Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘மை பெஸ்ட் விஷஸ்... நாங்க உங்களோட இருக்கோம்!’ - ஓ.பன்னீர்செல்வத்திடம் மனம் திறந்த மோடி வர்தா புயல் உருவாக்கிய பேரிடருக்கு இழப்பீடு கேட்டுப் பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ் சென்றதை, புயல் பாதிப்பின் தொனியோடுதான் கவனித்துக் கொண்டிருந்தார்கள் தமிழக அமைச்சர்கள் சிலர். 'முதலமைச்சராக அவர் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உற்சாகமாகிவிட்டார் ஓ.பி.எஸ்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைக் கடந்த 12-ம் தேதி புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றது வர்தா புயல். 'சீரமைப்புப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்' என பிரதமர் மோடிக்குக் கடி…

  2. ஜெயலலிதா சமாதியில் 68 கிலோ ஜெ. உருவ இட்லி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 68 கிலோ எடையில் ஜெ. உருவ இட்லி அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி சமையல் தொழிலாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர். ஜெயலலிதா உருவ இட்லியை அனைவரும் காணும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்துச் செல்லும் மக்கள் பூக்கள் தூவி, வணங்கிச் செல்கின்றனர். http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-சமாதியில்-68-கிலோ-ஜெ-உருவ-இட்லி/article9435546.ece

  3. பிரதமரிடம் பேசியது என்ன? - டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புதுடெல்லி: புதுடெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழக நலன் தொடர்பான 141 பக்கங்களில் 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் அளித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வார்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் ச…

  4. ஐந்தாண்டுகளுக்கு முன் சசிகலாவுக்கு ஜெயலலிதா ‘குட் பை’ சொன்ன நாள் இன்று! அன்று என்ன நடந்தது? தமிழக அரசியலில் 'அம்மா' என்ற வார்த்தை மெல்ல மெல்ல மறைந்து 'சின்னம்மா' என்ற வார்த்தை அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வரும் காலகட்டம் இது. 'அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும். தமிழக முதல்வராகவும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்' என சசிகலாவிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கெஞ்சி வரும் காட்சிகளால் தமிழக அரசியல் பரபரத்துக்கிடக்கிறது. சசிகலா எப்படி இந்த உயரத்துக்கு வந்தார் என்பது புரியாமல் பலரும் திகைத்து நிற்கிறார்கள். 'தாய் தந்த வரம்' என்றும் ஜெயலலிதா தந்து விட்டு சென்ற வாரிசு என்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார் சசிகலா. இன்று கட்சியையும், ஆட்சியையும…

  5. வைகோவை புறக்கணித்த திருமா! -மலைக்க வைத்த மாநாடு அழைப்பிதழ் புதுச்சேரி, புதிய துறைமுகத் திடலில் வருகிற 28 ம் தேதி, அம்பேத்கர் 125 ஆண்டு நிறைவு விழாவையொட்டி 'அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு' நடத்துகிறார் திருமாவளவன். ' பொதுசிவில் சட்ட மாநாட்டிற்கு ம.தி.மு.க நிர்வாகிகள் வந்திருந்தனர். வைகோவைப் புறக்கணித்துவிட்டு மாநாட்டை நடத்துகிறது வி.சி.க' என்கின்றனர் மாநாடு ஏற்பாட்டாளர்கள். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், மக்கள் நலக் கூட்டியக்கமாக ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வந்தன. பல்வேறு கருத்துக்களில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்தாலும் கூட்டணி தொடர்வதையே தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். அண்மையில், காமராஜர…

  6. ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசு, தமிழக அரசுக்கு நெருக்கடி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு நெருக்கடியளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், 75 நாட்கள் கழித்து, டிசம்பர் 5ம் தேதி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குறித்த கால கட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை வழங்கும் போது எடுத்த புகைப்படம், ஒலி, ஒளிப்பதிவுகள் என எதுவுமே வெளியிடப்படாத நிலையில் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. …

  7. சசிகலாவை சந்திக்கும் படலம் எப்படி நடக்கிறது? ஒரு மாவட்டச் செயலாளரின் நேரடி அனுபவம் #VikatanExclusive போயஸ் கார்டனுக்கு வரும் மாவட்டச் செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா பெரும்பாலும் உரையாடுவதே இல்லையாம். சைகை மூலமே பேசிவிடுகிறார். அதோடு ஜெயலலிதாவைப் போல யாரும் சசிகலாவை நெருங்க விடாமல் கயிறு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தியே சந்திக்க அனுமதிக்கின்றனர் என்கின்றனர் கார்டன் நிர்வாகிகள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சசிகலாவை பொதுச் செயலாளராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்…

  8. ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், அவர் உயில் எழுதியிருந்தால், சட்டப்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தபோது இத் தகவலை அவர் தெரிவித்தார். ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள தோட்டம் உள்ளிட்ட பல சொத்துக்கள் அவருக்குச் சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. உயில் இருக்கிறதா? இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் ய…

  9. விடுதலைப்புலிகளின் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் எனக்குத் தெரியாது – நளினி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் தமக்குத் தெரியாது என கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தெரிவித்துள்ளார். நளினி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நளினி முருகன் எழுதிய சுயசரிதையொன்று எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்பட உள்ளது. 500 பக்கங்களைக் கொண்ட இந்த சுயசரிதையில் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் புதல்வி பிரியன்கா காந்தி எதற்காக தம்மை சந்தித்தார் என்பது தமக்க…

  10. ‘எந்த சூழ்நிலையிலும் நீங்கள்தான் முதல்வர்!’ - ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் சொன்னாரா ஆளுநர்? பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று மாலை ஆளுநரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். 'மக்களால் தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு, எந்த நேரத்திலும் துணையாக இருப்பேன்' என ஆறுதல் கூறியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரம், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர் கட்சியின் சீனியர்கள். ' சின்னமாவை பொதுச் செயலாளர் பதவிக்குக் கொண்டு வருவதற்காக, விதிகளைத் தளர்த்தவும் …

  11. 'பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டும்' என, சசிகலாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலி யுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட, மந்திரி உதயகுமார் மூலம், சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, ஜெ., பேரவை மூலம், முதல் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு உள்ளது. இதன் மூலம், சசிகலா துதி பாடிகளின் கச்சேரி துவங்கி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, ஏற்கனவே இரு முறை அந்த பதவியை வகித்த, பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, 'ஜெ., வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும்' என, கட்சியின் முக்கிய நி…

  12. அரசியல் நாகரிகம் முளைக்கிறதா, மீண்டும் தழைக்கிறதா? திமுக, அதிமுக தலைவர்களிடம் தென்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுகவின் முன்னணித் தலைவர்களான தம்பிதுரையும் ஜெயக்குமாரும் நேரில் சென்று நலன் விசாரித்த செய்தி இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் அரும்பத் தொடங்கியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று. அடிப்படையில் ராஜாஜியும் பெரியாரும் இருவேறு துருவங்கள். ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். ஆனால், சித்தாந்தப் பின்புலங்களை…

  13. சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் ஆக்குவதற்காக கட்சி விதிகள் திருத்தப்படும் என்று அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், தகுதி படைத்த ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கு, கட்சி விதிகளில் திருத்தம் செய்வதில் தவறேதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கிளைக்கழக நிர்வாகிகள் முதல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், சசிகலா அவர்கள் இதுவரை சம்மதம் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதாகவும் பொன்னையன் தெரிவித்தார். …

  14. சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார். தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் இடம்பெற்ற தாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரிடம் ஆசி பெறுவதற்…

  15. ஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறார் Details Category: விஜயகுமாரன் 11 Dec 2016 Hits: 1396 அரசியல் தரகன், பார்ப்பனப் பயங்கரவாதி சோ. ராமசாமி மண்டையைப் போட்டு விட்டார் . ஒரு எண்பது வயது மனிதரை, "துக்ளக்" என்னும் தமிழ் இதழின் ஆசிரியரை, நாடக ஆசிரியரை, திரைப்பட நடிகரை மரியாதையில்லாமல் அவன், இவன் என்று எழுதலாமா என்று சில மரியாதை ராமன்கள் கவலைப்படலாம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும், ஏழை மக்களிற்கு எதிராக பார்ப்பனிய வெறியைக் கக்கி வந்த இவரிற்கு செருப்பால் அடித்து பாடையிலே ஏற்றுவது தான் சரியான மரியாதை. இவரை நேர்மையானவன் என்றும், நடுநிலையாளன் என்றும், தன் மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்பவன் என்றும் அர…

  16. 'இது நடக்கும்'- அ.தி.மு.க.வினரை அலர்ட் செய்யும் விஜயசாந்தி "கட்சியைப் பிரிக்க சில சதிகள் நடக்கும், அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்" என ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகை விஜயசாந்தி இவ்வாறு கூறினார். கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியும், மொட்டை அடித்தும் வருகின்றனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் மெரினாவில் உள்ள அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி…

  17. ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பா எம்.பி. மனு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். புதுடெல்லி: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சசிகலா புஷ்பா எம்.பி கூறியிருப்பதாவது: ‘ஜெயலலிதா மருத…

  18. சசிகலா நடராஜனுக்கு எதிராக பி.எச்.பாண்டியன் தலைமையில் நாளை அதிருப்தி குழு உதயம்? சசிகலா நடராஜனுக்கு எதிராக அதிமுகவில் அதிருப்தி குழு உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படும் சசிகலா நடராஜனுக்கு எதிராக மூத்த நிர்வாகி பி.எச்.பாண்டியன் தலைமையில் அதிருப்தி குழு உதயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது உயிர் தோழியாக கருதப்படும் சசிகலா நடராஜன் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த சசிகலா நடராஜன் இதன்மூலம் …

  19. சின்னம்மா ச(தி)சிகலா அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஆவாரா? தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவின் மறைவு தமி­ழக மக்­க­ளி­டையே பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் "வர்தா" புயல் சென்னை உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பெரும் சேதத்தை ஏற்­ப­டுத்தி விட்டுச் சென்­றி­ருக்­கி­றது. இந்த இரண்டு தாக்­கங்­க­ளி­லி­ருந்தும் இது­வரை மக்கள் மீள­வில்லை. ஜெய­ல­லி­தாவின் மறைவு ஈடு­செய்ய முடி­யாத பேரி­ழப்­புதான்! அந்த இழப்பு தற்­போது அ.தி.மு.க. வுக்குள் பெரும் பிர­ள­யத்­தையே ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. கட்­சியின் பிர­தான பத­வி­யான பொதுச்­செ­ய­லாளர் பதவி யாருக்கு என்­பது தான் அந்­தப்­பி­ர­ள­ய­மாகும். அடுத்த பொதுச் செய­லா­ள­ராக ஜெய­ல­லி­தாவின் தோ…

  20. 'ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை!' -அப்போலோ தலைவர் வேதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் ஆங்கில ஏடு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அவரே கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே.... ''மறைந்த மரியாதைக்குரிய முதல்வரின் பல நற்குணங்களை கண்டு நான் வியந்துள்ளேன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக…

  21. 'எனக்கு இந்த சம்பவத்தால் எவர் மீதும் ஆத்திரமோ வெறுப்போ இல்லை' - வைகோ உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை காவேரி மருத்துவமனைக் சென்றிருந்தார். அப்போது, அங்கு அவருக்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கருணாநிதியை சந்திக்காமலே வைகோ திரும்பினார். இந்நிலையில் இதுகுறித்து, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, "நவம்பர் திங்களில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என அறிந்த மாத்திரத்தில், சகோதரி கனிமொழியிடம் தலைவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சியாகவும்…

  22. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து 11 நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "முதல்வரின் மரணம் குறித்த அறிவிப்பு முதல் அடக்கம் செய்யப்பட்டது வரையில் அனைத்தும் துல்லியமான திட்டப்படியே நடந்தன. ஒரு சாதாரண மனிதனாக இவற்றைக் கடந்து போக முடியவில்லை" என குமுறுகிறார் சீமான். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆளும்கட்சியின் ஏழு நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வுகள் முடிந்து போய்விட்டன. புதிய முதல்வராக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என அ.தி.மு.கவின் சீனியர்கள் பேசி வருகின்றனர். " 2020-ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால், இப்படி வேறு ஒருவரை…

  23. சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது! 2011 டிசம்பர் மாதம் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. சசிகலாவோடு அவரது உறவுகளையும் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். எல்லாம் மூன்று மாதங்கள்தான். 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி சசிகலாவிடம் இருந்து அதிரடியாக வந்தது ஓர் அறிக்கை. ‘‘என் உறவினர்கள் அக்காவுக்கு துரோகம் செய்தது எனக்குத் தெரியாது. அக்காவுக்கு எதிரான சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன. துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’’ என்றெல்லாம் சசிகலா வெளியிட்ட அந்த அறிக்கையை அரசியல் மேகங்கள் மாறியிருக்கிற சூழலில், 5 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தால் சிரிப்புதான் வருகிறது…

  24. சென்னை: எம்.எல்.ஏக்களை பிரித்து அதிமுகவை உடைக்கும் திறமை தன்னிடம் இருப்பதாகவும், அது தமிழக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் இல்லை என்றும் கூறியுள்ள பாஜக ராஜ்யசபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 'தி இந்து' நாளிதழுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்பு பேட்டியில் இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதால்தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும் என்று தெரிவித்துள்ள சுவாமி, "சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, நர்சுகளுடன் அவர் பேசியதாக சொல்லப்பட்டது, உண…

  25. சசிகலாவுக்கு 'செக்' வைத்தாரா ஜெயலலிதா? -அ.தி.மு.க உறுப்பினர் அட்டை மர்மம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'ஜெயலலிதா தலைமையில் நடந்த கடைசி செயற்குழு கூட்டத்திலும் சசிகலா பெயர் இல்லை. அவருக்கு உறுப்பினர் அட்டையையே முதல்வர் வழங்கவில்லை' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பு அணியினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக, போயஸ் கார்டனில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் சசிகலா. பொதுக்குழுவை எங்கே நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.