Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. NaamTamilar Tirupur SamaranBala பகிர்ந்துள்ளார். வேகமாக வளரும் மனை வணிகம். விரைவாக கைவிட்டு போகும் தமிழர் நிலங்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா ? ஒரு இனம் வாழ வேண்டுமெனில் அதற்கு முக்கியமான தேவை அந்த மக்கள் வாழ்வதற்கான மண். அந்த மண் இல்லாவிட்டால் அந்த மக்கள் அகதிகள் ஆகிவிடுவார் . ஈழத்தில் மண்ணை இழந்த மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனது நாம் எல்லோரும் அறிந்ததே. அதனால் தான் உலகில் பல இனங்கள் தங்கள் மண்ணை உயிர் கொடுத்தேனும் பாதுகாத்து வருகின்றனர். உலகில் தொன்மை இனமான தமிழினம் பல காலகட்டங்களில் தனது மண்ணை பாதுகாத்து வந்துள்ளது. இம்மண்ணை ஆண்ட மன்னர்கள் அந்நியர்களின் படையெடுப்பை கடுமையாக எதிர்த்து போரிட்டு வந்துள்ளனர் . எனினும் தமிழர் மண்ணை வேற்றின மக்கள் ஆளாமல் இல…

    • 2 replies
    • 548 views
  2. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமெனக் கோரியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் ஜெயலலிதா, குருவிக்காரர்கள் எனவும் அழைக்கப்படும் அம்மக்களைப் பழங்குடியினராகக் கருதி, அதற்கான பட்டியலில் அவ்வினம் இடம்பெறவேண்டுமென கடந்த ஆண்டு ஜூலையிலேயே மத்திய அரசிடம் கோரியதாக நினைவுகூருகிறார். ஜெயலலிதா வல்லுநர்களின் ஆலோசனையின்பேரில் இந்திய பதிவாளர் நாயகமும் அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார், மத்திய அரசின் பழங்குடியினர் துறையும் இது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் தலையிட்டு, மேலுங்காலந்தாழ்த்தாமல் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவை நிறைவே…

  3. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் சிங்கள பெளத்த இனவெறி அரசியலின் முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. ராவண பலய்யா என்ற அந்த சிங்கள பெளத்த இன வெறி அமைப்பின் பின்னால் இருப்பது மகிந்த ராஜபக்சாவின் இனவெறி அரசுதான் என்பது இலங்கை அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரக அலுவலகத்திற்குள் இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகளும் சிங்கள இன வெறியர்களும் உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்த முயன்றுள்ளனர். எப்போதெல்லாம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் நிலை உருவாகிறதோ அப்போதெல்லாம்…

  4. பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணிக்கும் ஒன்று பட்ட இலங்கையை பேசும் அய்யோக்கிய 13வது சட்டதிருத்ததை எரித்தும் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என வலியுறுத்தியும் பின்வரும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கதின் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகள்:- 1) தனித்தமிழீழ கோரிக்கையை சிதைக்க இந்தியா திணிக்கும் 13வது சட்டத்திருத்தத்தை புறக்கணிக்கின்றோம். 2)தனித்தமிழீழத்திற்கான ஒரே தீர்வான பொதுவாக்கெடுப்பை சர்வதேச சமூகமே உடனே நடத்து. 3) இனப்படுகொலையை மறைக்கும் பொருட்டு இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் கூட்டுச்சதியால் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது. 4) காமன்வெல்…

  5. சென்னை: இதுவரை இல்லாத புதுமையாக தமிழக அரசியல் தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. மூத்த தலைவர் கருணாநிதிக்கோ அல்லது வேறு யாருக்குமே இதுவரை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பழக்கப்பட்டவரில்லை ராகுல் காந்தி. ஆனால் முதல் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பி புதுப் புதுக் கதைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ராகுல் காந்தி.61வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் விஜயகாந்த். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பியிருந்தார் ராகுல் காந்தி.ராகுல் காந்தி இப்படி தமிழக தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது இதுதான் முதல் முறையாம். க…

    • 6 replies
    • 2.5k views
  6. ஈரோடு: எந்தக் கட்டத்திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை என்று வைகோ கூறியுள்ளார். மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் என்ற தலைப்பில் ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில் கூறியதாவது. என்னை அழைத்தபோது கரிகால் சோழன் புத்தகத்தை அளித்தீர்கள். அது பொருத்தம்தான். என்னை கரிகால் சோழனாக சித்தரித்து அல்ல, உங்களுக்கு பொருத்தமாக அந்த நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நீதியை நிலைநாட்டிய வரலாறு நமக்குள்ளது.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் நீதியை நிலைநாட்டிய நூலாகும். இளையன் இவன் என்று எண்ணி விடாதே. ஆகவே, இளையவர்களாம் இணையதள நண்பர்கள் …

    • 1 reply
    • 672 views
  7. சிவகாசி: சிவகாசி அருகே திங்கள்கிழமை காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் தேசிங்குராஜன் என்பவருக்கு பட்டாசு ஆலை உள்ளது. அந்த பட்டாசு ஆலையில் இன்று பட்டாசுகளை தயாரித்து பேக்கிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். பட்டாசுகளை பேக்கிங் செய்யும்போது, ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த திரிசங்கு (38), முருகேஸ்வரி, தமிழ்செல்வி, அழகுமணி, வீரம்மாள் ஆகிய 5 பெண்களுக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பெண்களும் உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு ச…

  8. இராமேஸ்வர மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 4 படகுகளில் சென்ற இவர்களை நேற்று இரவு இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது எல்லையை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். 35 பேரும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ அமைப்புகளும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.sankathi24.com/news/32549/64/35/d,fullart.aspx

  9. தமிழ்நாடு - பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இலங்கை அகதிகள் 3 பேரை பொலிஸார் நேற்று (25) அதிகாலை திடீரென கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் உள்ளிட்ட 8 பேர் கடந்த ஓராண்டாக அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமில் இருந்த செந்தூரான் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து அகதிகள் சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் ஆகியோர் தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்ற கோரி கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உண்ணாவிரதத்தை…

  10. சென்னை ஆட்டோ கட்டணம் அதிரடியாக குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி! சென்னையில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்கு பெரும் பங்காற்றுவது ஆட்டோக்கள்(Auto s) என்றால் அது மிகையாகாது. தமிழகம் முழுவதும் ஓடும் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்களில், சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் பரவலாக குற்றம் சாட்டி வந்தனர். இக்கட்டணம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் ஆட்டோ கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா அதிக…

    • 2 replies
    • 1.3k views
  11. நவிப்பிள்ளையிடம் கருணாநிதி கோரிக்கை! இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம்பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் இலங்கை செல்லயிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.டெசோ சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்றது.இதில் ஈழ விவகாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை ஜெனீவாவுக்கு நேரில் சென்று நவநீதம்பிள்ளையிடம் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தல…

  12. பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 1000க்கும்மேற்பட்டோர் இன்று ஒரு நாள் முழுவதும் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு வெளியே நின்றுள்ளனர். தமிழீழ படுகொலைக்குக் காரணமாக இருந்த இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, அதனை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=90912&category=TamilNews&language=tamil

  13. நடிகர் சத்யராஜ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்யராஜ் கேட்டுக்கொண்டார். சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில் "மெட்ராஸ் கபே படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதில் ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக கேள்விபட்டேன். படத்தைப் பார்த்த நமது உணர்வாளர்களும் தலைவர்களும் படம் தமிழருக்கு எதிரானதாக இருப்பதாகக் கூறியுள்ளனர். விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும். ஒருவேளை உண்மையாகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருந்தால் அது மிகப் பெரிய தவறு. தமிழீழப் போராட்டத்துக்கு யாரும் உதவி செய்யாவிட்டாலும் கூட ப…

  14. சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைகளை காங்கிரஸ் முடுக்கிவிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக திமுகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தது. திமுகவும், மத்திய அரசில் பங்கேற்றது. ஈழ இறுதிப் போர் நடைபெற்ற சூழலிலும் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. அண்மையில் தமிழக மாணவர்கள் போராட்டம் வெடித்த நிலையில் மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக திமுக அறிவித்தது. இருப்பினும் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி முதலில் அறிவித்தது. திமுக கேட்காமலேயே கா…

  15. வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு அவர் கோரும் மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் தங்களது கருணை மனுவை காலதாமதமாக ஜனாதிபதி நிராகரித்ததால் தூக்கை ரத்து செய்யக் கோரி பேரறிவாளவன் உள்ளிட்ட மூவரும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு பேரறிவாளன் கடிதம் அனுப்பியிருந்தார். வீடியோ கா…

  16. அறப்போர் - டிவிடி விற்பனை -------------------------------------------- தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அறப்போர்’ ஆவணப்படத்தின் டிவிடி பல போராட்டங்களிற்கு பின்னர் உலகெங்கும் விற்பனைக்கு வருகின்றது. கோடிகள் செலவு செய்து விளம்பரம் செய்யவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ இது ஒன்றும் மசாலா படம் அல்ல நண்பர்களே . இது எமது வரலாறு! எமது வரலாற்றை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையுமாகும். அதற்கான முதல் நகர்வை இந்த அறப்போர் உங்களிற்கு ஏற்படுத்தி தரும் என நாம் நம்புகின்றோம். இது இனி உங்களின் படம்! உலகெங்கும் எடுத்து செல்வோம் வா…

  17. சென்னை: தனது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சட்டப் பள்ளியை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். மேலும் அதில் சேர்ந்துள்ள 7 மாணவ, மாணவியருக்கு அட்மிஷன் உத்தரவுகளையும் அவர் வழங்கினார். இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு... முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அக்ரவால் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட சட்ட உயர்கல்வி வழங்கப்படும் வக…

  18. சென்னை: ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அம் மனுவில், ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுத…

  19. சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி மதுரை கேகே நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, திமுக நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மு.க. அழகிரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத…

  20. சென்னை: தற்போது நடைபெறும் ஆட்சி தான் மாற்றப்பட வேண்டிய விஷயம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் 375வது பிறந்தநாள் சென்னை தினமாக இன்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை தினத்தையொட்டி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டனர். அதற்கு அவர், சென்னைக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதையடுத்து தற்போது நிலவும் சூழலில் என்ன மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கருணாநிதி, மாற்றப்பட வேண்டியது தற்போது நடைபெறும் ஆட்சியைத் தான் என்றார். http://tamil.oneindia.in/news/2013/08/22/tamilnadu-karunanidhi-wants-see-change-rule-181827…

  21. மெட்ராஸ் கபே படத்தை எதிர்த்து மாணவர் போராட்டம் ! பாலசந்திரன் மாணவர் இயக்கத்தின் சார்பாக தமிழர் விரோத படமான மெட்ராஸ் கபே திரைபடத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 30மாணவர்கள் இன்று 22.08.13 காலை 11மணி அளவில் மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் செய்தோம். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை காவல் துறை கைது செய்து மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் பாலசந்திரன் மாணவர் இயக்கமும் , தமீழத்திற்கான மாணவர் கூட்டமைப்பும் கலந்து கொண்டது. fc

  22. வேலூர்: வேலூர் சிறை அதிகாரிகள், நன்னடத்தை சான்று வழங்காததால், நடிகர், சீனிவாசன், டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த, தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன், வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால், கடந்த, ஏப்ரல், 26ம் தேதி, வேலூர் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம், ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டெல்லி போலீசார் கடந்த ஜூன், 4ம் தேதி, அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைத்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட, ஆறு வழ…

    • 8 replies
    • 864 views
  23. சிவகாசி: சிவகாசி அருகே எம்.துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 40 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 அறைகள் வெடித்து சிதறியதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த வெடி விபத்தால் உயிரிழப்பு பற்றி எதுவும் இதுவரை ஆதரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு சிவகாசி அருகே முதலி…

  24. சென்னை: மெட்ராஸ் கபே படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னையில் பல்வேறு மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என சகல தரப்பினரும் களத்தில் குதித்துள்ளனர். விடுதலைப் புலிகளை இழிவுபடுத்து்ம் இந்தப் படத்தை திரையிடக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் தற்போது மாணவர்கள் தீவிரமாக இறங்கி வருகின்றனர். பல்வேறு ஊர்களிலும் சட்ட மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, பாலசந்தர் மாணவர் இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கான மா…

  25. தமிழகத்துக்குள் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 2-ஆம் திகதி இலங்கை உளவுத்துறை 3 பாகிஸ்தானியர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போலி கடவூச்சீட்டு மூலம் இந்தியாவுக்கு செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் பயிற்சி வழங்கப்பட்ட தீவிரவாதிகள் இலங்கைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி சதி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக 8-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்துள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.