அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்! பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறியதால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது அமித் குமார் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரழந்துள்ளார். PTI செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர…
-
- 1 reply
- 141 views
-
-
மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க இறைச்சி, முட்டை வர்த்தகர்களுக்கு கர்நாடக அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422447
-
- 0 replies
- 116 views
-
-
20 FEB, 2025 | 12:29 PM முகநூலில்அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தளம் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறியதாவது: இந்திய கடற்படை குறித்த தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு குழு திரட்டி வருவதாக எங்களுக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தீபக் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் கார்வார் அருகேயுள்ள கடம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஆகாஷ் நாயக் வேதன் தண்டேல் ஆகிய இருவர் பற்றிய தகவல் பற்றிய தகவல் கிடைத்தது. இந்த இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூல…
-
- 1 reply
- 141 views
- 1 follower
-
-
தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த ஸ்ரீஜன் பால் சிங், நிலநடுக்கத்தின் மையப்பகுதி டெல்லியில் இருந்ததால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதற்குமுன் இதற்குமுன் இதுபோன்ற நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயத்தில், டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரி…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
16 FEB, 2025 | 07:20 AM புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புகையிரத நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் புதுடெல்லி புகையிரத நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜுக்குச…
-
- 1 reply
- 142 views
- 1 follower
-
-
தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் வொஷிங்டன் பயணத்தின் போது, புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் சிறப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரியாக நியமிக்கப்பட்ட எலோன் மஸ்க்கை வியாழக்கிழமை (13) சந்தித்தார். வொஷிங்டனில் அமைந்துள்ள பிளேர் ஹவுஸில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார். சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள மோடி, “இந்தியாவின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ பற்றி தொழில்நுட்ப பில்லியனருடன் விவாதித்ததாக பதவிட்டார். அத்துடன், விண்வெளி, இயக்கம், தொழில்நுட்பம…
-
- 0 replies
- 212 views
-
-
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள்! திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வெள்ளிக்கிழமை (14) பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2025 மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியதில் இருந்து 491.4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் சங்கமம்) நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 8.54 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை மாத்திரம் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல் துறை சுட்டிக்கட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாத பெளர்ணமியில் தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வ…
-
- 0 replies
- 278 views
-
-
படக்குறிப்பு, பகிடெரு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், கர்க்கிபட்டி உமாகண்ட் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீரானது கிணறுகள், கடல் நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகின்றது. தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. மோட்டார்களோ, வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "இந்த பகுதியில் அதிக நிலக்கரி இருக்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி வளங்களை பற்றி தெர…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
இந்த கிராமத்தில் அனைத்து ஆண்களும் கட்டாயம் 2 திருமணங்களைச் செய்து கொள்ள வேண்டும். எந்த கிராமம்? இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்சால்மரில் உள்ள ராம்தேயோ-கி-பஸ்தி கிராமத்தில் வினோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் கட்டாயம் இரண்டு திருமணங்களை செய்து கொள்வார்களாம். இதனை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னால் அதிர வைக்கும் காரணம் ஒன்றும் உள்ளது. நமது நாட்டில் இந்து திருமண சட்டத்தின்படி பலதர மணம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த கிராமத்தில் ஆண்கள் பல திருமணங்களை செய்கின்றனர். அதாவது…
-
- 0 replies
- 304 views
-
-
மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்! கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால், மத்தியப் பிரதேசத்தின் மைஹார் எல்லையில் உள்ள பொலிஸார், பிரயாக்ராஜ் நோக்கி நகர முடியாது என்று தெரிவித்தனர். நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். பிரயாக்ராஜின் போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். கடுமையான போக்குவரத்து நெ…
-
- 0 replies
- 98 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 205 பேர் இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைய உள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயார…
-
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! 8 Feb 2025, 3:24 PM புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 08) தோல்வியடைந்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. பாஜக 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 2 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பின்னடைவை சந்தித்தார். ஆனால், அடுத…
-
- 3 replies
- 172 views
- 1 follower
-
-
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி, இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மீனவர்களுக்கு நீதி கிடைக…
-
- 0 replies
- 113 views
-
-
ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்! இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருந்தது. இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். அத்துடன் 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81…
-
- 0 replies
- 135 views
-
-
ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்! பங்களாதேஷில் எதிர்ப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீட்டையும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வீட்டையும் நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தனர். கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அவரை வெளியேற்றியதில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஹசீனா இந்தியாவில் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் நாட்டிற்கு உரையாற்றுவார் என்ற செய்தியால் இந்த அமைதியின்மை ஏற்பட்டது. 20 ஆண்டுகளாக பங்களாதேஷின் பொறுப்பில் இருந்த 77 வயதான ஹசீனா, ஒரு சர்வாதிகாரியாகக் முத்திரை குத்தப்பட்டார். இந்த நிலையில் புதன்கிழமை (06) மாலை எதிர்ப்பாளர்கள் டாக்காவில் அமைந்துள்ள ஹசீனாவின் மறைந்த…
-
- 0 replies
- 131 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 1 பிப்ரவரி 2025, 03:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். "அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திர…
-
- 3 replies
- 231 views
- 1 follower
-
-
தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு January 25, 2025 11:56 am மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து அவதானித்து வருகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலின் ஆரோக்கியமான செல் பகுதிகளை தாக்குவதே கில்லியன் பேர் சிண்ட்ரோம் ஆகும். இந்த நோய் முதலில் தசைகளை இயக்கும் நரம்புகளை பாதிக்கிறது. பின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். தொடர்ந்து தசை செயலிழப்பு ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் எடுத்த…
-
- 2 replies
- 187 views
- 1 follower
-
-
உத்தரப்பிரதேசில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு! உத்தரப்பிரதேசின் பிரயாக்ராஜில் புதன்கிழமை (29) காலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றைய தை (மௌனி) அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் திரண்டதில் நிறுவப்பட்ட தடைகள் உடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க ஏராளமான அம்பியூலன்ஸகள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் 15 உடல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆர…
-
- 0 replies
- 109 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் இந்திய பங்குச் சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பங்குகளை வாங்குவோரைவிட விற்பவர்களின் அளவு மிக அதிகமாக இருந்துள்ளது. இதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டுமே கடும் சரிவைக் கண்டுள்ளது. இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21-ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரி…
-
-
- 2 replies
- 218 views
- 1 follower
-
-
மகா கும்பமேளா விழாவில் வைரலான காந்தக் கண்ணழகி மோனாலிசா போஸ்லே! இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளரான மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) பிரயாக்ராஜில் நடந்த 2025 ஆம் ஆண்டுக்கான மகா கும்பமேளா விழாவின் போது எதிர்பாராத விதமாக புகழ் பெற்றதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வைரலானார். அவர் தற்போது போலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிஸ்ரா மோனாலிசாவை அவரது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கும்பமேளா விழாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்கும் 16 வயதான மோனாலிசாவின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பின்னர், இணைய நட்சத்திரமாக அவரது பயணம் தொடங்கியது…
-
- 0 replies
- 314 views
-
-
கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். 4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் இன்று (திங்கள் கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார். முன்னதாக, நேற்று (ஞாய…
-
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ., கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்கள் பெற்றதில் முறைகேடு, அரசு ரகசியங்களை கசிய விட்டது உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த…
-
- 0 replies
- 102 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் பேசிய வீடியோ ஒன்று ரெட்டிட் வலைதளத்தில் வைரலாக பரவியது. வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், ஞாயிறு அன்றும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். அமெரிக்காவைப் போன்று பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் சீனர்கள் பணியாற்றுவது போன்று வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் எல் & டி நிறுவன ஊழியர்களிடம் பேசியுள்ளார். அது விமர்சனங்களுக்கு வழி வகை செய்தது. …
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் விவசாயி ஒருவரின் வயலில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது திடீரென வேகமாக நீர் வெளியேறியது. கட்டுரை தகவல் எழுதியவர், திரிபுவன் பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஹிந்தி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் நடந்த ஒரு சம்பவம் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. ஜெய்சல்மரில் உள்ள மோகன்கரை சேர்ந்த விக்ரம் சிங் பதி என்பவரின் பண்ணையில் பாசன வசதி இல்லாததால், ஆழ்துளைக் கிணறு தோண்டத் தொடங்கினார். 800 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வராததால், மேலும் ஆழமாகத் தோண்ட முடிவு செய்தார். இதற்குப் பிறகு, அதிகாலையில் பூமியில் இருந்…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு! திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாள்ளையோட்டி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச தரிசன அனுமதி சீட்டு விநியோகம் இடம்பெற்றுள்ளது இந்த இலவச தரிசன அனுமதி சீட்டுக்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து பாதிப்பு அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com…
-
- 0 replies
- 157 views
-