அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
இந்திய 'உளவாளிகள்': பாகிஸ்தானில் வேவு பார்த்தவர் இன்று ரிக்ஷா தொழிலாளரி நியாஸ் ஃபரூக்கி பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய உளவாளி என்று தன்னை கூறிக்கொள்ளும் டேனியல் மசிஹ் இப்போது சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்துகிறார். தான் ஓர் இந்திய உளவாளி என்று டேனியல் மசிஹ் கூறுகிறார். பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததற்காக கைது செய்யப்பட்டு, பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளானபோதிலும், இந்திய அரசால் அவரது சேவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை, கூடவே அவரது சேவைகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பது அவரது கூற்று. தான் எட்டு …
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈ - பைக்: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களும் சிக்கல்களும் க. சுபகுணம் பிபிசி தமிழ் 23 அக்டோபர் 2022, 02:50 GMT பட மூலாதாரம்,OLA ELECTRIC/TWITTER இந்தியாவின் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தைக்குள் ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு நுழைந்தது. தற்போது, அக்டோபர் 22ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருசக்கர வாகன சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா ஸ்கூட்டரை, 2021ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதியன்று பெங்களூருவில் டெஸ்ட் டிரைவ் செய்த காணொளி வெளியானது. அதைத் தொடர்ந…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
டெல்லியில் துண்டிக்கப்பட்ட தலைகளைக் கொண்டு ஒரு கோபுரம் அமைத்த தைமூர் லங்கின் வீரர்கள் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 59ஆவது கட்டுரை இது.) டெல்லியை கைப்பற்றுவதற்காக, தைமூர் லங்கின் 90,000 வீரர்கள் சமர்கண்டில் அணிதிரண்டபோது, ஒரே இடத்தில் இத்தனை பேர் திரண்டதால் நகரம் முழுவதும் புழுதி பரவியது. சமர்கண…
-
- 0 replies
- 458 views
- 1 follower
-
-
இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது – பிரதமர் மோடி மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தங்கள் பணம் நலத்திட்டங்களுக்குச் செல்லும் என எண்ணியே கடுமையான உழைப்பின் மூலம் மக்கள் வரி செலுத்துகின்றார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் மாநில அரசுகளால், வரிப்பணம்வீணடிக்கப் படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக வரி செலுத்துவோர் உள்ளங்களில் வலி ஏற்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். https://athavannews.com/2022/1306586
-
- 0 replies
- 111 views
-
-
நிலைமாறா பொருளாதாரக் கொள்கை : அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா By NANTHINI 19 OCT, 2022 | 12:10 PM (எம். மனோசித்ரா) உலகில் நிலப்பரப்பின் அடிப்படையில் 7ஆவது பெரிய நாடாகவும், சனத்தொகை அடிப்படையில் 2ஆவது பெரிய நாடாகவும் காணப்படும் இந்தியா வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தையே கொண்டுள்ளது. எனினும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் கூட நிலைமாறா பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி, 2047ஆம் ஆண்டாகும்போது, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 டிரில்லியன் டொலர் வரை விரிவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CI…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
அக்டோபர் 22 கறுப்பு தினம் : ஜம்முகாஷ்மீர் மீதான பாகிஸ்தானின் படையெடுப்பு By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 11:44 AM 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக கூட்டு ஒப்பந்தத்தை மீறி, பழங்குடியினரைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற ஆக்கிரமிப்பு போரை தொடங்கியது. வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டுவதில் பாகிஸ்தானின் பங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட அக்டோபர் 22 ஆம் திகதியை இந்தியா 'கருப்பு தினமாக' அனுசரிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் சட்டவிரோதமாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து கொள்ளையடித்து அட்டூழியங்களைச் செய்தனர். ஜம்மு காஷ்மீர…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
காலாவதியுள்ள 100 மில்லியன் அளவு கொவிட்-19 தடுப்பூசிகள் அழிப்பு! காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது. குறைந்த தேவை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிஷீல்ட் உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா, அஸ்ட்ராஸெனெகாவின் வக்ஸெவ்ரியா உள்ளூர் தடுப்பூசி அளவை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் டோஸ்களில் 90 சதவீதத் க்கும் அதிகமானவை கோவிஷீல்ட் ஆகும். இந்தியா இரண்டு பில்லியனுக்கும் அ…
-
- 0 replies
- 194 views
-
-
உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவிப்பு போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றஞ்சாட்டிய ரஷ்யா அந்தநாட்டின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில், உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு, மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடை…
-
- 1 reply
- 233 views
-
-
முகலாயப் பேரரசு வரலாறு: அக்பர் உண்மையில் ஜோதா பாயை திருமணம் செய்தாரா? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 16 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 58ஆவது கட்டுரை இது. முகலாயர்கள் 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டாலும்கூட, இந்தியாவின் வரலாற்று புத்தகங்களிலும் ஊடகங்களிலும் முகலாயர்கள் பற்றிய சித்தரிப்பில் பல குறைகள் உள்ளன. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் மு…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
இஸ்ரோ எல்விஎம்3 ராக்கெட்: 36 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் - ஏவும் இடம், நேரம் - முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஏவுதளத்தில் எல்.வி.எம்.3 பிரிட்டனின் ஒன்வெப் செயற்கைக்கோள் நிறுவனத்துக்காக ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவிலிருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் ஏவப்பட உள்ளது. வணிக ரீதியில் ராக்கெட் ஏவும் உலகளாவிய சந்தையில் இந்த முயற்சி இந்தியாவுக்கு ஒரு மைல்கல் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது. புவியின் தாழ் வட்டப்பாதையில் ஏவப்படும் (LEO) செயற்கைக்கோள்களை தயாரிக்கும் நிறுவனமான 'ஒன்வெப்', இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இந்திய விண்வெள…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
சீனாவின் அச்சுறுத்தல்களை முறியடிக்க லடாக் எல்லையில் ட்ரோன்களை நிறுத்த முடிவு By RAJEEBAN 17 OCT, 2022 | 01:33 PM சீனாவின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக லடாக்கில் ஆளில்லா விமானங்களை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அதன் பின் அமைதி திரும்பினாலும், லடாக் எல்லைப் பகுதி பதற்றமாகவே காணப்படுகிறது.இதையடுத்து அங்கு ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், அதிநவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் ஆளில்லாத அதிநவீன ட்ரோன்களை நிலை நிறுத்த இந்திய ராணுவ…
-
- 1 reply
- 175 views
- 1 follower
-
-
'இந்திய ரூபாய் சரியவில்லை; டாலர்தான் உயர்கிறது' - நிர்மலா சீதாராமன் சொன்னது சரியா? எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NSITHARAMANOFFC/TWITTER "இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது," என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அலுவல்முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். …
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல்! காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தேர்தலில், மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. எனவே…
-
- 2 replies
- 233 views
- 1 follower
-
-
சூரிய சக்தி மின் உற்பத்தி: ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 14,000 ஏக்கர் சோலார் பார்க் - என்ன சிறப்பு? ப்ரிதி குப்தா மும்பை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கு ராஜஸ்தானில் உள்ள பாலைவனங்கள் மனிதர்கள் வசிக்க முடியாத இடமாக உள்ளன ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள பட்லா பகுதியில் சூரிய சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே மாறுப்பட்ட கருத்து நிலவுகிறது. "பட்லா கிட்டத்தட்ட மனிதர்கள் வாழ முடியாத நிலையில் உள்ளது," என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) நிறுவனமான சவுர்ய உர…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
இந்தியாவில் புதிய ஐபோனை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம் அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-14 ஐ இந்தியாவில் தயாரிக்கத் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் சீனாவிலிருந்தான அதன் விநியோகச் சங்கிலியை மாற்றவுள்ளது. அப்பிள் நிறுவனமானது, தனது பெரும்பாலான தொலைபேசிகளை சீனாவில் தயாரிக்கிறது. ஆனால் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால் சில உற்பத்திகளை சீனாவுக்கு வெளியே மாற்றுவதற்கு அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் பரவலான முடக்கத்தினை ஏற்படுத்திய பூச்சிய கொரோனா கொள்கைகள், அந்நாட்டின் வணிகங்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அப்பிள் நிறுவமானது, தனது புதிய ‘ஐபோன…
-
- 0 replies
- 202 views
-
-
ஆன்டிபயாட்டிக்-எதிர்ப்பு சூப்பர்பக்: இந்தியா புதுவித தொற்றுடன் போராடுகிறதா? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MANSI THAPLIYAL மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள லாப நோக்கற்ற, ஆயிரம் படுக்கைகள் கொண்ட கஸ்தூர்பா மருத்துவமனையில் மருத்துவர்கள், ஆன்டிபயாட்டிக்-எதிர்ப்பு "சூப்பர்பக் தொற்றுகளுடன்" போராடி வருகின்றனர். இந்த சூப்பர்பக், பாக்டீரியா ஒரு குறிப்பிட்ட கால அளவில் மாற்றம் அடையும்போது உருவாகும் தொற்று ஆகும். இந்த சூப்பர் பக் ஏற்படுத்தும் தொற்றுகளிலிருந்து குணப்படுத்தவும், தொற்றை அழிக்கவும் உபயோகிக்கபப்டும் மருந்துகளுக்கு எதிராக செ…
-
- 5 replies
- 298 views
- 1 follower
-
-
இ-ரூபாய் இந்தியாவில் விரைவில் அறிமுகம் - டிஜிட்டல் கரன்சியை எப்படி பயன்படுத்துவது? தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி யை அறிமுகப்படுத்தவுள்ளது. இ-ரூபாய் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று நடப்பு நிதியாண்டிற்கான (2022-23) பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் மின்னணு ரூபாய் அதாவது CBDC ( சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் நாணயம்) அறிமுகப்படுத்தப்படும் என்று வெள்ளியன்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. …
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன நேரம் மாற்றியமைக்கப்படுகிறது! திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் நடைபெறுவதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். திருப்பதிக்கு கடந்த மாதம் 21 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் 122 கோடியே 19 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடி லட்டுகள், அதாவது 98 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 44 லட்சத்து 7…
-
- 0 replies
- 216 views
-
-
9 பேரைக் கொன்ற புலி சுட்டுக்கொலை By T. SARANYA 10 OCT, 2022 | 01:16 PM இந்தியாவில் குறைந்தது 9 பேரை வேட்டையாடி கொன்ற புலி ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. புலியைத் தேடி அதனைப் பிடிக்கும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 200 பேர் ஈடுபட்டனர். பீகார் மாநிலம் சம்பரான் மாவட்டத்தில் உள்ள வால்மிகி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலி கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பலரை அது தாக்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ஒரு பெண் அவரது எட்டு வயது மகன் உட்பட ஆறு பேர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வனத்துறை அதிகா…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
முலாயம் சிங் யாதவ் காலமானார் - பல அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் செய்த அரசியல் தலைவர் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். 1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ …
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
முகலாய மன்னர் ஒளரங்கசீப் - ஹீராபாய் காதல் வரலாறு: கண்டவுடன் காதல் வலையில் விழுந்த இளவரசர் வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MEDIEVAL INDIAN HISTORY (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 57ஆவது கட்டுரை இது.) முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதலின் கதை இது. அதுவும் 49 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் காதல்…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
இமயமலையில் பனிச்சரிவு : 26 பேர் உயிரிழப்பு ! By DIGITAL DESK 5 08 OCT, 2022 | 07:48 PM இமயமலையில் ஏறுபவர்களை பனிச்சரிவில் சிக்கியதில் குறைந்தது 26 பேர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமான வானிலை காரணமாக நான்காவது நாளாகவும் குறித்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. 41 மலையுறும் பயிற்சியாளர்களைக் கொண்ட குழு, செவ்வாய்க்கிழமை இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்டில் உள்ள திரௌபதி கா தண்டா II மலையின் உச்சிக்கு அருகே ஏற்பட்ட பாரிய பனிச்சரிவில் சிக்கிக் கொண்டது. "நாங்கள் இதுவரை 26 உடல்களை மீட்டுள்ளோம் - அவர்களில் 24 பேர் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இரண்டு உடல்கள் பயிற்றுவ…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
பிரசண்டா - இந்தியாவிலேயே தயாரான இலகுரக போர் ஹெலிகாப்டரின் 15 சிறப்பம்சங்கள் ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,@RAJNATHSINGH உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான பிரசண்டாவின் முதல் தொகுப்பு, திங்கள்கிழமையன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் 'light combat helicopter' (எல்.சி.ஹெச்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்ள, 'தனுஷ்' என்று அழைக்கப்படும் '143 ஹெலிகாப்டர் யூனிட்'-இல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
இந்தியாவில் ஓராண்டில் 14 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொலை – அதிர்ச்சியளிக்கும் குளோபல் விட்னஸ் அறிக்கை க. சுபகுணம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "ஒவ்வொரு வாரமும் உலகளவில் மூன்று பேராவது தங்களுடைய நிலத்தை, சுற்றுச்சூழலை, வெளிப்புற சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப் போராடியதற்காகக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று நான் சொல்லலாம். இது பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது, கடந்த ஓராண்டில் மட்டுமே 200 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் நான் சொல்லலாம். ஆனால், இந்த எண்கள் எல்லாம், உயிரிழந்தவர்களின் பெயர்களை…
-
- 3 replies
- 435 views
- 1 follower
-
-
5ஜி சேவை இந்தியாவில் இன்று தொடக்கம்: இனி மொபைல் சேவை எப்படி வேகம் பிடிக்கும்? 1 செப்டெம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடக்கி வைத்தார். இன்று முதல், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 6வது இந்திய கைபேசி மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைக்கும் பிரதமர், 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தினார். 5ஜி சேவை அறிமுகமாகப் போகும் சூழலில், அது பற்றிய பல கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மக்கள் மனங்கள…
-
- 8 replies
- 355 views
- 1 follower
-