Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டுகள் தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார். முதல் டுவீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வர…

  2. “பேரிருளின் மீது ஓ.பன்னீர்செல்வம் பாய்ச்சிய சிறு வெளிச்சம்!” நிச்சயம் இந்த இரவின் தொடக்கம் இப்படியாக இருக்குமென்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் 22 -ம் தேதியிலிருந்தே, தமிழக அரசியல் களம் தெளிவாக இல்லை தான். நாளொரு நாடகங்களும் பொழுதொரு களேபரங்களும் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. எப்போதும் எல்லாவாற்றையும் தள்ளி நின்று பார்த்துப் பழகிய சாமான்ய தமிழன்... இந்த முறை கொஞ்சம் விரக்தியுடன் தூரப் போனான். மனதுக்குள் புழுங்கி தவித்தான். ஏதாவது ஒன்று நிகழாத... எங்கிருந்தாவது ஒருவன் வந்து நம்மை இந்த சாக்கடையிலிருந்து மீட்க மாட்டானா என்று தனக்குள்ளேயே வெம்பினான். அதன் வெளிப்பாடுதான் மெரினாவில் கூடிய கூட்டம். ஆம், மெரினாவில் கூடிய கூட்டம் …

  3. பன்னீர் தியானத்துக்குப் பிறகு... சசிகலா, தி.மு.க, சட்டசபை என்னவாகும்? மெரீனா கடற்கரை மற்றொரு வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியாக நின்று அலைகளை வரித்துக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் திரட்சியான போராட்டம் அந்தக் கடற்கரையில் பெற்ற அதே முக்கியத்துவத்தை, ஓ.பன்னீர் செல்வம் என்ற ஒற்றை மனிதனின் இறுகிய தியானமும் பெற்றுள்ளது. தியானத்துக்குப் பிறகு தன் மௌனம் கலைத்த பன்னீர் செல்வம் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. அமைதியே உருவான அந்த ஒற்றை மனிதனின் நிதானமான வார்த்தைகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும், கோடிக்கணக்கான தொண்டர்களுடைய மனச்சாட்சியின் குரல் பேரிரிசைச்சலாய் ஒலித்தது. “நான் வேண்டாம் என்று சொல்லியும் க…

  4. சசிகலா அவசரம்: எம்.எல்.ஏ.,க்கள் கோபம் முதல்வர் பதவியை பிடிக்க, சசிகலா மேற்கொண்ட அவசர நடவடிக்கை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., மறைந்ததும், அ.தி.மு.க., பொதுச் செயலர் மற்றும் முதல்வர் பதவிக்கு, கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டது. ஜெ., இருந்த போதே, இரு முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார். பொதுச் செயலர் பதவியில், சசிகலாவை அமர வைக்க, அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். அதற்காக, கட்சி நிர்வாகிகளை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எதிர்த்தவர்களுக்கு, முக்கிய பதவி வழங்கப்படும் என, வாக்குறுதி வழங்கப்பட்டது. பலர் கவனிக்கப்ப…

  5. முரண்பாடு! சசிகலா பதவியேற்பு தொடர்பான கவர்னர் அதிகாரத்தில்...: இரு வேறு கருத்துக்கள் நிலவுவதால் தொடரும் குழப்பம் தமிழக முதல்வராக, சசிகலா பதவியேற்பது தொடர்பாக, எந்த உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில், பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து முடிவெடுக்க, அவகாசம் எடுத்துக் கொள்ள, கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், பல்வேறு தரப்பினர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதால், குழப்பம் தொடருகிறது. அ.தி.மு.க., பொதுச் செயலராக பதவியேற்றுள்ள சசிகலாவை, கட்சியின் சட்டசபை தலைவராக ஏற்பதாக, கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, தமிழக முதல்வர…

  6. ஜெ., ஆதரவு அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா ஏன்? ஜெ.,வால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது, அரசு வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலராக பணியாற்றி, ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடரமணன், முதல்வர் அலுவலக செயலராக பணியாற்றினார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, ஜெ.,க்கு எடுத்துரைத்து, அவருக்கு பெயர் கிடைக்க வழிவகுத்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடும் விமர்சனம் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ.,வின் நம்…

  7. எம்.எல்.ஏ.,க்களை கண்காணிக்க சசிகலா உறவினர்கள் ஏற்பாடு சசிகலா முதல்வராவதை விரும்பாத, அ.தி. மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திசை மாறாமல் இருக்க, அவர்களை, சசிகலாவின் உறவினர் கள், ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமனம் செய்யப்பட்ட சசிகலா, முதல்வராக முடிவு செய்தார். அதன்படி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், சட்டசபை குழு தலைவராக, அவரை தேர்வு செய்தனர். பெரும்பாலானோர், விருப்ப மின்றி, சசிகலா உறவினர்களின் நெருக்கடியால் சம்மதித்துள்ளனர். சசிகலா மீது அதிருப்தியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர்பன்னீர்செல்வம் உட்பட முக்கிய…

  8. நிச்சயமாக தேர்தலில் போட்டி: தீபா அறிவிப்பு சென்னை: ''ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மர்மம் உள்ளது,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்தார். அவர் கூறியதாவது: மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவருக்கு அளிக்கப்படும், சிகிச்சை குறித்த விபரங்களை கேட்டு வருகிறேன். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், மர்மம் உள்ளது என்பதை, நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.ஜெ., மறைந்து, இரண்டு மாதங்களுக்கு பின், நிருபர்களை சந்தித்து, மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்; அது ஏற்புடையதாக இல்லை. குடும்பத்தாரிடம் சிகிச்சை குறித்து தெரிவித்ததாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர்; எந்…

  9. ‘சிட்டி’யின் சிறகுகளை வெட்டிய சசிகலா! - பாவம் பன்னீர் பன்னீர்செல்வம் 3-வது முறையாகக் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல்வர் ஆனபோது, ‘இந்த முறையாவது மிச்சம் இருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு நம்மை ஆளவிடுவார்களா’ என்ற மைண்ட் வாய்ஸ் அவரது எண்ணத்தில் ஓடியிருக்கும். ஆனால், இப்போது மூன்றாவது முறையாகவும் அவரது பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. டான்சி வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வர் பதவி வகிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் 2001-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்புச் சொன்னபோது, ‘அடுத்த முதல்வர் யார்?’ என்று அ.தி.மு.க-வில் மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. அப்போது சசிகலாவின் ஆதரவாளர் என்று அறியப்பட்ட - முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன ஓ.பன்னீர்செல்…

  10. ஜெயலலிதாவிற்கு செலவு செய்த அந்த குடும்பத்தார் யார்?: தீபா கேள்வி மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு ஆன செலவினை வழங்கிய குடும்பத்தினர் யார் என்று தமக்கு தெரியவில்லை என்று தீபா கூறியுள்ளார். சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த…

  11. தீபா அணியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்! பின்னணியில் தி.மு.க.?! அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் 80 பேர் வரையில் தீபா ஆதரவு நிலை எடுத்திருப்பதாக வெளியான தகவல்களால் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் அவசரக் கூட்டம், மீண்டும் நடக்கும் எனத் தெரிகிறது. தீபா அணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சென்றாலும், தீபாவைப் பொறுத்தவரையில் தனிக்கட்சி என்ற எண்ணத்தில் இல்லை என்றே சொல்லப்படுகிறது. "அ.தி.மு.க தலைமைப் பொறுப்பை ஏற்பேனே தவிர புதிய கட்சியைத் தொடங்க மாட்டேன்" என்று தன் நட்பு வட்டங்களில் தீபா தெளிவாகச் சொல்லி வருகிறார். அதே வேளையில் தி.மு.க-வில் ஸ்டாலினுக்கு நெருக்கமான மூத்த தி.மு.க எம்.எல்.ஏ-க்களை தொடர்பு கொண்டு அ.தி.மு.க எ…

  12. ஜெ., நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம்? சென்னை: மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருப்பதற்காக அமர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று (செவ்வாய் கிழமை) இரவு 9 மணிக்கு ஜெ., நினைவிடத்திற்கு சென்ற ஓ. பன்னீர் செல்வம் 15 நிமிடங்களுக்கு மேலாக அமைதியாக கண்மூடி தியானம் செய்து வருகிறார். முதல்வர் பன்னீர் செல்வம் ஜெ., சமாதியில் திடீரென உண்ணாவிரதம் இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1706390

  13. ஆதரவாளர்கள் போல் நடித்து சசிகலா வீட்டிற்குள் நுழைந்து சங்கு ஊதியவர்கள் கைது! சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதரவாளர்கள் போல் நடித்து அவர் இல்லத்துக்குள் நுழைந்து சங்கு ஊதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தங்கியுள்ள இல்லத்திற்கு நேற்று நள்ளிரவு பத்து பேர் அவரது புகழ்பாடியபடி வந்தனர். வீட்டின் முன்பு நின்று சசிகலாவை வாழ்த்து பாட்டுப்பாடினர். தொடர்ந்து வீட்டிற்குள் சென்று சசிகலாவைச் சந்தித்து வாழத்துகூற அவர்கள் விரும்பினர். அதற்கு அப்பகுதியில் இருந்த காவலர்கள் முதலில் அனுமதி மறுத்தனர். பின்னர், வாழ்த்து தெரிவிக்கத்தானே கோருகிறார்கள் என்று உள்ளே அனுமதித்தனர். ஆனால்…

  14. கேள்விக்குறியான சசிகலா பதவியேற்பு: வெறிச்சோடிய போயஸ் கார்டன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் சென்னை திரும்பாததால், சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி குறித்துக் கேள்வி எழுந்துள்ள நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.…

    • 2 replies
    • 529 views
  15. சசிகலா தமிழக முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதிர்ச்சி முடிவு! #SurveyResults அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, சமுக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அவர் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சசிகலாவை, மக்கள் முதல்வராக ஏற்றுக் கொள்கிறார்களா என நேற்று சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் பலரும் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். 'தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பதை... 'என்ற கேள்விக்கு, 97.13 சதவிகிதம் பேர் 'ஏற்றுக்கொள்ளவில்லை' என தெரிவித்து வாக்களித்துள்ளனர். வெறும் 2.03 சதவிகிதம் பேர் ம…

  16. ஓமந்தூரார் முதல் ஓ.பி.எஸ் வரை: தமிழக முதல்வர்களின் இயல்பும் பின்னணியும் எளிமையே உருவான காமராஜர்... கேட்போரை வசீகரித்துக் கட்டிப்போடும் பேச்சாற்றல் திறன் கொண்ட அண்ணா... திரைக்கதை வசனத்தில் அசத்தும் கருணாநிதி... பன்மொழி வித்தகர் ஜெயலலிதா என பல்வேறு விதமான, எண்ணற்ற திறமைகளை தன்னகத்தே கொண்ட முதல்வர்களை தமிழகம் இதுவரை கண்டுள்ளது. ஒவ்வொரு முதல்வருக்கும் ஒவ்வொரு பின்னணி, தனித்தனி இயல்பு உண்டு. பெரும்பாலும் இவர்கள் அனைவருமே பல்வேறு சந்தர்ப்பங்களில் அடிமட்டத்தில் இருந்து போராடி, படிப்படியாக முன்னேறி முதல்வர் பதவி வரை உயர்ந்தவர்கள். ஒரே நாளில் உச்சாணிக்கு வந்தவர்கள் அல்லர்... இந்தியா சுதந்திரமடைந்தது முதல் தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகியிருக்கும் ஒ.பன்னீ…

  17. பன்னீர்செல்வத்தையும் புறக்கணித்தார் மோடி! - சசிகலா பதவியேற்பு 'பரிதவிப்பு' பின்னணி #VikatanExclusive சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சசிகலாவுக்காக காத்திருக்கிறது. ஊட்டி நிகழ்ச்சியை தள்ளிப் போட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ், 'பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்' என அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக நம்பினர். அவர்கள் நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. ' சொத்துக்குவிப்பு வழக்கைக் காரணம் காட்டி பதவியேற்பை ஒத்திவைத்துவிட்டனர். இதனால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் அபிமானிகள். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ' தனிப்பட்ட காரணங்…

  18. சசிகலாவுக்கு நெருக்கடி : ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து முறையிட இன்று டெல்லி செல்கிறார். சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வந்த பிறகுதான் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்த உள்ளார். தீர்ப்பு வருவதற்கு முன்னர் சசிகலா பதவியேற்றால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் என ஸ்டாலின் கருத்து தெரிப்வித்துள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்டாலின்! http://www.vikatan.com/news/tamilnadu/79996-stalins-sudden-vis…

  19. ராகவா லோரன்ஸின் சுத்துமாத்து அம்பலம்

    • 0 replies
    • 452 views
  20. கார்டனில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? பி.ஹெச்.பாண்டியன் சந்தேகம் ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாகத் தகவல் வெளியானது என்றும், அதனால் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பவை குறித்த சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் கூறினார். சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று பி.ஹெச். பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நினைவிழந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்குப் பல்வேறு வகையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். அரவக்குறிச்சித் தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா போகப்போவதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரி…

  21. சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா! தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியில் இருந்து விலகுவதாக சாந்தா ஷீலா நாயர் விளக்கம் அளித்திருக்கிறார். http://www.vikatan.com/news/tamilnadu/80011-shantha-sheela-nayar-resigns.art

  22. கவர்னர் மாளிகை முன்பு கூடுதல் பாதுகாப்பு சென்னை : கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் எனக்கிடைத்த தகவலையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு: சென்னை-கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையான ‛ராஜ்பவன்' முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பு: சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் சென்னை பல்கலையில் நடைபெற்று வந்த நிலையில், கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டதாக தகவல…

  23. மு.க.ஸ்டாலின் சொன்ன 'சின்னம்மா' கதைகள்! திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம்-லதா தம்பதியரின் மகள் ஸ்ரீஜனனியின் திருமணம், திருச்சியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இத்திருமணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் தற்போது பரவி வருகின்றன. அதை உங்களிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஒரு ஓட்டுக்கு 3 முதல்வரைப் பார்த்த மாநிலம் என்ற தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதைப் படித்துவிட்டு, பலரும் சிரிக்கிறார்கள். சிலர் வேதனைப்படுக…

  24. மிரட்டியதால் கையெழுத்திட்டேன் - அ.தி.மு.க கவுன்சிலர் மகிழன்பன் அது வெத்து பேப்பர் தான், எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை

  25. முதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னரிடம் அனுமதி கேட்க தயாரா வோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவை அடுத்து, பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். எளிமையான முதல்வராக, மக்கள் விரும்பும் வகையில், செயல்பட்டு வந்தார். அவரே, முதல்வராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இருந்தது. பன்னீருக்கு நற்பெயர் கிடைப்பதை விரும்பாத சசிகலா, முதல்வராக துடித்தார். முதல்வரை மிரட்டி, ராஜினாமா க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.