உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
உக்ரைனுக்கு ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து... வழங்குவோம்: ஜோ பைடன் அறிவிப்பு! ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து தலைநகர் கீவ் மீது உக்கிர தாக்குதலை தொடுத்து வருகின்ற நிலையில், ஜோ பைடனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பைடன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனியர்களை திறந்த கரங்களுடன் வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். முன்னதாக, 13.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஓர் அவசர ஆணையில் ஜோ பைடன் கடந்த வார இறுதியில் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப…
-
- 1 reply
- 204 views
-
-
3 சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவில் செவ்வாய்க்கிழமை காலை மூன்று முறை பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 20 ஆவது நாளாகத் தொடர்கிறது. தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் உக்ரைனின் முக்கிய தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என முக்கிய இடங்களை குறிவைத்து ரஷியப் படைகள் தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரையும் ரஷியப் படை ஆக்கிரமித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனில் நேற்று விடிய விடிய குண்டு சப்தம் கே…
-
- 0 replies
- 331 views
-
-
சர்வதேச அங்கீகாரத்திற்காக ஆப்கானின் இயற்கை வளங்களை பேரம் பேசும் தலிபான்கள்: அறிக்கை (ஏ.என்.ஐ) தலிபான்கள் இயற்கை வளங்களை சர்வதேச அங்கீகாரத்திற்கான பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்துவதாக தி ஃபிரான்டியர் போஸ்ட்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி தட்டுப்பாட்டினாலான பொருளாதாரத்தின் உடனடி சரிவைத் தடுக்கவே ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த தலிபான்கள் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் நான்காவது பெரிய இரும்புத் தாது இருப்பு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் ஆப்கான் புவியியல் ஆய்வு ஆகியவற்றின் தரவுகளின் படி, இரும்பு மற்றும் தாமிர இருப…
-
- 0 replies
- 216 views
-
-
போலந்து எல்லைக்கு அருகே... ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: போலந்து எச்சரிக்கை! போலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைன் இராணுவ தளத்தின் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல், நேட்டோவை அச்சுறுத்தும் முயற்சி என்று போலந்தின் துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரசிடாக்ஸ் தெரிவித்துள்ளார். மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் உறுப்பினரான போலந்தின் எல்லையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள யாவோரிவ் பயிற்சித் தளத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 35பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆத்திரமூட்டும் செயல் என்று பிரசிடாக்ஸ் கூறியுள்ளார். மேலும், ‘இந்த இராணுவத் தளம் போலந்து எல்லைக்கு மிக அருகாமையில் அமைந்திருந்தது…
-
- 0 replies
- 277 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், துருக்கியில் இன்று ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை தொடரும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அத்துடன், முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், பேச்சுவார்த்தை நன்றாக நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கைலோ போடோலியாக், வார இறுதி பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என்று கூறியதையடுத்து, …
-
- 0 replies
- 163 views
-
-
உக்ரைன் அகதிகளை,,, வேலைக்கு அமர்த்த, பிரித்தானிய நிறுவனங்கள் முயற்சி! உக்ரைனிய அகதிகள் பிரித்தானியாவிற்கு வரத் தொடங்கும் போது, முக்கிய பிரித்தானிய வணிக நிறுவனங்கள் அவர்களுக்கு வேலைகளை வழங்க வரிசையில் காத்து நிற்கின்றன. ரஷ்யாவின் படையெடுப்பால் வெளியேற்றப்பட்டவர்கள் பிரித்தானியாவிற்கு வருவதை எளிதாக்க 45க்கும் மேற்பட்ட பெரிய வணிகங்களின் குழு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், அசோஸ், லஷ் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான ரொபர்ட் வால்டர்ஸ் ஆகியவை இதில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் ஆகும். உக்ரைன் அகதிகள் நெருக்கடிக்கு அதன் பிரதிபலிப்பின் வேகம் மற்றும் அளவு குறித்து அரசாங்கம் விமர்சிக்கப்பட்டுள்ளது. எண்டர்பிரை…
-
- 3 replies
- 341 views
-
-
மரியண்ணா ஸ்ப்ரிங் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, 2020 இல் எடுக்கப்பட்ட யுக்ரேனிய குறும்படம் ஒன்றின் காட்சி, போர்சூழலில் எடுக்கப்பட்டதாக பரப்பப்பட்டது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 19 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பான பொய்ச்செய்திகளும் பலவிதமாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற பொய்ச்செய்திகளைத் தவிர்ப்பது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. போர் தொடங்கியதிலிருந்து, போலியான செய்திகளும், தவறான தகவல்களுடன் கூடிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஏராளமாக பரவி நம் செல்பேசிக…
-
- 0 replies
- 268 views
-
-
யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக குதிக்கிறதா சீனா? அமெரிக்கா புது எச்சரிக்கை 14 மார்ச் 2022, 09:52 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் சீனா உதவினால், கடுமையான "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது, என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீனாவிடம் உதவி கோரியுள்ளதாக பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம், ரஷ்யாவின் இந்த கோரிக்கை குறித்து தங்களு…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
உக்ரேன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த சீனாவிடம் இராணுவ உதவியை கோரியது ரஷ்யா ! சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளது. உக்ரேன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, வொஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், “ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கட்கிழமையன்று ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை ச…
-
- 3 replies
- 311 views
- 1 follower
-
-
உக்ரைனின்... நகர மேயர்கள், கடத்தப்பட்ட விவகாரம்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! உக்ரைனின் நகர மேயர்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக உக்ரைனிய அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்ல…
-
- 0 replies
- 202 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கு இடையேயான நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ரஷ்யாவின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பெஸ்கோவ், காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதிப்படுத்தினார். உக்ரைனின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைகைலோ பொடோலியாக் ரஷ்யாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மைகைலோ பொடோலியாக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், ‘ரஷ்யா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. ரஷ்யா இப்போது தன்னைச் சுற்றி நடப்பதை போதுமான அளவு உணரத் தொடங்கியுள…
-
- 0 replies
- 223 views
-
-
உக்ரேனில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை உக்ரேனின் கீவ் நகரின் ரஷ்ய படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அமெரிக்க ஊடகவியலாளர் என கீவ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறித்த ஊடகவியலாளர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/124093
-
- 0 replies
- 252 views
-
-
சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் மரணம் சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் ஆர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார். அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா இராணுவம் கடந்த 1967 ஆம் ஆண்டு கைது செய்தது. காயத்துடன் பிடிபட்ட சேகுவேரா, லா ஷிகுவேரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டிருந்தார். கம்யூனிஸ்ட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை…
-
- 3 replies
- 597 views
-
-
ரஷ்யாவுடனான மோதலில்... இதுவரையில் 1,300 படையினர், கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்ரைனிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரனின் கியிவ் பகுதியிலுள்ள இராணுவ விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சுமார் 13 ஆயிரம் பேர் நேற்று மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் துணை பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்க நேட்டோ நடவடிக்கை எ…
-
- 0 replies
- 225 views
-
-
தாம்... களமிறங்கினால், மூன்றாம் உலகப்போர் நிகழும் என... அமெரிக்கா எச்சரிக்கை உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஒன்றுபட்ட நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். ஆகவே உக்ரைனில் இருந…
-
- 3 replies
- 401 views
-
-
25 இலட்சம் பேர் உக்ரேனிலிருந்து அகதிகளாக வெளியேற்றம்..! ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் உக்ரேனில் இருந்து இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரேன் நாட்டையே சீர்குலையச் செய்துள்ளது. அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரால் உக்ரேனை விட்டு இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இது இரண்டாவ…
-
- 1 reply
- 330 views
-
-
ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரேனில் தொடர்ந்து 17-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரேனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய இராணுவத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வன்முறைக் கருத்துக்களை அனுமதித்த இன்ஸ்டாகிராம் செயலியின் சேவையை முடக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மார்ச் 14 ஆம் திகதி முதல் ரஷ்யாவின் சில பகுதிகளில் இந்த முடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் செயலியின் முக்கிய நிர்வாகியான ஆடம் மோசரி,’…
-
- 1 reply
- 227 views
-
-
செல்சியின் உரிமையாளர்... அப்ரமோவிச் உள்ளிட்ட, 7 பேரின் "£150 பில்லியன்" சொத்துக்கள் முடக்கப்பட்டன! அவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான நெருங்கிய தொடர்பை பேணும் பிரிட்டனின் புகழ் பெற்ற உதைப்பந்தாட்ட கழகமான செல்சி (Chelsea FC) அணியின் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச்சும் இணைக்கப்பட்டுள்ளார்.பிரித்தானிய அமைச்சரவையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தடைகள் பட்டியலில் கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் பிரதான பில்லியனர் என வர்ணிக்கப்படும், Chelsea FC உரிமையாளரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதோடு பயணத் தடையும் விதிக்கப்…
-
- 2 replies
- 340 views
-
-
தொடரும் மோதல் - ரஷ்யாவிற்கு பலத்த பாதிப்பு உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான மோதல் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரேனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரேனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் உக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரை 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,800-க்கு மேற்பட்ட உக்ரேன் இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்…
-
- 7 replies
- 629 views
-
-
107 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் நீரில் மூழ்கி காணாமல்போன 'எண்டூரன்ஸ்' என்ற கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1915 பெப்ரவரியில் ஆண்டு தென்னாபிரிக்காவின் நகரில் இருந்து புறப்பட்ட இந்த மரக்கப்பல் வெடல் கடலில் மூழ்கியதிலிருந்து, கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் தென்முனைப் பெருங்கடலின் ஒரு பகுதியான வெடல் கடலின் 9,868 அடி (3,008 மீட்டர்) ஆழத்தில் கப்பல் இவ்வாரம் கண்டுபிடிக்கப்பட்டதாக போக்லாந்து கடல்சார் பாரம்பரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/123849
-
- 1 reply
- 289 views
-
-
உக்ரைனில்... இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு, ரஷ்யா திட்டமிடுகிறது? அமெரிக்கா எச்சரிக்கை! உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆகையால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் மற்றும் உக்ரைனில் ரசாயன ஆயுத மேம்பாடு பற்றிய ரஷ்யாவின் கூற்றுகள் அபத்தமானவை. இந்த பொய்யான கூற்றுகள், மேற்கொண்டு அவர்கள் நடத்தவிருக்கும் காரணமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்த கூறும் வெளிப்படையான தந்திரம்’ என கூறினார். உயிரியல…
-
- 0 replies
- 244 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கிடையிலான மூன்றாவது கட்ட அமைதிப் பேச்சுவார்தையும் தோல்வியில் முடிந்தது! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது கட்டப் அமைதிப் பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைனில் போர் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், முக்கிய விவகாரங்க…
-
- 0 replies
- 150 views
-
-
அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷியா உக்ரைன், ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், ரஷியா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட…
-
- 8 replies
- 673 views
-
-
உக்ரைனுக்கு... போர் விமானங்களை அனுப்ப போலந்து திட்டம் – அமெரிக்கா மறுப்பு ! ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஊடக உக்ரைனுக்கு சோவியத் தயாரிப்பான Mig-29 போர் விமானங்கள் அனைத்தையும் அனுப்பும் போலந்தின் யோசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவுடன் போட்டியிடும் வான்வெளியில் பறப்பது முழு நேட்டோ கூட்டணிக்கும் கடுமையான கவலையை ஏற்படுத்தும் என கூறி பென்டகன் அதனை மறுத்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு இராணுவ ஜெட் விமானங்களை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு போலந்து அழைப்பு விடுத்தது. உக்ரேனிய விமானிகள் உண்மையில் போலந்திற்குள் எல்லையைத் தாண்டி அவர்களை மீண்டும் உக்ரைனுக்குள் பறக்கவிட முடியும் என அரசியல் …
-
- 1 reply
- 289 views
-
-
ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கியில் சந்திப்பு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியில் சந்திப்பார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய பின்னர் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாக அமையவுள்ளது. இந்த சந்திப்பு மார்ச் 10 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இராஜதந்திர மட்ட தகவல்கள் மார்ச் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் இதுவரை சாதகமாக முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 254 views
-