Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா இடத்தில் சசிகலா... சசிகலா இடத்தில் திவாகரன்! பரபரக்கும் மன்னார்குடி 'கள நிலவரம்' "உங்களுக்கு துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை; உறவுமில்லை. உங்களுக்கு உண்மையான தங்கையாகவே இருக்கவே விரும்புகிறேன். அவருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்" - 2011-ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய சசிகலா, 2012-ம் ஆண்டு துவக்கத்தில் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி தான் இது. இதை அறிக்கையாகவும் வெளியிட்டார் சசிகலா. இந்த கடிதத்தை ஏற்று சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்று, மீண்டும் கட்சிக்குள்ளும், கார்டனுக்குள்ளும் சசிகலாவை அனுமதித…

  2. 16 வருடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் உயில் எழுதினாரா ஜெயலலிதா?! - ஆந்திர பத்திரிகை செய்தி மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று தமிழ்நாட்டில் பரபர விவாதங்கள் நடைபெறும் வேளையில், ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ஆந்திராவில் வெளிவரும் ‘சாக்‌ஷி’ (விட்னஸ்) பத்திரிகையில், '16 ஆண்டுகளுக்கு முன்னரே ஜெயலலிதா தன் சொத்துக்களை ரத்த உறவுகளின் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டார்' என செய்தி வெளியிட்டிருக்கிறது. கடந்த 2000 ஜூலை 14-ம் தேதி அன்று டாக்குமென்டரி புத்தகத்தில் 3132-ம் எண்ணில் ஹைதராபாத், பஷிராபாத் ஜெ.ஜெ. கார்டன் முகவரியில் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சாரிடபிள்…

  3. ராஜீவ் கொலை பின்னணியில் உள்ள 'உண்மையான சதிகாரர்கள்' யார்?- உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் கேள்வி பேரறிவாளன் | கோப்புப் படம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதா? உண்மையான சதிகாரர்கள் யார்? என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப, சிபிஐ இதற்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு புதனன்று வந்த போது, சென்னை தடா கோர்ட்டின் உத்தரவு இருந்தும் ராஜீவ் கொலை பின்னணியில் பெரிய அளவில் சதி நிகழ்ந்துள்ளதா என்பதை ஏன் விசாரிக்கவில்லை என்று சிபிஐ-க்கு வ…

  4. தீபாவை தலைமையேற்க அழைக்கும் பேனர்களால் பரபரப்பு ! பெரம்பலூர் : ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அ.தி.மு.க. தலைமையேற்க வருமாறு அழைத்து பெரம்பலூரில் ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் அழைப்பு விடுக்க... இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கண்டனக் குரல்கள் எழத்துவங்கியுள்ளன. இந்நிலையில், ஜெயலலிதாவின் ரத்த வாரிசான தீபா தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை திடீரென எழுந்துள்ள…

  5. ‘அப்போலோ ரகசியத்தை வெளியிட்டால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும்!’ - மிரட்டும் ஹேக்கர்ஸ் 'ஹேக்கிங்' இந்த வார்த்தையே பலரை பீதியூட்டுவதாக மாறிவிட்டது. 'ஹேக்கிங்' என்பது நல்லது, கெட்டது இரண்டு செயல்களுக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் தற்சமயம், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திருடி, தனக்கு சாதகமாக்கி கொள்வதற்கே ஹேக்கிங் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. லீஜியன் என்ற ஹேக்கர் குழு இந்தியாவைப் பற்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், நாங்கள் ஹேக் செய்துள்ள, சில அரசியல் தகவல்களை வெளியிட்டால், இந்தியா மிகப் பெரும் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே அது. இந்த லீஜியன் ஹேக்கர் குழுதான், காங்கிரஸ் கட்சியின்…

  6. சசிகலாவுடன் இந்து என். ராம் திடீர் சந்திப்பு! அதிமுக அழியும் என சாபம் கொடுத்தவர்! சசிகலாவை இந்து என் ராம் இன்று திடீரென சந்தித்தார். சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் பேரழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார் ராம். சென்னை: மூத்த பத்திரிகையாளரான இந்து என் ராம் இன்று திடீரென சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார். அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்தால் பேரழிவுதான் ஏற்படும் என கடுமையாக விமர்சித்த இந்து ராம் திடீரென போயஸ் கார்டனுக்கு விசிட் அடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் சசிகலா. இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் இந்து ராம். அரசியல் …

  7. ஜெயலலிதா மரணமும்...ஒரு வாரத்தில் மாறிய காட்சிகளும்! கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை... சென்னை ராஜாஜி ஹாலே மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனது. சென்னை விமான நிலையம், இந்தியா முழுவதிலும் இருந்து வந்த பிரதமர் உள்ளிட்ட தலைவர்களால் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்த செல்வி ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அஞ்சலி முதல் அடக்கம் வரை எல்லாம் ஒரேநாளில் நடந்தேறின. தமிழக அரசு சார்பில் ஒரு வார கால துக்கம் அனுசரிக்கப்படும் என அ.தி.மு.க அரசு அறிவித்தது. ஆனால் அடக்கம் செய்த ஈரம்கூட காய்வதற்குள், அடுத்த பொதுச்செயலாளருக்கு ஆள் புடிக்கத் தொடங்கி விட்டார்கள் அ.தி.மு.க-வின் ரத்தத…

  8. தஞ்சாவூரில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக பிரமுகர் கோயில் கட்டியுள்ளார். தஞ்சாவூர் மேலவீதியைச் சேர்ந்தவர் எம்.சாமிநாதன்(44). 18-வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் கொறடாவுமான இவர், மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 லட்சம் செலவில் கோயில் கட்டியுள்ளார். இதுகுறித்து எம்.சாமிநாதன் கூறியது: என்னைப் போன்ற சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரது மறைவு என்னை பெரிதும் பாதித்தது. அவருக்காக மேலவீதியில் கடந்த 7-ம் தேதி கோயில் கட்டும் பணியை தொடங்கினேன். தற்போது கட்டுமான பண…

  9. போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறார் சசிகலா?! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் வசித்த போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறாராம் சசிகலா. கடந்த 5-ம் தேதி இரவு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதி மற்றும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கட்சியை வழிநடத்தும் அதிமுகவின் அடுத்த பொது செயலாளர் யார் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எதிர்பாரா திருப்பமாக கட்சியின் சீனியர் தலைவர்கள், சசிகலா பொது செயல…

  10. சென்னை விமான நிலையம் திறக்கப்பட்டது வர்தா புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை இரத்து செய்யவும் அதிகாரிகள் உத்தர…

  11. தமிழக ஆளுநராக சுப்பிரமணியன் சுவாமி நியமனம்? மறுப்பு சொல்லாத பொன்.ராதாகிருஷ்ணன் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவாரா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. நாகர்கோவில்: பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியை தமிழக ஆளுநராக நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், இக்கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்: தமிழகத்துக்கு ஒரே ஒரு முதல்வர்தான் உள்ளார் என்பதால், தமிழ்நாட்டில் இரட்டை தலைமை ஆட்சி …

  12. ‘ஜெயலலிதா மகள்’ என வைரல் ஆகும் படத்தில் இருப்பவர் உண்மையில் யார்? சின்மயி விளக்கம் மேலே இருக்கும் படம்தான் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் ஒரு மொபைல் விடாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். 'இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்" என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரையே அழைத்து கேட்டோம். "இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வ…

  13. சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரூம் மூத்த பத்திரிக்கையாளருமானவர் சோ.ராமசாமி. 82 வயதான இவர் உடற்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று(07-12-16) அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1664287&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+(Dinamalar.com+|முதல்+பக்கம்)

  14. உண்மையில் இறந்த நேரம் என்ன? - காட்சி -1 - அப்போலோ தனித்திருந்து பொதுவாழ்க்கை வாழ்ந்த பெண்களின் வாழ்வு பெரும்பாலும் கேள்விக்குறியில் தான் நிறைவுபெறுகிறது. ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது உடல்நிலை சீராகி வருவதாக அப்போலோ நிர்வாகமும், அ.தி.மு.க. பிரமுகர்களும் சொல்லி வந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். ‘எக்மோ’ உள்ளிட்ட இதய இயக்கவியல் கருவிகள் அவருக்குப் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ அறிக்கை வெளியிட்டது. அதேச…

  15. “அந்தக் கும்பல் சிரித்துக் கொண்டிருந்தது!” - தடாலடி சசிகலா புஷ்பா தமிழ்நாட்டு அரசியல் சசிகலாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்குமான அரசியலாக மாறிவிடும்போல இருக்கிறது! ஜெயலலிதா இருக்கும்போதே பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்த சசிகலா புஷ்பா, இதோ அடுத்த அஸ்திரத்தை வீசி இருக்கிறார். ‘‘ஜெயலலிதா, இயற்கையாக இறந்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்’’ என்று அடுத்த ஷாக் கிளப்பி இருக்கிறார் சசிகலா புஷ்பா. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ‘‘எந்த ஆதாரத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறீர்கள்?’’ ‘’செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஆரம்பித்து, உயிரற்ற உடலாக அம்மாவை வெளி…

  16. 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா..!?' என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? என்ன நடக்கிறது அதிமுகவில்? அதிமுகவில் அடுத்த பொது செயலாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீங்கி, பொதுச் செயலாளராக சசிகலாவை முன்னிறுத்தும் பணி அதி விரைவாக நடந்து வருகிறது.சீனியர் அதிமுக நிர்வாகிகள் சசிகலா தான் பொது செயலாளராக வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் இன்று காலை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஓபிஎஸ்,சசிகலா, அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அங்கிருந்து கிளம்பி தலைமை செயலகம் சென்றனர். இன்று கூடிய அமைச்சரவையிலும், ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா, ஜெயலலிதா உடல்…

    • 11 replies
    • 2.9k views
  17. 01- மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி. 02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல். 03- தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு. 04- 3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை. இது யாருடைய உத்தரவு?? 05- 3மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது? 06- அனைத்து ம் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…?? 07- கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்? 08- இறப்பதற்கு ம…

  18. அண்ணாவின் மரணமும் ஜெயலலிதாவின் மரணமும்! - மருத்துவர்கள் எழுப்பும் சந்தேகங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வலம் வருகிறது. 'பூரண நலத்துடன் முதல்வர் இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இதயத் துடிப்பு நின்று போனது ஏன்?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் மருத்துவர்கள். அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து 75 நாட்கள் நடந்து வந்த சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 5-ம் தேதி மரணமடைந்துவிட்டார். அவரது மரணம் அ.தி.மு.கவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ப…

  19. டெல்லி மேகங்களால் சூழப்பட்டுள்ள தமிழகம்! தன் வாழ்நாளில் அவ்வளவாக வெளிநாடுகளுக்குச் செல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா. அவர்செய்த பயணங்கள் டெல்லிக்கு மட்டுமே. அதுகூட பல முறை டெல்லிதான் அவரைத் தேடி தமிழகத்துக்கு வந்துள்ளது. அத்தனை பிரதமர்களையும், ஆளுநர்களையும், டெல்லி அதிகாரங்களையும் தமிழகத்தை அச்சத்துடன் தொலைவில் நின்று பார்க்க வைத்தவர் ஜெயலலிதா. தற்போது அனைத்தும் தலைகீழாகமாறி தமிழகம் டெல்லி மேகங்களால் சூழப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நாளில் இருந்து தமிழகத்தைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது பி.ஜே.பி மேலிடம். செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டநாளில் வழக்…

  20. சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆவது சாத்தியமா?! - கொடநாட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு!? #VikatanExclusive அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் வி.கே.சசிகலா. 'எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்றால், இப்போதைக்கு அது சாத்தியமில்லை. அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டினால், சட்டரீதியாக போராட்டங்களைத் தொடங்கும் முடிவில் கட்சியின் முன்னாள் சீனியர்கள் உள்ளனர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 'தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து, அ.தி.மு.கவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை சின்னம்மாவால் மட்டுமே நிரப்ப முடியும்' என்று கூறி, அ.தி.மு.கவின் சீனியர்கள் செங்கோட்டையன், மதுசூ…

  21. 'வர்தா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தீவிரம் கொண்டுள்ள வர்தா புயல் மேலும் இந்த 3 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க அல்லது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணிபுரிய வைக்க கூறி தமிழக அரசு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர தாலுக்கா பகுதிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு கூறியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயலான வர்தா, நாளை (திங்கள்கிழமை) சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெ…

  22. ஜெயலலிதாவுக்கு 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பதினைந்து கோடி ரூபாயில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்த நிலையில் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் நடந்த இந்தக் கூட்டத்தில், முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் முதலாவதாக நிறைவேற்றப்பட்…

  23. தலைமை ஏற்க வாருங்கள்..! சசிகலாவிடம் வலியுறுத்திய மூத்த நிர்வாகிகள் ''அதிமுக தலைமையை ஏற்க வாருங்கள்'' என்று அதிமுக மூத்த நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனிடையே, முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட…

  24. சென்னை முழுதும் திடீர் மாற்றம் : காரணம் என்ன.? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்று கொள்ள வேண்டும் என அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலா தான் கழகத்தையும் மக்களையும் காக்க வேண்டியவர் என பத்திரிக்கைகளிடம் கூறி வருகின்றனர். தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, கடந்த 5 ம் திகதி உடல்நலக் குறைவால், அப்போலோ வைத்தியசாலையில் காலமானார். அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொது செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி சில பேப்பரி…

  25. ஜெயலலிதா விட்டு சென்ற தமிழகம்: புள்ளி விவரங்கள் தரும் செய்திகள் கடந்த 25 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் தமிழக முதல்வராக ஆட்சி புரிந்த ஜெயலலிதா, விட்டு சென்ற தமிழகத்தின் இன்றைய நிலைமை என்ன? இம்மாநிலத்தின் சிறப்பு அம்சங்கள் எவை? இன்னும் முன்னேற வேண்டிய இடங்கள் என்ன? ஆதாரபூர்வமான புள்ளி விவரங்களின் வழியாக தமிழகத்தின் நிலவரத்தை பார்த்தால் அதிக நிறைகளும், சில குறைகளும் இருக்கின்றன. பொருளாதார குறியீடுகளை எடுத்து கொண்டாலும், சமுதாய குறியீடுகளை (social indicators ) பார்த்தாலும், தமிழ் நாடு மற்ற பல மாநிலங்களை விட எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தெரிகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் 98.8 சதவீத குடியிருப்புகள் மின்சார இணைப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.