உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
48 மணித்தியாலத்துக்குள் ரஷ்யாவுடன் பேச்சுவார்தை நடத்த விரும்பும் உக்ரைன்! உக்ரைன் தனது எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பாக, ரஷ்யா மற்றும் முக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களை சந்திக்க உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா, துருப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கான முறையான கோரிக்கைகளை ரஷ்யா புறக்கணித்துள்ளது எனக் கூறியுள்ளார். ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து அறிந்துக் கொள்வதற்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சந்திப்பைக் கோருவதாக அவர் மேலும் கூறினார். உக்ரைனின் எல்லையில் சுமார் 100,000 வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது. ஆனால், சில …
-
- 0 replies
- 279 views
-
-
கட்டாய COVID-19 தடுப்பூசி மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகளை நிறுத்தக் கோரும் எதிர்ப்பாளர்கள் கனடா முழுவதும் பல்வேறு இடங்களில் மூன்றாவது வார இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிற்கு ஆதரவாக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. Freedom Convoy போராட்டம் ஜனவரி பிற்பகுதியில் ஒட்டாவாவிற்குள் நுழைந்தது. இதை தொடர்ந்து முக்கிய எல்லைக் கடப்புகளில் முற்றுகையிடப்பட்டதுடன், கனடா முழுவதும் இதேபோன்ற போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் கனடா மக்களிற்கு பரவலான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எட…
-
- 0 replies
- 300 views
-
-
மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர். வித்தியாசமான இரசிய சீன…
-
- 0 replies
- 354 views
-
-
மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்வு! மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 87 பேர் தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள இகோங்கோ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பேரிடர் நிவாரண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இக்கோங்கோவில் என்ன நடந்தது என்பது பற்றிய விபரங்களை இன்னும் சேகரித்து வருவதாக இந்த வார தொடக்கத்தில் அது கூறியது. எனினும், இந்த புயலால் வீதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. …
-
- 0 replies
- 181 views
-
-
கடலுக்கு செல்லும் தனது அணுகலை ரஷ்யா தடுத்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு! அடுத்த வாரம் கடற்படை பயிற்சிக்கு ரஷ்யா தயாராகி வரும் நிலையில், கடலுக்கு செல்லும் தனது அணுகலை ரஷ்யா தடுத்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ‘அசோவ் கடல் முற்றிலும் தடுக்கப்பட்டது மற்றும் கருங்கடல் கிட்டத்தட்ட முழுமையாக ரஷ்ய படைகளால் துண்டிக்கப்பட்டது’ என கூறினார். பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தங்களில் ஐரோப்பா மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டதாக பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார். உக்ரைனின் தெற்கே உள்ள கருங்கடல் மற்…
-
- 0 replies
- 259 views
-
-
பதற்றங்களுக்கு மத்தியில்... ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்! பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் பிப்ரவரி …
-
- 0 replies
- 194 views
-
-
சூரியப் புயலில் சிக்கி எரிந்தன ஸ்பேஸ்எக்ஸின் 40 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியிருந்த 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயல் தாக்குதலால் புவி வட்டப்பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்துள்ளன. இது குறித்து ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது, “கடந்த வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் வெள்ளிக்கிழமையன்று சூரிய காந்த புயலில் சிக்கி வளிமண்டலத்தை வெப்பமாக்கியது. இந்நிலையில், அப்போது அங்கு எதிர்பார்த்ததை விட மிகவும் அடர்த்தியான வெப்ப நிலை காணப்பட்டதாக” , ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக்கோள்களில் 40 செயற்கை…
-
- 0 replies
- 296 views
-
-
சவுதிஅரேபிய விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் -இலங்கையர்கள் உள்ளிட்ட 12 பேர் காயம் சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் வியாழன் அன்று வான் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் துண்டுகளால் 12 பேர் காயமடைந்தனர். ரியாத் - எல்லைக்கு அருகில் உள்ள யேமன் கிளர்ச்சியாளர்களின் விமான நிலையத்தை குறிவைத்து சவுதி அரேபியப் படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை ஆகாயத்தில் வெடிக்கச் செய்ததில், விமானதாக்குதலின் போது குப்பைகள் விழுந்ததில் இவ்வாறு காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நண்பகல் நேரத்தில் ட்ரோன் தாக்குதலில் இருந்து துண்டுகள் விமான நிலைய மைதானத்திற்குள் விழுந்து சில கண்ணாடி முகப்புகள…
-
- 0 replies
- 147 views
-
-
உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம் காரணமாக அடுத்த சில நாட்கள் "மிகவும் ஆபத்தான தருணம்" என்று பிரித்தானிய போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளை மீள அழைக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதிக்கு போரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீதான நேட்டோ நட்பு நாடுகளுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரஸ்ஸல்ஸ் மற்றும் போலந்திற்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் விஜயம் செய்துள்ளார். போலந்து பிரதமர் Mateusz Morawiecki உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வார்சாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போரிஸ் ஜோன்சன், பிரித்தானியா நேட்டோ நட்பு நாடுகளுடன் தோளோடு தோள் நிற்கிறது என தெரிவித்துள்ளார். அடுத்த சி…
-
- 3 replies
- 329 views
-
-
முடக்கப்பட்ட நிதியின் பாதித் தொகையை... ஆப்கானின், மனிதாபிமான உதவிகளுக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்கள் நிதியின் பாதித் தொகையை மனிதாபிமான நிவாரணத்துக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மீதித் தொகையை 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நிவாரணத்துக்கும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் ஆப்கானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, அந்நாட்டின் வெளிநாட்டு நிதி முடக்கப்பட்டது. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்க வங்கிகளில் உள்ளது. முந்தைய ஆப்கான் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கான நிதி சர்வதேச சமுதாயத்திடம் …
-
- 0 replies
- 142 views
-
-
லொறி ஓட்டுநர்களின் முற்றுகையை கைவிடுமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு! அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 19:00 மணிக்கு அமுலுக்கு வந்தது. ஒன்ராறியோவின் வின்ட்சரை மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நகருடன் இணைக்கும் அம்பாசிடர் பாலம் ஐந்து நாட்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான லொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள் மற்ற எல்லைக் கடக்கும் இடங்களிலும், ஒட்டாவாவிலும் நடந்து வருகின்றன. வின்ட்சர் நகரம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியா…
-
- 0 replies
- 173 views
-
-
பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் ஆரம்பம்: புடினை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்தை! உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார். மாஸ்கோவில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த பேச்சுவார்தையின் போது, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தை தணிப்பது குறித்து விரிவாக பேச்சு வார்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்தையின் பின்னர் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ‘எனது கண்ணோட்டத்தின்படி பேச்சுவார்த்தை அவசியம். ஏனெனில் அது மட்டுமே ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பான, ஸ்திரதன்மையான…
-
- 1 reply
- 368 views
- 1 follower
-
-
உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர் - தொழில்நுட்ப அதிசயம் பல்லப் கோஷ் அறிவியல் நிருபர், லாசனே ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, புதிய தொழில்நுட்பத்தால் நடப்பது சாத்தியமான மைக்கேல் ரோக்கட்டி தண்டுவடத்தின் இடையே வெட்டுப்பட்டு துண்டாகிப் போனதால் பாதிக்கப்பட்டு, செயலற்றுப் போன ஒருவர், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டு, உடலுக்குள் உட்பொருத்தப்பட்ட கருவியால் மீண்டும் நடப்பது சாத்தியமாகியுள்ளது. வெட்டுப்பட்ட மு…
-
- 1 reply
- 363 views
- 1 follower
-
-
#BoycottHyundai #Boycottkia ஹுண்டாய் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் ஏன் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகின்றன? 7 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,YURIKO NAKAO/GETTY IMAGES ஹுண்டாய் பாகிஸ்தான் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பதிவேற்றப்பட்ட இடுகையில், காஷ்மீரின் 'விடுதலை'க்கு அழைப்பு விடுக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றதால், மிகப்பெரிய உலகளாவிய கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. @hyundaiPakistanOfficial என்ற அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பாகிஸ்தானின் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை ஆதரித்து, "சுதந்திரத்திற்கான போராட்டம்" என்று அழைக்கும் இடுகை பகிரப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் இட…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
'மொசாத்' இஸ்ரேலிய உளவுப்படை: இரானிய உளவு அமைப்புகளில் ஊடுருவிய அதிகாரிகள் - அதிர வைக்கும் தகவல்கள் ஜியார் கோல் பிபிசி பெர்சிய சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இரானின் விஞ்ஞானி மொசெனை மொசாத்தான் கொலை செய்ததாக நம்பப்படுகிறது 2020ஆம் ஆண்டு இரானின் முக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்ட பிறகு அவர், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கியால் கொல்லப்பட்டதாக தெரிய வந்தது. இந்த மாதிரியாக ஓடும் காரில் வேறு யாருக்கும் உயிர் சேதம் வராமல் இலக்கு வைக்கப்பட்ட நபர் மட்டும் துல்லியமாக கொல்லப்பட…
-
- 1 reply
- 525 views
- 1 follower
-
-
உலகமே உற்று நோக்கும் மொராக்கோ சம்பவம்: சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள்! வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் கிணற்றின் அடிவாரத்தில் சிக்கிய ஐந்து வயது சிறுவனை மீட்கும் பணிகளை, மீட்புப் பணியாளர்கள் நுட்பமான நடவடிக்கைகளை கொண்டு மீட்க முயற்சித்து வருகின்றனர். ஐந்து வயது சிறுவனான ரேயான், செவ்வாய்கிழமை வடக்கு மலை நகரமான பாப் பெர்டில் உள்ள கிணற்றில் விழுந்தார். இதனைத்தொடர்ந்து இச்சிறுவனை மீட்கும் பணியினை மீட்புப் பணியாளர்கள் முடுக்கிவிட்டுள்ளன. ‘எனது மகன் பாதுகாப்பாக திரும்புவதற்காக மொராக்கோவாசிகளை பிரார்த்தனை செய்யும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று உள்ளூர் ஊடகங்களில் காட்டப்பட்ட காட்சிகளில் ரேயனின் கலக்கமடைந்த தாய் கூறினார். சிறுவன் இன்னும் உயிருடன் இருப்…
-
- 3 replies
- 536 views
- 1 follower
-
-
கிரிப்டோகரன்சியை திருடி ஏவுகணை திட்டத்திற்கு நிதி சேகரித்த வட கொரியா 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS சைபர் தாக்குதல்கள் மூலம் வட கொரியா மில்லியன் கணக்கிலான கிரிப்டோகரன்சியை திருடி, தனது ஏவுகணை திட்டத்திற்கு அதை பயன்படுத்தியதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சைபர்-தாக்குதல்கள் மூலம் 50 மில்லியன் டாலர்களுக்கும் (37 மில்லியன் பவுண்ட்) அதிகமான டிஜிட்டல் சொத்துக்களை திருடியதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் வட கொரியாவின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு "முக்கியமான வருவாய் ஆதாரம்" என்று அவர்கள் தெரிவித்து…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
மியான்மர் ராணுவம்: சொந்த மக்களையே வேட்டையாடும் கொடூரம் - இத்தனை பலம் பெற்றது எப்படி? 5 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மியான்மர் ராணுவம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களைக் கொன்றதன் மூலம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஓராண்டுக்கு முன்னர் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ ச்சீ அரசாங்கத்தை கவிழ்த்ததில் இருந்து, மியான்மரின் ராணுவம் - தாட்மடா என்று அழைக்கப்படுகிறது. - கொடூரமான அடக்குமுறை மூலம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களை கொன்று உலகையே அந்நாட்டு ராணுவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மியான்மர்…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
கனடா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தடைகளை எதிர்த்து போராட்டம் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோவிலும் நூறுகணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போது 1000-க்கு மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனர்…
-
- 0 replies
- 203 views
-
-
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நிவாரணத்தை ஈரான் வரவேற்கிறது! 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சிவில் அணுசக்தி திட்டத்தின் மீதான பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் அறிவிப்பு நல்லது என ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்வது மட்டும் போதுமானதாக அமையாது என ஈரான் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 மே அன்று ட்ரம்ப் அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரஷ்ய, சீன மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் ஈரானி…
-
- 0 replies
- 352 views
-
-
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் படைகள் எப்படி தங்களை வலுப்படுத்திக் கொண்டன உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மூன்று ஆண்டுகளில் உக்ரைன் ராணுவ துருப்புகளின் எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்துவது மற்றும் அவர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். உக்ரைனின் ராணுவம் மற்றும் ஆயுதங்கள் ரஷ்யாவின் நிலையோடு ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. தற்போது எல்லைப் பகுதியில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய ராணுவம் படையெடுப்பை மேற்கொண்டால் உக்ரைன் ராணுவத்தினரால் கணிசமாக ரஷ்ய ராணுவத்தினரை எதிர்க்க முடியும். அதே நேரத்தில் அதிகப்படியான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் என்று துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர். …
-
- 0 replies
- 340 views
-
-
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். சிரியாவில் அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை இரவு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், வடமேற்கு …
-
- 5 replies
- 430 views
-
-
யுக்ரைன் பதற்றம்: “ரஷ்யாவை போரிடும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது” - புதின் குற்றச்சாட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மாஸ்கோவில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, புதின் இவ்வாறு கூறியுள்ளார். யுக்ரைனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார். பல வாரங்களாக நிலவும் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி குறித்த தனது முதல் கருத்தைத் தெரிவித்துள்ள புதின், ரஷ்யா மீது அதிக தடைகளை விதிக்க ஒரு சந்தர்ப்பமாக, இந்த நெருக்கடியை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள் என்று தெரிவித…
-
- 5 replies
- 494 views
- 1 follower
-
-
கனடா எல்லையில் குஜராத்திகள் இறந்தது எப்படி? போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல் ஹோல்லி ஹோண்டரெச் பிபிசி செய்திகள், வாஷிங்டன் 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC GUJARATI படக்குறிப்பு, இந்தக் குடும்பம் 11 மணிநேரம் உறைபனி குளிரில் நடந்திருக்கலாம் என்கிறது கனடா போலீஸ் கனடா-அமெரிக்க எல்லையில் இருந்து சில அடி தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு இந்தியர்களின் மரணத்தை அந்த நாடுகளுக்குள் ஆள் கடத்திக் கொண்டு வரும் செயல்பாடுடன் தொடர்புடையது என்று கனடிய அதிகாரிகள் நம்புகின்றனர். கனடாவின் மனிடோபாவில் கடும் குளிரின் காரணமாக ஜெகதீஷ் படேல் (39), வைஷைல்பென் படேல்…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஹிட்லரின் வதை முகாமில் நாஜி வணக்கம் செலுத்திய பெண்ணுக்கு அபராதம்! ஹிட்லரின் வதை முகாமான ஆஷ்விட்ஸ் பிர்கெனாவ் வதை முகாம் இருந்த இடத்தில், நாஜி வணக்கம் செலுத்தியதற்காக நெதர்லாந்து பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டச்சு சுற்றுலாப் பயணியான 29 வயதான பெண், நாஜி வணக்கம் செலுத்தியதற்காக போலந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பெயர் குறிப்பிடப்படாத பெண், Arbeit Macht Frei (Work Sets You Free) நுழைவாயிலின் முன் சைகை செய்தார். அப்போது அதை அவரது கணவர புகைப்படமெடுத்தார். போலந்தில் நாஜி பிரச்சாரத்தை ஊக்குவித்ததற்காக வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு அங்க…
-
- 4 replies
- 745 views
-