உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 40 சதவீத வரிகளை 'நீக்கவதற்கும் குறைப்பதற்கும்' சீனா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எந்த வித மேற்கொண்ட தகவல்களும் இல்லாமல் டிரம்ப் இதனை டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த முடிவு உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க - சீன வர்த்தக போரால் தடுமாற்றத்தில் இருந்த கார் உற்பத்தித்துறை இதை பெரிதும் வரவேற்கும். …
-
- 0 replies
- 695 views
-
-
டியாகோ ஆர்குடாஸ் ஒர்டிஸ் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images சில நிமிடங்கள் பெய்த மழைக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலைமையும், சில மணிநேரங்களுக்கு மழை பெய்தால் வீடே வெள்ளத்தில் தத…
-
- 0 replies
- 661 views
-
-
அமெரிக்க வான் தாக்குதலில் தலிபான்களின் சிரேஸ்ட தலைவர் பலி… December 3, 2018 அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதல் ஒன்றின் போது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் அமைப்பின் சிரேஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று வழிநடத்தி வந்தவரும், ஹெல்மண்ட் மாகாணத்தின் தலிபான் மாற்று நிர்வாகத்தின் தலைவராகவும் இருந்தவருமான முல்லா அப்துல் மனன் என்பவரே சனிக்கிழமை இரவு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செல்வாக்கு, அனுபவம், ஈர்ப்பு மிக்கவராக இருந்த அவரது மறைவு தலிபான்களுக்கு இழப்பாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக, அரச படைகளின் மீதான தாக்குதல் அதிகர…
-
- 0 replies
- 425 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலகுவாக குடியேறும் வகையில் புதிய விசா நடைமுறை! அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெற்றோர்களை அந்நாட்டுக்குள் அழைப்பதற்கான புதிய விசா நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. தற்காலிக பெற்றோர் விசா அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விசா தொடர்பான சட்டமூலமான Migration Amendments (Family Violence and Other Measures) Bill இனை கடந்த 2016ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த லிபரல் முன்மொழிந்திருந்த நிலையில் தற்போது குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களைச் சந்தித்துக்கொள்ள இப்புதிய நடைமுறை விசா வழியேற்படுத்தும் என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் குறிப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம் நடக்க இருக்கிறது. அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக நடைபெறும் போராட்டத்தில் போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இப்போது நிலவும் அமைதியற்ற நிலையை எதிர்கொள்ள அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என்கிறார் அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர். படத்தின் காப்புரிமை Getty Images ஏன் மோதல்கள்? எரிபொருள் விலை உயர்வ…
-
- 1 reply
- 551 views
-
-
ஜெர்மனிய அதிபருடன், மோடி சந்திப்பு! ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் மோடி ஜெர்மன் ஜனாதிபதி அஞ்சலா மேர்கலை இன்று (சனிக்கிழமை) சந்தித்து பேசினார். அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியை அர்ஜென்டினாவின் ஜனாதிபதி மௌரிசியோ மக்ரி இன்று காலை வரவேற்றார். அதன்பின் அவருடன் நடந்த ஆலோசனையில் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், விண்வெளி, ராணுவம், எண்ணெய் மற்றும் வாயு மற்றும் …
-
- 0 replies
- 526 views
-
-
இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரியது ஜேர்மன் அரசாங்கம்! ஜேர்மன் தலைநகர் பேர்லினில் இந்த வார ஆரம்பத்தில் நடைபெற்ற ஜேர்மன் இஸ்லாமிய மாநாட்டில் உணவு பறிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். குறித்த மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட வொசேஜுகளை பரிமாறியதற்காக ஜேர்மன் உள்விவகார துறை அமைச்சகம் மன்னிப்புக் கோரியுள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்பதை மனதில் வைத்தே உணவுத் தெரிவுகள் அமைந்ததாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த இஸ்லாமிய மாநாட்டில் பரிமாறப்பட்ட சொசேஜுகளில் பன்றி இறைச்சி மற்றும் ரத்தம் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த விடயம் இஸ்லாமிய மத உணர்வுக…
-
- 0 replies
- 584 views
-
-
ரஷ்ய ஆண்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு உக்ரேன் தடை மொஸ்கோ உக்ரேன் மீது படையெடுப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து 16 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட ரஷ்ய ஆண்கள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு உக்ரேன் தடை விதித்துள்ளது. ரஷ்யர்களை தமது நாட்டில் தனிப் படைகள் உருவாக்குவதை தடுக்கும் நோக்குடன் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய பீரங்கிகள் தமது நாட்டின் எல்லையில் முற்றுகையிட்டுள்ளதற்கான ஆதாரங்கள் தம்மிடமுள்ளதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் மொஸ்கோவால் கைப்பற்றப்பட்ட கிரைமியா தொடர்பாக இரண்டு நாடுகளுக்குமிடையே நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த மோ…
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் சீரற்ற காலநிலையால் குறித்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீ அங்கு நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று ஆகியவற்றால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் குறித்த தீயால் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீ பரவிவரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள…
-
- 0 replies
- 485 views
-
-
புட்டினுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ளார். November 30, 2018 உக்ரைன் நாட்டு கப்பல்களை ரஸ்யா கைப்பற்றிய பிரச்சனையை மையப்படுத்தி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார் . உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஸ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அண்மையில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஸ்ய ராணுவம் கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ரஸ்யாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உக்ரைனுக்கு அதிக ஆதரவு வழங்குமாறு ஐரோப்பிய நாடுகளை வல…
-
- 0 replies
- 399 views
-
-
சீனாவிற்கு எதிராக ஜப்பானை களமிறக்கும் அமெரிக்கா.. ஆசியாவில் உருவாகும் புது எதிரிகள்.. பதற்றம்! மெரிக்காவுடன் ஜப்பான் பாதுகாப்பு துறை செய்ய உள்ள போர் விமான ஒப்பந்தம் சீனாவை அச்சமடைய வைத்து இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் அமைதி பாதைக்கு திரும்பியது. லிட்டில் பாய், பேட் பாய் என்ற இரண்டு அணு குண்டுகளை தாங்கி எழுந்த ஜப்பான் வேகமாக உலகின் நம்பர் 2 நாடாக மாறியது. இப்போது ஜப்பானின் வளர்ச்சி குறைந்து 3வது இடத்திற்கு சென்றுள்ளது. மாறாக சீனா ஆசியாவின் வலுவான நாடாக மாறியுள்ளது.சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் வெளிப்படையாக பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் சீனாவின் தெற்கு கடல் பகுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த…
-
- 0 replies
- 508 views
-
-
விமானம் கட்டடத்துடன் மோதி விபத்து Share சுவீடனிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விமானமொன்று கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தின் போது விமானத்தில் 179 பயணிகளும் 6 விமானப் பணிப்பெண்களும் இருந்துள்ளனர். விமானம் டெர்மினில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டதைத் தொடர்ந்து விமானி சற்று வேகமான விமானத்தை இயக்க ஆரம்பித்தார். இதன்போது விமானம் ஓடுபதையை விட்டு சற்று விலகி ஓட ஆரம்பிக்க அருகில் இருந்த கட்டடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் குலுங்கியதுடன் அதிர்ஷ்டவசமாக விமானி அந்த விமானத்தை உடனடியாக கட்டுப் பாட…
-
- 0 replies
- 531 views
-
-
மலேசியா இந்து ஆலயத்தில் முஸ்லிம் காடையர்கள் வெறியாட்டம்! மலேசியா தலைநகர் கோலாலம்பூர் பூச்சோங்கில் 140 வருட பழமையான மாரியம்மன் கோவிலுக்குள் இன்று அதிகாலை 5 மணிக்கு முஸ்லிம் காடையர் குழு ஒன்று உட்புகுந்துள்ளது. Malaysia Hindu Temple Violence கோவிலின் உள்ளே நுழைந்த குழுவினர் அங்கிருந்த விக்கிரகங்களை அடித்து உடைத்தனர். அம்மன் விக்கிரகம் மீது சில காடையர்கள் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்தனர். இதன் பின்னர் அங்கு வந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஓட ஓட அடித்து விரட்டினர். இதனால் அங்கு கலவரம் உண்டாகியது. இந்த கலவரத்தில் சிக்கி பல தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மதவெறியை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் தொடர்பில் 17 பேர…
-
- 0 replies
- 866 views
-
-
மலேசிய விமான நிலையத்தில் 7 மாதங்கள் தங்கியிருந்த சிரிய அகதி கனடா அனுப்பி வைப்பு November 29, 2018 விசா காலாவதியாகிய நிலையில் மலேசிய விமான நிலையத்தில் தங்கியிருந்த சிரிய அகதி ஒருவர் 7 மாதங்களுக்குப் பின்னர் கனடா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிரியாவைச் சேர்ந்த 37 வயதான ஹசன் அல் கோடார் என்பவர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்து அங்கிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முயன்ற போது கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர். மேலும் ஹசனின் விசா காலம் முடிந்து விட்டதாகத் தெரிவித்து அவருக்கு அனுமதி மறுத்ததனைத் தொடர்ந்து அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்குப் பின்னர் இந்த வாரம் அவர் கனடா சென்றடைந்து…
-
- 0 replies
- 499 views
-
-
காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனம் மீது கொடூர தாக்குதல் ஆப்கான் தலைநகர் காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனக் கட்டடத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கட்டடத்திற்கு வெளியே நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் கட்டடத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக, ஆப்கான் உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பல வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவத…
-
- 0 replies
- 437 views
-
-
வெள்ள நீரில் மூழ்கியது சிட்னி: விமானச் சேவைகள் ரத்து அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் பெய்த அடை மழையை தொடர்ந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிட்னி நகரில் இன்று (புதன்கிழமை) காலை 100 மில்லிமீற்றரும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மீட்பு உதவிகள் கோரி பல அழைப்புகள் வந்த வண்ணமுள்ளதாகவும், அதன்படி பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிட்னியில் கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக…
-
- 0 replies
- 348 views
-
-
யுக்ரேன் - ரஷ்யா மோதல்: பிடிப்பட்டவர்கள் ரஷ்ய தொலைக்காட்சியில் வாக்குமூலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவால் இணைப்பட்டுள்ள க்ரைமியாவின் கடற்கரை பகுதியில், ரஷ்யாவால் சுடப்பட்டு பின் கைப்பற்றப்பட்ட யுக்ரேன் கப்பல்களில் இருந்தவர்களின் வாக்குமூலத்தை ரஷிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. பிடிப்பட்டவர்களில் ஒருவரான வொலோயிமிர் லிசோவ்ய…
-
- 1 reply
- 703 views
-
-
மிச்சேல் ராபர்ட்ஸ் ஹெல்த் ஆசிரியர், பிபிசி நியூஸ் ஆன்லைn சீன விஞ்ஞானி ஒருவர்உலகிலேயே முதல் முறையாக ஜீன் எடிட்டிங் செய்யப்பட்ட குழந்தைகள் பிறப்பதற்கு தான் உதவியதாகக் கூறியது குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு செய்யப்படுவது சாத்தியமா என்றும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜீன் எடிட்டிங் என்பதை சுருக்கமாக கருத்தரித்த முட்டையின் மரபணுக்களில் சில மாற்றங்களை செய்யும் முறை என குறிப்பிடலாம். சீன விஞ்ஞானியான ஹி ஜியான்குய், சில வாரங்களுக்கு முன்பு பிறந்த பெண் இரட்டையர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக கருதரித்த முட்டையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். …
-
- 0 replies
- 439 views
-
-
கடந்த மாதம் விபத்திற்குள்ளாகி 189 பேர் பலியாகிய லயன் ஏர் விமானம் பறக்க தகுதியின்றி இருந்ததாகவும், அதை நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இந்தோனீசிய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்தது. முந்தைய விமானங்களில் தொழில்நுட்ப பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 737 போயிங் விமானத்தின் புதிய பதிப்பான 737 மேகஸ் வ…
-
- 0 replies
- 468 views
-
-
ஆயிரத்துக்கும் அதிகமான போலி எண்கவுன்ட்டர் சர்ச்சையில் மணிப்பூர் மாநிலம் - நீதி கேட்டு காத்திருக்கும் மக்கள்
-
- 0 replies
- 460 views
-
-
இன்சைட் விண்கலம் தரை இறங்கியது hare நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு ‘நீர்’ ஆதாரத்தை கண்டறிய ‘யத்பைண்டர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. 2003ஆம் ஆண்டில் ‘பீகிள் 2’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. 2004ஆம் ஆண்டில் ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது அங்கு தரை இறங்கி நீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், செ…
-
- 0 replies
- 708 views
-
-
அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் – 1600 விமானங்கள் ரத்து… November 26, 2018 அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக இன்று 1600 விமானங்களின் பறப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளநிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருவதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீதிககளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்க…
-
- 0 replies
- 571 views
-
-
நியுஸிலாந்தில் 145 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் உயிரிழந்த மர்மம்! நியுஸிலாந்தின் தெற்காக உள்ள தொலைவு தீவொன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமையை உலங்கு வானூர்தியின் விமானியொருவர் ஔிப்பதிவு செய்துள்ளார். தெற்கு பிராந்தியத்தில் சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டெவாட் என்ற தீவிலேயே பல உயிரிழந்த திமிங்கிலங்கள் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரொய்ட்டர் செய்திச் சேவை இன்று (திங்கட்கிழமை) இந்த காணொளி பதிவை வௌியிட்டிருந்தது. தீவின் இரண்டு இடங்களில் இது மாதிரியான திமிங்கிலங்கள் மர்மமாக இறந்த நிலையில் மிதந்ததாக கடல்வாழ் உயிரின பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்கள அதிகாரிகள் அவற்றை கண்டுபிடிப்பதற்கு …
-
- 0 replies
- 387 views
-
-
தீவிரவாதிகளின் தாக்குதலில் 47 அமெரிக்க ஆதரவு படையினர் பலி சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சீரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்திலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்றுவதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் மேற்கொண்டு தீவிரவாதிகளை கொன்று வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்கின்றனர். அந்த …
-
- 0 replies
- 567 views
-
-
யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஸ்யா கைப்பற்றியுள்ளது November 26, 2018 1 Min Read கிரிமியா பிராந்தியத்தில் தரித்து நின்ற யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஸ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர். ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் இந்த தாக்தலை மேற்கொண்டு யுக்ரேனின் கடற்படை கப்பல்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட கப்பல்களில் இருந்த அதிகளவான யுக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்குமிடையழலான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றின் மீது …
-
- 2 replies
- 1.3k views
-