Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள் - 400 மீட்டருக்கும் கீழாக முகாமை மாற்றும் நேபாளம் நவீன் சிங் கட்கா பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எவெரெஸ்ட் மலைச்சிகரத்தை ஏற வருபவர்கள் ஓய்வெடுக்க ஆரம்பநிலை மலையேற்ற இடமான அடிவார முகாம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை இடமாற்றம் செய்ய நேபாளம் தயாராகி வருகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் மனித செயல்பாடுகள் ஆகியவற்றால் இந்த இடம் பாதுகாப்பற்றதாகி வருவதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. வசந்த காலத்தில் எவரெஸ்ட் மலை ஏறக்கூடிய சுமார் 1,500 பேர் வரை பயன்படுத்தும் விதமான …

  2. அதானி வசமாகும் என்டிடிவி பங்குகள் - கார்ப்பரேட் கையில் இந்திய செய்தி நிறுவனம் 23 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அதானி (இடது), பிரனாய் ராய் (வலது) என்டிடிவி நிறுவனத்தை நடத்தி வரும் பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் 29.18 சதவீதம் பங்குகளை மறைமுகமாக உரிமை கொண்டாடும் வகையில் அந்தப் பங்குகளை கார்ப்பரேட் பெரு நிறுவனமான அதானி மீடியா குழுமம் வாங்க உள்ளது. இப்படி ஒரு நிறுவன பங்குகளை அதன் நிறுவனங்கள், பங்குதாரர்களின் விருப்பமின்றி வாங்கப்படும் செயலை 'முறையற்ற கையகப்படுத்துதல்' அல்லது ஆங்கிலத்தில் 'ஹோஸ்டைல் டேக்ஓவர்' என்று தொழிற்துற…

  3. நான் தலைமறைவாக இல்லை; தனிப்படைகள் குறித்து எனக்குத் தெரியாது - எச். ராஜா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து தமிழ்: என்னை பிடிக்க தனிப்படையா? - எச். ராஜா படத்தின் காப்புரிமைHRAJABJP "நான் தலைமறைவாக இல்லை, என்னைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பது குறித்…

  4. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்ததுடன் 126 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் போது தூக்கத்தில் இருந்த மக்கள் கண்விழித்து வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. வீடுகள் உட்பட மொத்தம் 126 கட்டிடங்கள் இடிந்து சேதமான நிலையில் 21 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ம…

  5. சபரிமலைக்கு சென்ற பெண்களின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை… January 18, 2019 சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கின்றது. சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கடந்த வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதனையடுத்து அதனை அமுல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வரும் அதேவேளை அதற்கெதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட்ட நிலையில் இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகா…

  6. ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய மிக் 21 விமானம்; அபிநந்தன் பயன்படுத்திய வகையைச் சேர்ந்தது Published : 08 Mar 2019 16:37 IST Updated : 08 Mar 2019 16:37 IST ஏ.என்.ஐ வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் மிக் 21 ரக விமானம், இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானது. தவறவிடாதீர் சினிமாவையே மிஞ்சிய சம்பவம்: கணவனின் 3-வது மனைவியை கொலை செய்த 2-வது மனைவி; உதவி செய்த முதல் மனைவியின் மகள்கள் ராஜஸ்தானின் பிகானர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் நால் பகுதியில் இருந்து பிகானர் பகுதிக்கு அருகே விமானம் பறக்கும்போது …

  7. 18 JUN, 2024 | 12:18 PM அண்டை நாடான பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIRPI) என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நேற்று (ஜூன் 17) அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் உலக நாடுகளின் வசம் உள்ள அணு ஆயுதம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் ஆகிய ஒன்பது உலக நாடுகள் அணு ஆயுத சக்தியை கொண்டுள்ளன. அந்த வகையில் இந்த நாடுகளின் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை ஆண…

  8. கர்நாடக அரசியல் குழப்பம் : சுயேட்சை உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர்! கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், சுயேட்சை உறுப்பினர்களை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்துள்ளார். இதன்படி முதலாவதாக சுயேட்சை உறுப்பினரான சங்கர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் எல் ஜார்கிகோலியும், மகேஷ் குமதல்லி ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா கடிதத்தை சமர்பித்ததை அடுத்து அங்கு காங்கிரஸ், ஜனதா தளம் கூட்டணி ஆட்சி ஸ்திரமற்ற நிலையை எதிர்நோக்கியது. இதனையடுத்து இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாம…

  9. சிறப்பு சட்டம் ரத்தால் காஷ்மீரிகள் போராடுவார்கள். இந்தியா அவர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும்! காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை கொடுத்துவந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியத்துக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று மசோதா தாக்கல் செய்யும்போதே எதிர்ப்பு தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ``காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்படும் இந்தசூழலில் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் கூறியபடி நடத்த, இதுவே சிறந்த தருணம். இந்த சூழல் தொடர்ந்தால், அது பிராந்திய நெருக்கடிக்கு வழி வகுக்கும்" என்று கூறியிருந்தார். இந்த ந…

    • 0 replies
    • 540 views
  10. ஜம்மு காஷ்மீரில் 4,000 பேர் கைது – சிறைகளில் இடமில்லை August 19, 2019 கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைதானவர்களைக் காவலில் வைக்க காஷ்மீர் மாநிலச் சிறைகளில் இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசுத் தரப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டம் என்ற சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு வருடங்கள் வரை…

  11. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும்போது தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம்தேதி முதல் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பர் 27-ம்தேதி வரையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது விமானம் பாகிஸ்தான் வழியே அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. இந்த நிலையில், இந்தியா உடனான உறவில் பாகிஸ்தான் விரிசலை ஏற்படுத்தி இருப்பதால், மோடி அமெரிக்க செல்வதற்கு தங்கள் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 320 views
  12. மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு! மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரம் தொடர்பாக அண்டை நாடான மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. எனவே சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது. இவ்வாறு சிறைவைக்கப்பட்ட 27 பேரின் தண்டனை காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அவர்கள் 27 பேரும் நேற்று மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தோ-மியான்மர் நட்புறவு வாயில் வழியாக அவர்களை இந்திய அதிகாரிகள் மியான்மார் அதிகாரிகளிடம் ஒப்ப…

  13. குஜராத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து -13 பேர் உயிரிழப்பு. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த தொழிற்சாலையில் 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது திடீரென ஏற்பட்டவெடிவிபத்தினால் பட்டாசுத் தொழிற்சாலை முழுவதும் தீ மளமளவென பரவியதோடு தொழிற்சாலையின் மேற்கூரையும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், 4 பேர் காயமடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன…

  14. படக்குறிப்பு, குழந்தைத் திருமணம் என்ற சமூக இடரில் சிக்கினாலும் படிப்பு என்ற கனவை நனவாக்கிய சோனாலி படே கட்டுரை தகவல் பிராச்சி குல்கர்னி பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "சோட்டி ஸி உமர்...." என்று துவங்கும் மெகா சீரியலின் பாடல் ஒலிக்காத வீடுகளே வட இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர்களில் மிகவும் பேசப்பட்ட இந்தி மொழித் தொடர், 'பாலிகா வது'. குழந்தைப் பருவ திருமணத்தை மையக்கருவாக கொண்ட தொடர் அது. நிதர்சனத்தில் இந்த கதையின் நாயகியுடன் சோனாலி படேவை ஒப்பிடலாம். இந்தப் பெண்ணும் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர். "நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு திர…

  15. காவல்துறையினருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய பெண்மணிக்கு சல்யூட் அடித்து ஆந்திர டிஜிபி நன்றி தெரிவித்தார். இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் அனைவருமே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுடைய பணிக்கு பிரதமர் மோடி, முதல்வர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே பாராட்டி வருகிறார்கள். இதனிடையே, கடந்த சில நாட்களாகவே ஆந்திராவில் உள்ள காவல்துறையினருக்குப் பெண்மணி ஒருவர் பெரிய கூல்டிரிங்ஸ் கொடுக்கும் வ…

  16. இந்தியா- சீனா எல்லை விவகாரத்திற்கான... நிதி ஒதுக்கீடு, முந்தைய ஆண்டுகளை விட அதிகரிப்பு! இந்தியா- சீனா எல்லைக்கான நிதி முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் , வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்தோ-சீனா எல்லைப் பகுதிகளுக்கான நிதி 42 கோடி ரூபாயில் இருந்து தற்போது 249 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1…

  17. கீதாஞ்சலி ஸ்ரீ: சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREW FOSKER/SHUTTERSTOCK/BOOKER PRIZES இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்…

  18. பங்களாதேஷ் சூறாவளியில் 30 க்கு மேற்பட்டோர் பலி By NANTHINI 26 OCT, 2022 | 03:20 PM பங்களாதேஷில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி இதுவரை 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (ஒக் 24) பங்களாதேஷை தாக்கிய சிட்ராங் சூறாவளியால் 30 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகமானோர் உயிரிழந்தமைக்கு சூறாவளியால் மரங்கள் வீழ்ந்தமையே காரணம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மின்கம்பிகள் மீது மரங்கள் வீழ்ந்ததால் சுமார் 80 இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்துள்ளனர். அத்துடன் 6,000 ஹெக்டேயர் (15,000 ஏக்கர்) பரப…

  19. பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி பாராட்டு! இந்திய பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ரஷ்யாவிடம் இதற்குமுன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் இல்லை ஆனால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த மெர்சிடிஸ், அவுடி கார்களை விட அவை மிகவும் சிறப்பானவையாக இருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும்…

  20. நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது வருவாய் மற்றும் சொத்துக்களுக்கு அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசாரணையின் போது குறித்த வழக்கில் மூன்று முறை பிரதமராக இருந்த அவர் சவூதி அரேபியாவில் உள்ள இரும்பு ஆலையின் உரிமை தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நிரூபிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு…

  21. இந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது January 18, 2019 இந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் உள்ளிட்ட 6 பேர் நேற்றையதினம் சி.பி.ஐயினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய விளையாட்டு ஆணையகத்தில் நிலுவையில் உள்ள 19 லட்சம் ரூபா பெறுமதியான தொகை ஒன்றினை வழங்க 3 சதவீதம் லஞ்சம் விளையாட்டு ஆணையகம் கோரியதாக சி.பி.ஐ. யிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று மாலை இந்திய விளையாட்டு ஆணையக தலைமை அலுவலகத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதுடன் விசாரணையும் மேற்கொண்டுள்ளதன் பின்னர். இந்திய விளையாட்டு ஆணையகத்தின் இயக்குனர் எஸ்.கே.சர்மா, உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/110299/

  22. படத்தின் காப்புரிமை Getty Images மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. நடவடிக்கைகளுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மத்திய - மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி விவகாரங்களில் ஆர்வம் செலுத்துபவரான டாக்டர் கார்கா சாட்டர்ஜியுடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அவரின் பேட்டியிலிருந்து. கே. தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? …

  23. இந்தியா – மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்து June 9, 2019 இந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் மாலைதீவுகக்கு இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து நடைபெற்று வருகின்ற நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து படகு போக்குவரத்தையும் ஆரம்பிக்க இருநாடுகளும் திட்டமிட்டிருந்தன. இந்த நிலையில் 2 நாள் பயணமாக நேற்றையதினம் மாலைதீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இருநாடுகளுக்குமிடையே படகு போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறு…

  24. காஷ்மீர் விவகாரம் : இம்ரான்கானின் கருத்தால் போர்கப்பலை நிறுத்தியுள்ளது இந்தியா! காஷ்மீர் விவகாரம் போருக்குத்தான் இட்டுச்செல்லும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள நிலையில், அரபிக்கடல் பகுதியில் இந்தியா தனது போர்கப்பலை தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பல்வேறு முறைகளில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச சமூகம் தலையிட்டு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் தோல்வியை தழுவவே பயங்கரவாதிகளை கொண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தி…

  25. பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா! பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் நடவடிக்கையை சீனா முன்னெடுத்து வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே நீர் மின் திட்டத்துக்காக அணை கட்டுவது தங்கள் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம் என சீனா கூறியுள்ளது. அந்த திட்டம் குறித்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் கவலை தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை, புதிய அணை திட்டத்தால் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்தும் தங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளது. அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மாறாக அந்த ஆற்றில் ஏற்படும் அளவுக்கு அதிக வெள்ளப்பெருக்கு தடுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.