Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது – அரசியல் அதிர்ச்சி ! 28 Mar, 2026 | 09:47 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. அந்த போராட்டங்களின் போது சுமார் 77 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் ந…

  2. நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு 27 Mar, 2026 | 03:01 PM நேபாளத்தின் 47வது பிரதமராக பாலேந்திர ஷா இன்று வெள்ளிக்கிழமை (27) பதவியேற்றார். அந்நாட்டின் இளம் பிரதமராக பதவியேற்றுள்ள இவர், முன்னாள் மேயரும் ராப் பாடகரும் இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய முக்கியஸ்தரும் ஆவார். நேபாளத்தில் புதிய அரசினை அமைப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5ஆம் திகதி நடைபெற்றது. இதில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி 275 இடங்களில் 182 இடங்களை கைப்பற்றி பெருவாரியான வெற்றி பெற்றது. ஜாபா 5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகமாக பெற்றார். பாலேந்திர ஷா 1990இல் காத்மண்டுவில் பிறந்தார். அவர் கர்நாடகாவில் உள்ள வி…

  3. ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. இந்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெர்ஸ்வால் சனிக்கிழமை இத்தகவலை அளித்தார். ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவுக்கு வரக்கூடிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன. ஷிவாலிக், நந்தா தேவி எனும் இரண்…

  4. டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மருத்துவமனைக்கு விரைந்தனர். சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இரு முறை பதவி வகித்தவர் சோனியா காந்தி. இந்த நிலையில் இன்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்…

    • 0 replies
    • 115 views
  5. உத்தர பிரதேசம்: உருவ கேலிக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரி பட மூலாதாரம்,Instagram mirzapur.police படக்குறிப்பு,மிர்சாபூர் எஸ்பி அபர்ணா ரஜத் கௌசிக் கட்டுரை தகவல் சையத் மௌஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 21 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா ரஜத் கௌஷிக் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார். இந்த வீடியோவில், காவல் கண்காணிப்பாளர் விளக்கும் விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அவரின் உருவம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மிர்சாபூர் காவல்துறையினர…

  6. ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்க கோரும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 18 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்திய உளவுத்துறை (RAW - ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) தடை விதிக்கக் கோரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) அறிக்கையை இந்திய அரசு கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அதனை நிராகரித்தும் உள்ளது.…

  7. பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது! இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (‍NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 18 இன் கீழ் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவுத் துறையினரால் தட…

  8. கர்வாரில் நீர்மூழ்கிக் கப்பல் RAM சோதனை மையம் திறப்பு – முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியா Published By: Digital Desk 3 16 Mar, 2026 | 05:08 PM இந்திய கடற்படையின் பராமரிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், கர்நாடக மாநிலத்தின் கர்வார் பகுதியில் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Pneumatic RAM Test Facility (RAM சோதனை மையம்) இந்தியா திறந்து வைத்துள்ளது. இந்த புதிய சோதனை மையத்தின் மூலம், இத்தகைய தொழில்நுட்ப வசதி கொண்ட முன்னணி சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த RAM சோதனை மையம் முக்கியமாக இந்திய கடற்படையின் கல்வரி வகை (Kalvari-class) நீர்மூழ்கிக் கப்பல்களின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள…

  9. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகள் அறிவிப்பு 16 Mar, 2026 | 04:40 PM தமிழ்நாடு -மேற்கு வங்காளம்- கேரளம்- அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புது தில்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்ததாவது... இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம், தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம், தமிழ்நாட்டை ஒட்டி உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகத…

  10. இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம் Published By: Vishnu 07 Mar, 2026 | 05:54 AM ஈரானிய கடற்படையின் போர்க்கப்பலான 'IRIS Lavan' இந்திய அதிகாரிகளின் ஒப்புதலுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய ஊடக அறிக்கைகளின்படி, கப்பலில் உள்ள 183 பணியாளர்களுக்கு கொச்சியில் உள்ள இந்திய கடற்படை வசதிகளில் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் இந்திய அதிகாரிகளிடமிருந்து இந்த அவசர அனுமதியைக் கோரியது, மார்ச் 1 ஆம் திகதி இது அங்கீகரிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம்

  11. வேகமாக மாறும் காட்சிகள்: இரானுடன் இணக்கம் காட்ட இந்தியா தாமதித்து விட்டதா? பட மூலாதாரம்,AFP via Getty Images கட்டுரை தகவல் தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, இரான் மீது தாக்குதல் நடத்தின. இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளை இரான் தாக்கியது. இஸ்ரேல்–அமெரிக்கா–இரான் இடையிலான போரின் முதல் இரண்டு நாட்களில் இந்தியா இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. ஒன்றில் மோதல் குறித்து கவலை தெரிவித்தது…

  12. நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம் 05 Mar, 2026 | 12:36 PM நேபாளத்தில் இன்று (5) பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நேபாளத்தில் பிரதமராக பதவி வகித்த கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதைய போராட்ட நிலைமை கட்டுப்படுத்தப்படாத நிலையில், அன்றைய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. இந்த பொதுத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி, நேபா…

  13. டெல்லியில் பயங்கர தீ விபத்து : 400 குடிசைகள் எரிந்து சாம்பல் ; வீதிக்கு வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள்! Published By: Digital Desk 1 12 Mar, 2026 | 11:06 AM இந்தியாவின் தலைநகர் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 வரையிலான குடிசை வீடுகள் தீக்கிரையாகி முற்றாக அழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். நேற்று புதன்கிழமை (11) இரவு 11:50 மணியளவில் மட்டியாலா கிராமத்தில் உள்ள மீன் சந்தையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் தமது அன்றாட பணிகளை முடித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென பரவிய தீ, அருகில் இருந்த குடிசைப் பகுதிகளுக்கு அதிவ…

  14. இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி! 13 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து மூளையில் பலத்த காயமடைந்த நிலையில் கோமாவில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கருணைக்கொலைக்கு முதல் முதலாக அனுமதி வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். கருணைக்கொலையின் சட்டப்பூர்வத்தன்மையை அங்கீகரித்த உயர் நீதிமன்ற தீர்ப்பின் பல அம்சங்களை தெளிவுபடுத்தியது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீமன்ற அமர்வால் அனுமதி வழங்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 2013 ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோது விடுதியின்…

  15. இந்தியா - சீனா எதிரிகள் அல்ல: சீன அமைச்சர் வாங் யீ பேச்சு புதுடெல்லி: சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியதாவது: பிரதமர் மோடியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் வகுத்துக் கொடுத்த பாதையில் இரு நாடுகளும் பயணிக்க வேண்டும். கடந்த ஆண்டு தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்பு இருநாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல. வளர்ச்சிக்கான நல்வாய்ப்புகளை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் செயல் பட வேண்டும். மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு சீனா தனது ஆதரவை அளிக்கும். இவ்வ…

  16. ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்! ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அது வெளிநாட்டு அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது என்றும் அவர் கூறினார். இது குறித்து சமூக ஊடக தளமான எக்ஸில் பகிரப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியாவின் கொள்கை முடிவுகளில் சுதந்திரத்தை மதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட இடையூ…

  17. சுகோய் போர் விமான விபத்து - 2 விமானப்படை வீரர்கள் பலி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுகோய் விமானம் (கோப்புப் படம்) இந்திய விமானப் படையின் சுகோய் (Sukhoi) விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்திய விமானப் படையின் கூற்றுப்படி, Su-30 MKI விமானம் பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி அங்லாங் பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து அந்த விமானம் புறப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது. இரவு 7:42 மணியளவில் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பட மூலாதாரம்,@IAF_MCC/X இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேடுத…

  18. ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்! மத்திய கிழக்கில் நடந்து வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒன் அமெரிக்கா ஓபன் நியூஸ் (OAN) அலைவரிசைக்கு அளித்த செவ்வியின் போது முன்னாள் அமெரிக்க இராணுவ கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் இந்தக் கூற்றை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது. நேர்காணலின் போது, அமெரிக்கா தனது சொந்த தளங்கள் மற்றும் துறைமுக வசதிகள் சேதமடைந்த பின்னர் இந்திய துறைமுகங்களை நம்பியிருப்பதாக மெக்ரிகோர் குறிப்பிட்டார். எவ்வாறெனினும் இந்த…

  19. சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு Published By: Digital Desk 1 22 Feb, 2026 | 03:04 PM இந்திய கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'MILAN - 26' பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு ஆகியவற்றில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்தியக் கடற்கரைப் பகுதியில் இந்த பிரம்மாண்டமான சர்வதேச கடற்படை கண்காணிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை கடற்படைத் தளபதி இதில் பங்கேற்றார். அத்துடன், இலங்கை கடற்படையைப் பிரதிநிதி…

  20. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் ! பாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரமான கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தலிபான் அரசாங்கமும் பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்…

  21. இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்து சாதனை! Published By: Digital Desk 3 26 Feb, 2026 | 02:27 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களில் பிரபல்யமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். 2014-இல் இந்தத் தளத்தில் இணைந்த இந்தியப் பிரதமர் மோடி, தற்போது ஏனைய உலகத் தலைவர்களை விடப் பல மடங்கு முன்னிலையில் உள்ளார். நரேந்திர மோடி: 10 கோடி பின்தொடர்பவர்கள் டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா): 4 கோடி பின்தொடர்பவர்கள் பிரபோவோ சுபியாந்தோ (இந்தோனேசியா): 1 கோடி பின்தொடர்பவர்கள் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (பிரேசில்)…

  22. 'கேரளம்' ஆகும் கேரளா - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2026, 16:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான அம்மாநில சட்டப்பேரவையின் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கேரளம் எனப் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. "மலையாள மொழியில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளம்'. 1956-ஆம் ஆண்டு நவம்…

  23. இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு! பயிற்சித் திட்டம் மற்றும் நோக்கம் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கலாநிதி எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் (MCRHRD), இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கான ஒரு வார கால விசேட ஊடக முகாமைத்துவ பயிற்சித் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 2026 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இரு தொகுதிகளாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில் இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 60 பேர் கலந்துகொண்டனர். உலகளாவிய ஊடக நிலப்பரப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறைகளில் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதே இதன் முக்கிய…

  24. இந்தியாவில் அதிக நன்கொடை வழங்குவது செல்வந்தரா, சாமானியரா? புதிய வெளிச்சம் தரும் ஆய்வு பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் 23 பிப்ரவரி 2026, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இந்தியாவில் தானம், கொடை போன்றவை மேல் மட்டத்திலிருந்து கீழ் நோக்கி செய்யப்படுகிறது என்றே கூறப்பட்டு வருகிறது. இந்த அடுக்கில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) நிதிகள், செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் வருகின்றன. ஆனால் புதிய ஆய்வறிக்கை ஒன்று இந்த புரிதலை மாற்றியமைப்பதாக இருக்கிறது. இந்தியப் பெருந்தன்மையின் இயக்கு விசை என்பது மிகவும் சாதாரணமான, ஆனால் பரந்துபட்ட ஒன்றாக உள்ளது. அசோகா பல…

  25. உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை! உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நீர்ப்பாசன துறையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்தவர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் 2010 – 20 வரை சித்ரகூட் மற்றும் பாண்டா பகுதியைச் சேர்ந்த சிறுவர்களை, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்து சட்ட விரோத இணையதளங்களுக்கு விற்றுள்ளனர். சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பாக, உத்தர பிரதேச சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய சோதனையில், குறித்த தம்பதியின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.