Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தொகுதிப்பக்கம் செல்ல முடியுமா சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ? அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆசி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருவழியாக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். சசிகலா தலைமையை ஏற்காத அ.தி.மு.க-வினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவுடன் முதல்வராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்போர் ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர். இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடியது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அரசை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்ப…

  2. இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை...! - கமல் ஹாஸன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வரும் கமல் ஹாஸன், இன்றும் ஒரு கமெண்டைப் பதிவு செய்துள்ளார். விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார் கமல் ஹாஸன். தமிழ் சினிமா நடிகர்களில் ஓரளவு துணிச்சலாக இந்த வேலையைச் செய்தவர், செய்து கொண்டிருப்பவர் இப்போதைக்கு கமல் ஹாஸன்தான். அவரது கருத்துகள் பல சமயங்களில் புரிவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டாலும், ஆட்சிக்கு எதிரான குரல் அது என்பது மட்டும் எல்லோருக்கும் புரிகிறது. சசிகலா முதல்வராக முயன்றபோது, நேரடியாக, ஓ பன்னீர் செல்வமே முதல்வராகத் தொடரட்டும் என்று கூறினார் கமல். …

  3. தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி! கவர்னருக்கு பறக்குது 'இ - மெயில்' கோவை : 'தமிழகத்தில், இடைப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர்; கவர்னர், தமிழகத்தை காக்க வேண்டும்' என, ராஜ்பவனுக்கு 'இ - மெயில்'கள் குவிகின்றன. தமிழக சட்டசபையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நேற்று தன் பலத்தை நிரூபித்து, ஆட்சியை தக்க வைத்து கொண்டார். சட்டசபையில் தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க.,வினர் மனு அளித்தனர். இந்த பரபரப்பான சூழலில், 'கவர்னரின் ராஜ்பவன், இ - மெயில் முகவரிக்கு, தமிழக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கல…

  4. பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் திருநாவுக்கரசர் | கோப்புப் படம். நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு: திருநாவுக்கரசர் அறிவிப்பு * அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது. 117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில் இன்று (சனிக்கிழமை) காலை கோவை…

  5. தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்! சிங்கப்பூர் சிட்டிசன் துணைப் பொதுச்செயலாளர் ஆன கதை “பன்னீர்செல்வம் யாரால் உச்சத் துக்கு வந்தாரோ, அவரையே பன்னீருக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டுள்ளார் சசிகலா” என, துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ரீ என்ட்ரி ஆனதற்கு முன்னுரை தருகிறார்கள் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க-வின் நிழல் அதிகார மையமாக சசிகலா குடும்பம் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் இருந்து முதன்முறையாக ஜெயலலிதாவால் கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்தான். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகனான தினகரனை 1999 நாடாளுமன்றத் தேர்தலில், பெரியகுளம் வேட்பாளர் ஆக்கினார் ஜெயலலிதா. தேர்தலில் வென்று எம்.பி ஆன தினகரனுக்கு அதன்பிறகு அசுர வளர்ச்சிதான். ஜெயலலிதா…

  6. கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம்..! இதுவரை எவ்வளவு கட்டியிருக்கிறார்கள்? கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம். அதில் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே ‘செட்டில்’ செய்யப்பட்டுள்ளதாம். இதற்கிடையே பராமரிப்பு காரணங்களுக்காக ரிசார்ட்டை மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பம் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் கிராமத்தில் உள்ள 'கோல்டன் பே' ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை அடுத்தே, ரிசார்ட்டில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறி சென்னை வந்துள்ளனர். ரகசிய வாக்…

  7. சட்டப்பேரவையின் முதல் அரை மணிநேர பரபரப்பு விவரம் சட்டப்பேரவை வளாகம். அமளி, முழக்கம், வேண்டுகோள், நிராகரிப்பு என சட்டப்பேரவையின் முதல் அரைமணி நேரம் பரபரப்பாக இருந்தது. சட்டப்பேரவையில் பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர். இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. …

  8. மெரினா - காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் சட்டப் பேரவையில் வெளியேற்றப்பட்ட எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் | படம்: எல். சீனிவாசன் பேரவையில் திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியெற்றப்பட்டதைக் கண்டித்து மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் தொடங்கினார். உண்ணாவிரதத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் சட்டப்பேரவையில் நடந்தது குறித்து புகார் அளித்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பே…

  9. 'தீர்ப்பு வேறு.. தீர்வு வேறு' - ட்விட்டரில் கமல் கருத்து பரபரப்பு நிறைந்த சமீபத்திய தமிழக அரசியல் சூழலைப் பற்றி தனது கருத்துகளை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் இன்றைய அவரது ட்விட்டர் பதிவில், 'நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும் தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்' என தெரிவித்துள்ளார். நாளை சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/tamilnadu/80688-kamal-tweets-about-sasikalas-verdict-tomorrow.html

  10. ஆளுநரின் மும்பை பயணம் ரத்து! தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் மும்பை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக இன்று கூடிய சட்டப்பேரவையில், கடும் அமளி நடைபெற்றது. இதனால், இன்று மட்டும் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரணமான சூழல், இன்று உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தான் ஏற்கெனவே மும்பை செல்லத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். http://www.vikatan.com/news…

  11. பன்னீர்செல்வம் Vs சசிகலா... 134 தொகுதி எம்.எல்.ஏக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? மலைக்க வைக்கும் மக்கள் தீர்ப்பு...! #SurveyResults #OpsVsSasikala தமிழக அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்களின் சொகுசு ரிசார்ட் அப்டேட்டுகள், ஓ.பன்னீர்செல்வத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகள், சசிகலாவின் திடீர் பேட்டிகள்... என தமிழக அரசியல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும்? எந்த எம்.எல்.ஏ அணி மாறுவார்? என்கிற பரபரப்புகளுக்கு இடையே, அ.தி.மு.க தேர்தலில் வென்ற 134 தொகுதிகளில் 'பன்னீர்செல்வம் Vs சசிகலா... 134 தொகுதிகளில் மக்கள் ஆதரவு யாருக்கு?' என்ற தலைப்பில் சர்வே நடத்தினோம். மக்கள் தங்கள் கருத்துகளை தொகுதி…

  12. மிஸ்டர் கழுகு: சிறைக்கு முன்... மிரட்டி வாங்கப்பட்ட இரண்டு கையெழுத்துகள்! ஜூ.வி அட்டைக்காக நம் ஓவியர் கிராபிக்ஸில் உருவாக்கிய எம்.ஜி.ஆர் சிலையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் கழுகார். ஆழ்ந்த பெருமூச்சு, அவரிடமிருந்து வெளிப்பட்டது. ‘‘இப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இப்படித்தான் அவர் நிலைமை இருந்திருக்கும். அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் விசுவாசிகளின் இதயத்தை ரணமாக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கின்றன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. அவர் உருவாக்கிய கட்சி, எப்படியெல்லாம் அவரை இந்தத் தருணத்தில் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும்! வரலாற்றிலேயே இல்லாத அசுர பலத்தோடு கட்சி இருக்கிறது. தனியாகத் தேர்தலில் நின்று, 37 எம்.பி தொ…

  13. எடப்பாடி பழனிசாமி... சிரிப்புடன் உள்ளே சென்றவர், கடுப்பாக வந்தது ஏன்? கூவத்தூரில் நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிரித்துக்கொண்டே சென்ற சசிகலாவின் அணியினரில் பலர் வெளியே வரும் போது கடுப்பாகி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. சசிகலா அணியிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் சமாதியில் தனிமனிதனாக போராட்டத்தை தொடங்கிய பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் …

  14. முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். சென்னை: தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு செய்தது. இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாள…

  15. மாற்றம் வேண்டும் மாறாத மாற்றம் வேண்டும்,

  16. எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம்: வக்கீல் ஆச்சார்யா அதிரடி எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என்று ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக இருந்த ஆச்சார்யா கூறியுள்ளார். பெங்களூரு: தமிழக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்திருக்க வேண்டும் என்ற மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து அரசியல் களத்தில் அன்றாடம் ஒரு பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க…

  17. குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணித்தேன்: எம்எல்ஏ அருண்குமார் கோவை எம்.எல்.ஏ. அருண்குமார். அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் தான் வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) காலை கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுகவை உருவாக்கி வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என யாரும் கட்சியில் குடும்பத்தை புகுத்தவில்லை. ஆனால், தற்போது அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் மிகுந்துள்ளது. அதனால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கிறேன்…

  18. ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்! ( வீடியோ ) தமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தப்பித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. நேற்று தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இதில் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றார். இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செங்கோட்டையனிடம் பெண் நிருபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த பெண் நிருபர் அம…

  19. கோடநாடு எஸ்டேட் 'ஜப்தி'யானால் என்னாகும்? 600 தொழிலாளர்களுக்கு உறக்கம் போச்சு ஊட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி, கோடநாடு எஸ்டேட்டும், ஜப்தி செய்யப்படும் சூழ்நிலை உள்ளதால், அங்கு, 30 ஆண்டுகளாக பணி புரியும் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஜெயலலிதா, சசிகலா வாங்கிய பல்வேறு சொத்துகளில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில், 900 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கீழ் கடந்த, 20 ஆண்டுகளில், மேலும் பல நுாறு ஏக்கர் எஸ்டேட் களும் வந்தன.இந்த தேயிலை தோட்டத்தில், 600 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப…

  20. திருநாவுக்கரசரை விளாசும் இளங்கோவன்! காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை திருநாவுக்கரசர் மறுத்தார். 'வாக்களிப்பது குறித்து நான் எதுவும் கூறவில்லை. அதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும்'. என்று திருநாவுக்கரசர் கூறினார். இந்நிலையில் திருநாவுக்கரசரின் கருத்துக்கு, இளங்கோவன் அவரை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து கூறிய இளங்கோவன், 'திருநாவுக்கரசர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். திமுகவின் நிலையே காங்கிரஸின் நிலை என ராகுல்காந்தி ஏற்கெனவே கூறியிருந்தார். திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறா…

  21. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை மவுனம் ஏன்? கோவை:கூவத்துார் விடுதியில், சொகுசு வாழ்க்கை நடத்திய, எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், சசிகலா ஆதரவுடன் இடைப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பின், அமைச்சர் கள் உட்பட அனைவரும் கூவத்துார் விடுதிக்கு சென்றுள்ளனர்.கூவத்துார் விடுதியில் அடைப் பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் மீது பொது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. தங்களது எண்ணத்துக்கு ஏற்ப செயல்படாத எம்.எல்.ஏ.,க் களை, ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்…

  22. பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: சிறையில் சசிகலாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை - ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர் வி.கே.சசிகலா | கோப்புப் படம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழ‌க்கில் அதிமுக பொதுச் செயலாள‌ர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் நேற்று காலை பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ சசிகலாவை சந்தித்தனர். அப்போது சொத்துக்குவிப்பு மேல்ம…

  23. தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது. அதனால், 1988ல் நடந்த வன்முறை காட்சிகள் மீண்டும் அரங்கேறுமோ என, பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில், கடைசி நேரத்தில், 16 எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது. ஜெ., மறைவை தொடர்ந்து, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். கட்சியை கைப்பற்றியதோடு, ஆட்சியையும் கைப்பற்ற முடிவு செய்தார்.முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார். அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவராகி, முதல்வராக முயற்சித்தார். …

  24. என்னை பொருத்தவரை ஜெயலலிதா என்பவர்.. சொல்கிறார் சசிகலா

  25. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவதாகவும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை: பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.