Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 234 தொகுதிகள் மெகா ரிசல்ட்!ஓவியங்கள்: ராஜா அக்னி நட்சத்திர வெயிலில் தமிழகம் தகிக்கிறதா அல்லது அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியில் தமிழகம் தவிக்கிறதா என்றால், தமிழ்நாட்டு மக்கள் இரண்டாவது கேள்வியை டிக் செய்வார்கள். ஏனென்றால், பருவகாலத் தட்பவெப்பம் மாதந்தோறும் மாறும். ஆனால், இரண்டாவது கேள்விக்கான விடையில் தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது. வின்னர் யார்... சி.எம். யார்... அடுத்து ஆளப்போவது யார்? என்று யார் எந்த மாதிரியாகக் கேட்டாலும் ஜெயலலிதாவா, கருணாநிதியா, விஜயகாந்த்தா, அன்புமணியா (பி.ஜே.பி., நாம் தமிழர் கட்சி போன்ற பிற கூட்டணிகள் தங்களது முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.) என்ற பளிச் கேள்வியே அனைவர் ம…

    • 4 replies
    • 2.1k views
  2. 'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!' -ஆவணப்பட அதிர்ச்சி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. " ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டால…

  3. தேவாலயத்தின் பெயரால் கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கிறது இலங்கை?: மத்திய அரசு கடும் அதிருப்தி! டெல்லி: கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க முன்திட்டமாக தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரிடம் மத்திய அரசு அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மத்திய அரசு கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்களின் வலைகளை உலர்த்த, அங்கு நடக்கும் அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. காலப்போக்கில் தமிழக மீனவர்களை கச்சத்தீவு பக்கம் வரவிடாமல் தடுத்து வருகிறது இலங்கை கடற்படை. இந்நிலையில் கச்சத்தீவில் ரூ.1 கோடி செல…

  4. தமிழகத்தில் 100 கோடி ரூபாய் பறிமுதல் சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இது நாள் வரையி்ல 100கோடி ரூபாய் வரையி்ல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பறக்கும் படையினர் சார்பில் 34.83 கோடியும், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் 32.64 கோடி ரூபாய், மற்றும் வருமானவரித்துறை சார்பில் 30.60 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1520845

  5. ஈரோடு அருகே வருமான வரித்துறை ரெய்டில் அதிமுக பிரமுகர் வீட்டில் 1 கோடி பறிமுதல் ஈரோடு: ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் சுமார் 1 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரெய்டு நடத்திய அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது. ஈரோடு அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சோர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மாலை அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடு்த்து ஆத்திரமடைந்த அதிமுகவினர். ரெய்டு நடத்திய அதிகாரிகள் வாகனத்தின் மீது தாக்குல் நடத்தியதாகவும் அதை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதி…

  6. ‘கருணாநிதி’ என்ற பெயரைக் கேட்கும்போது ஜெயலலிதாவும், ‘ஜெயலலிதா’ என்ற பெயரை உச்சரிக்கும்போது கருணாநிதியும் தமிழர்களின் நினைவுக்கு வருவது தற்செயல் நிகழ்வல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழகத்தின் தலையெழுத்தை, அரசியலைத் தீர்மானிக்கும் இவர்கள், அரசியல் செய்வது, அறிவிப்பு வெளியிடுவது என எதிரெதிர் துருவங்களாகக் காட்சியளிக்கின்றனர். ஆனால், ஊழல், தனி மனிதத் துதி, குடும்ப அரசியல், சர்வாதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இருவரும் ஒருவரே. …

  7. 'போடுங்கம்மா ஓட்டு அதுக்குதான் இந்த பாட்டு'..தேசிய அளவில் ட்ரெண்டாகும் சிம்பு! சென்னை: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சிம்பு எழுதி, பாடியிருக்கும் ஓட்டுப் போடல் சற்றுமுன் வெளியானது. நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. மற்றொருபுறம் மக்களை 100% வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இதற்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை வைத்து பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். சிம்புவுடன் இணைந்து விடிவி கணேஷ் பாடியிருக்கும் இந்தப் பாடல் தற்போது …

  8. வர்றப்ப வடை கொடுத்தாங்க.. வேன் குலுங்குச்சா... கீழே விழுந்துருச்சு.. விஜயகாந்த் கவலை! உளுந்தூர்ப்பேட்டை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது மோசமான சாலையால் தான் வடை சாப்பிட முடியாமல் போன சோகத்தைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார். விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருவோர் மூளை கலங்க நல்ல விஷயங்களை கற்றுச் செல்கிறார்களோ என்னவோ, ஆனால் வயிறு குலுங்கச் சிரித்துச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு கலகலவென பேசி வருகிறார் விஜயகாந்த். இப்படித்தான் தான் போட்டியிடும் உளுந்தூர்ப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பி. குளத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்து வேனில் இருந்தபடி பேசினார் விஜயகாந்த். அவர் பேசும்போது, நான் வேனில் வ…

    • 3 replies
    • 763 views
  9. தமிழகத் தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து விவரங்கள் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளர்களில் 28 சதவீதம் பேர், தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பல வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் உள்ளன தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களில் அளித்திருக்கும் விவரங்களை ஆய்வுசெய்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மற்றும் தமிழக தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகியவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 3776 பேர். இவர்களில் பிரதான கட்சிகளின் சார்பில் 997 பே…

  10. 'தி.மு.க. விளம்பரம்னு தெரியாம நடிச்சுட்டேன் கண்ணு!' - கஸ்தூரி பாட்டி “பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்” என்ற அதிமுக விளம்பரம் ஒரு பக்கம் ஒளிபரப்பாக, “ வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க?” என்று திமுக விளம்பரம் மறுபக்கம் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த இரண்டு விளம்பரங்களிலும் கஸ்தூரி என்ற பாட்டி தான் நடித்திருக்கிறார். இன்றைய தேதியில் இந்தப் பாட்டி பற்றித் தான் ஊரெல்லாம் ஒரே பேச்சு, அந்தப் பாட்டிக்கு என்ன தான் ஆச்சு? பாட்டியிடமே பேசினேன். (திமுக, அதிமுக விளம்பரத்தில் கஸ்தூரி பாட்டி! வீடியோ மேலே) …

  11. சென்னை: இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும், ஸ்டாலினுக்கே முதல்வராக விருப்பமில்லை என்றும், தனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வராக முடியும் என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரிதும் விரும்புகின்றனர். ஸ்டாலினுக்கும் அந்த விருப்பம் இருந்தாலும், தேர்தல் களத்தில் தன்னை முதல்வராக முன்னிறுத்துவது வாக்குகளை பெற்று தருமா என்ற அச்சத்தில் அவரே முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ரொம்பவும் வலியுத்தவில்லை. கருணாநிதிக்கும் அந்த அச்சம் உள்ளது. மேலும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் …

  12. 'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி! போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த வகையில் அத்தனை தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்று, பிரசார களத்தை சூடாக்கியவர் அவர். வயது, உடல்நிலை காரணமாக கடந்த 2 தேர்தல்களில் தனது பிரசார பணியில் கொஞ்சம் சுணக்கம் காட்டினார் அவர். அந்த இரு தேர்தல்களிலும் இது தனது கடைசி தேர்தலாக இருக்கலாம் என்று 'அரசியல்' செய்தாலும், உடல்நிலையை பொறுத்தவரை அதுதான் உண்மையான நிலவரமாக இருந்தது. ஆனால் ஆச்சர்யம், அந்த தேர்தல்களையெல்லாம் கடந்து இப்போது 2016 தேர்தலில், முன்னெப்போதையும் விட உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் கருணாநிதி. வயது, உடல் நிலையை மீறி இந்த முறை அவரை உற்சாகமாக…

  13. ‘ஆம்.. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம்!’- ஸ்டாலின் 'கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று அனைத்து இடங்களிலும் நானே சொல்லி வந்திருக்கிறேன்' என்று என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் கூறினார். என்டிடிவி தொலைகாட்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், திமுகவின் திட்டங்கள், பலம் குறித்து பேசினார். நீங்கள் தவறு செய்துவிட்டதாக ஊழல் விவகாரத்தில் தொழிற்துறையினரிடம் சொன்னீர்கள். ஊழல் என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டா…

  14. அ.தி.மு.கவா... தி.மு.கவா..? - புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு! Share வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்குமா?, போட்டியில் இருக்கும் கட்சிகளில் எந்த கட்சிக்கு நிறைகள் அதிகம்? குறைகள் குறைவு?, அ.தி.மு.க…

  15. ’I am hero... My Villain Kalaignar... My Villie Jayalalitha..!' -விஜயகாந்தின் செம ஸ்டைல் இங்கிலீஷ் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் தொடர்பாக என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். பிரணாய் ராயின் கேள்விகளுக்கு சரமாரி ஆங்கிலம், நடுநடுவே தமிழ் என ஏக உற்சாகத்துடன் பதில் அளித்திருக்கிறார் விஜயகாந்த். எடுத்த எடுப்பில், "அரசியல் ஒரு சினிமா என்றால்... ஐ யம் ஹீரோ! மை வில்லன் இஸ் கலைஞர்... மை வில்லி இஸ் ஜெயலலிதா. good ah..?" என்று கேட்டு கெத்து ரியாக்‌ஷன் காட்டி, லைக் எதிர்பார்க்கிறார் விஜயகாந்த். அதேபோல், ’கருணாநிதி 90 அபோவ், ஜெயலலிதா 60 எபோவ், மை ஏஜ் ஐ டோன்ட் நோ. ஹார்ட் இஸ் மை ஏஜ். இட் இஸ் வெரி யங்!’ என்றெல்லாம் அமர்த்தலாக பதிலளித்திரு…

  16. திருச்செந்தூர்: சரத்குமார் காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல்! திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காரில் ரூ.9 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவையனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். Read more at: …

  17. இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களைக் காப்பாற்றினேன். இலங்கை அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான் என்றும் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டது என்றும் அவர் கூறினார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்…

  18. தமிழக தேர்தல் பற்றி உறவுகள் எல்லாம் ஒவ்வொரு பக்கமாக விமர்சனங்களும் ஆதரவுகளும் தொடரும் இவ்வேளையில்.... ஒரு விடயத்தை பதியலாம் என நினைக்கின்றேன். ரொம்ப சுயநலமான ஈழத்தமிழன் நான். எமக்காக எவர் பேசினாலும் எமக்காக எவர் உழைத்தாலும் அவரை ஆதரிப்பதே எமது இன்றையநிலை. தேவை. எல்லோருக்கும் காலம் கொடுத்துப்பார்த்தாச்சு ஒன்றுமே நடக்கல. ஏமாற்றமும் துரோகமும் தான் மிச்சம். இந்த முறை சீமானுக்கு கொடுத்துப்பார்க்கலாம். சீமானும் ஏமாற்றினா? ஏன் இருப்பவர்களில் எவராவது திறமா? அவர்களைவிட சீமானால் ஏமாற்றமுடியுமா என்ன? இன்னும் 50 வருடம் போனாலும் அந்த திறமை சீமானுக்கு வராது. ஒன்றுமட்டும் நிச்சயம். தமிழகம் தமிழரின் கைக்கு வரணும் அல்லது இந்தியா உடையணும் இல்லாது விட்டால் ஈழத்தமிழினம் இனி ந…

  19. திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 வெல்லும்: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள் சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு சம வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றது. நியூஸ் 7 தொலைக்காட்சியும், தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்புகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றனர். முதலில் மேற்கு மண்டல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து தெற்கு மண்டல முடிவுகள் வெளியாகின…

  20. இனி எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்: - வைகோ அதிரடி அறிவிப்பு [Friday 2016-05-06 15:00] இனி வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று வைகோ கூறினார்.ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி.அம்பிகாபதியை ஆதரித்து, மாதிரி பள்ளி பகுதியில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது, பிரசார பேச்சை வைகோ நிறைவு செய்தபோது மதிமுக தொண்டர் ஒருவர், ""நீங்கள் முதல்வராகத் தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே'' என்று கேட்டார். அதற்கு, வைகோ அளித்த பதில்: ""அண்ணாவின் கொள்கைகளுக்காக, சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்காக, மதுக் கடைகளை-ஊழலை ஒழிக்க, தமிழக மக்களைக் காக்க வாழ்கிறேன். எனக்கென சுயநலம் இல்லை. நாடு கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக பேசுகிறேன். …

  21. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயில் திருவள்ளூர் அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இதனால் இந்த தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து, திருவனந்தபுரதிற்கு திருவனந்தபுரம் மெயில் (12623) சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பட்டாபிராம் ரயில் நிலையம் சென்று கொண்டு இருந்தது. அப்போது, மின்சார ரயில் வந்துள்ளது. இரு ரயில்களும் ஒரு ரயில் தண்டவாளத்தில் வந்ததால்,இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பயணிகளை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ச…

    • 0 replies
    • 639 views
  22. மீம்ஸ் விஜயகாந்த் சி.எம். விஜயகாந்த் ஆவாரா? முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ் ''தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்!" - என்பது பழமொழி. இதை நம்பித்தான் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறார். ஏனென்றால் இந்த மகாபாரத யுத்தத்தில் அவர்தான் தர்மர். அப்படித்தான் சொல்கிறார்கள். விஜயகாந்தை தர்மராகவும் வைகோவை அர்ஜுனனாகவும், திருமாவளவனை பீமனாகவும், ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாகவும், முத்தரசனை சகாதேவனாகவும் உருவகப்படுத்திக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூடு கிளம்பியது. அடுப்புக்கு வெளியேயும் சூடு பரவியது தான் சிக்கலே! இந்தக் கூட்டணி அழகாகத்தான் ஆரம்பம் ஆனது.…

  23. அதிமுக தேர்தல் அறிக்கையில் சில இலவசங்கள், பல வாக்குறுதிகள் தமிழகத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மீனவர்கள் ஆகியோரின் நலன்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்படும் என்று இன்று மாலை வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. தேர்தல் அறிக்கை குறித்து பெருந்துறை பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார் “மாநிலத்தின் நீராதாரங்களை மேம்படுத்தவும் கூடுதல் நடவடிக்கள் எடுக்கப்படும், உழவர் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” எனவும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மாணவர்கள் மேலும் பயனடையும் வகையில், அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினிக்கான இணைய வசதியும் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்துகொடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலர…

  24. தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இறுதிக் களத்தில் 3,794 வேட்பாளர்கள் - 339 பேர் வாபஸ் பெற்றனர் கோப்பு படம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாளான நேற்று 339 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டி யிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிந்தது. இறுதி நாள் நிலவரப்படி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 6 ஆயிரத்து 352 ஆண்கள், 795 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என 7 ஆயிரத்து 151 பேர் மனு…

  25. திராவிடம் செய்த துரோகம்…… தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போதிய பணபலத்தோடும் ஊடகங்களின் உதவியுடனான பிரச்சார பலத்தோடும் பெருந்தலைவர்கள் வரும் தங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு பணங்கொடுத்து ஆட்களைத் திரட்டி சனநெரிசலை ஏற்படுத்தி, தங்களுக்கிருக்கும் ஆதரவை பிரமாண்டப்படுத்தி மக்கள்முன் காட்டுகிறார்கள். தலைவர்களைப் பார்க்கவும், கூட்டத்தில் பங்குபற்றும் சினிமாப் பிரபலங்களைப் பார்க்கவும், பணத்திற்காகவும், சாப்பாட்டுப் பார்சலுக்காகவும், கொடுக்கப்படும் பல அன்பளிப்புகளுக்காகவும் என்று, பல்வேறுபட்ட நோக்கங்களோடு சனங்கள் இந்தப் பணபலமிக்க கட்சிகளின் கூட்டங்களுக்கு முண்டியடித்துக்கொண்டு திரள்கிறார்கள். அதே வ…

    • 0 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.