Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கடந்த 200 ஆண்டுகளில் முதல்முறையாக: 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வலது) மற்றும் அவரது மூத்த மகனும் புதிய மன்னராக பதவியேற்க உள்ளவருமான நருஹிட்டோ. - படம் : ஏபி ‘‘வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்’’ என்று பிரதமர் ஷின்சோ அபே நேற்று அறிவித்தார். ஜப்பானில் மன்னர் குடும்பத்தினருக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய மன்னராக அகிஹிட்டோ (83) பதவி வகிக்கிறார். இவருடைய மனைவி ராணி மிச்சிகோ. இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்னருக்குரிய கடமைகளைச் சரிவர செய்ய முடியவில்லை. அதனால் பதவி வில…

  2. ட்ரம்புக்கு ஒபாமா கூறிய மில்லியன் டாலர் அட்வைஸ்! அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒபாமா, இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவர், தன் மனைவி மிஷெல் ஒபாமாவுடன் இணைந்து நடத்தும் ஒபாமா அறக்கட்டளைத் தொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள தலைநகர் டெல்லி வந்த ஒபாமா, தனியார் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாடினார். அப்போது பேசிய ஒபாமா, ‘சமூக வலைதளங்களை அடிக்கடி பயன்படுத்துபவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ட்விட்டரில் எ…

  3. பாகிஸ்தானில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு. வீடில்லா ஏழைகளை பெய்ஜிங்கிலிருந்து அப்புறத்தும் சீனா. ராணுவ பகுதியில் தஞ்சமடைந்து சின்னாபின்னமான நைஜீரிய குடும்பத்தின் சோகக்கதை உள்ளிட்ட செய்திகளை காணலாம்.

  4. 'பயங்கரவாதத்தில் கவனம் செலுத்துங்கள்': பிரிட்டன் பிரதமரை சாடிய டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் பகிர்ந்தததை பிரிட்டன் பிரதமர் விமர்சித்ததையடுத்து, பிரிட்டனில் பயங்கரவாதம் மீது கவனம் செலுத்துங்கள் என்று தெரீசா மேவிடம் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள …

  5. காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS 44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா கடற்படை தெரிவித்துள்ளது. "தீவிர முயற்சிக்கு பின்னரும், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை" என கடற்படை…

  6. ஈரானில் கடுமையான நிலநடுக்கம் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கும் கெர்மான் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக, கெர்மான் நகரில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாகவும் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் இந்த அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால், கடுமையான சேதம் ஏற்…

  7. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அதிபர் டிரம்ப் செய்தது தவறு : பிரிட்டன் பிரதமர் படத்தின் காப்புரிமைREUTERS Image captionஅதிபர் டிரம்ப் செய்தது தவறு : பிரிட்டன் பிரதமர் ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந…

  8. சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எதிர்ப்பு காணொளிகளை, தமது டிவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப் மறுபகிர்வு செய்ததால், அமெரிக்கா - பிரிட்டன் எதிர்கால உறவு குறித்து கவலைகள் போர்க்குற்ற தண்டனை உறுதி செய்யப்பட்டதும் போஸ்னிய குரேஷிய தளபதி தற்கொலை செய்தது எப்படி? சர்வதேச நீதிமன்றத்தில் நிகழ்ந்த பரபரப்புக் காட்சிகள். டச்சு - பிரிட்டிஷ் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நில பேரத்தை, திருவிழா நடத்திக் கொண்டாடும் இந்தோனீஷியாவின் ரூன் தீவு மக்கள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  9. 'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்': அமெரிக்கா எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையா…

  10. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 'வட கொரியாவை அமெரிக்கா மொத்தமாக அழித்துவிடும்' இருநாடுகளுக்கு இடையே போர் வெடித்தால், வட கொரியாவை அமெரிக்கா மொத்தமாக அழித்துவிடும் என்று கிம் ஜோங் உன்னிற்கு ஐ.நா சபைக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே எச்சரிக்கை விடுத்துள்ளார். அர்ஜென்டினா நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு அர்ஜென்டினா வரலாற்றில், முதன்முறையாக அங்குள்ள நீதிமன்றம் ஒன்று மிகப்பெரிய மனித உரிமை வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குடிமக்களில் இருவர் உட்பட 52 ராணுவ படையினர் தண்டனைகளை எதிர்கொள்கின்றனர். குடியேறிகள…

  11. யுத்த குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்ட்ட பொஸ்னிய தளபதி நீதிமன்றத்தி;ல் நஞ்சருந்தி தற்கொலை யுத்தகுற்றங்களிற்காக தண்டனையை அனுபவித்த வந்த பொஸ்னிய குரோடிய படைத்தளபதி ஸ்லோபடான் பிரால்ஜக் நீதிமன்றத்தில் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை இரத்துச்செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை ஐக்கியநாடுகள் நீதிபதிகள் நிராகரித்த சில நிமிடங்களில் அவர் விசமருந்தியுள்ளார். ஹேக்கில் உள்ள மருத்துவமனையில் அவர் மரணித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பொஸ்னிய முஸ்லீம்களிற்கு எதிரான யுத்த குற்றங்களிற்காக குறிப்பிட்ட தளபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/…

  12. வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம்-அவசரமாகக் கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மியான்மரைத் தொடர்ந்து வங்கதேசம் செல்கிறார் போப் ஃப்ரான்சிஸ் - அங்கு எல்லை முகாம்களில் தவிப்புடன் காத்திருக்கும் ரோஹிஞ்சா பெண்கள் சிலருடன் பிபிசி சந்திப்பு ஒரு பாலினத்தை குற்றமாக்கும் எகிப்து அரசு திட்டத்தால், தாயகத்தை விட்டு ஜெர்மனியில் அகதியாக தஞ்சம் அடைந்த பெண்ணின் துயரத்தை விளக்கும் சிறப்புச் செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  13. மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPRESS EYE Image captionவடகொரியா இந்த ஆண்டு ஜூலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தியை அமெரிக்க …

  14. அலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது? உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்கள் நாட்டில் புகுந்த ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்ப முடிவு எடுத்திருக்கிறது வங்கதேசம். இது தொடர்பாக மியான்மருடன் வங்கதேசம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், பெரும் இன்னல்களுக்கு ஆளாகி அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், மீண்டும் மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படுவது மிகவும் கொடுமையானது. மியான்மரின் ராக்கைன் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களில் மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கியாக்களைக் கடுமையாக ஒடுக்கியதுடன் அவர்களுடைய வ…

  15. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விடுதலையான இளவரசர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமிதெப் பின் அப்துல்லா ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக செளதி அரேபியாவில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய இளவரசரான மிதெப் பின் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு தொகையை கொடுக்கும் உடன்பாட்டுக்கு அவர் ஒப்புக்கொண்டதால் விடுவிக்கப்பட்டதாக செளதி அதிகாரிகள் கூறுகின்றனர். உலகளாவிய அச்சுறுத்தல் படத்தின் காப்புரிமைPRESS EYE வடகொரியா புதிய பாலிஸ்டி…

  16. பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய சவுதி : யூ டியூப் செனலில் வைரலாகும் ரோபோவின் பேட்டி ஹாங்காங் நிறுவனம் வடிவமைத்துள்ள சோபியா என்று பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரமரியாக பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன…

  17. பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் ரஷ்ய தலையீடா? ஃபேஸ்புக், ட்விட்டரிடம் விசாரணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த 2016-இல் நடைபெற்ற, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான 'ப்ரெக்ஸிட்' கருத்து வாக்கெடுப்பில் செல்வாக்கு செலுத்தும் வகையில் ரஷ்யா மறைமுகமாக சமூக வலைத்தளப் பிரசாரத்தில் ஈடுபட்டதா என்பது குறித்த தகவல்களை பிரிட்டன் அரசுடன் பகிர்ந்துகொள்ள ஃபேஸ்புக் …

  18. பிரிட்டன் சந்தித்த மிகப்பெரிய பின்னடைவு.. எப்படி மீளப்போகிறது..? உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பட்டியலில் பிரிட்டன் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இருந்து பலவருடங்களுக்குப் பின் வெளியேறியுள்ளது. இது இந்நாட்டின் நாணய மற்றும் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு வித்திட்ட ஐரோப்பா யூனியன் நாடுகளில் இருந்துவெளியேறியதால் ஏற்பட்ட மாற்றங்கள். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிலிப் ஹாம்மாட் பிரிட்டன…

  19. மியான்மர் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சியை சந்தித்தார் போப் ஃப்ரான்ஸிஸ் - துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை ரோஹிஞ்சாக்கள் என அழைப்பதைத் தவிர்த்தார் டமாஸ்கஸ் அருகே அரசுப் படையினர் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் பலி - உள்நாட்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஜெனீவாவில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது ஐ.நா. தற்கொலை குண்டு தாக்குதலுக்காக மட்டும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்படும் என்ற எண்ணத்தை மாற்ற, மோட்டார் சைக்கிளில் தேசிய கொடியை கட்டிக் கொண்டு இராக் முழுவதும் பயணிக்கும் இளைஞர்கள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. மும்பை தாக்குதல்: கசாப் கிராமத்துக்கு சென்ற நிருபர்களுக்கு என்ன நடந்தது? மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக, 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். அதனை தொடர்ந்து அஜ்மல் கசாப்பின் கிராமத்தில் நிலவிய சூழலை தெரிந்துக் கொள்ள அங்குச் சென்ற பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தனது அனுபவத்தை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். விளம்பரம் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள், கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தியுடன் விடிந்தது. இந்தியாவின் நிதி தலைநகர் என அழைக்கப்படும் மும்பையில் 160 பேரை பலிவாங்கிய அந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்களில் கசாப்பும் ஒருவர். தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதா…

  21. அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.! ஹைத­ரா­பாத்தில் நடை­பெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­வதால் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு எதிர்­வரும் 28ஆம் திகதி ஹைத­ரா­பாத்தில் நடை­பெ­று­கி­றது. மாநாட்டை பிர­தமர் நரேந்­திர மோடி தொடங்கி வைக்­கிறார். இம்­மா­நாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­கிறார். அமெ­ரிக்க தொழில் முனைவோர் குழு­வுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வரு­கிறார். ஹைத­ரா­பாத்தில் இவர் 3 நாட்கள் தங்­கு­கிறார். இவாங்கா ட்ரம்ப் …

  22. பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையின் சீற்றம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, இன்னும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என இந்தோனீசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. எரிமலைக்கு தொலைவில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்கள் தங்களது கால்நடைகளை விட்டுவர விரும்பவில்லை. இரண்டாம் நாளாக பாலி விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். ரத்து செய்…

  23. சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்ட மோடி பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:- டிசம்பர் 4-ந்தேதி நாம் இந்திய கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். தேசத்துக்கும், பூமியின் பெருங்கடல்களுக்கும் இடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது. நாம் வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தோம் என்றால் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை மிகச் சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாக கருதப…

  24. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் நீர்மூழ்கி கப்பலுக்கு என்ன ஆனது? படத்தின் காப்புரிமைEPA காணாமல் போன அர்ஜென்டினா கடற்படை நீர்மூழ்கி கப்பல் பற்றி மேலும் தகவல் கிடைத்துள்ளன. நீர்ழூழ்கி கப்பலுக்கும் காற்றை உள்ளிழுத்த…

  25. மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 300 பேர் பலி எதிரொலி - பாதுகாப்பு சட்டங்களை பலப்படுத்த எகிப்து நாடாளுமன்றம் தீவிரம். அமெரிக்க நடிகை மெகன் மார்க்கெலை அடுத்த ஆண்டு திருமணம் செய்கிறார் பிரிட்டிஷ் இளவசர் ஹேரி. அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விற்பனைக்கு வரி - துபை அரசின் திட்டத்தால் தங்க வியாபாரிகள் கவலை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.