Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முதல்வர் ஆகிறாரா செங்கோட்டையன்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ' நேற்று முழுவதும் மிகுந்த குழப்பத்துடன் இருந்தார் சசிகலா. எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசும்போதும், அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் இல்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா அளித்த தீர்ப்பை இன்று உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தீர்ப்பு நாளில் எதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை தீர்ப்பு வெளியான நேரத்தில், கூவத்தூரில் கட்சி நிர்வ…

  2. சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு உளவு சொல்லும் எம்.எல்.ஏ.க்கள்! - அதிர்ச்சியில் மன்னார்குடி தரப்பு #OpsVsSasikala #VikatanExclusive சசிகலா முகாமில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவலை சொல்லும் உளவாளி எம்.எல்.ஏ.க்கள் குறித்த தகவல், மன்னார்குடி குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் காரணமாக சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்கி உள்ளனர். கடந்த மூன்று தினங்களாக அங்குள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார். கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு த…

  3. சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு : முன்னெச்சரிக்கையாக கூவத்தூரில் போலீஸ் குவிப்பு #OPSvsSasikala #LiveUpdates காலை: 9.00: வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன், மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை: 9.00: அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு காலை: 8.45: கடற்கரை சாலை பலத்த பாதுகாப்பு! பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை- புதுச்சேரி அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. பிற வாகனங்கள் சோதனைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுகின்றன. காலை: 8.00; முன்னெச்சரிக்கையாக கூவத்தூரில் போலீஸ் குவிப்பு …

  4. முதல்வர் பட்டியலில் மூன்று பெயர்! கூவத்தூரில் அடுத்த அத்தியாயம்..!.! #OpsVsSasikala #DACase #JudgementDay சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நாளை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வராகும் எண்ணத்தில் இருக்கும் சசிகலாவுக்கும், அவரை நம்பிக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்தத் தீர்ப்பின் முடிவைப் பொறுத்தே எதிர்காலம் அமைய இருக்கிறது...! தமிழக அரசியல் பரபரப்பைக் கூட்டும் விதமாக எதிர்க்கட்சியான தி.மு.க-வும் அவசர, அவசரமாக கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. கடந்த 5-ம் தேதி, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா பெயரை, முன்மொழிந்தார் ஓ.பன்னீர்செல்வம். கூடவே, சசிகலா ம…

  5. சசிகலா உள்ளிட்டோர் மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு காலை 10.35 மணிக்கு முடிவு தெரியும் | யாரும் நேரில் ஆஜராக தேவையில்லை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதா…

  6. பன்னீர் செல்வத்தின் ‛ஆபரேஷன் கூவத்தூர்' சென்னை: சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க பன்னீர் தரப்பில் அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பொங்கிய பன்னீர்: கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா செய்த சதியை, கடந்த 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன், முதல்வர் பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். அவரிடம் இருந்து, முதல்வர் பதவியை பறிக்க, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதையும், அவர் அம்பலப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக அ.தி.முக., தொண்டர்களும், தமிழக மக்களும் அணி வகுத்துள்ளனர். இதுவரை ஓ.பி.எஸ்., அணியில…

  7. எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள 'உல்லாச சிறை'யில் நடப்பதென்ன? சென்னை அருகே கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதியின் உள்ளே நடந்த நிகழ்வுகள் குறித்து, கொங்கு மண்டல எம்.எல்.ஏ., ஒருவர், மனக்குமுறலுடன் நேற்று கூறியதாவது: இப்படியொரு இழிநிலை வரும் என, நினைக்கவில்லை. அடிமைகள் போன்று ஆள்பிடித்து வாகனத்தில் அழைத்துச் சென்று, ஆடம்பர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். மனைவி, மக்களிடம் பேசக்கூட அனுமதி கிடையாது; இதை என்னவென்று சொல்வது? 'எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என்ற உத்தரவு, போயஸ் கார்டனில் …

  8. ஓ.பன்னீர் செல்வத்துக்கு மதுரை தெற்கு எம்.எல்.ஏ. சரவணன் திடீர் ஆதரவு தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் இன்று ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா மற்றும் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சசிகலா தனக்கு 120-க்கு…

  9. கடல் வழியே படகில் தப்ப முடியுமா? அடைபட்ட எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி தீவுக்குள் அமைந்துள்ள, சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், படகு மூலம் தப்ப முடியுமா என, ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்பாக்கத்தை அடுத்துள்ள கூவத்துார், 'கோல்டன் பே' விடுதி, கடலை ஒட்டிய உப்பங்கழி, முகத்துவாரத்தை ஒட்டி உள்ளது. இதில், 34 அறைகள் மட்டுமே உள்ளன. இங்கு, அ.தி.மு.க.,வின், 100 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு அறைக்கு, மூன்று பேர் வீதம், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முதல் இரு நாட்களில், எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வத்துடன் நடனம்ஆடிய காட்சிகள், கேமராக்களில் ரகசியமாக படமாக்கப்பட்டுள்ளதாக, கூறப்படு…

  10. பிப்.13-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், இன்றும் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க) 6.55 pm: மறைந்த தமிழக முன்னாள் முத‌ல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர…

  11. பன்னீர்செல்வம் வீட்டுக்கு நடிகர் மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு! தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும், பொறுப்பு முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் வி.கே.சசிகலா. ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரைச் சந்தித்து, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பெரும்பன்பான்மையை நிரூபிக்க அனும…

  12. சொகுசு சிறையில் இருந்து விடுதலை எப்போ? : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தவிப்பு சொகுசு விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களை விடுவிக்க, யாராவது நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்ற தவிப்பில் உள்ளனர். சசி தரப்பினர், தங்களது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, கூவத்துார் மற்றும் பூந்தண்டலத்தில், தனியார் சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர். அவர்கள், அங்கிருந்து வெளியேறாமல் இருக்க, பாதுகாப்பு பணியில், குண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குண்டர்களின் கெடுபிடி ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வுக்கும், …

  13. எத்தனை எம்.எல்.ஏ.,க்கள்? : சசி பேச்சால் குழப்பம் சசிகலா பேசும் போது, 129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்தது, அனைத்து தரப்பினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பன்னீர் உட்பட ஏழு பேர், சசிகலாவுக்கு எதிராக உள்ளனர். நட்ராஜ் நடுநிலை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நட்ராஜ், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர் நடுநிலை வகிக்கின்றனர்; மீதம், 126 எம்.எ…

  14. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ஆசையில் உள்ள, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட், இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது. 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு, சசிகலாவுக்கு சிறையா; முதல்வர் பதவியா என்பதை தீர்மானிக்க உள்ளதால், மன்னார்குடி கூட்டமும், அவருக்கு ஜால்ரா அடிக்கும் அமைச்சர்களும் பீதியில் உறைந்துள்ளனர். இதற்கிடையில், கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் ஓடிவிடக் கூடாது என்பதற்காக, சசிகலா நேற்று அங்கேயே தங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, அவரது அண்ணி இளவரசி, ஜெ.,யின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர், வரு…

  15. சசிகலாவை வீழ்த்த நினைத்த அ.தி.மு.க.வின் ராஜகுரு வீழ்ந்த கதை! சசிகலாவை வீழ்த்த நினைத்து அதில் அ.தி.மு.க.வின் ராஜகுருவாக இருந்த தம்பிதுரை வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலில் தமிழகம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தலைமையிலும் கட்சியினர் அணிவகுத்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதால் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று சசிகலா, எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசினார். அடுத்து போயஸ் கார்டனில் இன்று தன்னுடைய 33 ஆண்டுகால வாழ்க்கை வரலாறை தொண்டர்களிடம் விளக்கமாக தெரிவித்தார் சசிகலா. அப்போது 'தனக்கு முதல்வர…

  16. பன்னீருக்கு ஆதரவா?: உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: ஸ்டாலின் ''யாருக்கும் ஆதரவு கொடுக்க போவதில்லை; உரிய நேரத்தில், நல்ல முடிவு எடுக்கப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று, அறிவாலயத்தில் நடந்தது.இதில், 'அரசியல் சட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு உட்பட்டு, தமிழகத்தில், நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வழிகாட்டுதல்படி கூட்டத்தில், 'முதல்வர் பன்னீர்செல்வம் நம்ப…

  17. சசிகலாவே தற்போது எல்லா எம்.எல்.ஏக்களையும் வீட்டிற்கு போக சொன்னால் கூட, தற்போது இந்த சொகுசு ரிசார்ட்டை விட்டு எம்.எல்.ஏக்களும் போகமாட்டார்கள் போல.

  18. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களால் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு வந்த சோகம்! கூவத்தூரில் இருக்கும் கோல்டன் பே ரிசார்ட் மீது தான் தற்போது தமிழகத்தில் அனைவரின் கவனமும் உள்ளது. முதலில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புகார். அடுத்து இங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் என்ற புகார். நேற்று சசிகலா இங்கு யாரையும் அடைத்து வைக்கவில்லை என பேச தமிழகம் முழுவதும் ரிசார்ட்டை சுற்றியே உள்ளது. டாக் ஆஃப்தி டவுனாக இருக்கும் இந்த விடுதி எப்படி இருக்கும். உள்ளே எம்.எல்.ஏக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கான ஒருநாள் செலவு என பல செய்திகள் வந்தாலும் தற்போது மோசமான பாதிப்பு ஒன்று ரிசார்ட்டுக்கு வந்துள்ளது. இந்த …

  19. 'பன்னீர்செல்வம்... சசிகலா... ஸ்டாலின்..! இப்போது என்ன செய்யலாம்?'' விளக்கும் சட்ட வல்லுநர் தமிழக அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் டி.ஏ.சி.ஜெனிதா விரிவாக விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அடுத்து அ.தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்தையும் ஏற்றுக் கொள்வதாக…

  20. சசிகலா பதவியேற்ப்பு விழாவிற்க்கு மறுப்பு : ஆளுநர் வித்யாசகர் ராவ் !! உங்க விளையாட்டுக்கு நா வரல !

  21. ம. நடராசனின் பெசன்ட் நகர் வீட்டில் என்ன நடக்கிறது? #OpsVsSasikala #VikatanExclusive தமிழகம், எப்போதையும்விட அதிகமாகவே சத்தமாக இருக்கிறது. பிப்ரவரி 7 - ம் நாள் முன்னிரவு மெல்லிய குரலில் பன்னீர்செல்வம் பேசியது இப்போது எங்கும் எதிலும் எதிரொலித்து பெருஞ்சத்தமாக மாறி இருக்கிறது. கட்சி அரசியலை விரும்பாத, எப்போதும் இந்தக் களேபரங்களிலிருந்து விலகி நிற்க விரும்புபவர்கள்கூட இந்தச் சத்தத்திலிருந்து தப்பவில்லை. ஒன்று இந்தச் சத்தத்தின் குரலாக இருக்கிறார்கள்... இல்லையென்றால், செவியாக இருக்கிறார்கள். சரி... இவ்வளவு சத்தத்துக்கு நெருக்கமானவர், இந்தச் சத்தம் ஜனிக்கும் மூலத்தின் ஒருவர்... இப்போது எப்படி இருக்கிறார்... என்ன செய்துகொண்டிருக்கிறார்...? கால்நூற்றாண்…

  22. சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு - கூவத்தூரில் தங்கும் சசிகலா! சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருப்பதால், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று தங்குகிறார். சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து நான்கு பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நான்கு பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாட…

  23. ' முதல்வர் ரேஸில் இருந்து விலகுகிறாரா சசிகலா?!' -எதிர்ப்பை சமாளிக்க 'திடீர்' வியூகம் ' முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்பட்டது கிடையாது. நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சராகியிருக்க முடியும்' -இன்று போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில்தான் சசிகலா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ' மத்திய அரசின் அழுத்தத்தை அடுத்து, முதல்வர் பதவிக்கு கட்சியின் சீனியர்களை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. அடுத்த இரண்டே நாளில், 'என்னை மிரட்டி ராஜினாமா …

  24. 'ஜெயலலிதா ஆக நினைத்து வளர்மதி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்!' சசிகலாவுக்கு தமிழக பெண்களின் சார்பாக ஒரு கடிதம்! ''தலைவரு இறந்தபோது... அம்மாவ என்ன பாடு படுத்துனாங்க? ஒரு விஷயம் முக்கியமா கவனிக்கணும். ஒரு பெண்ணு... பெண்ணு எப்படி கட்சியில வந்து வர்றது... அப்படீங்கிறத வந்து காமிச்சாங்க. இப்பயும் அதே தோரணதான். அன்னைக்கு எந்தக் கூட்டம் அம்மாவ எதிர்த்துச்சோ... அதே கூட்டம்தான் இன்னைக்கும் செய்யுது'' ஞாயிறு இரவு கூவத்தூரில் நீங்கள் பேசிய பேச்சு இது சசிகலா. பொட்டு, பிளவுஸில் தொடங்கி உங்கள் பேச்சு வரை அனைத்திலும் உங்களை நீங்கள் ஜெயலலிதாவுக்கான மாற்றாக நிறுவத் துடிக்கிறீர்கள். 30 ஆண்டுகளாக தமிழக அரசியலி…

  25. சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் யோசனை?! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொஹத்கி யோசனை வழங்கியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை தீர்மானிக்க சிறப்பு கூட்டத்தொடரே வழிவகுக்கும் என முகுல் ரொஹத்கி கூறியுள்ளாராம். ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டதின் பேரில் தலைமை வழக்கறிஞர் இந்த யோசனையை வழங்கியிருப்பதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்பது நல்லதுதான். ஆனால், நீண்ட நாட்களுக்கு காத்திருப்பது ஏற்புடையதல்ல என முகுல் ரோஹத்கி கூறியுள்ளதாக தகவல். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.