அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு! அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ராமரின் குழந்தை வடிவ சிலையை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாளத்திலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த பாறைகள், 6 கோடி ஆண்டுகள் பழமையானவையாகும். ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை. நேற்று (வியாழக்கிழமை) இந்த பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர். நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்த…
-
- 0 replies
- 300 views
-
-
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை முழு விவரம் - நேரலை பட மூலாதாரம்,ANI 1 பிப்ரவரி 2023, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறவும் முடிவும். எதிர்பார்க்கப்பட்டபடியே, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கான நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய முன்னுரிமை …
-
- 5 replies
- 506 views
- 1 follower
-
-
நரேந்திர மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு! இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு, ஜி-20 உச்சி மாநாடு உட்பட பல உலகளாவிய செயல்பாடுகளுக்கு தலைமை தாங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அழைப்பு தனித்துவமானது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://athavannews.com/2023/1322740
-
- 0 replies
- 299 views
-
-
பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர் கடன் வழங்க IMF நிறைவேற்றுச் சபை அனுமதி By SETHU 31 JAN, 2023 | 05:26 PM பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது. கடந்த வருடம் பங்களாதேஷில் ஒரு நாளில் 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிபபிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியதின் கடனுதவியின் கீழ் பங்களாதேஷ் அரசுக்கு உடனடியாக 476 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது. எனினும், இது வரி அதிகரிப்பு மற்றும் வங்கித்துறையில் மீட்கப்பட முடியாத கடன்…
-
- 4 replies
- 366 views
- 1 follower
-
-
பாலியல் வல்லுறவு வழக்கில் குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2013ஆம் ஆண்டில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு குஜராத் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தில் 2013ஆம் ஆண்டு நடந்த பாலியல் சம்பவத்தில் 81 வயதான ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குப்தா பிபிசியிடம் தெரிவித்தார். இதேவேளை இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஆசராமின் மனைவி உட்பட…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
காந்தியின் கொலையை காவல்துறை தடுத்திருக்க முடியாதா? ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 30 ஜனவரி 2020 புதுப்பிக்கப்பட்டது 30 ஜனவரி 2023 பட மூலாதாரம்,GEORGE RINHART / GETTY காந்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து அவர் மீது மொத்தம் ஆறு கொலை முயற்சிகள் நடைபெற்றன. காவல்துறையினருக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், சதித்திட்டத்தின் வேரை கண்டுபிடிக்கவில்லை. 1949 பிப்ரவரி 10இல், டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். செங்கோட்டைக்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் காந்தி படுகொலை தொடர்பான தீர்…
-
- 7 replies
- 851 views
- 1 follower
-
-
ஹுமாயுன் வரலாறு: பழைய கோட்டை படிக்கட்டுகளில் கால் தவறி இறந்த மன்னனின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஹுமாயூன் பற்றிய ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது தந்தை பாபர் படுக்கையை மூன்று முறை சுற்றி வந்து, 'அல்லாஹ், உயிருக்கு ஈடாக உயிரைக் கொடுக்க முடியுமானால், என் மகன் ஹுமாயூனின் உயிருக்கு ஈடாக பாபரான நான் என் உயிரைக் கொடுப்பேன்' என்று கூறி பிரார்த்தனை செய்தார். ”அந்த நாளில் இருந்து …
-
- 0 replies
- 528 views
- 1 follower
-
-
இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்…
-
- 3 replies
- 797 views
- 1 follower
-
-
காவலரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழப்பு பட மூலாதாரம்,ANI 20 நிமிடங்களுக்கு முன்னர் ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஞாயிறன்று உயிரிழந்தார். முன்னதாக, பிற்பகலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த நாப் கிஷோர் தாஸை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்டார். ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க நபா கிஷோர் தாஸ்சென்றிருந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை, பாதுகாப்பு பணியில் ஈ…
-
- 0 replies
- 587 views
- 1 follower
-
-
43 லட்சம் இந்தியர்கள் சாக வின்ஸ்டன் சர்ச்சில் காரணமானது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜூபைர் அகமது பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROLI BOOKS பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவர் இரண்டாம் உலக போரின் நாயகனாக நினைவு கூரப்படுகிறார். ஹிட்லர் போன்ற சக்தி வாய்ந்த சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடி தோற்கடித்த தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். அவர் பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக பார்க்கப்படுகிறார் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் பிரிட்டனின் காலனித்த…
-
- 1 reply
- 607 views
- 1 follower
-
-
ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கே சவால் விட்ட கிராமத்து பெண்கள்: பள்ளிக்கே செல்லாமல் வங்கி தொடங்கிய கதை கட்டுரை தகவல் எழுதியவர்,அம்ருதா துர்வே பதவி,பிபிசி மராத்தி 28 ஜனவரி 2023, 09:40 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், பெண்களாகவே தொடங்கி, பெண்களுக்காகவே நடத்தப்படும், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா! அப்படியொரு வங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. மான் தேஷி மகிளா கூட்டுறவு வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியைத் தொடங்கியது படிப்பறிவில்லாத…
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
கெளதம் அதானி: பிரதமர் மோதியுடனான நெருக்கம், வாழ்வின் நான்கு திருப்புமுனை குறித்து சொன்னது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கெளதம் அதானி 30 நிமிடங்களுக்கு முன்னர் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்டிடிவியின் எதிர்காலம் முதல் பிரதமர் நரேந்திர மோதியுடனான நெருக்கம் பற்றி வெளிவரும் செய்திகளுக்கு தனது முதல் எதிர்வினையை அளித்துள்ளார். அதானி குழுமம் சமீபத்தில் என்டிடிவி என்ற செய்தி சேனலை வாங்கியது. இந்த பங்குகள் கொள்முதல் ஊடக உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக என்டிடிவி மேம்பாட்டாளர்களான…
-
- 5 replies
- 339 views
- 1 follower
-
-
உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்! உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான நேற்று (வியாழக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்த மருந்துகளை வாங்குவதற்காக தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டிய…
-
- 0 replies
- 179 views
-
-
நீதித்துறை Vs மோதி அரசு: தொடரும் கசப்புணர்வு, சர்ச்சைக்கு தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே நிலவும் மோதல் அதிகரித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருவதைப்பார்க்கும்போது பிளவு மேலும் அதிகரித்து வருவது போலத்தெரிகிறது. நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்ற விவகாரத்தில் கொலீஜியம் என்பது அரசியலமைப்பிற்கு புறம்பான ஒரு ஏற்பாடு என்று அரசு கூறுகிறது. அதே நேரத்தில் நீதிபதிகள் நியமன விஷயத்தில் அரசின் தலையீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை உண…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
தெலங்கானா ஆளுநர் Vs முதல்வர் கேசிஆர்: "விதிமீறல், சட்ட மீறல்" - கொந்தளிக்கும் தமிழிசை செளந்தரராஜன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கே. சந்திரசேகர ராவுக்கும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இடையிலான மோதலின் உச்சமாக தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அம்மாநிலத்தில் நடைபெற்ற குடியரசு தின தேசிய மூவர்ண கொடியேற்று நிகழ்வில் முதல்வர் பங்கேற்கவில்லை. இந்த விவகாரத்தில் மரபுகளின்படி அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், குடியரசு தின நிகழ்வில் முதல்வர் பங்கேற்பது தொடர்பான தகவல் வியாழக்கிழமை காலை வரை ஆ…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
டெல்லியில் இந்திய குடியரசுத் தின கொண்டாட்டம்! January 26, 2023 இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். முன்னதாக, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜன…
-
- 2 replies
- 421 views
- 1 follower
-
-
சீனாவுடன் நேருக்கு நேர் மோதி இந்திய வீரர்கள் அதீத துணிச்சலை வெளிப்படுத்தினர் - ராஜ்நாத் சிங் By NANTHINI 25 JAN, 2023 | 08:23 PM (ஏ.என்.ஐ) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர். இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், காங்கிரஸ் அரசியல்வாதிகள் பாஜகவை அவதூறு செய்தால், நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், அவர்கள் இந்திய வீரர்களின் துணிச்சலை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஒர…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
தேவன்ஷி சங்வி: 8 வயதில் மகளை துறவியாக்கிய வைர வியாபாரி - விமர்சிக்கும் ஆர்வலர்கள் பட மூலாதாரம்,RUPESH SONAWANE 5 மணி நேரங்களுக்கு முன்னர் எட்டு வயதான தேவன்ஷி சங்வி, வளர்ந்த பிறகு பல கோடி டாலர்கள் மதிப்பிலான வைர வியாபாரத்தை நடத்தியிருக்கலாம். ஆனால், ஒரு பணக்கார இந்திய வைர வியாபாரியின் மகளான இவர், இப்போது வெள்ளை ஆடை அணிந்து, வெறும் காலோடு, வீடு வீடாகச் சென்று யாசகம் செய்து வாழும், மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். அதற்குக் காரணம் கடந்த வாரம் தனேஷ், அமி சங்வியின் இரண்டு மகள்களில் மூத்தவரான தேவன்ஷி, உலக வாழ்வைத் துறந்து துறவி ஆகியுள்ளார். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவ…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
ஷாஜகானின் மூத்த மகன் தலையை வெட்டி அவருக்கே பரிசாக அளித்த ஔரங்கசீப் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபஸல் பதவி,பி.பி.சி. செய்தியாளர் 24 ஜனவரி 2023, 04:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES முகலாய சுல்தான்களைப் பற்றிய ஒரு பாரசீகப் பழமொழி மிகவும் பிரபலமானது. அது ‘அரியணை அல்லது கல்லறை’ என்பது தான். முகலாய வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், ஷாஜகான் தனது இரு சகோதரர்களான குஸ்ரோ மற்றும் ஷஹ்ரியார் ஆகியோரின் மரணத்திற்கு உத்தரவிட்டது மட்டுமல்லாமல், 1628 இல் அவர் அரியணை ஏறியபோது அவரது இரண்டு மருமகன்கள்…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பயணிகள் ரயில் தடம் புரண்டதால் எட்டு பேர் காயம்! பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான் மாவட்டத்தின் பேஷி பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் இன்ஜின் உட்பட 8 பெட்டிகள் தடம் புரண்டன. அந்த இடம் மலைப்பாங்கான பகுதியில் உள்ளதால் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்கொள்வதாக துணை ஆணையர் போலன் ஆகா சமியுல்ல…
-
- 0 replies
- 415 views
-
-
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்குத் தேவையா? கட்டுரை தகவல் எழுதியவர்,ராகவேந்திர ராவ் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/TEJASVI YADAV பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்பு பணியைத் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்தப்பணியின் முதல் கட்டத்தை மே 31-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில், பீகாரில் வசிக்கும் மக்களின் சாதி, துணை சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலை …
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
டெல்லி குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு! டெல்லியில் 26-ந் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. எகிப்து படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டில் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி கலந்து கொள்கிறார்.கடமை பாதை என்று இப்போது பெயர் சூட்டப்பட்டுள்ள ராஜபாதையில் கண்க…
-
- 0 replies
- 299 views
-
-
இந்திய இராணுவத்திற்கு சிறப்பு தற்காப்புக் கலை அறிமுகம் By DIGITAL DESK 5 14 JAN, 2023 | 03:50 PM தாக்குதல் பயிற்சி மற்றும் கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்திய இராணுவம் அதன் வீரர்களுக்காக ஒரு தனித்துவமான மற்றும் தரப்படுத்தப்பட்ட கலப்பு தற்காப்பு கலை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வகையான தற்காப்பு கலை பயிற்சிகள் உடல் ரீதியாக மட்டுமல்ல, மனதளவிலும் உதவும் என்று இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். கலப்பு தற்காப்புக் கலைப் பயிற்சிகள் இராணுவ வீரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைத் தடுக்க உதவும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித…
-
- 7 replies
- 867 views
- 1 follower
-
-
இந்தியாவின் இரண்டாவது பிரமாண்ட ஆதியோகி திருவுருவம் திறந்துவைப்பு! பெங்களூர் அருகே உள்ள சிக்கபல்லாபூரில் இந்தியாவின் இரண்டாவது ஆதியோகி திருவுருவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்துள்ளார். இதன் திறப்பு விழா ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் முன்னிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதியோகிக்கு முன்பாக, யோகேஸ்வர லிங்கத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பிரதிஷ்டை செய்து வைத்தார். ஆதியோகி திருவுருவம் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி, சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும், ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ நிகழ்ச்சியும் நடைபெற்றது.…
-
- 0 replies
- 520 views
-
-
ராணுவ தினம்: 1949, ஜன.15-ம் தேதி இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியமான நாள் - ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 75-வது ராணுவ தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. 1949, ஜனவரி 15-ம் தேதி சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாளில், ராணுவத்தின் சாதனைகள், தேசத்திற்கு ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைகள், தியாகங்கள் நினைவுகூர்ந்து கவுரவிக்கப்படும். 1971 இந்தியா - பா…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-