உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26877 topics in this forum
-
அமெரிக்க எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே நியமனம்: செனட் சபையில் ஒப்புதல் கிறிஸ்டோபர் ரே - REUTERS அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யின் இயக்குநராக ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார். …
-
- 0 replies
- 505 views
-
-
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு பாகிஸ்தான் இடைக்கால பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட ஷாகித் ககான் அப்பாஸி. - படம். | ராய்ட்டர்ஸ். பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். அவரது இடத்தில் தற்போது ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார். பிரிந்திருந்த எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர். அந்நாட்டு அரசியல் சாசன முறைப்படி ரகசிய வாக்கெ…
-
- 0 replies
- 283 views
-
-
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கிளாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிளாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்ய உளவுத் துறை செயல்பட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது. இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கு…
-
- 0 replies
- 443 views
-
-
வடகொரியாவில் ஆட்சிமாற்றத்தை தாங்கள் கோரவில்லை என்றாலும், அதன் ஏவுகணைச் சோதனைகளை ஏற்க முடியாது என்கிறது அமெரிக்கா; ஊழல் குற்றச்சாட்டுக்களால் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா! எதிர்ப்பவர்களுக்கு கொலை மிரட்டல் மற்றும் புறாக்களின் மீது அதீத பற்று! மாஸ்கோவுக்கு அருகே ஆயிரக்கணக்கான புறாக்களை வளர்த்துவரும் லட்சாதிபதியை பிபிசி சந்தித்தது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 207 views
-
-
சிட்னி விமானங்கள் தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்; தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சலிற்குள்ளாகியுள்ளார் சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வ…
-
- 0 replies
- 244 views
-
-
அவுஸ்திரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவ…
-
- 1 reply
- 304 views
-
-
கர்நாடகாவில் ஒரு கூவத்தூர்: குஜராத் அரசியலில் பரபரப்பு! குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கர்நாடகா அழைத்து வரப்பட்டு, ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், குஜராத்திலிருந்து ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அக்கட்சியிலிருந்து பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சிலர் ஆளும் கட்சியான பா.ஜ.க வில் இணைந்துள்ளனர். அந்தக் கட்சியிலிருந்து மேலும் பலர் இதே முடிவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காங்கிரஸ் க…
-
- 3 replies
- 725 views
-
-
ஜெர்மனியில் தூணில் மோதிய கேபிள் காரால் அந்தரத்தில் தொங்கிய பயணிகள் ஜெர்மனியில் ரெகின் ஆற்றின் மேல், தூணில் மோதி கேபிள் கார் போக்குவரத்து தடைப்பட்டதால் பலர் அந்தரத்தில் தொங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 75 பேரை மீட்பதற்கு கொலோனிலுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புதவி அணியினர் கிரேனைப் பயன்படுத்தியுள்ளனர். 40 மீட்டர் (130 அடி) உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டோரில் குழந்தைகளும் அடங்குவதுடன், காயமுற்றோர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. இந்த சம்பவம் இடம்பெற்றபோது, அங்கிருந்த 32 கேபிள் கார்களும் இயங்கிக் கொண்டிருந்தன. கேபிள் கார்களில் ஒன்று ஆதார அமைப்பின் ஒரு பகுதியில் மா…
-
- 0 replies
- 334 views
-
-
வெனிசுவேலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுராவின் அரசின் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது! ஆனால், இது விரக்தி மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு என்கிறார் அவர், துருக்கியில் கடந்த வருட சதிப்புரட்சி முயற்சி சந்தேக நபர்களுக்கு எதிராக பெரும் விசாரணை! குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அணிவகுத்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்! மற்றும் சீனாவில் கருமுட்டைகளை உறைநிலையில் பாதுகாத்து வைக்க திருமணமாகாத பெண்களுக்கு அனுமதியில்லை!சிகிச்சைக்காக அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள்! இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 315 views
-
-
அமெரிக்க ராணுவம் அதிகளவு வயாகரா வாங்குவது ஏன்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிறைப்புத் தன்மைக்கு பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடப்பட்டுள்ளது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் இனிமேல் பணியாற்ற முடியாது என டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளின் உடல்நலத்திற்காக செலவிடப்படும் தொகையை விட மற்றொரு விடயத்திற்காக செலவிடப்படும் தொகை அதிக அளவில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அமெரிக்க ராணுவத்தினரின் விறைப்புத் தன்மை குறைபாட்டை சரிசெய்ய பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளதாக மிலிட்டரி ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதனை அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உறுதி செய்துள்ளார். மேலும் சிட்னியில் மேற்;கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படவிருந்த வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவ…
-
- 2 replies
- 513 views
-
-
பதவியேற்று 10 நாட்களில் வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா:- வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 10 நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட அந்தோனி ஸ்காராமுக்சை தனது பதவியை ராஜினாமா செய்து அமெரிக்க அரசியலில் கவனத்தை உள்ளார். ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக பணியாற்றிய மைக் டுப்க், ஜனாதிபதியின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். இதனால், வெற்றிடமாக இருந்த அப்பொறுப்புக்கு நியூயார்க்கைச் சேர்ந்த நிதியாளர் அந்தோனி ஸ்காராமுக்சை நியமித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் டிரம்ப் உத்தரவிட்டார். டிரம்ப்பின் …
-
- 1 reply
- 277 views
-
-
இந்தியாவை சுற்றிவளைக்கும் எதிரிநாடுகளும்... ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் விளைவும்! இலங்கையில் நடந்த இனப்படுகொலைச் சம்பவத்தை, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் யாராலும் மறக்க முடியாது. தமிழர்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே நடந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர போடப்பட்டதுதான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்று சொல்லப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கான பல்வேறு நலன்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டு முப்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும், அதில் சொல்லப்பட்ட அம்சங்களை நிறைவேற்றியுள்ளதா இலங்கை அரசு? உண்மையில் அந்த ஒப்பந்தம் இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனுக்காக கொண்டுவரப்படவில்லை. அது, …
-
- 0 replies
- 1.4k views
-
-
வெனுசுவேலாவில் புதிய அரசியல் சாசன சபைக்கான தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அங்கு வன்முறைகள் தொடருகின்றன, அடுத்த என்ன என்று கேள்விகள்! ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே ராஜதந்திர மோதல்கள் வலுத்துவரும் சூழலில் 750க்கும் அதிகமான அமெரிக்க அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது மற்றும் இராக்கிலிருந்து அகதியாக பிரிட்டனுக்கு வந்த பார்வையற்ற ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சிப்பெற்றுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 205 views
-
-
755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை படத்தின் காப்புரிமைAFP Image captionஇந்த நடவடிக்கைளால் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 455 ஆக குறையும் ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்காவின் இரு சபைகளும் ஆதரவளித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள், தூதரக பணிகளில் இருந்து கட்டாயம் வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஊழியர்களை வெளியேற்றும் முடிவு வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி கட்டாயம் வெளியேற்றப்பட உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை ரஷ்ய அதிபர் புதின் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 384 views
-
-
பாகிஸ்தான்: திசை அறியா பயணம் ‘பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனா இருந்தா, பாதி சுமை குறைஞ்சா மாதிரி'. இந்த ‘பாக்கியம்', நமக்குக் கிட்டவே கிட்டாது போல் இருக்கிறது. பாகிஸ்தானின் அரசியல் மாற்றங்கள் நமக்கு கவலை அளிப்பதாகவே உள்ளன. தனது வருமானத்தை சரியாக காட்டத் தவறிய காரணத்தால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அன்றே அவர் பதவி விலகி விட்டார். இதையடுத்து, முன்னாள் பெட்ரோ லியத் துறை அமைச்சர் ஷஹித் காகான் அப்பாஸி இடைக்கால பிரதமராகி இருக்கிறார். பதவி விலகிய நவாஸின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், இப்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளா…
-
- 0 replies
- 464 views
-
-
கீதையுடன் பைபிள், குர்ஆன் சர்ச்சை பேய்க்கரும்பில் திறக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதையுடன் வைக்கப்பட்ட குர்ஆன், பைபிள் ஆகிய புனித நூல்கள் அகற்றப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 15 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இம் மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்தது. ஆனால் , அப்துல்கலாம் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசிய…
-
- 0 replies
- 460 views
-
-
உலகிலேயே "நீளமான" தொங்கும் பாலம் ஸ்விட்சர்லாந்தில் திறப்பு படத்தின் காப்புரிமைEPA Image captionஇதற்கு முன்னதாக இங்கு இருந்த பாலம் பாறைகள் விழுந்து சேதமாகிவிட்டது ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் 500 மீட்டர் (1,640 அடி) நீளத்தில், உலகிலேயே நீளமான தொங்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. காற்று வாங்க அல்லது உடற்பயிற்சிக்காக இயற்கையான சூழலில் சென்றுவர உகந்த அளவில் இந்த தொங்கும் நடைபாதை பாலம் உள்ளது. படத்தின் காப்புரிமைEPA "ஐரோப்பிய பாலம்" என்று பெயரிடப்பட்டுள்ள 494 மீட்டர் நீளமான இந்த பாலம் கிராபென்குஃபர் செங்குத்து குறுகிய பள்ளதாக்கிற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மேலே 110 …
-
- 0 replies
- 635 views
-
-
ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதி துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்:- ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமுற்றோரில் பொலிஸார் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தரப்பினர் அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் மீது அங்கிருந்த பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் படுகாயம் அடைந்த …
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கையர்களுடன் சென்ற கப்பல் வடக்கு சைப்ரஸ் அதிகாரிகளிடம் சிக்கியது வடக்கு சைப்ரஸ் ஊடாக இலங்கையர்களை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கப்பல் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், குறித்த கப்பலில் பயணித்த இலங்கையர்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கப்பலில் 20 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களா அல்லது பயிற்சிகளில் ஈடுபடும் கடற்படையினரா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. ஜிபுட்டியிலிருந்து லிபியா நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த 'சீ ஸ்டார்" என்ற கப…
-
- 0 replies
- 480 views
-
-
நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகினார் ’கறார் விமர்சகர்’ மிச்சிக்கோ காக்குடானி! ஆங்கில நாவலாசிரியர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ஆம் 'மிச்சிக்கோ காக்குடானி நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகியுள்ளார்' என்பதே அது. 1955-ம் ஆண்டில் அமெரிக்காவின் கனெக்ட்டிகெட் நகரில் பிறந்த மிச்சி கல்லூரி முடித்தவுடன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னர் 1977-ல் 'டைம்' பத்திரிக்கையில் சேர்ந்தார். இரண்டாண்டுகள் அங்கு இருந்த மிச்சி 79ல் நியுயார்க் டைம்ஸில் சேர்கிறார். அதன் பின் நேற்று இரவு வரை அதில்தான் வேலை செய்தார். 83-ம் ஆண்டுவரை செய்தியாளராக இருந்த அவர் அதன் பின் புத்தக விமர்சகராக பதவியளிக்கப்பட்டார். நிறைய வ…
-
- 0 replies
- 374 views
-
-
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணித்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர். பிரித்தானியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் சார்லிக்காக பிரார்த்தனையும் வேண்டுதல்களும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிகிச்சை முறைமை தொடர்பில் கடுமையாக பல நீதிமன்றங்களில் போராடிய பெற்றோர் இறுதியில் தங்களது போராட்டத்தை கைவிட்டிருந்தனர். 11 மாத சிசுவான சார்லி கார்ட்டின் உயிர் பிரிந்து விட்டதாக அவரது பெற்றோர்களான Connie Yates மற்றும் Chris Gard உருக்கமாக தெரிவித்துள்ளனர். Great Ormond Street மருத்துவ மனையுடன் மிக நீண்ட அடிப்படையிலான ஓர…
-
- 0 replies
- 464 views
-
-
வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையால் பரபரப்பு அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய புதியதொரு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகனும் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைKCNA இந்த ஏவுகணை 3 ஆயிரம் கிலோமீட்டர் (1,865 மைல்) உயரம் சென்றதாகவும், ஜப்பான் கடலில் விழுந்ததாகவும், ஐப்பானிய தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே அறிவித்திருக்கிறது. முதலாவது ஐசிபிஎம் சோதனை நடத்திய மூன்று வாரங்களுக்கு பிறகு வட கொரியா இந்த புதிய சோதனையை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவும், தென் கொரிய ராணுவமும் தரை…
-
- 0 replies
- 652 views
-
-
உலகமயமாகும் பெரியார்: ஜெர்மனியில் தொடங்கிய சர்வதேச மாநாடு! உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் பெரியார். அங்கு 27 நாள்கள்வரை தங்க நேர்ந்தபோது, அந்நாட்டைச் சிலாகித்திருக்கிறார். அவரது எண்ணத்தில் அந்நாட்டிற்கு தனியிடம் இருந்திருக்கிறது. அதே ஜெர்மனியில் நேற்று தொடங்கியிருக்கிறது பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு. தந்தை பெரியாரின் தத்துவமும், சிந்தனைகளும் பல நாடுகளில் பரவியிருக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பெரியா…
-
- 1 reply
- 414 views
-
-
ஜெர்மனி சூப்பர் மார்க்கெட்டில் கத்தி தாக்குதல்: ஒருவர் பலி- பலர் காயம் ஜெர்மனியில் இன்று சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த நபர் திடீரென கத்தியால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். பெர்லின்: ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஹம்பர்க் நகரின் பாம்பெக் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இன்று வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடி வந்துள்ளார். வந்த வேகத்தில் வாடிக்கையாளர்களை நோக்கி சென்ற அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை…
-
- 1 reply
- 376 views
-