Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியா - சீனா எதிரிகள் அல்ல: சீன அமைச்சர் வாங் யீ பேச்சு புதுடெல்லி: சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியதாவது: பிரதமர் மோடியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் வகுத்துக் கொடுத்த பாதையில் இரு நாடுகளும் பயணிக்க வேண்டும். கடந்த ஆண்டு தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்பு இருநாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல. வளர்ச்சிக்கான நல்வாய்ப்புகளை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் செயல் பட வேண்டும். மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு சீனா தனது ஆதரவை அளிக்கும். இவ்வ…

  2. ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்! ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அது வெளிநாட்டு அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது என்றும் அவர் கூறினார். இது குறித்து சமூக ஊடக தளமான எக்ஸில் பகிரப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியாவின் கொள்கை முடிவுகளில் சுதந்திரத்தை மதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட இடையூ…

  3. நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம் 05 Mar, 2026 | 12:36 PM நேபாளத்தில் இன்று (5) பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நேபாளத்தில் பிரதமராக பதவி வகித்த கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதைய போராட்ட நிலைமை கட்டுப்படுத்தப்படாத நிலையில், அன்றைய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. இந்த பொதுத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி, நேபா…

  4. இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம் Published By: Vishnu 07 Mar, 2026 | 05:54 AM ஈரானிய கடற்படையின் போர்க்கப்பலான 'IRIS Lavan' இந்திய அதிகாரிகளின் ஒப்புதலுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய ஊடக அறிக்கைகளின்படி, கப்பலில் உள்ள 183 பணியாளர்களுக்கு கொச்சியில் உள்ள இந்திய கடற்படை வசதிகளில் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் இந்திய அதிகாரிகளிடமிருந்து இந்த அவசர அனுமதியைக் கோரியது, மார்ச் 1 ஆம் திகதி இது அங்கீகரிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம்

  5. சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுகோய் விமானம் (கோப்புப் படம்) இந்திய விமானப் படையின் சுகோய் (Sukhoi) விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்திய விமானப் படையின் கூற்றுப்படி, Su-30 MKI விமானம் பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து அந்த விமானம் புறப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது. இரவு 7:42 மணியளவில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பட மூலாதாரம்,@IAF_MCC/X இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேடுத…

  6. ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்! மத்திய கிழக்கில் நடந்து வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒன் அமெரிக்கா ஓபன் நியூஸ் (OAN) அலைவரிசைக்கு அளித்த செவ்வியின் போது முன்னாள் அமெரிக்க இராணுவ கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் இந்தக் கூற்றை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது. நேர்காணலின் போது, அமெரிக்கா தனது சொந்த தளங்கள் மற்றும் துறைமுக வசதிகள் சேதமடைந்த பின்னர் இந்திய துறைமுகங்களை நம்பியிருப்பதாக மெக்ரிகோர் குறிப்பிட்டார். எவ்வாறெனினும் இந்த…

  7. சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு Published By: Digital Desk 1 22 Feb, 2026 | 03:04 PM இந்திய கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'MILAN - 26' பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு ஆகியவற்றில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்தியக் கடற்கரைப் பகுதியில் இந்த பிரம்மாண்டமான சர்வதேச கடற்படை கண்காணிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை கடற்படைத் தளபதி இதில் பங்கேற்றார். அத்துடன், இலங்கை கடற்படையைப் பிரதிநிதி…

  8. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் ! பாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரமான கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தலிபான் அரசாங்கமும் பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்…

  9. இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்து சாதனை! Published By: Digital Desk 3 26 Feb, 2026 | 02:27 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களில் பிரபல்யமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். 2014-இல் இந்தத் தளத்தில் இணைந்த இந்தியப் பிரதமர் மோடி, தற்போது ஏனைய உலகத் தலைவர்களை விடப் பல மடங்கு முன்னிலையில் உள்ளார். நரேந்திர மோடி: 10 கோடி பின்தொடர்பவர்கள் டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா): 4 கோடி பின்தொடர்பவர்கள் பிரபோவோ சுபியாந்தோ (இந்தோனேசியா): 1 கோடி பின்தொடர்பவர்கள் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (பிரேசில்)…

  10. 'கேரளம்' ஆகும் கேரளா - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2026, 16:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான அம்மாநில சட்டப்பேரவையின் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. "மலையாள மொழியில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளம்'. 1956-ஆம் ஆண்டு நவம்…

  11. இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு! பயிற்சித் திட்டம் மற்றும் நோக்கம் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கலாநிதி எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் (MCRHRD), இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான ஒரு வார கால விசேட ஊடக முகாமைத்துவ பயிற்சித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 2026 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இரு தொகுதிகளாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில் இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 60 பேர் கலந்துகொண்டனர். உலகளாவிய ஊடக நிலப்பரப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறைகளில் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதே இதன் முக்கிய…

  12. இந்தியாவில் அதிக நன்கொடை வழங்குவது செல்வந்தரா, சாமானியரா? புதிய வெளிச்சம் தரும் ஆய்வு பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் 23 பிப்ரவரி 2026, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இந்தியாவில் தானம், கொடை போன்றவை மேல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி செய்யப்படுகிறது என்றே கூறப்பட்டு வருகிறது. இந்த அடுக்கில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) நிதிகள், செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் வருகின்றன. ஆனால் புதிய ஆய்வறிக்கை ஒன்று இந்த புரிதலை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்தியப் பெருந்தன்மையின் இயக்கு விசை என்பது மிகவும் சாதாரணமான, ஆனால் பரந்துபட்ட ஒன்றாக உள்ளது. அசோகா பல…

  13. உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை! உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நீர்ப்பாசன துறையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்தவர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் 2010 – 20 வரை சித்ரகூட் மற்றும் பாண்டா பகுதியைச் சேர்ந்த சிறுவர்களை, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்து சட்ட விரோத இணையதளங்களுக்கு விற்றுள்ளனர். சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பாக, உத்தர பிரதேச சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய சோதனையில், குறித்த தம்பதியின் …

  14. இந்தியாவில் ரயில்களில் 'பயணிக்கும்' ராஜநாகங்கள் - புதிய ஆபத்து பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான திகான்ஷ் பார்மர் ஒரு தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடமாக உள்ளன. ராஜநாகம் பொதுவாகக் காடுகளில் வாழ்கிறது, ஏனெனில் அங்கு அதற்குத் தேவையான இரை, நீர் மற்றும் பாதுகாப்பான இடம் கிடைக்கிறது. காடுகளில் வாழும் ராஜநாகங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞ…

  15. ரோபோடிக்ஸ்: அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 18 அன்று டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டில் ஜியோ ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமான கல்கோடியாஸ் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டின்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ரோபோவை காட்டி, அது தனது சொந்த உருவாக்கம் எனக் கூறியது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், பின்னர் அந்த ரோபோவை தாங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை என்று அந்தப் பல்கலைக்கழகம் கூறியது. இதற்கிடையே, ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் து…

  16. டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெல்லியின் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கிய ஏஐ உச்சிமாநாடு பிப்ரவரி 20 வரை நடைபெறும். 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் "முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு" என விமர்சித்துள்ளார். இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த …

  17. “ஏ.ஐ. அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்” - பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு கடந்த 16 ஆம் திகதி தொடங்கியது. 4 ஆம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அநுரகுமார திஸாநாயக்க உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், வேளாண்மை, பாத…

  18. பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு அமோக வெற்றி Published By: Digital Desk 3 13 Feb, 2026 | 09:39 AM பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை (13) அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்காசிய நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்பட்ட இந்த வாக்கெடுப்பில், அந்தக் கட்சி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வெடித்த மக்கள் போராட்டங்களின் பின்னர், நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல் இதுவாகும். சுமார் 175 மில்லியன் மக்கள்தொகையைக…

  19. இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வையிழப்பு ; கண்டுகொள்ளாத சிறை நிர்வாகம் - பாக். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு 13 Feb, 2026 | 12:24 PM பாகிஸ்தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீத பார்வையை இழந்துள்ளதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியொருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இம்ரான் கானின் நிலை தொடர்பாக அறிவதற்காக உச்சநீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார், கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இம்ரான் கானை சிறையில் சந்தித்து இரண்டு மணிநேரம் பேசியதாகவும் இம்ரான் கானின் தடுப்புக்காவல் கள நிலைமையை ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையினை மறுநாள் புதன்கிழமை (11) நீதிமன்றத்தில் சம…

  20. அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா! ஈரானுடனான தொடர்புகளுக்காக அமெரிக்காவால் முன்னர் தடை செய்யப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க அதன் கடல்சார் மண்டலத்தில் கண்காணிப்பை இந்தியா முடுக்கிவிட்டதாக ஒரு வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. எண்ணெய் சரக்குகளின் தோற்றத்தை மறைக்கும் வகையில், கப்பல் பரிமாற்றங்களுக்கு தனது நீர்நிலைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே இந்தியாவின் நோக்கமாகும் என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது. அனுமதிக்கப்பட்ட மூன்று கப்பல்களான ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார் மற்றும் அல் ஜாஃப்சியா ஆகி…

  21. கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு! கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மனைவி ஷெரின் அன்ஜான் ஆகியோருக்கு அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. , கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, பெற்றோர் ஒப்புதலுட…

  22. போட்டியிடும் கடல் நீரில் கோபால்ட்டைப் பெறுவதற்கான இந்தியப் போட்டியைத் தூண்டிவிடும் என்று சீனா அஞ்சுகிறது. நீருக்கடியில் கோபால்ட் நிறைந்த மலையை ஆராய இந்தியா உரிமைகளை நாடியுள்ளது. ஆனால் இலங்கையும் இந்தப் பிராந்தியத்தின் மீது கண் வைத்துள்ளது. சீன ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில், வியாழன், அக்டோபர் 26, 2023 [எரங்க ஜெயவர்தன/ஏபி] ரெஜிமோன் குட்டப்பன் எழுதியது 19 ஜூன் 2024 அன்று வெளியிடப்பட்டது.19 ஜூன், 2024 சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்யவும் இந்தியப் பெருங்கடலின் நடுவில் உள்ள கோபால்ட் நிறைந்த நீருக்கடியில் உள்ள மலையை ஆராய்வதற்கான உரிமைகளைப் பெற இந்தியா போராடி வருகிறது. ஆனால், இலங்கையும் விலைமதிப்பற்ற கனிமங்களுக்காக இந்தப் பிராந்தியத்தில்…

  23. எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது…

  24. பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து 14 Feb, 2026 | 12:20 PM பங்களாதேஷில் நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின்னணி கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் போராட்டங்களின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சுமார் 18 மாதங்கள் கழித்து புதிய அரசை தேர்ந்தெடுக்க பொதுத்தேர்தல் நடைபெற்றது. இது பங…

  25. 'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' - 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு! 14 Feb, 2026 | 08:59 AM இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா - AI உச்சி மாநாடு 2026' இல் (India–AI Impact Summit 2026) கலந்து கொள்ள 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாடு புதுடெல்லியில் பெப்ரவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்வரும் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்: பூட்டான் – பிரதமர் ஷெரிங் டோப்கே பொலிவியா – துணைத் தலைவர் எட்மண்ட் லாரா மொன்டானோ பிரேசில் – ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குரோஷியா – பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.