Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர்கள் பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: சுப்பிரமணியன் சுவாமி வரம்பு மீறிய கருத்து! தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரு…

  2. அ.தி.மு.க., மீது பா.ஜ., பரிவு காட்டுவது ஏன் அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள, ஜனாதிபதி தேர்தல் வரை, அ.தி.மு.க., என்ற, 'தேன் கூடு' கலையாமல் பார்த்துக் கொள்ள, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, எதிர்த்து வந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பின், தமிழக அரசு நிர்வாகத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தலையிட துவங்கினார். அதை தொடர்ந்து, 'உதய்' மின் திட்டம், உணவு மானிய திட்டம் போன்ற, ஜெ., கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசு திட்டங்களுக்கு, தமிழக அரசு திடீரென பச்சைக் கொடி காட்டியது. ஜெ., போன்ற பெரிய ஆளுமை இல்லாமல், பலவீனமாக இருந்த அ.தி.மு.க.,வ…

  3. தி.மு.க-வை குறிவைக்கும் பி.ஜே.பி! - ஐ.டி ரெய்டில் ஆயிரம் கோடி கரூர் அன்புநாதன் வீட்டில் உருவான ரெய்டு சூறாவளி, சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன், சர்வேயர் ரத்தினம் என பலரின் கணக்குகளை முடித்துவிட்டு, தற்போது ஈ.டி.ஏ., ஸ்டார், புகாரி குழுமங்களை மையம் கொண்டுள்ளது. ஈ.டி.ஏ-வின் ‘புரொஃபைல்’! இந்தியாவில் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் எப்படியோ... அப்படி அரபு நாடுகளில் ஈ.டி.ஏ என்ற ‘எமிரேட்ஸ் டிரேடிங் ஏஜென்சி’. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்துக்கு ‘பிசினஸ் நெட்வொர்க்’ இருக்கிறது. கட்டுமானம், சாலைப் பணி, ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, மின் வணிகத் திட்டங்கள், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, மெட்ரோ ரயில், ஏர்கண்டிஷன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், ம…

  4. சிம்புவின் வேண்டுகோள் https://www.facebook.com/tnpoltics/videos/952102628222765/

    • 2 replies
    • 536 views
  5. எதிர்பார்ப்புகளை கிளப்பும் நடராஜன் பொங்கல் விழா.. ஜெ. வெளியேற்றிய பின் இவர் பேசியவை இது தான்! தஞ்சாவூரில் ஆண்டுதோறும் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப் பிரபலம். இந்த ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சமே இல்லை. வழக்கமாக நடப்பதுதான் என்றாலும், இதுவரை நடந்தது நடராஜன் நடத்திய பொங்கல் விழா. இப்போது அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை வகிக்கும், விரைவில் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என சொல்லப்படும் சசிகலாவின் கணவர் நடராஜன் நடத்தும் பொங்கல் விழா என்பதுதான் பரபரப்பும், எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கக் காரணம். என்ன பேசப்போகிறார் நடராஜன்? ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் கணவ…

  6. அன்று சசிகலா... இன்று ஓ.பன்னீர்செல்வம்! அ.தி.மு.க.வுக்கு திருமாவின் கிரீன் சிக்னல்? அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து சந்தித்து வருவதால் வரும் தேர்தல்களில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீரை திறந்து விட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற சந்திரபாபு நாயுடு, 2.5 டி.எம்.சி தண்ணீரை திறப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித…

  7. ‘மறுக்கப்பட்ட’ பதவி... ‘கைப்பற்றிய’ தளபதி! ப.திருமாவேலன் ‘ஒட்டுமொத்தமான உங்களுடைய கரவொலி, கலைஞர் வீற்றிருக்கும் அவருடைய இல்லம் வரை கேட்கும் என நான் தெரிவித்து, ஸ்டாலின் அவர்களை செயல் தலைவராக இங்கே உரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ - அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இருந்து பேராசிரியர் அன்பழகன் சொன்னார். தன் மகன் வயதுள்ள ஸ்டாலினை வரவேற்று அன்பழகன் பேசினார். அவர், கருணாநிதியைவிட ஒரு வயது மூத்தவர். திருவாரூரில் சாதாரணத் தொண்டராகக் கட்சிப் பணி ஆற்றிவந்த கருணாநிதி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த அன்பழகனை அழைத்துவந்து தனது ஊரில் கூட்டம் பேசவைத்தார். அதே அன்பழகன், இன்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினை, கட்சியின் செயல் தலைவராக 70 ஆண்டுகள் கழித்…

  8. டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் உறுதியானது! அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ.28 கோடி அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 1991 முதல் 1995 வரை வெளிநாட்டில் பலகோடி ரூபாய் முதலீடு செய்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து ரூ.28 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து, டி.டி.வி.தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், டி.டி.வி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தாெகையை உறுதி செய்ததோடு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தினகரனை திவாலானவராக அறி…

  9. ஜெயலலிதா - மயக்கம் முதல் மர்மம் வரை | படக்கதை - 1

  10. சசிகலா எனும் alpha male ஆர். அபிலாஷ் ஜெயலலிதாவின் இடம் யாருக்கு எனும் கேள்வி எழுந்த போது ஒரு நண்பர் சொன்னார்: “அதிமுக முழுக்க பா.ஜ.கவின் கையில் போய் விட்டது. அவர்கள் அதிமுகவை டம்மியாக பயன்படுத்தி ஆளப் போகிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக ஒரு பிரபலத்தை முன்வைப்பார்கள். அதற்குள் அதிமுகவின் தலைமையை முடிந்தவரை நிர்மூலமாக்கி விடுவார்கள். அதிமுகவின் கட்டமைப்பை, வாக்கு வங்கியை தமக்கு சாதகமாய் பயன்படுத்தி தமிழகத்தை கவர்வதே பா.ஜ.கவின் திட்டம்”. இது நாம் பலரும் அறிந்ததே. ஆனால் அடுத்த தேர்தல் வரையிலான கட்டத்தில் அதிமுகவுக்கு என்றொரு தலைவர் வேண்டுமே? அது யார்? அது சசிகலாவாகத் தான் இருக்கும் என்றார் நண்பர். “ஏனென்றால் சசிகலா உ…

  11. சசிகலா திறக்கும் முதல் சிலை இது! அ.தி.மு.க.வினரை திருப்திப்படுத்த புது திட்டம் #VikatanExclusivePicture ஜெயலலிதா திறப்பதாக இருந்த எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா திறந்து வைக்க உள்ளார். இந்த சிலை திறப்பால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மற்றும் அதிருப்தி அ.தி.மு.க.வினரின் ஆதரவு சசிகலாவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகி விட்டார் சசிகலா. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகை நிறு…

  12. 'பன்னீர்செல்வம் பலம் பெற்றுவிடக் கூடாது!' - கடுகடு கார்டன்; தகிக்கும் தம்பிதுரை தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 23-ம் தேதி தொடங்குகிறது. புதிய திட்டங்கள், நிவாரணம், அதிகாரிகளுடன் கலந்தாய்வு என பரபரப்பாக இயங்கி வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'முதல்வராக சசிகலா பதவியேற்பதற்காக குறிக்கப்பட்ட நல்ல நாட்கள் தள்ளிக் கொண்டே போகின்றன. பிரதமரை நேரடியாகச் சந்திக்கச் சென்ற தம்பிதுரைக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு எளிதாக வர முடிந்த சசிகலாவால், முதல்வர் பதவியை நோக்கி நகர முடியவில்லை. கடந்த சில நாட்களாக வெளிப்பட்டு வரும் முட்டல், மோதல்கள் நேற்று பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கின. …

  13. தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார் தமிழக சட்டப்பேரவையை வரும் 23-ம் தேதி ஆளுநர் கூட்டியிருப்பதாக சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக ஆளுநர் இந்திய அரசமைப்பு பிரிவு 174(1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை - 600009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார். இந்திய அரசமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் 2017-ஆம…

  14. மிஸ்டர் கழுகு: ஜெ. ‘மரண’ விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா! ‘‘ஏதோ வானிலை மாறுதே” - ஹம் செய்தபடியே என்ட்ரி ஆனார் கழுகார். அவரிடம், ‘‘நீங்கள் இப்படிப் பாடினால் அதற்கு ஏதோ அர்த்தம் இருக்கும்’’ என்று கொக்கிப் போட்டோம். ‘‘சொல்கிறேன்... ஜனவரி 12-ல் சசிகலா முதல்வர் பதவி ஏற்பார் என்ற பேச்சு பலமாக அடிபட்டுவந்ததல்லவா... இப்போது அது தாமதம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.” ‘‘ஏனாம்? என்ன சிக்கல்?” ‘‘ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், 6 மாதங்களுக்கு முன்பே ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அதற்குப் பிறகு ஜெ. உடல்நிலை, மரணம் மற்றும் சில காரணங்களால் அதில் தீர்ப்பு வெளியாகாமலேயே இ…

  15. சொத்துக் குவிப்பு வழக்கு! - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்? ஜெயலலிதாவின் 20 ஆண்டு காலத் துயரம், சொத்துக் குவிப்பு வழக்கு. 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவைத் துரத்தத் தொடங்கிய இந்த வழக்கு, அவர் மரணமடையும் இறுதி நொடி வரை கொடுங்கனவாக அவரை இறுகப் பற்றியிருந்தது. 2016 டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதாவுக்கு நேர்ந்த மரணம் மட்டுமே, அந்தக் கொடுங்கனவில் இருந்து அவரை விடுதலை செய்தது. அதையடுத்து, தற்போது ஜெயலலிதாவின் இடத்துக்கு வந்துள்ள, சசிகலாவுக்கு அந்த வழக்கு பெருந்துயரமாக மாறி நிற்கிறது. ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லாத நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு உருவாக்கப்போகும் விளைவுகள் வீரியமானவை. உச்சநீதி மன்றம் அந்த வழக்கில் அளிக்கப்போகும் தீர்ப்பைப் பொறுத்…

  16. தீபாவுக்கு குவியும் ஆதரவு: அதிர்ச்சியில் சசி வட்டாரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவுக்கு, 60 சதவீத, அ.தி.மு.க., தொண்டர்களும், 50 சதவீத பெண்களும், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள தாக, உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இதனால், கதி கலங்கியுள்ள, சசி வட்டாரம், மாவட்டம் தோறும் சமாதான முயற்சியை தீவிரப்படுத்த, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.சேலம், வேலுார், மதுரை, ஈரோடு, நெல்லை, துாத்துக்குடி உட்பட, தமிழகம் முழுவதும், தீபா பேரவை துவங்கி, உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. 'வாட்ஸ் ஆப்' வழியாகவும், ஆதரவு பெருகுகிறது. அ.தி.மு.க.,வில் பதவியில் உள்ளவர…

  17. முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அவரது நம்பிக் கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.அந்த ளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதா வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகை யில், பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது, ஜெய…

  18. மதுரை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, அரசுடமையாக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை பொது நல வழக்குகள் மைய நிர்வாக அறங்காவலர், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, சினிமா, அரசியலில் ஈடுபட்டார். சினிமாத் துறையில், பல கோடி ரூபாய் சம்பாதித்தார். 1989ல், அ.தி.மு.க., பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, சட்டசபை தேர்தலில், முதன்முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்…

  19. மிரட்டலுக்கு தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள்; மிரட்டுபவர்களுக்கு தீபா எச்சரிக்கை ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆக்க வேண்டும் என, கட்சியின் நிர்வாகிகள் பலரும்; பெரும்பாலான தொண்டர்களும் விரும்பினர். ஆனால், அதை முறியடித்து, கட்சியின் அடிப்படை விதிகளில் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, பொதுக்குழு மூலம், சசிகலா, கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டு விட்டார். இல்லம் தேடி இதனால், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்து, தீபாவை, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., பெயரில் தனி இயக்கம் காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், …

  20. தமிழ்நாடு சாதிகள் பட்டியல் இந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போகுதுன்னு. நம்ம மூதாதையார் நல்லது எவ்வளவு சொன்னாங்களோ, கூடவே கெட்டதையும் விதைச்சுட்டு போயிருக்காங்க.. நமக்குள்ள சகோதரத்துவம் இருக்கா இல்லையான்னு பாக்கறத விட, என்ன சாதின்னு பாக்கற பைத்தியக்கார பழக்கம் இன்னமும் இருக்கு. மேற்சொன்ன ரெண்டு வகையறா மக்களும் தெரிஞ்சனும்கறதுக்காகவே இந்த பட்டியல்.இத்தன சாதிகள் இருந்த தமிழ்நாடு அரசு என்னதான் பண்ணும், எப்படிதான் சலுகைகளை பிரிகும்னு ஆராய்ச்சி பண்ண தோணுது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இவை முறையே 1. ஆதிதிராவிட…

    • 0 replies
    • 160.9k views
  21. ' தீபா வருகையால் என்ன நடக்கும்?' -உளவுத்துறை அறிக்கையைக் கேட்ட ஓ.பி.எஸ். எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரசியல் பிரவேசத்தை அறிவிக்க இருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ' உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தீபாவின் செயல்பாடுகள் பற்றியும் அவரது வருகையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதைப் பற்றியும் அறிக்கை கேட்டு வாங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பிறகு, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியானது. ஆனால், கடந்த சில நாட்களாக தீபாவை முன்னிலைப்படுத்துகின்றன ஊடகங்கள். அ.தி.மு.கவில் உள்ள நிர்வாகிகள் சசிகலா பின்னால் அணிவகுத்தாலும், தொண்டர்களின் மனநிலை வேறு …

  22. இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், கணவர் கொடுமை, கணவரின் உறவினர்களால் கொடுமை போன்ற 7 குற்றச் செயல்களை மையமாக வைத்து 53 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோயம்புத்தூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 53 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக இந்தியாவில் ஜோத்பூர் இருக்கிறது. கோயம்புத்தூரில் 0.01 குற்றச் செயல் என்றால் ஜோத்பூரில் 0.54 என பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் நிகழ்கிறது. கோயம்புத்தூரில் முதலிடம் பிடிக்க பல…

  23. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியிலிருந்து நீக்கிய மத்திய அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில்…

  24. "சசிகலா முதல்வர் பதவி ஏற்கவிருக்கிறாரா?’’ பொன்னையன் பதில்! அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்குமாறு வலியுறுத்தி, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சசிகலாவிடம் நேரில் வழங்கப்பட்டது. பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வெளிமாவ…

  25. காயமே இது பொய்யடா! வாஸந்தி நமது முன்னோர்கள் - சித்தர்கள், இலக்கியவாதிகள், ஆன்மிகவாதிகள் எல்லோரும் மகா தீர்க்கதரிசிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் நான் உள்வாங்கிக்கொள்ளாமல் போனதுதான், இன்றைய எனது திகைப்புக்கும் ஆதங்கத்துக்கும் காரணமாக இருக்க வேண்டும். வேறு எந்தப் புத்தாண்டு தினத்தன்றும் எனக்கு ஏற்பட்டிராத நிராசையும் கூச்சமும் அச்சமும் இந்த 2017- ம் விடியலில் எனக்கு ஏற்பட்டதற்கு எனது பேதமையே காரணம். 'உலகமே ஒரு நாடக மேடை; எல்லோரும் நடிகர்கள்' என்றார் ஷேக்ஸ்பியர் நானூறு ஆண்டுகளுக்கு முன் - எல்லாமே மாயை என்று நமது சித்தர்கள் சொன்னதுபோல. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.