யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
708 topics in this forum
-
- உங்களுக்கு தேரியாததோ ! விளம்பரத்தின் சக்தி முன்பு காட்டூனில் நெடூக மகிந்த நின்றிருந்தார் . . . ! இப்போ, மஹிந்தவையும் சரத்தையும் முககப்பிலே மாதம் மாதமாகக் காட்டுகிறிர்களே . . . அது விளம்பரத் துறைத் தத்துவத்தின் படி ... நீங்கள் செய்யும் பாரிய தவறு . . . ! அது போலவே, எங்கள் கருத்துக்களில் இப்படிப் பட்ட படங்களை இணைத்துச் சிரிப்பதும். . . தமிழர் அரசியல் கட்சிகளை , கூட்டணியின் சின்னத்தை, அதன் அங்கத்தவர்களை அல்லது பணைமரம் பசுமாடு நூல்நிலையம் போன்றவற்றுடன் இலங்கைத் தேர்தல் முடிவுப் படத்தை மாத்திரம் காட்டினால் . . . ? இது எனது திடீர் விழிப்பு ... பிழையானது என்றால் மன்னித்துக் கொள்ளுங்கோ ... - நன்றி …
-
- 0 replies
- 975 views
-
-
இங்கெறிக்கும் இந்தநிலா அங்குமெறிக்கும் எங்தனுயிர்க் கண்ணாளைக் கண்டு சிரிக்கும், இங்கலையும் மென்காற்று அங்குமலையும் என்னுயிரின் இன்பவுடல் தொட்டுவருடும். இங்கரற்றும் நீள்கடல்தான் அங்குமரற்றும், எங்களிடைத் தூரமதை வீணிலுணர்த்தும், கங்குலிருளூடவளின் கன்னம் வழியும் கண்ணீரின் முத்துக்கள் மின்னியொளிரும், ஆசைமனக்கன்னிமனம் வேதனை கொள்ளும், நேசமெனக்கில்லையென நிச்சயம் கொள்ளும், காசு பொருளே பெரிதவர்க்கெனச் சொல்லும் கல்மனதர் என்று எனை வீண்பழி சொல்லும், தேசமதை விட்டு வெகு தூரமிருந்தும் சிந்தனையை அங்கவளின் மீது செலுத்தும் நீசமனத் துன்பமதை எங்கெறியட்டும் நீணிலவே தண்ணொளியைத் தூதுவிடட்டும்.
-
- 0 replies
- 885 views
-
-
யாழ்களத்தில் சில விரும்பக்கூடிய மாற்றங்கள் கண்டு மிக்கமகிழ்ச்சி . மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
தனிமடல் தடங்கல் நிர்வாகம் கவனிக்குமா? சில நாட்களாக ஒருசிலர் அனுப்பும் தனிமடல்கள்; உரியவர்களுக்கு போய்சேருவதில் தடங்கல் இருப்பதாக தெரிகிறது. தற்பொழுது நிவர்த்தியாகிவிட்டதுபோல் தெரிகிறது எனினும் நிர்வாகம் கவனம் எடுத்து சரிபார்த்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன்
-
- 0 replies
- 572 views
-
-
“கீதை பிறந்தது" "கீதை பிறந்தது தர்மத்தை விளக்கவே மேதை கிருஷ்ணன் அருச்சினனுக்கு போதிக்கவே! காதை கொடுத்துக் கேட்டவன் தயங்கினான் பாதை புரியாமல் போரில் நின்றானே!" "தத்துவவாதியின் அறிவுரையோ ஒரு பக்கம் தத்துவம் சொன்னவனே மீறியதோ மறுபக்கம்? தந்திரம் நிறைந்த மாயோனின் கூத்தில் தயாளகுணன் கர்ணன் மடிந்ததும் தெரியாதோ?" "தர்மத்தை பாதுகாக்கப் பூமிக்கு வந்தவனே அர்த்தமே புரியாமல் வஞ்சகம் புரிந்தானே! வார்த்தையில் அழகாய்க் கூறிய அவனே தேர்ந்து எடுத்ததோ பொய்யும் பித்தலாட்டமுமே!" "அன்பை விதைத்தால் மனிதம் உயரும் அறம் நிலைநாட்டினால் பண்பு மலருமே! அவதாரம் எடுத்து போதித்த கொள்கை அநீதி வழியில் சென்றது ஏனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 214 views
-
-
மட்டுறுத்துனர்களின் கவனம் இல்லாவிட்டால் பின்வரும் திரியில் தனிமனித தாக்குதல்கள் தீவிரமடையும் சாத்தியம் தெரிகிறது. இலங்கையில் கோட்டாபய பதவியேற்றவுடன் தமிழர் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்களா?
-
- 0 replies
- 810 views
-
-
பிற பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தர முடியுமா ?
-
- 0 replies
- 872 views
-
-
எனது கணனியில் மீண்டும் வழமை போல கடைசி பதிவை பார்க்க கூடியதாக உள்ளது. மாற்றியமைக்கு நனறி
-
- 0 replies
- 415 views
- 1 follower
-