அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
மக்களின் ஒற்றுமையை மத்திய அரசு சீர் குலைக்கிறது – பினராயி விஜயன் by : Krushnamoorthy Dushanthini மத ரீதியாக மக்களை பிரித்து அவர்களது ஒற்றுமையை மத்திய அரசு சீர்குலைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மும்பையில் ‘மும்பை கலெக்டிவ்’ அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் காலனி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியது நமது இயக்கம். மதவாதத்துக்கு எதிரான இப்போதைய போராட்டம், காலனி ஆதிக்க சக்திகளுடன் இணைந்து நின்றவர்களை வீழ்த்துவதற்கு எதிரான இயக்கமாகும். கடந்த காலங்களில் காலனி ஆதிக்க சக்திகள் மத அடிப்படையில் மக்களை…
-
- 0 replies
- 268 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ள பாக். வெளியுறுவுத்துறை நம் துாதரக அதிகாரிக்கு 'சம்மன்' அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் ஆறு பேர் காயம் அடைந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பீரங்கி மற்றும் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதாகவும் நடப்பாண்டில் 957 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இதனையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிக்கு பாக்., சம்மன் அனுப்பியுள்ளது. …
-
- 0 replies
- 258 views
-
-
சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு by : Dhackshala நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இயக்கப்பட்ட 542 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இந்திய ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த 542 சிறப்பு ரயில்களில் இதுவரை 448 ரயில்கள் அந்தந்த ஊர்களை சென்றடைந்துவிட்டன. இன்னமும் 94 ரயில்கள் பயணத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு (1), ஆந்திரம் (1), பீகார் (117), உத்தரப்பிரதேசம் (221), மத்தியப் பிரதேசம் (38), ஒடிசா (29) உள்ளிட்ட ரயில்களும் அடங்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த சிறப்பு ர…
-
- 0 replies
- 387 views
-
-
மருத்துவக் கட்டணம் செலுத்தாத நோயாளி அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் தில்நவாஸ் பாஷா பிபிசி இந்தி Getty Images மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாத நோயாளி ஒருவரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். "உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் நோயாளியின் தரப்பினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே சண்டை நடப்பது தெரிகிறது. உடல் நலம்…
-
- 0 replies
- 349 views
-
-
"லவ் ஜிகாதிற்கு" எதிராக புதிய சட்டம் : மத்திய பிரதேச அரசு அறிவிப்பு! கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய பிரதேச அரசு தீர்மானித்துள்ளது. ஒரு பெண்ணை காதலித்து அவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து மணம் புரிவது ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. மதம் மாறாத பெண்களை கொலை செய்வது, ‘ஆசிட்’ வீசுவது போன்ற கொடூர சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசு புதிய சட்டத்தை விரைவில் அமுல்படுத்தவுள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா , விரை…
-
- 0 replies
- 298 views
-
-
பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர் 17 ஜனவரி 2022, 06:46 GMT பட மூலாதாரம்,PREETI MANN புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் காலமானார். அவருக்கு வயது 83. பத்ம விபூஷண் விருது பெற்ற பண்டிட் பிர்ஜு மகாராஜ் இந்திய பாரம்பரிய நடனமான கதக்கின் ஜாம்பவானாக இருந்தார். அவர் இயற்கை எய்திய தகவலை அவரது பேரன் ஸ்வரான்ஷ் மிஸ்ரா ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். "இன்று எங்கள் குடும்பத்தின் அன்பான உறுப்பினரான பண்டிட் பிர்ஜு ஜி மகாராஜை இழந்துவிட்டோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அவர் ஜனவரி 17 அன்று தனது இறுதி மூச்சை விட…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
நேஷனல் ஹெரால்டு: சோனியா குடும்பத்தை சோதிக்கும் ஊழல் புகாரின் பின்னணி என்ன? சோயா மதீன் பிபிசி செய்திகள், டெல்லி 13 ஜூன் 2022, 05:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று, திங்கள்கிழமை அரசு முகமையான அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார். இதனையொட்டி, நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரித்துவரும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 'நேஷனல் ஹெரால்டு' வழக்கு குறித…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
பூமியை மாசுப்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடம். பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது என்று நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் 5-ல் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த நாடுகளில் முறையே 35 லட்சம் மற்றும…
-
- 0 replies
- 277 views
-
-
தாய்லாந்தில், பசாக் சோன்லாஸிட் அணையின் நீர்மட்டம் சரிந்ததால், 20 ஆண்டுகளுக்கு முன் அணையில் மூழ்கிய புத்தர் கோவில் காட்சியளிக்கிறது. லோப்புரி மாகாணத்தில் உள்ள இந்த அணையின் நீரை பயன்படுத்தி சுற்றுபுற 4 மாகாணங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அண்மையில் இந்த அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, நீர் தேக்க பகுதியில் மூழ்கியிருந்த புத்தர் கோவில் மற்றும் அதனை சுற்றியிருந்த 700 வீடுகள் வெளியே தெரிந்தன. இதனைக்கண்ட புத்த துறவிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர், தலையின்றி சிதிலமடைந்திருந்த புத்தர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, வழிபட்டனர். http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15060
-
- 0 replies
- 341 views
-
-
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி விவகாரம்: சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு முக்கிய அறிவுறுத்தல்! by : Jeyachandran Vithushan எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவை கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவருடைய மனைவி பிரியங்க நியோமலி விஜயநாயக்கவையும் கைது செய்யவும் அவர்களுக்கான பிடியாணையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு இன்று (திங்கட்கிழமை) அறிவுறுத்தியுள்ளார். விமானக் கொள்வனவு தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் ஏயார்பஸ் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்…
-
- 0 replies
- 203 views
-
-
சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்து சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய – சீன இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான நான்காம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று (திங்கட்கிழமை) சூசல் எல்லைப் பகுதியில் 12 மணி வரையில் நீடித்தது. இதன்போதே, சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 8 மலைச்சிகரங்கள் கொண்ட ஃபிங்கர் பகுதியில் படைகளைக் குறைப்பதுதான் இந்திய சீனா இடையே மிகவும் சிக்கலான பிரச்சினையாக உள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட பேச்சுகளை அடுத்து கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டமைக் குறித…
-
- 0 replies
- 190 views
-
-
சீனப் பொருட்களுக்குப் பதிலாக வேறு நாடுகளில் கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானம்! சீனத் தயாரிப்புகளை கொள்வனவு செய்தலை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய மின் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.சுக் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் காலங்களில் சீனப் பொருட்களுக்குப் பதிலாக ஜப்பான், தைவான், கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து மின் உபகரணங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் மென்பொருட்களை ரஷ்யா, செக் குடியரசு அல்லது போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேறு நாடுகளில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதால் செலவு நிலை ஏற்பட்ட போதும் சீன…
-
- 0 replies
- 203 views
-
-
மேற்கு வங்கம்: 8 ஆம் வகுப்பு தகுதிக்கான வன உதவியாளர் பணிக்கு பி.எச்டி மாணவர்கள் விண்ணப்பம் மால்டா மேற்கு வங்கத்தில் 8 ஆம் வகுப்புத் தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட வன உதவியாளர்கள் பணிக்கு பொறியியல், முதுகலை, பி.எச்.டி ஆராய்ச்சி முடித்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மூத்த வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் மனித-விலங்கு மோதலைத் தடுப்பதற்கும் ஒப்பந்த அடிப்படையில் வன உதவியாளர்கள் 2000 பேரைப் பணியமர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்தது. மாநிலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியான உடனே ஏராளமான விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின. இவற்றில் பெரும்பாலும் உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இது…
-
- 0 replies
- 363 views
-
-
பிரச்சார மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா! மின்னம்பலம் பிரச்சார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு சமீப நாட்களாக இந்தியாவில் குறைந்து வருகிறது. அதே சமயத்தில் முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. எனினும் உலக நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. அதுபோன்று குஜராத் மாநிலத்தில் வதோதரா உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்…
-
- 0 replies
- 315 views
-
-
பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக நீதிமன்றத் தீர்ப்பை நாடியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்தூவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டுமானால், அது நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரியுள…
-
- 0 replies
- 211 views
-
-
பௌத்தத்தின் மூலம் தொடர்பை வலுப்படுத்தும் இந்திய அரசாங்கம் – தரன்ஜித் சிங் சந்து பௌத்தத்தின் மூலம் மக்களுக்கும் – மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். 2500ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிடமிருந்து கிடைத்த மிகப் பெரிய கொடைகளில் ஒன்றாக பௌத்தம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பௌத்தத்தை தான் இலங்கையில் தனது முந்தைய பணிகளில் கற்றுக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஐ.நா. சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு …
-
- 0 replies
- 290 views
-
-
நரேந்திர மோதி ஏழைகளிடம் இருந்து பறித்தவற்றை திருப்பித் தருவோம்' - ராகுல் காந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோதியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் உண்டான சேதங்களை சீர் செய்து, பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருவோம் என அக்கட்சியி…
-
- 0 replies
- 545 views
- 1 follower
-
-
மகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை June 23, 2019 மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு தற்போது நடைபெற்று வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் எனவும் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட 12 ஆயிரத்து 21 வ…
-
- 0 replies
- 582 views
-
-
கொரோனா வைரஸ் : பாகிஸ்தான் மாணவர்களை மீட்க இந்தியா நடவடிக்கை! கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்களை மனிதநேயத்தின் அடிப்படையில் மீட்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி சார்பில் வெளியுறவு அமைச்சகம் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு இதற்கு எவ்வித பதிலும் வழங்காத நிலையில், குறித்த முயற்சி கைகூடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், வூஹான் நகரில் ஏராளமான பாகிஸ்தான் மாணவர்களும் தங்கியிருந்தனர். மனிதநேய அடிப்படையில் அவர்களை மீட்டு வருகிறோம் என பிரதமர் மோடியின் அறிவு…
-
- 0 replies
- 247 views
-
-
சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி 31 Aug, 2025 | 11:29 AM ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. தியான்ஜின் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் இந்திய ப…
-
- 0 replies
- 85 views
-
-
பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்! பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலின் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துணை இராணுவக் கட்டிடத்தின் பிரதான வாயிலில் இரண்டு குண்டுவெடிப்புகளுடன் தாக்குதல் தொடங்கியது. ஆயுதமேந்திய நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. துணை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ…
-
- 0 replies
- 126 views
-
-
இது 2024 எம்.பி தேர்தலுக்கான முன்மாதிரி: மோடி மின்னம்பலம்2022-03-11 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். ஐந்து மாநிலத்தில் சட்டப்பேரவையில் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில் நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வந்தனர். அப்போது பிரதமர் மோடி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். “இன்று மகிழ்ச்சியான நாள். ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. இந…
-
- 0 replies
- 308 views
-
-
ஐரோப்பிய ஆணைய தலைவர்... இந்தியா, வந்தடைந்தார்! ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர்லெயன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கத்தின் இழப்பு, எரிசக்தி மற்றும் டிஜிக்டல் பரிமாற்றம், பாதுகாப்பு, பொருளாதாரம், இலவச வர்த்தக ஒப்பந்தம், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை …
-
- 0 replies
- 133 views
-
-
விரைவில் பாகிஸ்தான் திவாலாகும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். புதுடெல்லி கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷியா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது. அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான தட்டுப…
-
- 0 replies
- 511 views
-
-
இந்தியா - சீனா கல்வான் மோதலுக்கு பின் முதல் இந்திய ராஜீய அதிகாரி சீனா பயணம்: என்ன ஆகும்? கட்டுரை தகவல் எழுதியவர்,கீர்த்தி துபே பதவி,பிபிசி செய்தியாளர் 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்திய சீன எல்லையில் இழுபறி நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய எல்லைத்தகராறு லடாக்கின் டோக்லாம், கல்வான் பள்ளத்தாக்கில் தொடங்கி இப்போது அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரை அடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மற்றும் எல்லையில் நிலவும் பதற்றம் அனைவரும் அறிந்ததே. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மு…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-