தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
இந்தியாவில் விற்கப்படும் பாலில், சோப்பு தூள்,வெள்ளை பெயின்ட், சோடா என்று உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன், நாடளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளித்துப் பேசினார்.அப்போது அவர், இந்திய அளவில் பாலில் செய்யப்படும் பகீர் கலப்படம் குறித்து அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார். " நாட்டில் அன்றாடம் வினியோகிக்கப்படும் பால் குறித்து உணவுப் பொருள் ஒழுங்குமுறை அமைப்பினர் நடத்திய ஆய்வில் 68% பால் தரமானதாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர தவிர, பாலில் உடலுக…
-
- 2 replies
- 351 views
-
-
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! திருச்சி: மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வந்தால்,கூட்டணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். " தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசின் ‘மர்ம’மான சம்பவங்கள் சூழந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வேலை வாங்கி தருவதாக அமைச்சர் சண்முகநாதனின் உ…
-
- 0 replies
- 537 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினி வைத்தியசாலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி இன்று காலை திடீரென வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சைபிரிவில் பரிசோதனை நபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பில் சிறைத்துறை மற்றும் மருத்துவ வட்டாரத்தில் வினவியபோது, அவர் நரம்பு மற்றும் இதயம் சம்மந்தமான சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். திடீரென நளினி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டமை சிறைத்துறை மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. http…
-
- 0 replies
- 413 views
-
-
மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள் “அ.தி.மு.க-வால் அசிங்கப்பட்டது போதும்!” - “தி.மு.க-தான் இறங்கி வரலை!”ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: ஜி.ராமமூர்த்தி ``இந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும் கோக்குமாக்கும் நிறையவே நடந்து முடிந்துவிட்டன. ``காஞ்சிபுரம் வாருங்கள்... யாரோடு கூட்டணி என்பதைச் சொல்லப்போகிறேன்'' என்று அழைத்த விஜயகாந்த், கட்சிக்காரர்கள் காதுக்குள் கட்டெறும்பை விட்டு அனுப்பி வைத்தார். `தனியாகத்தான் நிற்பேன்' என்று அறிவித்த மகளிர் தின பொதுக்கூட்டத்துக்கு, அவர் வருவதாகவே இல்லை... வந்தார்; சொல்வதாகவே இல்ல…
-
- 0 replies
- 520 views
-
-
மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஒரு உறுதியான நாள், நேரம் கிடையாது. இவர்களில் வேலைக்கு செல்லும் ஆண்கள்/ பெண்கள், பள்ளி/கல்லூரியில் பயிலுபவர்கள் என அனைவரும் இவர்கள் அழைக்கும் போது எல்லாம் அந்த CHECKINGக்கு வந்து விட வேண்டும். இந்த CHEKCING என்பது மாதம் ஒருமுறையாக இருந்து பின்னர் 15 ந…
-
- 11 replies
- 1.8k views
-
-
'அம்மா' வை வீழ்த்த அசுவமேத யாகம் நடத்தினாரா ஓ.பி.எஸ்? - அதிர்ந்து கிடக்கும் கார்டன் வட்டாரம்! அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி நாம், போயஸ் கார்டனில் உள்ள உதவியாளர்கள் சிலரிடம் பேசினோம். “‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார். இதற்காக, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் அவர் யாக…
-
- 1 reply
- 745 views
-
-
சீட்டுக்கு பணம் கேட்கப்பட்டதா? கேப்டன் அலுவலகத்திற்கு பூட்டு! தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று ஓப்பனாக அறிவித்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கொஞ்சமாக அதில் ஒரு மாற்றம் போல், 'என்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தும் கட்சிகளை வரவேற்கிறேன்' என்றார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் பல ரசவாதங்களை ஏற்படுத்தி வைத்துள்ளது. பின்வாசல் வழி தேமுதிகவின் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரே கேப்டனின் இந்த முடிவால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், '' தேமுதிக அலுவலகத்துக்கு பின் வாசல் வழியாக வந்து பின் வாசல் வழியாகவே விஜயகாந்த் போகிறார்'' என்ற குற்றச்சாட்டையும் …
-
- 0 replies
- 513 views
-
-
கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோருக்கு ஆணவக் கொலைகளில் பங்கில்லையா? சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். அதே போல, தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் செய்ய நினைப்பவர்கள், சாதியத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நிதர்சனம் அப்படி இருக்கிறதா...? உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க. பா.ம.க ஆகிய கட்சிகளின் கையில் ரத்தக் கறை இல்லையா...? ஆட்சி செய்ய விரும்புபவரிடமிருந்து தொடங்குகிறேன். அன்புமணி ராமதாஸ் ஆகிய நான்: அன்பிற்குரிய அன்புமணி, நீங்கள் இன்னும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. உங்களுக்கு உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் அதிக தொடர்பில்லை என்றாலும், நீங…
-
- 3 replies
- 816 views
-
-
ராமதாஸா... யாரு அவரு...? (வீடியோ...!) அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத கட்சியாக வளர்ந்து நிற்கிறது பா.ம.க. இதுநாள் வரை, யாருடனாவது கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த அந்த கட்சி, இம்முறை ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தன் முதல்வர் வேட்பாளரை அறிவித்து, தனியாக தேர்தலை சந்திக்க துணிந்துவிட்டது. அனைத்து கட்சிகளும், பா.ம.கவின் அசுர வேகத்தை கொஞ்சம் மிரட்சியுடனே பார்க்கின்றன. ஆனால், வெகுஜன மக்களுக்கு பா.ம.க, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பற்றி தெரிந்து இருகிறதா...? ஹோ... பா.ம. கவா...? நல்லா தெரியுமே.. பாரதிய ஜனதா கட்சி தானே என்கிறார் ஒருவர்... இன்னொருவர், ராமதாஸா... யாரு அவரு....? என்னத்தான் மாடர்னா தேர்தல் பிரச்சாரத்தை செய்தாலும், இன்னும் இளைஞர்களிடம் அந்த கட்சி சேரவில்…
-
- 0 replies
- 575 views
-
-
மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்! தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவிற்கும், திமுக கூட்டணிக்கும் எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. அதிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பால் உற்சாகம் குன்றிய கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், அவர்களை கட்சி தாவி விடாமல் இழுத்து பிடிப்பதற்காகவும் கூட்டணிக்கான முஸ்தீபுகளில் விஜயகாந்த் தீவிரம் காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், 15 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக உள்ளதாக செய்திகள் வெளியா…
-
- 0 replies
- 755 views
-
-
விஜயகாந்த் செல்வாக்கு? - ஸ்பெஷல் சர்வே... ரிசல்ட்! விஜயகாந்த்... 15-வது சட்டமன்றத் தேர்தலில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். கருணாநிதி vs ஜெயலலிதா என்கிற யுத்தத்தைவிட விஜயகாந்த்தின் ஆதரவு காந்தத்துக்குத்தான் மவுசு அதிகம். அறிவாலயமும் கமலாலயமும் தாயகமும் பாலன் இல்லமும் பி.ராமமூர்த்தி நினைவகமும் தே.மு.தி.க-வின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. ‘பழம் நழுவிக்கொண்டிருக்கிறது... பாலில் விழும்’ என கருணாநிதி சொல்ல... ‘தனித்துப் போட்டி’ என தனி ரூட்டில் பயணிக்கிறார் விஜயகாந்த். எந்தக் கூட்டணியிலும் சேராமல் தே.மு.தி.க தலைமையில் கூட்டணி என புதுப் பொங்கல் வைத்திருக்கிறார் விஜயகாந்த். தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு சட்டமன்றத் தேர்தலில் புதுத் திருப்பம். இந்த அதிரடி அறிவிப்ப…
-
- 0 replies
- 562 views
-
-
ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட் அ.தி.மு.க.வில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார்கள். ஆனால் முதல் முறையாக ஓ.பி.எஸ், நத்தம், எடப்பாடி, வைத்தி, பழனியப்பன் என்று ஐவர் அடையாளம் காட்டப்பட்டனர். இது எப்படி நிகழ்ந்தது என்பதும், இதன் பின் விளைவு எப்படியிருந்தது என்றும் மனக் குமுறலோடு கொட்டித் தீர்க்கின்றனர் ஒரு காலத்தில் கட்சியில் கோலோச்சி நின்றவர்கள். ஐவரணியின் குட்டுக்கள் உடைந்ததின் பின்னணியில், மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ''அப்ரூவர்'' ஆன கதையும் உள்ளது. திகில், திருப்பங்களுடன் நமக்கு கிடைத்த தகவல்களை அப்படியே இங்கு தருகிறோம்.... டான்சி வழக…
-
- 0 replies
- 524 views
-
-
விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்! " வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்" என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், 'தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்' என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது. இதனால் மிகவும் சோர்ந்துபோனது திமுக. பாஜக என்ன செ…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
விஜயகாந்த் கனவு மட்டுமல்ல, கட்சியும் கலையப் போகுது: திண்டுக்கல் லியோனியின் 'கட்சிக்கு ஒரு பாட்டு' பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட திமுக பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனியிடம், ‘களத்தில் நிற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சினிமா பாட் டைப் பாடி ‘நச்’சுன்னு நாலு வார்த்தை சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.. ‘அதுக்கென்ன சொல்றேன், எழுதிக்குங்க..’ என்று ஆரம்பித்துவிட்டார். அதிமுக ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.. உறவெல்லாம் முள்ளாகும்.. நினைவெல்லாம் கல்லாகும்..’ இந்தப் பாட்டுதான் இப்ப அதிமுகவுக்கு பொருத்தமான பாட்டு. போன தேர்தல்ல அதிம…
-
- 0 replies
- 504 views
-
-
“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்! அ.தி.மு.க-வில் விருப்பமனு அளித்த 26 ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வில் விருப்பமனு அளித்த அனைவரிடமும், தானே முன்னின்று நேர்காணல் நடத்தி முடித்துள்ளார் தலைவர் கலைஞர். அவரை நேராகச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே மகிழ்ச்சிதான்” என்கிறார் நேர்காணலில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர். மாவட்டவாரியாக அழைக்கப்பட்ட தேதியில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள், அறிவாலய வளாகத்தில் இருந்த பந்தலில் தொகுதிவாரியாக அமர வைக்கப்பட்டனர். கருணாநிதியின் அறையில் நேர்காணல் நடைபெற்றது. கருணாநிதி மையமாக அமர்ந்திருக்க, அவருக்கு இடதுபுறத்தில் ஸ்டாலினும், வலதுபுறத்தில் பேராசிரியர் அன்பழக…
-
- 0 replies
- 752 views
-
-
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: 'தமிழகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்' தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்தியக் குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர்-அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பற்றி அறிவதற்காக சென்றிருந்த உண்மை கண்டறியும் குழுவினர், இந்த முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் மிகவும் துயர…
-
- 0 replies
- 409 views
-
-
அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்:தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்! சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் தங்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள, பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுசெயலர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் , இந்திய குடியரசு கட்சி…
-
- 0 replies
- 297 views
-
-
6 முனை போட்டி எந்தக் கட்சிக்கு சாதகம்? - மூத்த பத்திரிகையாளர்கள் கணிப்பு தனித்து போட்டியிடுவது என்ற தேமுதிகவின் முடிவால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு 6 முனை போட்டி ஏற்பட்டால் விளைவுகள் எப்படி இருக்கும்? வாக்குகள் பிரிவது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்களின் கணிப்பு: ஞாநி (மூத்த பத்திரிகையாளர்) ஒரு கட்சியின் வாக்கு வங்கி என்பது தேர்தலுக் குத் தேர்தல் மாறக் கூடியது. தேமுதிகவின் பலம் 5 சதவீதத்திலிருந்து 2 ஆக குறையலாம். அல்லது 12 சதவீதமாகக் கூட அதிகரிக்கலாம். எனவே, 6 முனை போட்டி ஏற்பட்டால் யாருக்குச் சாதகம்…
-
- 0 replies
- 544 views
-
-
http://cinema.nakkheeran.in/frmOnlineVideo.aspx?V=531
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
‘மன்மத’ புகாரில் மந்திரிகள்! ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சிலர் மீது பாலியல் ரீதியான புகார்கள் உள்ளன. அமைச்சர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, ரமணா ஆகியோர் தொடர்பான பாலியல் விவகாரங்களை கடந்த இதழில் அலசினோம். இந்த வாரம்... அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் என்ற பெயரைச் சொன்னால், கூடவே ஜெயமணி என்ற பெயரும் ஞாபகத்துக்கு வரும். ஆனந்தன் - ஜெயமணி என்ற பெயர்கள் அந்த அளவுக்குப் பிரபலம். அமைச்சர் ஆனந்தன் தன்னோடு நெருங்கிப் பழகியதாகவும், கார்டனில் இருக்கும் ஒருவரை அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று மிரட்டியதாகவும் ஜெயமணி என்ற பெண் தொழிலதிபர் அளித்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனந்தன் மீது ஜெயமணி அளித்த தொடர் புகார்…
-
- 0 replies
- 665 views
-
-
ராஜீவ் கொலை வழக்கு மர்மம் - வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ் -
-
- 0 replies
- 1.5k views
-
-
இவரு தான் அவரா? இல்ல அவரு தான் இவரா? விஜயகாந்தின் அமெரிக்க வெர்ஷன் - வீடியோ தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ், தனது போஸ்டர்களில் ஒபாமாவின் ஹோப் பிரச்சாரத்தை காப்பி அடித்தார் எனக் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் நம்ம ஊர் விஜயகாந்தை போலவே நடந்து கொள்கிறார் என்றால் நம்புவீர்களா? தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க ! டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயகாந்த், தொலைகாட்சி நிருபரை பார்த்து, "தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க...!" என்றது தாறுமாறு வைரல். பிரசாரத்தின் போது தொடர்ந்து கேள்விகளை கேட்ட யுனிவிஷன் நிருபரை உட்கார சொல்லி கொண்டே இருந்த ட்ரம்ப், பின்னர் உதவியாளரை அழைத்து, அந்த நிருபரை யுனிவிஷனுக்கு திரும்ப போகச் சொன்னது ( Go ba…
-
- 0 replies
- 411 views
-
-
அரண்டு கிடக்கும் 'ஓபிஎஸ்' டீம்... வேட்பாளர் பட்டியலிலும் பெயர் காலி? "எவ்வளவுதான் நெருக்கத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம் வெளிப்பட்டாலும், மெல்லிய இரும்புத்திரையின் நடுவில் அமைத்திருக்கும் கோட்டைதான் அது என்பதை அண்ணன் இப்போது புரிந்து கொண்டிருப்பார் " என்கிறார்கள், ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள். 'வடக்கே போகலாம், தெற்கே போகலாம், கிழக்கே போகலாம், மேற்கே போகலாம்... ஆனால், மாடிக்கு மட்டும் போகக்கூடாது... என்ன புரியுதா ?' என்ற புகழ்பெற்ற சினிமா வசனம் ஓபிஎஸ் வாழ்க்கையில் நிஜமாகி விட்டிருக்கிறது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில்தான் ஓபிஎஸ்சும் எஞ்சிய நால்வரும் பரிதாபமாக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இல்லை, இல்லை ஓபிஎஸ் தவிர மற்றவர்கள் அவரவர் ஊரில்தா…
-
- 0 replies
- 777 views
-
-
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு! கடந்த 2000ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியதும், அன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். தருமபுரியில் சாலை மறியல்களும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தபோது சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்தை தர்புரியில் வழி…
-
- 0 replies
- 485 views
-
-
தேமுதிக தனித்துப்போட்டி என விஜயகாந்த் அறிவிப்பு: கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி! சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த கூட்டணி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இன்று சென்னை, ராயப்பேட்டையில் தே.மு.தி.க. மகளிரணி கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசுகையில், ''எனது கட்சியை வழி நடத்த ஊடகங்கள் எனக்கு சொல்லித்தர வேண்டாம். எனது கட்சியை நான் அருமையாக வழி நடத்தி செல்கிறேன். எனது கட்சியினர் அருமையாக இருக்கின்றனர். நான் தெளிவாக இருக்கிறேன். கூட்டணிக்காக பேரம் பேசுவதாக கூறுகிறார்கள். நான் …
-
- 4 replies
- 935 views
-