Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கமலை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு! [Thursday 2017-10-19 18:00] நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை கமல் பரப்புவதாக அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூற…

    • 0 replies
    • 474 views
  2. தாஜ்மகால் ஒரு இந்து கோவில்: - மீண்டும் பா.ஜ.க எம்.பி. கருத்தால் சர்ச்சை [Thursday 2017-10-19 08:00] உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் இது அமைந்துள்ளது. தாஜ்மகாலை பாரதீய ஜனதா தலைவர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருகிறார்கள். முதலில் அது உத்தர பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து மாநில பா.ஜனதா அரசு நீக்கியது. அதையடுத்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வானசங்கீத் சாம் கூறும்போது, “தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்க கூடாது. அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம்” என்று தெரிவித்து இருந்தார்.இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு உத்தர பிரதே…

    • 0 replies
    • 443 views
  3. மெலனியா... ஒருவரா? இருவரா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப், தன்னைப் போன்ற மற்றொரு பெண்ணை பொது நிகழ்வுகளுக்கு ட்ரம்ப்புடன் அனுப்பி வைக்கிறார் என்ற குற்றச்சாட்டு இணையத்தைக் கலக்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, புயலால் பாதிக்கப்பட்ட புவர்ட்டோரிக்கோவுக்கு நிதி வழங்குவது பற்றிய திறந்தவெளிச் சந்திப்பொன்றில் ட்ரம்ப் கலந்துகொண்டார். அவருடன் சமுகமளித்திருந்த மெலனியா ட்ரம்ப்பின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே, மெலனியா, தன்னைப் போன்றதொரு நகலை அவ்வப்போது பயன்படுத்தி வருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. மெலனியாவின் நகல் என்று அறியப்படுபவர், பெரிய குளிர் கண்ணாடியை அணிந்தி…

  4. ஆஃப்கானை உலுக்கிய தற்கொலைப் படைத் தாக்குதல் - 43 வீரர்கள் பலி ஆஃப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 43 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவத் தளத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். அதில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தலிபான் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகவும், திருடப்பட்ட வாகனத்தை வைத்து இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகம் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/105334-afghanistan-suicide-bombing-attack-killed-43-soldiers.html

  5. ரஷிய அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சோப்சாக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக் (35). படத்தின் காப்புரிமைEPA Image captionசோப்சாக் விளம்பரம் பிரபலமான எதிர்க்கட்சித் தலைவர் அல்க்சி நவல்னி முற…

  6. அண்டார்ட்டிக் பகுதியில், பருவநிலை மாற்றம் காரணமாக... பென்குவின்கள் அதிக அளவில் உயிரிழப்பு! கிழக்கு அண்டார்ட்டிகா பகுதியில் அடெய்லி பென்குவின் இனம் ஒன்று உள்ளது. அதில் சமீபத்தில் மாறி வரும் பருவகால நிலைகளால் அதிக எண்ணிக்கையில் குட்டிகள் இறந்துள்ளன. இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடெய்லி என்று அழைக்கப்படும் அந்த பென்குவின் பெருங்கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறையின் காரணமாக பென்குவின் இறப்பது இது இரண்டாவது முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த இனம் பென்குவின்கள் வசிக்கும் பரப்பில் உணவு இல்லாத காரணத்தினால் குட்டிகளை விட்டுவிட்டு உணவு தேடிச் ச…

  7. சீனாவுக்கு புதுயுகம் பிறந்திருக்கிறது என்கிறார் அதன் அதிபர் ஷீ ஜின்பிங். உலக அரங்கின் நாயகனாக சீனா வலம்வரும் காலம் கனிந்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அறிவிப்பு ; ரக்காவை கைப்பற்றிய இராக்கிய படைகள், ஐஎஸ் அமைப்பின் தலைமையகமாக திகழ்ந்த இடத்தில் வெற்றிக் கொண்டாட்டம்! ஆனால் ஐஎஸ் அமைப்புக்கெதிரான போர் முடியவில்லை; தொடர்கிறது!! மற்றும் கடலோர சுறாக்களை கண்காணிக்கும் டிரோன் தொழில்நுட்பம்! ஆஸ்திரேலிய கடற்கரையில் குளிப்பவர்களை பாதுகாக்க புது முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  8. குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்பு குர்திஷ் படைகள் வசம் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இராக் அரசப் படைகள் கூறியுள்ளன. படத்தின் காப்புரிமைAFP Image captionகடந்த செப்டம்பர் 25 அன்று நடந்த சுதந்திர வாக்கெடுப்பின் முடிவுகளை குர்திஷ் தலைவர்…

  9. வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங். படத்தின் காப்புரிமைREUTERS Image captionசீன கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகிறார் அதிபர்…

  10. இந்தியாவில் ராணுவ ஆட்சி தேவை.. பெரும்பான்மை மக்கள் கருத்து இதுதான்.. ஷாக்கிங் சர்வே!இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என அதில் பெரும்பான்மையோர் நினைப்பதாகவும் சர்வே ஒன்று தெரிவிக்கிறது. "பியூ ரிசர்ச் அமைப்பு, நடத்திய சர்வேயில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012ம் ஆண்டு முதல் 6.9 சதவீதத்திற்கும் குறையாமல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 85 சதவீத மக்கள் மோடி அரசை முழுமையாக நம்புகிறார்கள்" என்று முத்தாய்ப்பு கொடுக்கிறது இந்த ஆய்வு. பல்வேறு நாடுகளிலும் அந்த நாட்டு அரசுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது பியூ அமைப்பு.இந்தியாவில் நடத்தப்பட்…

  11. மோசமாகும் இராக்கிய குர்திஸ்தான் மோதல்! கிர்குக்கை கைப்பற்றிய இராக் இராணுவம்! சிஞ்சரைக் கைப்பற்றிய அவர்கள் ஆதரவு ஆயுதக்குழு ; அண்டவெளி நட்சத்திர மோதலின் அதிசய அதிர்வலைகள்! நூற்றிமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய அலைகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை!! மற்றும் தொலைதூர பனிப்பிரதேசத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியை! கனேடிய ஆர்க்டிக் பகுதியின் அதிசய பெண்மணி பற்றிய பிபிசி படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  12. வட கொரியா பற்றி நாடகம் தயாரித்த பிரிட்டன் தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் எழுதவிருந்த இந்…

  13. திடீரெனக் கறுத்த வானத்தால் இலண்டன் வாசிகள் அதிர்ச்சி! (படங்கள்) இலண்டனின் சில பகுதிகளில் நேற்று வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர். எவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது. அதில், தெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் …

  14. பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால் பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும் என இந்தியா உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதையடுத்து எழுந்த சர்ச்சைகளினால் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பாரதமாதாவின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையால் எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை பாதுகாப்போம் என்று உறுதி அளித்துள்ளார். யோகி ஆதித்யநாத் அக்டோபர் 26 ஆம் திகதி ஆக்ராவுக்குச் சென்று சுற்றுலாத்திட்டங்களை மேற்பார்வையிடப் போவதாகவும், தாஜ்மஹாலை யார் கட்டினார்கள் என்பது முக்கியம…

  15. கார் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவிலாளர் படுகொலை! உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் குலைநடுங்கச் செய்த ‘பனாமா பேப்பர்’ விவகாரத்தில் முன்னின்று உழைத்த புலனாய்வு ஊடகவியலாளரான டெப்னி கொரோனா காலிஸியா நேற்று (16) படுகொலை செய்யப்பட்டார். மால்ட்டாவின் கிராமங்களில் ஒன்றான மால்பினிஜா என்ற இடத்தில், இவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கார் வெடித்துச் சிதறியதில் இவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், இது கார் குண்டுத் தாக்குதல் என்பதை உறுதிசெய்துள்ளனர். டெப்னியின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மால்ட்டா பிரதமர் ஜோசப் மஸ்கட், இது ஊடக சுதந்திரத்தின் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல…

  16. 19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்.. ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்டியதால் 19 வயது இளைஞர், இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். லண்டனை சேர்ந்தவர் 19 வயதான இந்திய வம்சாவளியான அக்ஷய் ரூபரேலியா பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். பாடசாலையில் கல்வி கற்றுக் கோண்டே இணையம் மூலம் இவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றார். இதன்மூலம் அவர் ஒரு வருடத்தில் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வியாபாரம் செய்து 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் லாபம் ஈட்டியுள்ளார். கடந்த 16 மாதங்களுக்கு முன்பு உறவினர்களிடம் 7 ஆ…

    • 2 replies
    • 821 views
  17. எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம்: ஐ.நா-வில் கறுவிய வடகொரியா ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியாவின் துணைத் தூதர் கிம் இன் யாங், 'எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்' என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார். மேலும், '1970-களுக்குப் பிறகு அமெரிக்காவால் மிகத் தீவிரமான அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நாடு, வடகொரியா மட்டும்தான். ஆகையால், தற்காப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்கிக்கொள்ள வடகொரியாவுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. கொரிய தீபகற்பத்தில் பிரச்னை மிகவும் தீவிரமாக இருக்கிறது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் த…

  18. சோமாலியாவில் லொறி குண்டுத் தாக்குதல்; முப்பது பேர் பலி! சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் சுமார் முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் முற்புறம், முழுவதும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட லொறியொன்று வெடிக்கச் செய்யப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டது முதல் சிறிது நேரத்துக்கு அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் என்பனவற்றில் தீ பரவியதாகவும், கடும் முயற்சியின் பின் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மதீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இத்…

  19. கேடலோனியர்கள்; குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம்! சமீபத்தில் இராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்குட்பட்ட பகுதியிலும் ஸ்பெயினில் உள்ள கேடலோனியா சுயாட்சி சமூகத்துக்குட்பட்ட பகுதியிலும் நடந்த கருத்துக்கேட்பு வாக்கெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்திஸ்தான் தனி நாடு உருவாக வேண்டும் என்று குர்திஷ் மக்களும்; கேடலோனியா தனி நாடு உருவாக வேண்டும் என்று கேடலோனியா பிரதேச மக்களும் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே, இந்த வாக்கெடுப்புகளை ஏற்க இராக்கும் ஸ்பெயினும் மறுத்துவிட்டன. …

  20. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் எல்லையை அண்மித்துள்ள காட்டுப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று போர்த்துக்கல்லின் எல்லையை அண்மித்துள்ள ஸ்பெயின் நாட்டின் கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வ…

  21. தெரேசா மே ஜீன் குளோட் ஜங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரசல்ஸிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்றும் சில மணிநேரத்தில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜீன் குளோட் ஜங்கருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவருடனான பேச்சுவார்த்தைகளின்போது பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்தில் எந்த வித விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ள மாட்டார் என பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் சில வாரங்களிற்கு முன்னர் தான் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்களையே பிரதமர் மீண்டும் வலியுறுத்துவார் என அவரின் …

  22. ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா! ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. 'யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம்' என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும், ஐ.நா அமைப்புக்கு உள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா போகோவா, 'யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுகிறோம் என்று எனக்கு அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக கடிதம் வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த முடிவு யுனெஸ்கோவுக்கு இழப்பு, அமெரிக்காவுக்கும் இழ…

  23. ஆசிய கண்டத்தில் அதிக பட்டினியாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா.. இந்தியா பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100வது இடத்துக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் இது தெரிய வந்துள்ளது. இந்தநாடுகளில் பெரும்பாலானவற்றில் உணவு தானியங்கள் உற்பத்தி குறைவு காரணமாக பட்டினி நிலை தோன்றியுள்ளது. நேற்றையதினம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி இந்தியாவில் பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த…

    • 3 replies
    • 1.3k views
  24. இராக்கில் பகையான நட்பு; குர்து - இராக்கிய படைகளுக்கு இடையில் அதிகரிக்கும் மோதல்; முப்பத்தி ஓரு வயதே ஆன உலகின் இளம் தலைவரை தேர்ந்தெடுத்த ஆஸ்டிரிய மக்கள்! ஆனால் ஆட்சியமைப்பதற்காக ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ், தீவிர வலதுசாரிகளோடு கைகோர்ப்பாரா? மற்றும் ஆப்ரிக்க கலைகளுக்கு அதிகரிக்கும் அங்கீகாரம்! வெனிஸில் நடக்கும் கலைக்கண்காட்சியிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்திக்குறிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  25. பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள மத்திய பகுதிக்கு இராக்கிய அரசு படைகள் நுழைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கிர்குக் நகரத்தின் வெளியே உள்ள முக்கிய மையங்களை குர்து படையினரிடம் இருந்து இராக் படைகள் கைப்பற்றியுள்ளது. கே 1 ராணு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.