Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்க வைப்பு? - சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர் | கோப்பு படம்: ம.பிரபு. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் செங்கோட்டை யன் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா வில் கலந்து கொள்ளாமல் கூவத்தூர் விடுதியிலேயே தங்கியதாக அதிமுக வட்டாரங் களில் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கம் அடுத்த கூவத்தூரில் கடற் கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பின ரால் கடந்த 8 நாட்களாக த…

  2. எம்.எல்.ஏ.,க்களுக்கு வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு? கூவத்தூர்: கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர் அணிக்கு தப்பி செல்வதை தடுக்க சசி தரப்பில் இருந்து வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் முக்கிய திருப்பமாக நேற்று மாலை சசிகலா தரப்பு அ.தி.மு.க., சார்பில் இடைப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச…

  3. பெங்களூரு:கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்ய அப்பீல் மனு மீதான விசாரணை, நேற்று முதல் விறுவிறுப்பாக துவங்கியது. 'மேல்முறையீட்டு மனுவில் வாதிட, டில்லி சென்று மூத்த வழக்கறிஞரை அழைத்து வர வேண்டும் என்பதால், விசாரணையை, இரண்டு நாள் தள்ளி வைக்க வேண்டும்' என, ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் கோரிக்கையை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசுவாமி நிராகரித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதி குமாரசுவாமி, காலை, 11:00 மணியளவில், தன் இருக்கையில் அமர்ந்தார்.அப்போது, நீதிமன்ற ஹாலுக…

  4. ஓ.பி.எஸ் மற்றும் ஹெச்.ராஜா அவசர சந்திப்பு! தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் பதவியேற்றுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர்ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கிடையே பன்னீர் செல்வத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். வரும் சனிக்கிழமை சட்டசபை கூடும் நிலையில் இந்த சந்திப்பானது முக்கியமானதாக கருத்தப்படுகிறது. http://www.vikatan.com/news/politics/81073-emergency-m…

  5. தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்குகள் விரைந்து முடிக்க மத்திய அரசு உத்தரவு ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் அதிகார மையங்களாக உருவெடுத்துள்ள, சசிகலா உறவினர்கள் தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்கு விசாரணை வேகம் பெறுகிறது. கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு, அமலாக்கத் துறைக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலங்களில், சசிகலாவுடன் சேர்ந்து, அவரது உறவினர்கள், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டனர். கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்குடன் வலம் வந்தனர். அவர்களின் ஆட்டம் எல்லை மீறியதும், 2011ல், அவர்களை, ஜெயலலிதா ஓரங்கட்டினார். சசிகலாவை தவிர, அவரின் மற்ற உறவின…

  6. தமிழகத்தில் மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி நேற்று துவங்கியது. அதன் 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். சசி சொந்தங்கள் போடும் உத்தரவுகளை ஏற்று, தலையாட்டி பொம்மை களாக செயல்பட 30 மந்திரிகளும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பொறுப்பேற் றார். அவரது ஆட்சியில் அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட துவங்கியது. மத்திய - மாநில உறவும் மேம்பட ஆரம்பித்தது. இதற்கிடையில், 'வர்தா' புயல் நிவாரண பணிகள், ஜல்லிக்கட்டு போராட்டம், அதை முறியடிக்க அவசர சட்டம், கிருஷ்ணா நதி நீருக்காக, ஆந்திர அரசுடன் நடத்திய பேச்சு என, பன்னீர் ஆட்சியின் பலன்கள், மக்களை சென்றடைந்…

  7. பிப்.16-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஆளுநர் மாளிகை | படம்: ம.பிரபு. 'இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு, குடும்ப அரசியலுக்கு வாய்ப்பில்லை'- இப்படியெல்லாம் அறியப்பட்டதுதான் அதிமுக. ஆனால், இன்று அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் சசிகலாவின் குடும்பத்தினர் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் தலைமையில் ஓரணியினர் பிரிந்திருக்கின்றனர். சசிகலா தலைமையை ஏற்றுப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூவத்தூரிலேயே காத்திருக்கின்றனர். ஆளுநரோ, எத்தனை பேர் எத்தனை முறை சென்று பார்த்தாலும் எந்த முடிவும் அறிவிக்காமல் இருக்கிறார். இதுவரை அவரது மவுனத்துக்கு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாகக் கூறப்பட்டது.…

  8. ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே பதற்றம்! சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றதால் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவி ஏற்றத்தைத் தொடர்ந்து, சென்னை கீனின்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் கூடியிருந்த, அவரது ஆதரவாளர்களை, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மிரட்டியதாகவும், கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரும், போலீசார் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கு பாதுகாப்பிற்…

  9. 'அடுத்த முதல்வர் யார்?' கவர்னர் சப்போர்ட் யாருக்குத் தெரியுமா? தமிழக அரசியல் தகிப்பு இன்னும் அடங்கவில்லை.! துரோகம், ஆதரவு, தீர்ப்பு, சிறை... என்று அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்துவரும் தமிழக அரசியல் இப்போது, 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது. தமிழகத்தின் காபந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 7-ம் தேதி ஜெ. சமாதியில் திடுதிப்பென்று வந்தமர்ந்து தியானத்தில் மூழ்கியதில் ஆரம்பித்த அரசியல் பரபரப்பு இப்போதுவரையிலும் தொடர்கிறது. 'முதல்வராக அமரவைத்து அசிங்கப்படுத்தினார் சசிகலா' என்று அவர் பற்றவைத்த நெருப்பின் சூடு தாளாமல், உடனடியாக அவரை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் சசிகலா. அடுத்தடுத்து ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அ…

  10. அதிமுக கதை முடிந்தது.. இனி அழிவுதான்.. கட்ஜூ ஆவேசம் சென்னை: எப்போது சசிகலாவின் கைப்பாவையை முதல்வராக நியமிக்க அதிமுக முடிவு செய்ததோ அப்போதே அந்தக் கட்சியின் கதை முடிந்தது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோபாவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சசிகலாவின் கைப்பாவையை சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம் அதிமுக தனது மரணத்திற்கு அதுவே குழி தோண்டி விட்டது. தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் சந்தேகமே இல்லாமல் திமுகதான் பெரும் வெற்றி பெறும். அதிமுக மாபெரும் தோல்வியைத் தழுவி அழிந்தே போகும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் கட்ஜு.Read mor…

    • 4 replies
    • 658 views
  11. பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது ஏன்? பெங்களூர் சிறை வளாகம் முன்பு அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம முன்பு சசிகலா ஆதரவாளர்களின் கார்கள் சில திடீரென தாக்கப்பட்டன. இதன் பரபரப்பு பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கோர்ட்டில் சரணைடந்தனர். இதற்காக சசிகலா உள்ளிட்டோர் கார் மூலமாக சென்னையிலிருந்து பெங்களூரு கிளம்பி வந்தனர். அவர்களுடன் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர். சிறை வளாகம் வந்…

  12. 'பிரேக்கிங் நியூஸ்' நிறைவா? - தமிழக அரசியலில் 9 நாட்கள் மீதான அலசல் சமீப காலமாக இந்தியாவே உற்று கவனித்துக் கொண்டிருப்பது தமிழக அரசியல் நிலவரத்தை மட்டுமே. ஒரு தியானம் அனைத்துக்கும் ஆல்ஃபாவாக இருந்தது என்றால் நம்பித்தானே ஆகவேண்டும். அந்த 'தியானப் புரட்சிக்கு' மக்களின் ஆதரவு உணர்ச்சிப் பெருக்குகளாக வெளிப்பட, ஆட்டம் கண்டது அதிமுக. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா அணிகள் பிரிந்தது எப்படி எதிர்பார்க்கப்பட்ட விளைவாக இருந்ததோ அப்படித்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டதும். ஆனால், இத்தனை விரைவில் அது நடந்தேறிவிடும்; அதுவும் எப்போதுமே அமைதி காத்துவந்த …

  13. ஜெ. மறைவுக்குப் பின் அதிமுக: மூன்று மாத நிலவர பார்வை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம். அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் 21-வது முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்கிறார். மேலும், சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவகாசம் வழங்கியிருக்கிறார். பின்னணி தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, தமி…

  14. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை: க.அன்பழகன் க.அன்பழகன் | கோப்புப் படம். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் க.அன்பழகன் கூறுகையில், ''நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வாய்ப்பில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் வெற்றியைப் பொறுத்தே அமையும்'' என்றார். வரும் 18-ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், க.அன்பழகனின் இந்தக் கர…

  15. கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! குன்ஹா தீர்ப்பு முழு விவரம் இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப…

  16. 'தேவை 7 எம்.எல்.ஏக்கள்தான்!' -பன்னீர்செல்வத்துக்கு பலம் சேர்க்கும் பா.ஜ.க வியூகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் பன்னீர்செல்வம் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி. ' சட்டசபைக் குழுத் தலைவராக எடப்பாடியை தேர்வு செய்தார் சசிகலா. பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது. இதே அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வும் செல்லாது' என ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார் மைத்ரேயன். தமிழக அரசியல் களத்தில் ஒன்பது நாட்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துவிட்டது. தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ' 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபியுங்கள்' என உத்தரவிட்டி…

  17. சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்ட அந்த இரண்டு பாரதிய ஜனதாவினர் இவர்கள்தானா? சுப்பிரமணியன் சுவாமி... தமிழகத்தில் ஊழல்குற்றச்சாட்டு காரணமாக ஒவ்வொரு முறை அதிரடியாக ஆட்சிமாறும் நேரத்தில் எல்லாம் அதன் பின்னணியில் இருக்கும் பெயர். 1992-ல் டான்சி நிலபேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்களில் ஒருவர். 1995-ல் அதே ஜெயலலிதாவுக்கு எதிராக நிலக்கரி ஊழல் வழக்கு, 1996-ல் சொத்துக்குவிப்பு வழக்கு என தொடர்ச்சியாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குகள் போட்டவர் சுப்பிரமணிய சுவாமி. இருபது வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களுரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்…

  18. இறாலுக்கு ஆசைப்பட்டு எம்.எல்.ஏ வை தப்பிக்க வைத்த குண்டர்கள்! - கூவத்தூர் ரிசார்ட் உள்ளிருந்து விகடன் நிருபர்! ஓ.பி.எஸ். கூடாரத்துக்குத் தப்பிவந்த எம்.எல்.ஏ-க்களில் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வருகை, தமிழக அரசியல் களத்தை வேறு வடிவத்துக்கு மாற்றியுள்ளது. ‘மாறுவேடத்தில் தப்பி வந்தேன்’ என்றும், ‘என்னைக் கடத்தினார்கள்’ என்றும் புகார்கொடுத்து பரபரப்பைக் கிளப்பிவருகிறார். கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து எம்.எல்.ஏ தப்பிவந்தது எப்படி? அந்தத் திக்... திக் நிமிடங்கள்.... ‘‘13-ம் தேதி இரவு 11 மணிக்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது விடாமல் எனது செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களின் வேலை பளு காரணமாகத் தெரிய…

  19. ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு சசிகலா பெயருக்கு மாற்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஐதராபாத்: முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கினார். அவர் தன் வருமானத்துக்கு அதிகமான முறைகேடாக சொத்து சேர்த்ததாக வழக்கு, தொடரப்பட்டு, 21 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதாவின் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயல…

  20. சசிகலாவை கலாய்த்து மீம் போட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை - அ.தி.மு.க. ஐ.டி பிரிவு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம் வெளியிட்ட 180 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி தெரிவித்துள்ளது. சென்னை: அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று சரண் அடைவதற்கு முன்னதாக ம…

  21. கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள் - துண்டுச் சீட்டால் பரபரப்பு கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துவதாக கூறி வந்துள்ள துண்டுச் சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்டின் லெட்டர் பேட் அல்லது துண்டுச் சீட்டில் எங்களை ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கூறி வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை எழுதியது யார் என்பது தெரியவில்லை. எம்.எல்.ஏக்கள்தான் தற்போது அங்கு வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதால் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது உண்மையா என்றும் தெரியவில்லை.…

  22. மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வராததால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 9 பேரை தவிர வேறு யாரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர் செல்வம் கலக்கம் அடைந்துள்ளார். சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவால் முதல்- அமைச்சராக 2 முறை அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், 3-வது முறையாகவும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் முதல்- அமைச்சர் ஆனார். ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செய…

  23. ஆட்சியமைக்க அழைப்பு வருமா? - ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் சந்திப்பு அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளதால், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: தமிழக அரசியல் களம் உச்சகட்டமான பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தா…

  24. ஹலோ ஆளுநர் அலுவலகமா..! பெண் ஊழியரை பதற வைத்த போன்கால் (ஆடியோ) தமிழக அரசியல் சூழ்நிலையில் அடுத்த பரபரப்பாக ஆளுநர் அலுவலகத்துக்கு சென்ற தொலைபேசி அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உருவாகிய அதிகாரப்போட்டியால் கட்சித் தொண்டர்களும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இயந்திரம் முழுமையாக செயல்படவில்லை. இந்த களேபரத்தில் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அலுவலகத்துக்கு போன் அழை…

  25. குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க முடியாது.. படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க முடியாது!! on: பெப்ரவரி 15, 2017 சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அரசு நிதியில் அவருக்கு நினைவிடம் அமைக்க முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், அவருக்கான சிறை தண்டனை மட்டும் விலக்கிக்கொள்ளப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்காக அவரது சொத்துக்களை விற்று அபராதத் தொகையை அரசு வசூலிக்க வேண்டும் என்று நீதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.