Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥) நீராருங்கடலுடுத்த, அன்பார்ந்த, மனமார்ந்த முதலான சொற்களை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். இவற்றுள் இருக்கும் ’ஆர்ந்த’ எனும் சொல்? நிறைந்த, நிரம்பிய, பரவிய முதலானவற்றின் பொருள் கொள்கின்றோம். ஆனால் இதன் பொருள் அதற்கும் மேலானது. நீரால் ஆனது கடல், அன்பாகவே ஆகிப்போன நண்பன், இப்படியாக, அதுவாகவே ஆகிப் போவதுதான் ‘ஆர்தல்’ என்பதாகும். வாழ்த்துதலாகவே, வாழ்த்துதல் மட்டுமாகவே ஆகிப் போவதுதான் மனமார்ந்த வாழ்த்து. உளப்பூர்வமாய், உளப்பூர்வமாக மட்டுமே ஒன்றிக் கிடத்தல் உளமார்ந்திருத்தல். பயிற்சியினூடாக வாடிக்கையாக்கிக் கொளல் உளமார்ந்திருத்தல். நம்மில் பெரும்பாலானோர் பொட்டிதட்டிகள்(software programmers), மென்பொருள்ச் சாலைக்கூலிகள். நிரல் எழுதுகின்றோம். மண்டைய…

  2. "வேதம் & புராணம்" இந்து சமயத்துப் புராணகதைகள் பெரும்பாலனவைகளை படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப் பட்ட செயல்களாக இருக்கும். இக்கதைகளை பக்தர்கள் கேள்வியே கேட்காது கேட்டு ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். இவைகள் வெறுமனே எழுதப் பட்ட கதைகள் தான் என்றாலும் ஏன் தான் கடவுள்மாரைக் நல்ல கடவுள்தனம் உள்ளவராகச் சித்தரித்து மக்களுக்கு ஒரு இறை பக்தி வரும் படியான சிந்தனைகளை ஏற்படுத்தும் கதைகளை எழுதாமல் விட்டார்கள் என்று கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்து மதத்தில், வேதம் என்ற சொல் 'வித்' என்…

  3. "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" எப்படி முதலாவது சமயம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகியபோது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. இயற்கை அனர்த்தங்களுக்கு எதிரான பயம் தான் சமயத்தை உருவாக்கியிருக்கும். மேலும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம். ஆகவே முதலாவது தெய்வம் அதிகமாக பெண் தெய்வமாகவே இருந்திருக்கும். சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறி…

  4. "புண்ணியம்" "புண்ணியம் என்று ஒன்றும் இல்லை புரிந்த உணர்வுடன் உலகை அணுகு பசித்த வயிறுக்கு உணவு கொடு புலுடா மத கொள்கை நம்பாதே!" "தவறு செய்யாதே பாவம் வரும் தடுமாறி நீ நரகம் போவாய் தருமம் செய் புண்ணியம் வரும் தடை இன்றி சொர்க்கம் செல்வாய்!" "புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான் புற்றுநோய் போல் அது பரவி புவியில் உள்ளோரை வலைக்குள் வீழ்த்திவிட்டது!" "நீச செயல்களை என்றும் செய்யாது நீதி செய்தால் உலகம் வரவேற்கும் நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும் நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சே…

  5. உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! மனிதர்களின் புத்திக்கூர்மையை மூன்று வகையாகப் பிரித்துச் சொல்கின்றன பண்டைய ஞான நூல்கள்: சிலைப் புத்தி, தாரு புத்தி, மூங்கில் புத்தி. கல்லை உளியால் கொத்தி, செதுக்கிக் கடும் உழைப்பில் சிலையை உருவாக்கவேண்டும். அதேபோல் மிகுந்த அக்கறையுடன் பலமுறை எடுத்துச் சொன்னபிறகு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோரை சிலைப்புத்தி வகையில் சேர்க்கலாம். கல்லைக் காட்டிலும் மரத்தில் சுத்தமாகவும் சுலபமாகவும் ஒரு வடிவத்தைச் செதுக்கிவிட முடியும். அதேபோன்று ஒருமுறை கூறினாலே, சட்டென்று உள்வாங்கிக்கொள்வோரை தாரு புத்திக்காரர்கள் எனலாம். தாரு என்றால் மரம். மூங்கிலை உளியால் ஒரு பக்கம் பிளக்கும்போதே மறுபக்கம் தானே பிளந்துகொள்…

  6. மார்க்சின் கம்யூனிசம், கற்பனை அல்ல! - என்.குணசேகரன் மே 5: கார்ல் மார்க்ஸ் பிறந்ததினம் மனித சமூக வளர்ச்சி பற்றிய காரல் மார்க்சின் பார்வை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமத்துவம் நிலைப்பெற்று, மனிதம் மாபெரும் வளர்ச்சி கண்டு சிகரம் தொடும் நிலையை காரல் மார்க்ஸ் சிந்தித்தார். மற்ற ஞானிகள் மேலான சமூகம் பற்றி மாபெரும் கனவுகள் கண்டனர். ஆனால், மார்க்ஸ் அறிவியல் நடைமுறையுடன் இணைத்து தனது சிந்தனைகளை பதிவு செய்தார். ஒரு தனிநபரின் சுதந்திரமான வளர்ச்சி மட்டுமல்ல; சமூக மாந்தர்கள் அனைவரின் சுதந்திரமான வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் மார்க்ஸ் எழுதினார்.சோசலிச சமூகத்தின் கோட்பாடாக மார்க்ஸ் இதனை கருதினார். மார்க்ஸின் சமூக சித்திரம் …

  7. Published By: Vishnu 05 Mar, 2025 | 02:40 AM திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து. திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் எமது நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள். இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலத்தின் முதல் நாள் இந்தச் சடங்கின் மூலமாக ஆரம்பமாகின்றது. “உங்கள் முழு இத­யத்­துடன் என்­னிடம் திரும்பி வாருங்கள் என்­கிறார் ஆண்­டவர்” (யோவேல் 2:12) 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதுக்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய கா…

  8. "தெரியாது" ஆனால் “தெரியும்” புத்தர் தன் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சிறுமி வந்து அவரை வணங்கினாள். – புத்தர் கேட்டார்: “எங்கிருந்து வருகிறாய் அம்மா?” – ”தெரியாது” – ”எங்கே போகிறாய்?” – ”தெரியாது” – சிறுமியின் பதிலைக் கேட்டு சீடர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது. – “இப்படித் தெரியாது தெரியாது என்று சொல்கிறாயே… உனக்கு எதுவுமே தெரியாதா?” என்று புத்தர் கேட்டார். அதற்குச் சிறுமி, “தெரியும்” என்றாள். – உடனே புத்தர், “”என்ன தெரியும்?” என்று ஆவலாகக் கேட்டார். – அதற்கு அவள், “”தெரியாது” என்றாள். புத்தருக்கு குழப்பமான மனநிலை. “”என்னம்மா இப்படிக் குழப்புகிறாய்?” அந்தச் சிறுமி சொன்னாள்: – “குருவே…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எடிசன் வெய்கா ரோல் பதவி, பிபிசி நியூஸ் பிரேசில் 31 மார்ச் 2024, 11:39 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சமயத்தில் யூதேயா மாகாணத்தின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து குறித்து, சுவிசேஷங்களில் (இயேசுவின் உபதேசங்கள்) உள்ள மத விவரிப்புகள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் சித்தரிக்கப்பட்ட விதங்களில் வேறுபாடுகள் இருப்பதாக ஆரம்பகால கிறிஸ்தவ அறிஞர்கள் கண்டறிந்தனர். மத விவரிப்புகளின்படி பிலாத்து நியாய, தர்மங்களில் அக்கறை கொண்டுள்ள நடுநிலையான மனிதர் என தெரிகிறது. இயேசுவிடம் எந்த கு…

  10. "பேசுவதற்கு முன்பே யோசிப்போம் . யோசித்தப்பின் பேசுவோம்." வார்த்தைகளை சிந்துவது சுலபம். ஆனால்அவற்றினை திருப்பிப் பொறுக்கி எடுத்துவிட முடியாது. ஆகவே வார்த்தைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு அது மற்றவரை எப்படி காயப்படுத்தும் என்று நன்றாக யோசித்த பின்பு தான் நாம் பேச வேண்டும். நாம் கோபத்தில், எரிச்சலில், அவசரத்தில் அள்ளிக் கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற முடியுமா? முடியாதில்லையா ? அப்படியென்றால் நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு எப்படி ஒரு சக்தி இருக்க வேண்டும் ? இதை நாம் உணர வேண்டும். தவறை உணர்ந்து நாம் கேட்கும் மன்னிப்பும் அதற்கு நாம் கூறும் காரணங்களும் ஏற்றுக் கொள்ளப்படுமே தவிர மறக்கப்பட மாட்டாது. அது மனதின் ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கு…

  11. பொய்யுரை - சுப.சோமசுந்தரம் இக்கட்டுரை பொய்மையும் வாய்மையிடத்த பொய்யுரை பற்றியது. இரண்டொரு எடுத்துக்காட்டுகளுடன் அத்தகு பொய்யுரையை நிறுவ முற்படுவது. சமீபத்தில் நண்பர் ஒருவர் திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில், "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" (குறள் எண் 37) என்றுள்ள குறளுக்கு உரைகள் பலவற்றிலும் பொருள் தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று தம் மனக்குறையை வெளியிட்டார். பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாளர்கள் 'கர்மா'வின் அடிப்படையில் தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல, பல்லக்கைத் (சிவிகை) தூக்குபவனும் (பொறுத்தான்) அதி…

  12. "உன்னைப் பழி தீர்த்த ஒருவனை , நீ பழிவாங்க முயன்றால். இறை தர்மத்தின் தண்டனை இருவருக்கும் சமமாகவே இருக்கும்??" கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக்குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக் கூட்டத்தினரிடமும் நான் கருணை காட்டினால்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்.... அன்பு செய்ய சொல்லியதையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கி றோமோ... ???? எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவி…

  13. பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியது பெரியார் என்றாலும் அந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும் அதன் சித்தாந்தங்களைத் தொடர்ந்து வடிவமைப்பதிலும் ஆண்களும் பெண்களுமாக பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் ஒரு தொகுப்பு. (சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புத் தொடரின் மூன்றாவது கட்டுரை இது.) 1925ஆம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறியதும் சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் நீதிக் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டார் பெரியார். பல தருணங்களில் அவர்க…

  14. சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு [பக்தி, அதிகாரம், சர்ச்சை மற்றும் அறிவியல்] சத்திய சாய் பாபா யார்? சத்திய சாய் பாபா (1926–2011) இந்தியாவின் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் சத்தியநாராயண ராஜு என்ற பெயரில் பிறந்தவர். தன்னை சீரடி சாய் பாபாவின் மறுபிறவி என்று அறிவித்தார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களை உருவாக்கினார். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவை அவர் பெயரில் உருவாக்கப்பட்டன. அவர் போதனை: "அனைவரையும் நேசி. அனைவருக்கும் சேவை செய். எப்போதும் உதவு. ஒரு போதும் காயப்படுத்தாதே" பக்தர்கள் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.