Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈஃபிள் டவரை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க கண்ணாடி சுவர் இந்த வருடத்தின் இறுதிக்குள், சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை பாதுகாக்க, அதனைச் சுற்றி வலிமையான கண்ணாடி சுவர் நிறுவப்படவுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த யூரோ 2016 கால்பந்து போட்டி நடைபெற்றபோது நிறுவிய உலோக வேலிகளுக்கு பதிலாக இந்த இரண்டரை மீட்டர் சுவர் அமைக்கப்படும் என நகரின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நகரத்தின் மிக மதிப்பிற்குரிய இடங்கள் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத் துறையின் துணை மேயர் ஷான் ஃப்ரான்சுவா மார்த்தின் தெரிவித்துள்ளார். …

  2. இன்றைய நிகழ்ச்சியில்.. ஆப்கானிஸ்தானில் தன் பணிகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச்சங்கம்; அதன் வாகனத்தொடரணி மீதான தாக்குதலில் பணியாளர்கள் ஆறுபேர் கொல்லப்பட்டதையடுத்து இந்த முடிவு. கடலிலுள்ள உணவுப்பொருட்கள் கரையில் இறக்குவதற்குத் தடை; ஏமெனின் அரச ஆதரவுப்படைகளின் துறைமுகத் தடையால் பட்டினியில் வாடும் பல லட்சம் மக்கள். அழகா? ஆபத்தா?? பிரிட்டன் கடற்கரை நகரை அச்சுறுத்தும் கடற்பறவைகளை சமாளிப்பது எப்படி என்று நாடாளுமன்றத்தில் தீவிர விவாதம்.

  3. பிரெக்ஸிட் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு: பிரதமர் தெரசா வெற்றி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அமோக ஆதரவுடன் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரெக்ஸிட் தொடர்பான மசோதாவிற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்த மசோதாவிற்கு 494 பாராளுமன…

  4. பாகிஸ்தானுக்கு வழங்கிய இலங்கை விமானத்தை பின்தொடர்ந்த இங்கிலாந்து போர் விமானங்கள் : அநாமதேய தொலைபேசியால் வந்த விளைவு இலங்கை விமான சேவை பணியாளர்களுடன் குத்தகை அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கை விமானம் ஒன்று இங்கிலாந்து வான் பரப்பில் செல்லும் போது அவசரமாக நேற்று மாலை இங்கிலாந்தில் தறையிறக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குத்தகை அடிப்படையில் இலங்கையால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிகே757 என்ற விமானம் தற்போது பாகிஸ்தானால் சர்வதேச விமான சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த விமானம் 150 பயணிகளுடன் லாகூரிலிருந்து இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணித்துள்ளது. இதன்போது குறித்த …

  5. *ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்டார்; அதிபர் பூட்டினுக்கு எதிராக அடுத்த தேர்தலில் இவர் போட்டியிட முடியாமல் போகலாம். *இரான் - இராக் எல்லையில் உயிர்வாழ கடத்தலில் ஈடுபடுவோரின் சோகக்கதை; உறைபனிக்கிடையில் உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்து பிழைப்பவர்கள் குறித்த நேரடி படப்பிடிப்பு. *அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நமது பெரும்பாலான வேலைகளை ரோபோக்கள் பறித்துவிடலாம் என்கிறார்கள் லண்டன் தொழில்நுட்ப நிபுணர்கள்; இது மனிதர்களுக்கு கவலை தரும் விஷயமா?

  6. இன்றைய செய்தியறிக்கையில், * சிரியாவில் போர்க்குற்றத்துக்கான ஆதாரம்; கொலைக்களமாக அறியப்படும் இராணுவச் சிறையில் பதின்மூவாயிரம் பேர் ரகசியமாக கொல்லப்பட்டதாக அம்னஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு. * அமெரிக்காவின் ஒரு இருண்ட பக்கம்; பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்பட்ட சிறுமிகளை மீட்கும் லாஸ் ஏஞ்செலீஸ் காவல்துறையின் நடவடிக்கை குறித்த பிபிசியின் பிரத்யேகச் செய்தி. * கனவை நிஜமாக்கிய இந்தோனேசிய மாணவர்கள்; சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத காரை வடிவமைத்தவர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.

  7. ஒபாமாவின் நம்பிக்கையைத் தகர்த்த கைதி! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் விடுவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கைதியொருவர் மீண்டும் அதே குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1992ஆம் ஆண்டு, ரொபர்ட் எம்.கில் (68) என்பவர் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்த பொதுமன்னிப்பின் பேரில் 1,385 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் இவரும் ஒருவர். இந்த நிலையில், கடந்த வாரம் 500 கிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதை மருந்தை வினியோகிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ர…

    • 2 replies
    • 478 views
  8. சவூதியில் வரலாற்று சம்பவம் : பெண்களுக்கு கிடைத்த கௌரவம்! ஆணாதிக்க சமூக முறையை கொண்டுள்ள மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில், வரலாற்றில் முதல் முறையாக மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. மகளிர் தின கொண்டாட்டத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பெண்களும், பங்குபற்ற உள்ளதாக அந்நாட்டு கலாச்சார மையம் தகவல் பகிர்ந்துள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் பங்குகொள்ளும் மன்னர் குடும்பத்தினர் சார்பில், இளவரசி அல்-ஜவ்ஹரா பிண்ட் பஹத், கல்வித் துறையில் பெண்களின் பங்கு குறித்து பேசவுள்ளதாகவும், அத்தோடு கல்வி, கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சவூதி பெண்களின் சாதனைகள், பெண்களின் வளர்ச்சி பங்கு குறித்த கருத்தாடல்களுடன், தொடர்ச்சி…

  9. . போதையுடன் நடந்து விபத்தில் சிக்கினால், மூச்சு சோதனை குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும்தான் மூச்சு சோதனை என்றால் இப்போது, குடித்துவிட்டு நடந்து போகும்போது விபத்தில் சிக்கினாலும் அந்த சோதனை நடக்குமாம் -- இது நமீபியாவில். நமீபியாவின் தலைநகரத்தில் பாதசாரிகள் சாலைவிபத்தில் மாட்டிக்கொண்டால், அவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனை செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை வி்டுக்கப்பட்டுள்ளது. சாலை விபத்து நடந்தால் வாகன ஓட்டிகளை எப்படி போலிசார் சோதிப்பார்களோ அதே போல சோதனைகளுக்கு பாதசாரிகளும் உட்படுத்தப்படுவர் என்று விண்ட் ஹோக் நகர போலிசார் கூறுகிறார்கள். ஒரே விஷயம் - இந்த சோதனையை பாதசாரி உயிர் தப்பினால்தான் செய்ய முடியும் ! பாதசாரிகள்…

  10. நேரடி, நீண்ட விமான சேவையில் அதிகரிக்கும் போட்டி தோஹாவிலிருந்து ஆக்லாந்துக்கு விமான சேவையை தொடங்கியுள்ள கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம், உலகின் மிக நீண்ட, இடையில் நிறுத்தங்கள் இல்லாத ,பயணியர் விமான சேவை இதுதான் என்று கூறுகிறது. படத்தின் காப்புரிமைQATAR AIRWAYS Image captionதிங்களன்று ஆக்லாந்தில் தண்ணீர் தெளித்து வரவேற்கப்படும் கத்தார் போயிங் 777-200எல்ஆர் விமானம் QR920 என்ற அந்த விமானம் திங்கட்கிழமை 16 மணி, 23 நிமிட நேரத்துக்குப் பின் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு சற்று முன்பாகவே தரையிறங்கியது. புதிய பாதைகளில் வந்திறங்கும் விமானங்கள் மீது வழமையாக செய்யப்படுவதைப் போல இந்த போயிங் 777-200LR விமானத்தின் மீதும் குழாய்கள்…

  11. டிரம்ப் விதித்த பயணத்தடைக்கெதிராக அப்பிள், முகப்புத்தகம் கூகுள் உள்பட 100 தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு : அமெரிக்க வர்த்தகத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகள் மீது விதித்த பயணத்தடை உத்தரவு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அப்பிள், முகப்புத்தகம் மற்றும் கூகுள் உள்பட அமெரிக்காவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளன. சன் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கையெழுத்திட்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன. இந்தத் தடை ஆணையால் வெளிநாடுகளில் தங்களுடைய சேவையை விரிவுப்படுத்துவதற்கு தேவ…

  12. இன்றைய நிகழ்ச்சியில்.. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுமோதலில் சென்ற ஆண்டு பதினோராயிரத்து ஐநூறு பேர் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக ஐநா அறிவிப்பு; அதில் மூன்றில் ஒருபகுதியினர் குழந்தைகள் என்றும் கவலை. தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் பிரான்ஸின் தேசியவாத கட்சித்தலைவி மெரின் லுபென்; அவருக்கும் இம்மானுவல் மக்ரானுக்குமான ஆதரவு அதிகரிப்பதாக காட்டுகின்றன கருத்துக்கணிப்புகள். அரியணையில் அறுபத்தி ஐந்து ஆண்டுகள்; உலகில் நீண்டநாள் முடியாட்சி செய்யும் சாதனை படைத்தார் பிரிட்டிஷ் பேரரசி இரண்டாம் எலிசபெத்.

  13. சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று கார்ட்டூன்: ஜெர்மனி பத்திரிகை பிரசுரம் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று ஜெர்மனியின் பிரபல வார இதழ் ஒன்று கார்ட்டூனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெர்லின்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே சர்ச்சைக்குரிய அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளில் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நி…

  14. நெருப்புடன் விளையாடுகிறது ஈரான்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை ட்ரம்ப். | படம்.| ஏ.பி. ஈரானின் ஆயுதக் கொள்முதல் வலைப்பின்னல்களில் புதிய தடை உத்தரவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள் நுழைய தடை உத்தரவினால் ஏற்பட்டுள்ள தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் ஏமனில் ஹூதி போராளிகளை ஈரான் ஆதரிப்பது ஆகியவற்றினால் அமெரிக்கா இந்த புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்தான்ர். ஹூதி போராளிகள் சமீபத்தில் சவுதியின் போர்க்கப்பலை த…

  15. 'பெண்கள் போல நடந்து கொள்ளுங்கள்!'- ட்ரம்பின் அதிரடி உத்தரவு அதிரடி உத்தரவுகளுக்குச் சொந்தக்காரர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் நுழையக்கூடாது என்று தடை உத்தரவு போட்டு பலரின் வெறுப்புகளையும் சம்பாதிப்பவர், மறுபுறம் H1b விசாவை இறுக்கிப்பிடித்து ஒட்டுமொத்த பிறநாட்டு மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வியாழன் அன்று ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ட்ரம்ப். அதில் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். வெள்ளை மாளிகைக்கு வேலைக்கு வரும் அனைத்து ஊழியர்களும் சிறப்பான ஆடை அணிந்து…

  16. டிரம்பின் தடை உத்தரவிற்கு தடை : அமெரிக்க நீதிபதியின் அதிரடி உத்தரவு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் குறிப்பிட்ட ஏழு நாடுகளுக்கு தடைவிதித்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக, நாடு தழுவியரீதியில் அமுலில் வரும்படியான தற்காலிக தடை உத்தரவொன்றை சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி தீர்ப்பாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக செயற்படுவதற்கு, அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட வரையறை இல்லையென அரச சட்டத்தரணிகள் கூறிவந்த நிலையிலும், சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி ஜேம்ஸ் ரொபர்ட் குறித்த நிர்வாக ஆணைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார். டிரம்பின் உத்தரவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு…

  17. கச்சா எண்ணெய் 35 கி.மீ. தூரம் பரவியது : சென்னை கடலில் ஆபத்து நீடிப்பு... சென்னை: சென்னையில் எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதி ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு, இப்போது 35 கிலோ மீட்டர் தூரம் பரவி, பாலவாக்கத்தை தாண்டி பரவிக்ெகாண்டிருக்கிறது. இதனால், கடலில் மீன்வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் இல்லாததால் சென்னை கடல் பகுதியில் கலந்துள்ள ஆயிலை முழுவதும் அகற்ற முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய கப்பல் நிறுவனம் மீது மீஞ்சூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த…

    • 4 replies
    • 945 views
  18. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * கிழக்கு யுக்ரைனில் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் முடிவுக்கு வரவேண்டுமென ஐநா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கோரிக்கை; * உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகள் ஜோர்டானுக்கு இடைபட்ட பகுதியில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத சூனியப்பிரதேசத்தில் சிக்கித்தவிப்பு; * உலகப்புகழ்பெற்ற கம்போடியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமான அங்கோர் வாட்டின் அருகில் வாழ்பவர்கள் அந்த பகுதியின் சுற்றுலா வருமானத்தால் பலன் பெறுகிறார்களா? ஆராய்கிறது பிபிசி.

  19. அமெரிக்க எச்1பி மசோதா இந்திய ஐ.டி துறையில் ஏற்படுத்தும் கவலைகள் அமெரிக்க பணியாளர்களுக்கு "மாற்றாக" வெளிநாட்டைச் சேர்ந்த உயர் திறன் பணியாளர்களை நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்த, அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் புதிய சட்ட மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்திய ஊடகங்கள் இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்ப துறைக்கு ஒரு பின்னடைவு என்று விவரித்துள்ளன்; மேலும் இந்திய அரசு இது குறித்து அமெரிக்க நிர்வாகத்திடம் தனது கவலையை தெரிவித்துள்ளது. எச்-1 பி விசா என்றால் என்ன? எச்-1 பி என்ற ஒரு வகை விசா, திறமைவாய்ந்த வெளிநாட்டினர் குறிப்பாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிபுரிய வழி…

  20. பாலியல் குற்றச்சாட்டின் பேரில் சவுதி தூதரக அதிகாரிக்கு நான்கு பிரம்படி, 26 மாத சிறை; சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பலவந்தப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சவுதி தூதரக அதிகாரியொருவருக்கு சிங்கப்பூர் அரசு நான்கு பிரம்படியும் 26 மாத சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரி பாந்தர் யெஹியா ஏ.அல்ஸஹ்ரானி (39). இவர் கடந்த வருடம் விடுமுறையைக் கழிக்கும் முகமாக சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவரை பலவந்தப்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் …

  21. பாரிஸின் லூவ்ர் அருங்காட்சியகத்தில் படையினரைத் தாக்கியவர் மீது துப்பாக்கி சூடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற லூவ்ர் அருங்காட்சியகத்தில், படையினர் குழு ஒன்றின் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய ஒருவரை, பிரெஞ்சு சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பலத்த காயப்படுத்தியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES படையினரில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தாக்குதல்தாரி மீது ஐந்து துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டதாகவும், அவர் அரபு மொழியில் `இறைவன் பெரியவர்` என்று கூக்குரலிட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். தாக்குதல்தாரி வயிற்றில் சுடப்பட்டார். ஆனால் அவரை அவசர சேவைப் பி…

  22. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற நாடாளுமன்றம் ஒப்புதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற (பிரெக்ஸிட்) அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் இருந்த வெளியேறுவது தொடர்பாக பிரிட்டனில் கடந்த ஜூனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரத்தால் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகி புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார். இந்நிலையில் பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி ஜினா மில்லர் என்ற பெண் தொழிலதிபர் பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசார…

  23. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் ஆசியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுளார். முதலில் தென்கொரியாவை அவர் சென்றடைந்தார். * அமெரிக்க அதிபரின் மெக்ஸிகோ சுவர் போல, அல் ஷபாப்பின் தாக்குதலை தடுக்க, கென்யா தனது எல்லையில் வேலி அமைக்கிறது. * எகிப்தில் கண்ணாடி கைவினைப் பொருட்களை தயாரிக்கும் கிராமம் ஒன்றுக்கு சென்று, பிபிசி வழங்கும் சிறப்புத் தகவல்.

  24. பேரழிவை ஏற்படுத்திய ஹிட்லரின் கொடூர ‘ஆயுதம்’ ஏலத்திற்கு! அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி விரைவில் ஏலத்திற்கு வரவிருக்கிறது. நாஸிப் படையினரால் ஹிட்லருக்கு பரிசளிக்கப்பட்டிருந்தது இந்தத் தொலைபேசி. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, பெரும்பாலான கட்டளைகளை இந்தத் தொலைபேசி வாயிலாகவே ஹிட்லர் பிறப்பித்ததாகக் கருதப்படுகிறது. இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கும் ஆணைகளையே ஹிட்லர் இந்தத் தொலைபேசி மூலம் பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது. 1945ஆம் ஆண்டு முதல் பேர்லினில் வைக்கப்பட்டிருந்த இந்தத் தொலைபேசி, முதன்முறையாக அமெரிக்காவில் ஏலத்தில் விடப்படவிருக்கிறது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் ஏல விற்பனை நிறுவனமே இதை ஏலத்தில்…

  25. ஆஸி. - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஒபாமா நிர்வாகத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் ஓர் "வாய்பேசா ஒப்பந்தம்" என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் இறுதியில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.