தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
உலகையே திரும்பி பார்க்க வைத்த, மாணவர்களின், சென்னை, மெரினா போராட்டத்தை, தேச விரோத சக்திகள் தங்களின் விஷமத்தால், கொச்சையாக்கி விட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதி வழியில் நடந்த, ஒரு வார போராட்டத்தை வன்முறையாக்கி, அதில் குளிர் காய்ந்தனர். காவல் நிலையங்கள், குடிசைகளுக்கு தீ வைத்து, கலவரத்தை துாண்டினர். போலீசுக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் மறியல்களால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பெண்கள், பள்ளி மாணவர்கள் பரிதவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, ஜன., 17 காலை, சென்னை, மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லம் முன், மாணவர்கள் அமைதியாக போராட்டத்தை துவங்கினர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கடற்கரையை சுத்தம் செய்தல் உள்ளிட்…
-
- 0 replies
- 545 views
-
-
சொந்தக் கட்சியினரே ‛சூனியமா?' ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு பற்றி பன்னீர் சென்னை: என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சொந்தக் கட்சியினரே இப்படி செய்கின்றனரே என, அ.தி.மு.க., மூத்த தலைவர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம், வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின், மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பன்னீர்செல்வம், அதன் பின், ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்னை வந்து, முதல்வர் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார். சரியான தூக்கம் இல்லை என்றும் புலம்பிக் கொண்டிருந்த அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்…
-
- 0 replies
- 396 views
-
-
தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாகவும் பதவியேற்று ஆட்சி நடத்திவருகின்றார். கடந்த இரு முறையும் முதலமைச்சராக பதவி ஏற்று பின்னர் அப்பதவியில் இருந்து இறங்கி மீண்டும், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப்பீடம் ஏறினார். இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 5ம் திகதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடாமல் முதலமைச்சராகி தமிழக வரலாற்றில் அவர் சாதித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இது அவருக்கு அதிஷ்டம் என்றும் கூறுவோர் இருக்கவே செய்கின்றனர். இதற்கிடையில் தான் அவருக்கு இன்னொரு வாய்ப்பும் தேடிவருகின்றது. எதிர்வரும் 26ம் திகதி குட…
-
- 0 replies
- 509 views
-
-
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக் களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அமைதி காத்தனர். மெரினாவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அனைத்து வழிகளையும் போலீஸார் அடைத்தனர். இந்தச் சூழலை அறிந்த மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் பெண்களும் உடனடியாக கடற்கரையை நோக்கி படையெடுத…
-
- 0 replies
- 661 views
-
-
தடியடி ஏன் நடத்தப்பட்டது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி அமைதியாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் ஏன் தடியடி நடத்தினர் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் நீதிபதி, போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கொண்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத…
-
- 0 replies
- 542 views
-
-
மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் ட்ராபிக் மற்றும் அங்குள்ள கூட்டத்தை கணக்கிட முடியும். அதன்படி தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ். 2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowd sourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித…
-
- 0 replies
- 508 views
-
-
இன்று இந்தக் கட்டுரையை படிக்க நேர்ந்தது.. கனன்று கொண்டிருக்கும் 'சல்லிக்கட்டு' போராட்டத்தின் காரணிகளை சற்றே அலசியிருக்கிறது..! டெல்லிக்கட்டு! அலுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் இளைஞர்களுக்கு? எல்லோரையும் கும்பல் மனோபாவம் ஆவேசத்தில் தள்ளியிருக்கிறதா? ஒரு வட்டார விளையாட்டாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுவந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எப்படி இவ்வளவு பெரிய களேபரமானது? ஒரு சின்ன கிராமமான அலங்காநல்லூரை மையமாகக் கொண்டு தொடங்கிய போராட்டம் எப்படி சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை என்று தமிழகம் எங்கும் பரவியது?…
-
- 4 replies
- 810 views
-
-
பன்னீருக்கு நெருக்கடி பதவி விலக பன்னீருக்கு மறைமுக நெருக்கடி ஜல்லிக்கட்டு போராட்டம் நீடிப்பதன் பகீர் பின்னணி ஜல்லிக்கட்டு போராட்டத்தை பயன்படுத்தி, முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக, அ.தி.மு.க., வில் ஒரு தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதன் மூலம், அவரை பதவி விலகச் செய்து, சசிகலாவை முதல்வராக்க காய் நகர்த்துவதாக வும், தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக, ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்த முடியவில்லை. 'இந்த ஆண்டு தடையை நீக்கி விடுவோம்' என, மாநில அரசு உறுதி அளித்தது; மத்திய அமைச்சர்களும் உத்தரவாதம் கொடுத்தனர். ஆனாலும், தடை நீக்கப்படவில்லை…
-
- 0 replies
- 376 views
-
-
பிரதமரை சந்திக்க முடியாத அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கடந்த வியாழனன்று, பிரதமரை சந்திக்க தீவிரமாக முயன்றும் முடியாமல், ஆறுதலுக் காக வெள்ளியன்று உள்துறை அமைச்சரை சந்தித்த, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கடைசியாக வெள்ளியன்று ஒரு திருப்திக்காக, ஜனாதிபதி யையும் சந்தித்து தமிழகம் திரும்பியுள்ளனர். வறட்சி நிவாரண நிதி கோரிக்கைக்காக ஏற்கனவே கேட்டிருந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் வரச் சொன்னதால், முதல்வர் பன்னீர்செல்வம் டில்லிக்கு வந்திருந்தார்.இந்த சந்திப்பை, தமிழகத்தில் பற்றி எரியும் ஜல்லிக்கட்டு பிரச்னைக்காகவும் முதல்வர் பயன்படுத்தப்போகிறார் என்பதை அறிந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் உத்தரவு…
-
- 0 replies
- 488 views
-
-
சென்னை:தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க, தன்னெழுச்சி யாக திரண்டுள்ள மாணவர் கூட்டத்தை, திசை திருப்பும் வேலைகளில், தேச விரோத சக்திகள் களம் இறங்கியுள்ளதாக, தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இசை அமைப்பாளருமான, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி கூறியுள்ளார். அதனால், 'சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்' என, மாணவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன், கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் உதடுகளும், ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை உச்சரிக்க கருவியாக இருந்தது, 'ஜல்லிக்கட்டு... ஜல்லிக்கட்டு..'என்ற ஆல்…
-
- 0 replies
- 319 views
-
-
புது கட்சி துவங்காவிட்டால்... தீபாவுக்கு ஆதரவாளர்கள் கெடு வேலுார்:'உடனடியாக தனிக் கட்சியை துவங்கா விட்டால், வேறு அணிக்கு சென்று விடுவோம்' என, தீபாவுக்கு, அவரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில், அதிகளவு ஆதரவு உள்ளது. ஆம்பூரில் துவங்கப்பட்டுள்ள தீபா பேரவையில், இதுவரை, இரண்டு லட்சம் பேர் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தீபா தனிக் கட்சி துவங்குவார் என, அவரது தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தனிக் கட்சி துவங்காத தால் ஏமாற்றம் அடைந்தனர். தீபா பேனர் வைத்தவிவகாரத்தி…
-
- 3 replies
- 634 views
-
-
தமிழர்களின் உயரிய கலாச்சாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும், மத்திய அரசு தமிழர்களின் கலாச்சார விருப்பங்களை காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். நரேந்திர மோதியின் ட்விட்டர் செய்தி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி குறிப்பிடுகையில், 'தமிழகத்தின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து நாம் பெருமையடைகிறோம். தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் செய்தியில், 'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. மேலும் பல முன்னேற்றங…
-
- 0 replies
- 620 views
-
-
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினா போராட்டம் தொடரும்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்; 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர் சங்கர் மற்றும் போலீஸார் | படம்: எல்.சீனிவாசன் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்வரை மெரினாவில் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று அப்போராட்டத்தில் பங் கேற்று வரும் இளைஞர்களும், மாணவர்களும் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், சென்னை மெரினாவில் நடத்தி வரும் …
-
- 0 replies
- 327 views
-
-
மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்: முதல்வர் ஓபிஎஸ் பேட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: பிடிஐ மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற பிரதமர் உறுதி அளித்தார். அவரின் உறுதியைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்…
-
- 0 replies
- 279 views
-
-
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் : G.V. பிரகாஷ் குமார்
-
- 4 replies
- 488 views
-
-
கூட்டம்! முதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...: பன்னீர் சொல்லுக்கு கட்டுப்படுமா ஆளுங்கட்சி? தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில், சட்டசபை கூட்டம், நாளை துவங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கூடும் இந்த கூட்டத்திற்கு, அ.தி.மு.க., சசிகலாவின் அதிருப்தியாளர் என கருதப்படும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கப் போவதால், ஆளுங்கட்சி இவருக்கு கட்டுப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின், முதன்முறையாக, நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில், சட்டசபை குழுக்கள் அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால்…
-
- 0 replies
- 326 views
-
-
முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி சசிகலா குடும்பத்தினர் உத்தரவு காரணமாக, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கவிருந்த, அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை முதல்வராக பணியாற்றியவர் என்பதால், அவர் முதல்வரானதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் …
-
- 0 replies
- 575 views
-
-
ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் இந்த சட்டமூலத்திற்கு மூன்று மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன எனவும் சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அமைச்சகங்களே இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளன எனவும் ஒப்புதல் அளித்த சட்டமூல வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு சட்டதிருத்த வரைவை அனுப்பும் எனவும்தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறி…
-
- 5 replies
- 658 views
-
-
மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்! எருதுப் புரட்சி! வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என்ற வாசகம் பொறித்த பனியனோடு அலுவலகம் வந்து சேர்ந்த கழுகாரிடம், ஜல்லிக்கட்டிலிருந்தே கேள்விகளை ஆரம்பித்தோம். ‘‘மத்திய அரசு நினைத்திருந்தால்... தமிழக எம்.பி-க்கள் போராடி இருந்தால்... ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டம் கொண்டுவந்திருக்கலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சாட்டையடி கொடுத்திருக்கிறாரே?’’ ‘‘உண்மைதான். அவர் இதற்கு தெளிவான முன்னுதாரணமும் கொடுத்திருந்தார். ‘இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என கடந்த 75-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதனால் அவர் பிரதமராகத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. …
-
- 0 replies
- 834 views
-
-
“தயார் நிலையில் துணை ராணுவம்” - தமிழக அரசுக்கு செக் வைக்க துடிக்கும் மோடி அரசு! தலைவர்களே இல்லாமல் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக இளைஞர்கள் போராட்டக்களத்தில் இறங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்தப் போராட்டத்தைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாமல் தவித்து வருகிறது. எந்தவித வன்முறையும் இல்லாமல், அறவழியில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஆரம்பித்தபோது, அதை சாதாரணமாக நினைத்தது தமிழக காவல்துறை. அதன்பிறகு நாட்கள் செல்லச்செல்ல... அதன் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசைந்து நிற்கிறது. இந்த நிலையில், துணை ராணுவம்மூலம் பூச்சாண்டி …
-
- 2 replies
- 576 views
-
-
பாய்சன்... பாயசம்... பன்னீர்! முதல்வரின் கதைக்குப் பின்னால் கண்ணீர் தமிழகத்தின் ‘கூஜா’ முதல்வர் என்று இதுநாள்வரை விமர்சிக்கப்பட்டு வந்த பன்னீர்செல்வம், தமிழக அரசின் ராஜாவாக முடிசூட்டிக்கொள்ளத் துணிந்துவிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலைகள், மூன்று முறை முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை முதல்வர் நாற்காலி கிடைத்தது. அப்போது, தன்னை முதல்வராக நினைத்து அந்த நாற்காலியில் அவர் அமரவில்லை. ‘தான் எதற்காக அமர்த்தப்பட்டு இருக்கிறோம், யாரால் அமர்த்தப்பட்டு இருக்கிறோம்’ என்பதை உணர்ந்து, அஞ்சி அஞ்சி அதில் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தன்னை ‘முதல்வர் பன்னீர்செல்வம்’ என்று அழைப்பதைக்கூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
முதல்வருக்கே தடை போட்ட துணை சபாநாயகர்: டில்லியில் 'தில்லாலங்கடி' ''என்னைச் சந்திக்க நேரம் தராத, பிரதமர், நரேந்திர மோடியை, நீங்களும் சந்திக்க வேண்டாம்,'' என, துணை சபாநாயகர் தம்பிதுரை தடை போட்டு, இம்முறையும் முதல்வர் பன்னீர்செல்வத்தை பாடாய் படுத்தியதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வறட்சி நிவாரண நிதி கேட்டு, ஒரு வாரத்திற்கு முன், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப் பட்டிருந்தது. இந்நிலையில், வியாழனன்று சந்திக்க வரும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டது.முதல்வர் டில்லி கிளம்புகிறார் என்ற தகவல் தெரிந்ததும், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா தரப்பும் சுறுசுறுப்பாகி, ஜல்லிக்கட்டு விஷயத்திற்கு, இந்த சந்திப்பை பயன்படுத்த திட்டமிடப்பட்டது.…
-
- 0 replies
- 462 views
-
-
சசி - பன்னீர் இடையே பனிப்போர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அம்பலம் முதல்வர், பன்னீர்செல்வத்திற்கும், அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவிற்கும் இடையே, பனிப்போர் நிகழ்ந்து வருவது, சசிகலா நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் அம்பலமாகி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக் கப்பட, பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தார். சசிகலாவே, முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை அறிக்கை வெளியிட்டார். அதற்கு, பன்னீர்செல்வம் எந்த பதிலும் தெரிவிக்க வில்லை. இந்நிலையில், தம்பிதுரை போன்றவர்களால், சசிகலாவுக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இடையே, பனிப்போர் ஏற்பட்டு உள்ளது…
-
- 0 replies
- 566 views
-
-
ஜல்லிக்கட்டு தடைக்கு தீர்வு என்ன? #YoutubeLive ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர் மற்றும் சென்னை மெரினாவில் ஆரம்பித்த போராட்டம் சங்கிலித் தொடர்போல... கோவை, சேலம், கடலூர், திருச்சி, சேலம், டெல்லி என எங்கும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கான போரட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் என மூன்று மாவட்டங்களில் மட்டும் நடந்துவந்த ஜல்லிக்கட்டு, இளைஞர்களின் எழுச்சியால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றி இளைஞர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், யூடியூப் லைவ்வில் அவற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்…
-
- 0 replies
- 635 views
-
-
திமிறி எழுந்த தமிழகம் : போராட்டத்துக்கான வேர்களைத் தேடும் உளவுத்துறை! "இது அன்பால, தானா சேர்ந்த கூட்டம்" என்று படையப்பா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் வசனம் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி நடக்கும் போராட்டத்துக்கு பொருத்தமாகி விட்டது. "எங்கெல்லாம் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள் உலக புரட்சியாளர்கள். அப்படித்தான், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உலகெங்கிலும் இருந்து ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடங்கிய போராட்டம் தற்போது, பல்…
-
- 0 replies
- 565 views
-