸ்’ - ஜனநாயகத்திற்காக களமிறங்கும் பெண்கள் "ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!" என்று பாரதியார் எழுதிய வரிகளுடன் தொடங்கியது அந்த நிகழ்வு. கொளுத்தும் வெயிலில் பெசன்ட் நகர் கடற்கரையோரம் சுமார் 300 பெண்கள் நீலநிறத்தில் உடையணிந்து ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். புரட்சி உற்சாகமூட்டும் வரிகளும், அநீதி, ஊழல், முறைகேடான ஜனநாயகத்திற்கு எதிரான பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தார்கள். மெரினாவில் 2017 ஜனவரியில் கண்ட மக்கள் புரட்சிக்குப் பிறகு கடற்கரையோரம் மக்கள் ஒன்றாகக் களமிறங்கி குரல் கொடுப்பது என்பது அடிக்கடி நிகழும் செயலாகி விட்டது. தைப்புரட்சி முழுவதுமாய் வெற்றி பெற்றதோ இல்லையோ, ஆனால் மக்கள் தங்களது தேவைக…

  19. ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, இந்தத் தொகுதி காலியென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மார்ச் 23-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்செய்யலாம். ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. http://www.vikatan.com/news/tamilnadu/83140-rknagar-byelection-to-be-held-on-12th-april.html

  20. சிக்கல் ! சசிகலாவின்பதவியை அங்கீகரிப்பதில்... ஆணையத்துக்கு வரவில்லை 'வானகரம்' ஆர்.கே.நகரில் சி்ன்னம் 'அரோகரா?' வானகரம் பொதுக்குழு கூட்ட தீர்மான நகல் ரூபத்தில், இன்னொரு சோதனை மேகம், சசிகலா அணிக்கு எதிராக சூழத் துவங்கியுள்ள தால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், இந்த அணி சார்பில் போட்டியிடும் நபருக்கு, இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பின், சென்னை வானகரத்தில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத, ஜெ.,வின் தோழியான சசிகலா, தற்காலிக பொதுச…

  21. 'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் சிபிஐ மூலம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவு உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்,"ஒன்றரை கோடி அ.தி.மு.க.தொண்டர்களின் மனதில் உள்ள ஒரே சந்தேகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். அதற்கு நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை மக்களுக்குத் தெளிவாகும். அதனை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை வெற்றிக…

  22. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாமா? - முக்கிய அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன? குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என டெல்லி மாநில பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். கடந்த 3-ம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் காகோய், நவீன் சின்ஹா அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தேர்த லில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து தேர்தல…

  23. அதிருப்தி சசிகலா குடும்பத்தினர் மீது முதல்வர் பழனிசாமி... ஆட்சி மன்ற குழுவில் இடம் அளிக்க மறுப்பு தினகரன் ஆதிக்கத்தால் மந்திரிகளும் விரக்தி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போல், முதல்வர் பழனிசாமி தனித்து செயல்பட விரும்புவதால், அவருக்கும், சசிகலா குடும்பத் தினருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஜெ., மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வ ரானார். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தானே முதல்வராக, சசிகலா முடிவு செய்தார். அதன்படி, பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்…

  24. மக்கள் முற்றுகை: மந்திரிகள் பரிதவிப்பு முதல்வர் பழனிசாமி தலைமையில், புதிய அரசு பதவியேற்றதற்கு பின், அரசு விழாக் களில், அமைச்சர்களை மக்கள் முற்றுகை யிட்டு, கெரோ செய்யும் நிகழ்வுகள், ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இந்த வகையில், நேற்றும் இரண்டு இடங்களில், மக்கள் முற்றுகையால் அமைச்சர்கள் பரிதவித்து உள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று காலை நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பங்கேற்றனர். விழாவிற்கு வந்த இருவரையும், சத்திய மங்கலம் நகராட்சி, 23வது வார்டைச் சேர்ந்த, ௫௦க்கும் மேற்பட்டோர், வாசலில் வழிமறித்த னர். 'நாங்கள், 40 ஆண்டுகளாக பட்டா கேட்…

  25. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும்... விசாரணை வளையத்தில் 9 மருத்துவ உதவியாளர்களும் ! ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், அப்போலோவில் அவருடைய இறுதி நிமிடங்களின்போது நடந்த சிகிச்சைகள் குறித்த தகவல்களை மத்திய உளவுத்துறை சேகரித்து வருகிறது. அதில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதா மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை, போயஸ் கார்டனிலிருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள், அப்போலோவின் இரண்டாவது தளத்துக்கு அவரை எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பது குறித்த பல்வேறு வினாக்கள் இப்போது கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.