Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு சம்பள பாக்கி: தமிழக அரசுக்கு சிக்கல் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞருக்கு சம்பளம் கொடுக்காதது குறித்து உரியவிளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது வருவாய்க்கு அதிகம் சொத்து சேர்த்தது குறித்து தமிழக இலஞ்ச ஒழிப்பு துறை பொலிசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கு விசாரணை தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர்களில் சதீஷ் கிர்ஜியும் இடம்பெற்றிருந்தார். மேலும், 2015ம் ஆண்டு ஜனவர…

  2. தமிழகத் தேர்தல்:திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீகும் இணைந்தது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது. திமுக தலைவருடன் முஸ்லிம் லீக் கட்சியினர் சந்தித்து தேர்தல் உறவு குறித்து பேசினர் அத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளன. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியில் தமது கட்சியும் இணைகிறது என்பதை முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் திங்கட்கிழமை செய்தியாளர்களிடன் உறுது செய்தார். திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபா…

  3. தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி?: விஜயகாந்த் அறிவிப்பார் என்கிறார் பிரேமலதா! காஞ்சிபுரம்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தே.மு.தி.க. தலைமையில் இருக்குமா என்பதையும் கட்சித் தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தில், தே.மு.தி.க. மாநில மாநாடு, வருகின்ற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தே.மு.தி.க.வின் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டணி குறித்த அறிவிப்பை மாநாட்டின்போதோ, மாநாடு முடிந்த ஒரு வா…

  4. காதலர் தினத்தில் நாய்கள் முத்தமிடும் போராட்டம்; 'ஆணாதிக்க சிந்தனை' உலகின் பல பாகங்களிலும் பிப்ரவரி 14-ம் திகதி கொண்டாடப்படுகின்ற காதலர் தினம் இந்தியாவிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டுவருகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் இன்று இந்த தினத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆதரவான கொண்டாட்டங்களும் நடந்துள்ளன. சென்னையில் மெரினா கடற்கரையில் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். முத்தங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகளும் இங்கு நடந்தன. இதுபோன்ற ஆதரவு நிகழ்வுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன. 'கலாசார சீர்கேடு' இதனிடையே, காதலர் த…

  5. சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது: மு.க.அழகிரி திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கொள்கை இல்லை என்று கூறிய மு.க.அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிவித்தார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம், திமுக விலகியது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக நன்றி கெட்டவர்கள் என்றனர். நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். மீண்டும…

  6. காங்கிரஸ் கூட்டணி; ஒரு கல்லில் பல மாங்காய்களை பறித்துக் கொண்ட கருணாநிதி! அரசியல் விவரம் அறிந்தவர்கள் எதிர்பார்த்திருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகி விட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்திப்பதென்று முடிவு செய்யப்பட்டு அதற்கான முறையான அறிவிப்பும் சனிக்கிழமை, பிப்ரவரி 13 ம் தேதி வெளிவந்து விட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் மு.கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர் இந்த தகவலை ஆசாத் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். இதனை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் பின்னர் உறுதிபடுத்தினார். கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்குமா என்று கே…

  7. வரும் தேர்தலில் விஜயகாந்த் ஜெயலலிதாவை பழிக்கு பழி வாங்க கூடும்! தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழக முதல்வராகிவிட எல்லாவிதமாக முயற்சியிலும் ஈடுபடுவார்கள். ஆனால் சென்னை பெருவெள்ளத்துக்கு முன்பு வரை தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் பெரு வெள்ளம் ஏற்படுத்திய மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பெருவெள்ளத்தை பொறுத்தவரை சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்டு விட்டது. இந்த மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதி…

  8. 234 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும்: ராமதாஸ் அறிவிப்பு ராமதாஸ். | கோப்புப் படம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் பாமக சார்பில் வேட்பாளர் கள் நிறுத்தப்படுவர் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட பாமக இளை ஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாங்கள் மாறவில்லை பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக இருக்கிறே…

  9. திமுக - காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் அறிவிப்பு திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்தார் | படம்: எல்.சீனிவாசன். 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்காக சென்னை வந்த குலாம்நபி ஆசாத் (இன்று) சனிக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், "வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை திமுக - காங…

  10. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான்! சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதற்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கடலூரில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று(வெள்ளி) பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழகத்தில் தீய ஆட்சிமுறை ஒழிய, தூய ஆட்சி முறை மலர, பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகம் காக்க ‘எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சி’ என்ற பொது முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போ…

  11. திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.12 கோடி! [Saturday 2016-02-13 09:00] திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.12 கோடி வசூலானது.திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பும் போது உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்துவர். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தேவஸ்தானம் அன்றன்றே கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது.அதன்படி புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 2.12 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.12 கோடி வசூலானது.திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துத…

  12. 'அவர் மட்டும் என்ன அன்னிபெசன்ட் அம்மையாரின் அக்கா பொண்ணா...?' - சுளீர் குஷ்பு! ஈரோடு: தன்னை நடிகை என்று பேசும் அதிமுகவினர், 'ஜெயலலிதா அம்மையார் நடிகையாக இருந்துதானே அரசியலுக்கு வந்தார். இல்லை அவர் மட்டும் என்ன மதர் தெரசா குடும்பத்தைச் சேர்ந்தவரா அல்லது அன்னி பெசன்ட் அம்மையாரின் அக்கா பொண்ணா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்' என்று குஷ்பு கொந்தளித்துள்ளார். ஈரோட்டில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குஷ்பு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்," நடிகைகள் பின்னாடி காங்கிரஸ் போகணும் என்று அவசியமில்லை.காங்கிரஸ் கட்சியில் என்னை யாரும் நடிகையாகப் பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டராகத்தான் என்னை எல்லோரும் பார…

  13. மக்கள் நலக் கூட்டியக்கத்தில் 4 கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு இடமில்லை: வைகோ உறுதி! புதுக்கோட்டை: மக்கள் நல கூட்டியக்கத்தில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை சேர்க்க மாட்டோம் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் அரசியல் மாற்று எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்திய கம்யூ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, 'தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்…

  14. தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடை நீக்கம் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தமிழக சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசும்போது, ஜெயலலிதாவை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்…

  15. 'திமுக - அதிமுக ஒண்ணா தோத்து பார்த்ததில்லையே... பார்ப்ப!' - ஆஹான் ம.ந.கூ.! தமிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. சீட்டுக்காக கொள்கை கோட்பாடுகளையெல்லாம் மறக்கும் தருணம் இது. திமுகவை பாரதிய ஜனதா நெருங்கி வருகிறது என்றால் திமுக தலைமையோ விஜயகாந்தை நோக்கி வலை வீசுகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி யாருடன் வைக்கலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் 'மக்கள் நல கூட்டணி ' என்ற ஒரு கூட்டணி ஏற்பட்டு முழு வீச்சாக களத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணிக்கு மதிமுக செயலாளர் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கி…

  16. 'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை! சென்னை: திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி கதை ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், " அ.தி.மு.க. தலைவி வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் எத்தனை பேரின் மகிழ்ச்சியைக் கெடுத்து, மன வருத்தத்தைக் கொடுத்து, அதிலே இன்பம் கண்டார் என்பதை; வேல…

  17. மக்கள் நலக்கூட்டணி - ஒர் அலசல் மாற்று அரசியலை முன்வைக்கும் கூட்டணி குறித்து ஓர் அலசல்பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவே இன்றும் தேர்தல் களத்தில் முழுமையாக இறங்காத நிலையில், முழுமூச்சில் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி.மதிமுக தலைவர் வைகோ தலைமையிலான இக்கூட்டணியில் பங்கேற்றிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரத்தில் உற்சாகம் மிளிர்கிறது. சமீபத்தில் மதுரையில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திரண்ட கூட்டமும், மாநாட்டில் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் மக்கள் கவனத்தை மக்கள் நலக் கூட்டணியின் மீது திருப்பியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஆன…

  18. அரசியலில் அப்பா, மகன் உறவுக்கு இடமில்லை... கல்யாணத்தில் ஜெ. சொன்ன கதை யாருக்கு தெரியுமா? சென்னை: அரசியலில் அப்பா, மகன் என்ற உறவுக்கு இடமில்லை. அரசியல் பாடத்தை நீங்களாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ஜெயலலிதா, அதற்கு ஒரு அழகான குட்டிக்கதையையும் கூறியுள்ளார். திருமண விழாவில் பேசிய ஜெயலலிதா, மணமக்களை வாழ்த்திய கையோடு, குட்டிக்கதை கூறத்தொடங்கினார். முதலில் பூனை கதை ஒன்றை கூறினார். ஒரு செல்வந்தர் பூனை ஒன்றை வளர்த்தார். அந்த பூனை முதல்நாள் எலி ஒன்றை பிடித்து வந்தது. அதைப்பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார். மறுநாள், செல்வந்தர் ஆசையாக வளர்த்த கிளியை பிடித்தது. இதைப்பார்த்து செல்வந்தர் கவலைப்பட்டார். மூன்றாம் நாள் ஒரு குருவியை பிடித்து வந்தது பூனை. ஆனால் …

  19. திருவண்ணாமலை கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்த 9 பேர் கைது:பரபரப்பு தகவல்கள்! திருவண்ணாமலை: உலகப் பிரசித்த பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்ததற்காக, வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கைதினைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்களுக்கும் சர்வதேச தீவிரவாத இயக்கத்தினருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோ…

  20. பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி! திருப்பத்தூர் அருகே மரத்தின் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த டிரைவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தில் வசித்து வருபவர் முத்து. பிரபல நகைச்சுவையாளரான இவர், 'அசத்தபோவது யாரு' என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி வையம்மாள் (32). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இந்நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்…

  21. ரஜினி, சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் : பழ. கருப்பையா... நடிகர் ரஜினி மற்றும் கலெக்டர் சகாயாம் போன்றவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று பழ. கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார் . அவர் பேசும் போது “இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக மாற்றியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் அவனை சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாகவே உருவாக்கி இருக்கிறோம். இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகிவிட்டது. பதவியை பிடிக்க வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வர…

  22. மது பாட்டிலில் பூச்சி... நல்ல "சரக்கு" கொடுக்க துப்பு இல்லாத அரசு.. குடிகாரர்கள் குமுறல்!!!!! திருச்சி: பணம் கொடுத்துதானே மது வாங்குகிறோம். எங்களிடம் கொள்ளை கொள்ளையாக பணத்தை வாங்கிக் கொண்டு பூச்சி மிதக்கும் மதுவை விற்கிறார்கள் என்று திருச்சியில் மது வாங்க வந்தோர் புலம்பி குமுறியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள 10229 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையில் சிலர் மது வாங்கியபோது அதில் பூச்சிகள் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த மது பாட்டிலுக்கு பில் தருமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் கடைக்காரர்கள் தர மறுத்து விட்டனர். இதையடுத்து பல்வேறு பத்திரிகை அலுவலகங்களுக்குப் போன் செய்து செய்தியாளர்களையும், புகைப்படக்…

  23. பேரறிவாளனை விடுதலை செய்தால்... தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது! [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 01:11.36 AM GMT ] பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன. 2014, பெப்ரவரி மாதம் 19-ம் தேதி காலையில், அமைச்சரவையைத் திடீரெனக் கூட்டிய ஜெயலலிதா, “23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பால் புலனாய்வு செய்யப்பட்டு,…

  24. மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்" ------------------------------------------------------------------------------------------- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தனர். திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் தலையில் கட்டப்பட்டிருந்த பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.