Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திருச்சி ஆதி திராவிடர் நல அலுவலர் கார் பயணத்தில் கைது: ரூ.38 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கைப்பற்றப்பட்ட பணம் திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த திருச்சி ஆதி திராவிடர் நலத் துணை ஆட்சியர் சரவணகுமார் விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் காரில் இருந்து ரூ.38.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆதி திராவிட நலத்துறையில் சமையலர் உட்பட பல்வேறு பணிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக பெற்ற லஞ்சப் பணத்தை விழுப்புரம…

  2. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை எழுமாறாகத் தெரிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தீவிரமடைந்தபோது, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.…

  3. தேர்தல் செலவினப் பட்டியல் விவகாரம்! எடப்பாடி பழனிசாமிடம் விசாரணை? சென்னை ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக இருந்த இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கியது, குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அனைத்துக்கும் உச்சமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் முதல்வர் உள்பட அமைச்சர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. வருமான வர…

  4. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் சதி: துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றச்சாட்டு தம்பிதுரை எம்.பி. படம்: எல். சீனிவாசன் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக ஓபிஎஸ் அணி மீது மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை புகார் கூறினார். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை தம்பிதுரை நேற்று சந்தித்து, ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அணியினர் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிப்பதற்காகவே பல சதித்திட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு கட்சியின் மூன்றில் ஒரு பகுதியினர் பிரிந்து சென்…

  5. பட மூலாதாரம்,X/ANI கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2024 தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலையின் எரிபொருள் நிரப்பப்படுவதை பிரதமர் மோதி பார்வையிட்டுள்ளார். ஆனால், இந்த ஈனுலை ஆபத்தானது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதில் உண்மையில் பிரச்னை இருக்கிறதா? கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலை கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் இந்த முதலுறு அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) வடிவமைத்துச் …

  6. டிடிவி தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு: 3-வது அணியால் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை என தகவல் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட தினகரன், கடந்த 2-ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 3-ம…

  7. நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது செப்.12-ல் உச்சநீதிமன்றம் விசாரணை 10 Sep 2025, 10:46 AM நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (செப்டம்பர் 12) விசாரணை நடைபெற உள்ளது. தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் சீமான் என்பது 2011-ல் போலீசில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார். இதனடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை பிப்ரவரி 21-ந் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்த…

  8. மாணவர்கள், சிறுவர்கள் உளவியல் நெருக்கடி: தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யவேண்டும்? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 28 ஜூலை 2022, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுவர் அடுத்தடுத்து நடந்த மாணவர்களின் தற்கொலைக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ச்சியான மாணவர்கள் தற்கொலைக்கு ஒருமித்த காரணம் இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது…

  9. பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி காமகோடி கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 ஆகஸ்ட் 2024 இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தை ஐஐடி மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு(NIRF) பட்டியலை சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தபிரிவில் , 2019 முதல் ஆறாவது முறையாக இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்களன்று 2024 NIRF தரவரிசை விவரங்களை வெளியிட்டார். ஐஐடி மெட…

  10. சென்னை: "சன் டி.வி.க்குத்தானே பாதிப்பு; நமக்கென்ன?’ என்ற எண்ணம் அரசியல் நோக்கத்தில் ஏற்படுமானால், எதிர்காலத்தில் அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தி ஒவ்வொன்றாக நசுக்கி மோடி அரசு கபளீகரம் செய்து விடும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரண்களுள் ஒன்றுதான் செய்தி ஊடகத்துறை ஆகும். பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான நரேந்திர மோடி அரசு, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கின்ற விதத்தில், கருத்து உரிமையை நசுக்கிடப் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக முனைந்து செயல்படுகிறது. எனவேதான், ‘நெருக்கடி நிலையின் நிழல் படரக் கூடும்’ என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. …

  11. தொடரும் சசிகலாவின் மெளன விரதம்! - ஜெ., மரணம் தொடர்பான ஆணையத்தில் ஆஜராகவில்லை ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி முன்பு தீபா, தீபக் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இன்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது அவரை உடனிருந்து கவனித்து கொண்ட சசிகலாவுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராகமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறை…

  12. சிபிசிஎல் ஆலையை சுற்றி பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்? கள நிலவரம் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் ஜோசபினின்(45) வாழ்க்கை, கடந்த ஒரு மாதமாக முழுமையாக மாறி விட்டது. ஓடி, ஓடி குடும்பத்திற்கு வேலை செய்த ஜோசபின் தற்போது மூச்சு விடவே சிரமப்படுகிறார். தினமும் வானம் இருட்டினாலே அவருக்கு அச்சம் வந்து விடுகிறது. நள்ளிரவில் தனது 20 வயது மகளின் உதவியின்றி உறங்குவதுகூட அவருக்கு சிரமமாகிவிட்டது. திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்று காரணமாக, ஜோசபின் போன்ற மூச்ச…

  13. எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் துணை கொறடாவாக அரக்கோணம் ரவியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்றத்தின் அ.தி.மு.க.பொருளாளராக கடம்பூர் ராஜூம் செயலாளராக அன்பழகனும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி சட்டப்பேரவை கூடும்போது, அ…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புக்காட்சி கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 29 நிமிடங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் வயிற்றில் இருந்த சிசுவை குடும்பத்தினர் வற்புறுத்தி கலைக்க வைத்ததால் தனது மகளுடன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்காலம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி உமா தேவி(வயது 25), மகள் மோகனாஸ்ரீ (2) பெற்றோருடன் வசித்து வந்தனர்.4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீ யும் கடந்த ஜீன் 24-ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார்…

  15. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்- மக்கள் நலக்கூட்டணி அறிவிப்பு! மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கன…

  16. 28 APR, 2024 | 06:36 PM நேர்கண்டவர் - ரொபட் அன்டனி இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது. எனவே இலங்கையும் தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவியிலேயே இதனை சுட்…

  17. தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்Jun 18, 2015 | சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு புதுடெல்லியில் இருந்து வெளியாகும் the statesman நாளிதழில், சாம் ராஜப்பா எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இன்னமும் சூழல் மாறவில்லை. தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசலூர் அகதி முகாமிலேயே நந்தினி பிறந்தார். இவரது பெற்றோர்கள் சிறிலங்காத் தீவின் வடக்கு மாகாணத்தில் போர் மேகம் சூழப்பட்ட 1990 …

  18. கேள்வி கேட்க உரிமையில்லை: கருணாஸ்

  19. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 1972ல் நடந்தது மீண்டும் திரும்புமா? சபாநாயகர் தனபால் மீது, தி.மு.க., கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டால், சட்டசபையில், 1972ல் நடந்த சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., வெளி யேற்றப்பட்ட நேரத்தில், 1972 டிசம்பர், 2ல், சட்ட சபை கூட்டம் கூடியது. கருணாநிதி தலைமை யிலான அமைச்சரவை மீது, நம்பிக்கை யில்லா தீர்மானத்தை,எம்.ஜி.ஆர்., கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக, சபாநாயகர் மதியழகன் செயல்பட்டார். எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், 'முதல்வர் பதவியை, கருணாநிதி ராஜினா…

  20. சென்னை - ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, கிண்டி போலீசார் சந்தேகத்துக்கிடமான 4 பேரை கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் இயங்கி வரும் இந்து இளைஞர் சேனாவைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 4 பேரும் இந்து இளைஞர் சேனா-வைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை சேனல் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவங்களை வைத்து, குண்டுகள் வீசிய சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்தவர்களிடமிருந்து இந்தக் குண்டுவீ…

  21. பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார். கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்" எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி. தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி. ஆனால், 'காவல்துறை கைது செய்துவிடுமோ?' என்ற அச்சத்தில் கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது. இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, கா…

  22. ஒரு வாரமாகியும் ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்காததால், ஆத்திரம் அடைந்துள்ள சசிகலா, 'இனியும் பொறுமை கிடையாது' என, பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 'எம்.எல்.ஏ.,க்களுடன் வந்து சந்திக்க, உடனே அனுமதி அளிக்க வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, அவசர கடிதம் எழுதி யுள்ளார். இதற்கிடையில், ஆள் பலம் திரட்டு வதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்னை யில், போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த,5ம் தேதி நடந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில், முதல்வர் பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதமும் பெற்றார். உடனடியாக, இவை கவர்னருக்கு அனுப…

  23. படக்குறிப்பு,கனமழை பாதிப்பு 26 மே 2025, 08:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் திங்கள் காலை வரை அதிகபட்சமான நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் வால்பாறையில் 29.5 செ.மீ மழையும், கோவை மாநகரில் 22 செ.மீ மழையும் பதிவாகியிருந்தது. அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டிக்கு வருகிற மே 29ம் தேதி வரை கணமழைக்கான ஆரஞ்ச…

  24. தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1.64 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில், வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, கன மழை பெய்யும் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.