தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10245 topics in this forum
-
ராமதாஸா... யாரு அவரு...? (வீடியோ...!) அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத கட்சியாக வளர்ந்து நிற்கிறது பா.ம.க. இதுநாள் வரை, யாருடனாவது கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த அந்த கட்சி, இம்முறை ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தன் முதல்வர் வேட்பாளரை அறிவித்து, தனியாக தேர்தலை சந்திக்க துணிந்துவிட்டது. அனைத்து கட்சிகளும், பா.ம.கவின் அசுர வேகத்தை கொஞ்சம் மிரட்சியுடனே பார்க்கின்றன. ஆனால், வெகுஜன மக்களுக்கு பா.ம.க, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பற்றி தெரிந்து இருகிறதா...? ஹோ... பா.ம. கவா...? நல்லா தெரியுமே.. பாரதிய ஜனதா கட்சி தானே என்கிறார் ஒருவர்... இன்னொருவர், ராமதாஸா... யாரு அவரு....? என்னத்தான் மாடர்னா தேர்தல் பிரச்சாரத்தை செய்தாலும், இன்னும் இளைஞர்களிடம் அந்த கட்சி சேரவில்…
-
- 0 replies
- 574 views
-
-
மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவிற்கும், திமுக கூட்டணிக்கும் எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. அதிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பால் உற்சாகம் குன்றிய கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், அவர்களை கட்சி தாவி விடாமல் இழுத்து பிடிப்பதற்காகவும் கூட்டணிக்கான முஸ்தீபுகளில் விஜயகாந்த் தீவிரம் காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், 15 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக உள்ளதாக செய்திகள் வெளியா…
-
- 0 replies
- 754 views
-
-
விஜயகாந்த் செல்வாக்கு? - ஸ்பெஷல் சர்வே... ரிசல்ட்! விஜயகாந்த்... 15-வது சட்டமன்றத் தேர்தலில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கருணாநிதி vs ஜெயலலிதா என்கிற யுத்தத்தைவிட விஜயகாந்த்தின் ஆதரவு காந்தத்துக்குத்தான் மவுசு அதிகம். அறிவாலயமும் கமலாலயமும் தாயகமும் பாலன் இல்லமும் பி.ராமமூர்த்தி நினைவகமும் தே.மு.தி.க-வின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. ‘பழம் நழுவிக்கொண்டிருக்கிறது... பாலில் விழும்’ என கருணாநிதி சொல்ல... ‘தனித்துப் போட்டி’ என தனி ரூட்டில் பயணிக்கிறார் விஜயகாந்த். எந்தக் கூட்டணியிலும் சேராமல் தே.மு.தி.க தலைமையில் கூட்டணி என புதுப் பொங்கல் வைத்திருக்கிறார் விஜயகாந்த். தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு சட்டமன்றத் தேர்தலில் புதுத் திருப்பம். இந்த அதிரடி அறிவிப்ப…
-
- 0 replies
- 561 views
-
-
ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட் அ.தி.மு.க.வில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார்கள். ஆனால் முதல் முறையாக ஓ.பி.எஸ், நத்தம், எடப்பாடி, வைத்தி, பழனியப்பன் என்று ஐவர் அடையாளம் காட்டப்பட்டனர். இது எப்படி நிகழ்ந்தது என்பதும், இதன் பின் விளைவு எப்படியிருந்தது என்றும் மனக் குமுறலோடு கொட்டித் தீர்க்கின்றனர் ஒரு காலத்தில் கட்சியில் கோலோச்சி நின்றவர்கள். ஐவரணியின் குட்டுக்கள் உடைந்ததின் பின்னணியில், மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ''அப்ரூவர்'' ஆன கதையும் உள்ளது. திகில், திருப்பங்களுடன் நமக்கு கிடைத்த தகவல்களை அப்படியே இங்கு தருகிறோம்.... டான்சி வழக…
-
- 0 replies
- 523 views
-
-
விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்! " வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்" என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், 'தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்' என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது. இதனால் மிகவும் சோர்ந்துபோனது திமுக. பாஜக என்ன செ…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
விஜயகாந்த் கனவு மட்டுமல்ல, கட்சியும் கலையப் போகுது: திண்டுக்கல் லியோனியின் 'கட்சிக்கு ஒரு பாட்டு' பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட திமுக பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனியிடம், ‘களத்தில் நிற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சினிமா பாட் டைப் பாடி ‘நச்’சுன்னு நாலு வார்த்தை சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.. ‘அதுக்கென்ன சொல்றேன், எழுதிக்குங்க..’ என்று ஆரம்பித்துவிட்டார். அதிமுக ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.. உறவெல்லாம் முள்ளாகும்.. நினைவெல்லாம் கல்லாகும்..’ இந்தப் பாட்டுதான் இப்ப அதிமுகவுக்கு பொருத்தமான பாட்டு. போன தேர்தல்ல அதிம…
-
- 0 replies
- 503 views
-
-
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! அ.தி.மு.க-வில் விருப்பமனு அளித்த 26 ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வில் விருப்பமனு அளித்த அனைவரிடமும், தானே முன்னின்று நேர்காணல் நடத்தி முடித்துள்ளார் தலைவர் கலைஞர். அவரை நேராகச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே மகிழ்ச்சிதான்” என்கிறார் நேர்காணலில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர். மாவட்டவாரியாக அழைக்கப்பட்ட தேதியில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள், அறிவாலய வளாகத்தில் இருந்த பந்தலில் தொகுதிவாரியாக அமர வைக்கப்பட்டனர். கருணாநிதியின் அறையில் நேர்காணல் நடைபெற்றது. கருணாநிதி மையமாக அமர்ந்திருக்க, அவருக்கு இடதுபுறத்தில் ஸ்டாலினும், வலதுபுறத்தில் பேராசிரியர் அன்பழக…
-
- 0 replies
- 751 views
-
-
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: 'தமிழகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்' தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்தியக் குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர்-அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பற்றி அறிவதற்காக சென்றிருந்த உண்மை கண்டறியும் குழுவினர், இந்த முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் மிகவும் துயர…
-
- 0 replies
- 408 views
-
-
அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்:தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்! சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் தங்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள, பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுசெயலர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் , இந்திய குடியரசு கட்சி…
-
- 0 replies
- 295 views
-
-
6 முனை போட்டி எந்தக் கட்சிக்கு சாதகம்? - மூத்த பத்திரிகையாளர்கள் கணிப்பு தனித்து போட்டியிடுவது என்ற தேமுதிகவின் முடிவால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு 6 முனை போட்டி ஏற்பட்டால் விளைவுகள் எப்படி இருக்கும்? வாக்குகள் பிரிவது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்களின் கணிப்பு: ஞாநி (மூத்த பத்திரிகையாளர்) ஒரு கட்சியின் வாக்கு வங்கி என்பது தேர்தலுக் குத் தேர்தல் மாறக் கூடியது. தேமுதிகவின் பலம் 5 சதவீதத்திலிருந்து 2 ஆக குறையலாம். அல்லது 12 சதவீதமாகக் கூட அதிகரிக்கலாம். எனவே, 6 முனை போட்டி ஏற்பட்டால் யாருக்குச் சாதகம்…
-
- 0 replies
- 543 views
-
-
http://cinema.nakkheeran.in/frmOnlineVideo.aspx?V=531
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
‘மன்மத’ புகாரில் மந்திரிகள்! ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சிலர் மீது பாலியல் ரீதியான புகார்கள் உள்ளன. அமைச்சர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, ரமணா ஆகியோர் தொடர்பான பாலியல் விவகாரங்களை கடந்த இதழில் அலசினோம். இந்த வாரம்... அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் என்ற பெயரைச் சொன்னால், கூடவே ஜெயமணி என்ற பெயரும் ஞாபகத்துக்கு வரும். ஆனந்தன் - ஜெயமணி என்ற பெயர்கள் அந்த அளவுக்குப் பிரபலம். அமைச்சர் ஆனந்தன் தன்னோடு நெருங்கிப் பழகியதாகவும், கார்டனில் இருக்கும் ஒருவரை அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று மிரட்டியதாகவும் ஜெயமணி என்ற பெண் தொழிலதிபர் அளித்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனந்தன் மீது ஜெயமணி அளித்த தொடர் புகார்…
-
- 0 replies
- 663 views
-
-
ராஜீவ் கொலை வழக்கு மர்மம் - வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ் -
-
- 0 replies
- 1.5k views
-
-
இவரு தான் அவரா? இல்ல அவரு தான் இவரா? விஜயகாந்தின் அமெரிக்க வெர்ஷன் - வீடியோ தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ், தனது போஸ்டர்களில் ஒபாமாவின் ஹோப் பிரச்சாரத்தை காப்பி அடித்தார் எனக் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் நம்ம ஊர் விஜயகாந்தை போலவே நடந்து கொள்கிறார் என்றால் நம்புவீர்களா? தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க ! டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயகாந்த், தொலைகாட்சி நிருபரை பார்த்து, "தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க...!" என்றது தாறுமாறு வைரல். பிரசாரத்தின் போது தொடர்ந்து கேள்விகளை கேட்ட யுனிவிஷன் நிருபரை உட்கார சொல்லி கொண்டே இருந்த ட்ரம்ப், பின்னர் உதவியாளரை அழைத்து, அந்த நிருபரை யுனிவிஷனுக்கு திரும்ப போகச் சொன்னது ( Go ba…
-
- 0 replies
- 411 views
-
-
அரண்டு கிடக்கும் 'ஓபிஎஸ்' டீம்... வேட்பாளர் பட்டியலிலும் பெயர் காலி? "எவ்வளவுதான் நெருக்கத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம் வெளிப்பட்டாலும், மெல்லிய இரும்புத்திரையின் நடுவில் அமைத்திருக்கும் கோட்டைதான் அது என்பதை அண்ணன் இப்போது புரிந்து கொண்டிருப்பார் " என்கிறார்கள், ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள். 'வடக்கே போகலாம், தெற்கே போகலாம், கிழக்கே போகலாம், மேற்கே போகலாம்... ஆனால், மாடிக்கு மட்டும் போகக்கூடாது... என்ன புரியுதா ?' என்ற புகழ்பெற்ற சினிமா வசனம் ஓபிஎஸ் வாழ்க்கையில் நிஜமாகி விட்டிருக்கிறது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில்தான் ஓபிஎஸ்சும் எஞ்சிய நால்வரும் பரிதாபமாக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இல்லை, இல்லை ஓபிஎஸ் தவிர மற்றவர்கள் அவரவர் ஊரில்தா…
-
- 0 replies
- 776 views
-
-
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு! கடந்த 2000ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியதும், அன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். தருமபுரியில் சாலை மறியல்களும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தபோது சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்தை தர்புரியில் வழி…
-
- 0 replies
- 484 views
-
-
தேமுதிக தனித்துப்போட்டி என விஜயகாந்த் அறிவிப்பு: கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி! சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த கூட்டணி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இன்று சென்னை, ராயப்பேட்டையில் தே.மு.தி.க. மகளிரணி கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசுகையில், ''எனது கட்சியை வழி நடத்த ஊடகங்கள் எனக்கு சொல்லித்தர வேண்டாம். எனது கட்சியை நான் அருமையாக வழி நடத்தி செல்கிறேன். எனது கட்சியினர் அருமையாக இருக்கின்றனர். நான் தெளிவாக இருக்கிறேன். கூட்டணிக்காக பேரம் பேசுவதாக கூறுகிறார்கள். நான் …
-
- 4 replies
- 933 views
-
-
விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா! சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை ஏன் தெரியுமா..? என்று தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டத்தில் விளக்கினார் பிரேமலதா. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் தினத்தை ஒட்டி, தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கவிருந்த கூட்டம், மாலை 5 மணி வரை தள்ளிப் போனது. அதுவரை, விஜயகாந்த் நடித்த படங்களின் பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் ஆட்டம்போட்டனர். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்து வந்திருந்த மகளிர் அணி உறுப்பினர்கள், நிகழ்ச்சி தொடங்கியவுடன் அனைத்துக் கட்சிகளையும் விளாசத் தொடங்கினர். ''அன்புமணிக்கு என்ன…
-
- 0 replies
- 660 views
-
-
இன்னும் எத்தனை நாடகங்கள்? ப.திருமாவேலன்படம்: பா.காளிமுத்து, ஓவியம்: கார்த்திகேயன் மேடி ஒரே ‘அரிச்சந்திர மயான காண்டம்’ நாடகத்தை, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி நடித்துக் காட்டுவதைக் காணச் சகிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் அரசியல் நடத்த ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. போயும் போயும் சாவிலுமா தனது சதிகார அரசியலைப் பாய்ச்ச வேண்டும்? ஈழத் தமிழர் விவகாரத்தில் இனப்பற்றுடன் சில முழக்கங்களை கருணாநிதி எழுப்பினால், உடனே ஜெயலலிதாவுக்கு நாட்டுப் பற்று பொங்கி வழியும். ‘தேசத் தாயாக’ தன்னை உருவகப்படுத்திக் கொள்வார். கருணாநிதி தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பதுங்க ஆரம்பித்தால், ஜெயலலிதா ‘தனி நாடு’ எனப் பாய ஆரம்பிப்பார். நளினியின் தண்டனைய…
-
- 0 replies
- 876 views
-
-
மறுபடியும் முதலிலிருந்தா? தேமுதிக தலைவர் விஜயகாந்த் | கோப்பு படம் சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அரங்கம் இப்போது இருந்ததைப் போலவே பரபரப்பாக இருந்தது. கூட்டணி பேரங்களும் ஊகங்களும் நடந்துகொண்டிருந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி சார்ந்த விவாதங்களின் மையமாக இருந்தார். கூட்டணி விஷயத்தில் அவர் என்ன முடிவெடுப்பார் என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. தேர்தல் முடிவை அவர் தீர்மானித்தவராக இருந்தார். இன்றும் அவரது முடிவு தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் எனக் கணிசமானவர்களால் நம்பப்படுகிறது. திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் அவரது கூட்டணிக்காகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 5 ஆண்டுகளில் விஜயகாந்தின் முக்கியத்துவம் மாறிவிடவ…
-
- 0 replies
- 348 views
-
-
யாருடன் கூட்டணி? விஜயகாந்த் தயக்கத்தின் பின்னணி! தமிழக அரசியல் வட்டாரத்தில் கேட்காமல் கொடுத்த ஒரு 'வாய்ஸ்', பாட்சா விழாவில் ரஜினிகாந்த் கொடுத்தது. யார் கேட்டாலும் கொடுக்காமல் இப்போது இருப்பது கேப்டன் வாய்ஸ். முன்னவர் அரசியல் கட்சியின் தலைவரல்ல. பின்னவர் தே.மு.தி.க என்ற அரசியல் கட்சியின் தலைவர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரைக் கொண்ட 'மக்கள் நலக் கூட்டணி'யும் இந்த நிமிடம் வரை விஜயகாந்தின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவைகள் தவிர மாநிலத்தில் ஆண்ட கட்சியான தி.மு.க.வும், மத்தியில் ஆண்டுக்கொண்டிருக்கிற கட்சியான பா.ஜ.க.வும் விஜயகாந்தின் தே.மு.தி.க வருகையை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றன. "பழம் கன…
-
- 0 replies
- 585 views
-
-
தூத்துக்குடி அருகே பழையகாயலில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உறவினரின் உதவியாளார்கள் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்ட ஒருவரின் தலையை துண்டித்து அக்கும்பல் கையில் எடுத்து சென்றுள்ளது.அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவராக இருந்து வருவர் சுபாஷ் பண்ணையார். இவரது சகோதரர் வெங்கடேஷ் பண்ணையார், சென்னையில் நடைபெற்ற மோதலில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பின்னர், கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்டார் வெங்கடேஷ் பண்ணையார் மனைவி ராதிகா செல்வி. வெற்றி பெற்ற அவர் பின்ன மத்திய இணை அமைச்சராகவும் சிலகா…
-
- 0 replies
- 1.7k views
-
-
தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைவதில் இழுபறி ஏதும் இல்லை: கருணாநிதி தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைவதில் இழுபறி ஏதும் இல்லையென தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். தி.மு.க. - தே.மு.தி.க கூட்டணி நிச்சயம் அமையுமென கருணாநிதி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் (கோப்புப் படம்). சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி முடிவாகிவிட்டதா என்று கேட்டபோது, பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று தெரியவில்லையெனக் கூறினார். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. கண்டிப்பாக சேரும் என்று நம்புவதாகவும் கருணாநிதி தெரிவித்தார். வேறு எந்தக் கட்சிக்கும் தி.மு.க. கூட்டணியில் சேர்வதற…
-
- 1 reply
- 437 views
-
-
3 நாள் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு- நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கியது ஐகோர்ட் நளினிக்கு மூன்று நாள் பரோல் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு நாள் மட்டுமே பரோலில் சொல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கேட்டுவேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் நளினி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட வேலூர் சிறை கண்காணிப்பாளர், நளினிக்கு ஒரு நாள் அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து தந்தையின் இறுதிச் சட…
-
- 1 reply
- 378 views
-
-
பாகிஸ்தானைச் சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் 10 பேர் குஜராத் மாநில கடற்கரை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறையினர் நாடு முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்த அனைத்து மாநிலத்துக்கும் உத்தரவிட்டது. விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டனர்.இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் செல்ல தடை விதித்துள்ளனர். பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறது.வருகிற 12–ந் தேதி வரை விமான …
-
- 0 replies
- 232 views
-