Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. செருப்பில், காந்தியடிகள் படம்... அடங்காத அமேசான்! அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் செருப்பில் காந்தியடிகளின் படத்தை போட்டு ஒட்டு மொத்த இந்தியர்களையும் இழிவு படுத்தியுள்ளது. காந்தி படம் அச்சிடப்பட்ட அந்த செருப்பு விலை ரூ.1190 என்றும் வெப்சைட் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் ஆன்லைன் வணிகம் செய்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் தனது வெப்சைட்டில் வீட்டு வாசலில் போடப்படும் மிதியடி பற்றிய ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்திய தேசிய கொடி போல இருந்த அந்த மிதியடிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.அமேசான் நிறுவன அதிகாரிகள் விசா திரும்பப் பெறப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரித்த பிறகே அமேசான் ந…

  2. பிரேசில் சிறைக்குள் பாரிய கலவரம் : கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேசில் நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள நடால் நகரத்தில் உள்ள அல்காகஷ் என்ற சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இருதரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டுள்ளனர். தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் விரைந்து சென்று கலவரத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். …

  3. அராபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா தலைவர் பலி அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், யேமன் நாட்டுக்கு உட்பட்ட பய்டா என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/

  4. ஒபாமாவின் இறுதி சந்திப்பு : அரசியல் ஆர்வலர்கள் ஆர்வத்தில் அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைகின்றது. ஒபாமா, வழக்கமாக வொஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையில் உள்ள கேட்போர் கூடத்தில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துக்களை தெரிவிப்பார். இந்நிலையில், பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் …

  5. சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை தென் சீன கடற்பரப்பு விவகாரம் தொடர்பில் சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. தீவுகளுக்கு பிரவேசிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையே இதற்கான காரணமாகும். தென் சீன கடற்பரப்பில் காணப்படும் தீவுகளுக்கு சீனா பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என அமெரிக்க ராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட உள்ள றெக்ஸ் ரில்லர்சன் (Rex Tillerson ) தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சீனாவின் தேசிய ஊடகங்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளன. முரண்பாடுகளை வலுக்கச் செய்யும் வகையில் செயற்படக் கூடாது என சீனா கோரியுள்ளது. http://globaltamilnews.net/archives/13686

  6. ஹங்கேரிய பெண் புகைப்பட செய்தியாளருக்கு மூன்று ஆண்டு நன்னடத்தை கால தண்டனை ஹங்கேரிய பெண் புகைப்பட செய்தியாளர் பெட்ரா லாஸ்லோவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஹங்கேரி – செர்பியா எல்லையில் போலீஸ் பாதுகாப்பு வட்டத்தை மீறிய புகலிடக் கோரிக்கையாளர்களை எட்டி உதைப்பதும், தடுக்கி விழவைப்பதும், பதிவானதைத் தொடர்ந்து, ஒழுங்கற்ற நடத்தை எனும் குற்றச்சாட்டின் பேரில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக பெட்ரா லாஸ்லோகூறியுள்ளார். http://globaltamilnews.net/archives/13668

  7. ஐரோப்பா : கடும் குளிரில் குடியேறிகள் தவித்து வருவதாக ஐ.நா கவலை குடியேறிகளுக்கு சில நாடுகள் ஆதரவு தாராததால், ஐரோப்பாவில் உள்ள குடியேறிகள் கடும் குளிரில் மிக பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருவதாக, ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள குடியேறிகள் கடும் குளிரில் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கிரேக்க தீவுகளில் பல வெப்பமடையாத கட்டிடங்களில் பலர் தங்கியுள்ளனர் என்றும், பல்கேரியாவில், குளிர் மற்றும் சோர்வு காரணமாக பல குடியேறிகள் இறந்துள்ளனர் என ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு இட்டுச் செல்லும் பால்கன் பாதையில் உள்ள நாடுகள், குடியேறிகளை வரவிடாமல் தொடர்ந்து தடுப்பதாகவும் , காவல் …

  8. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சைப்ரஸ் பேச்சுவார்த்தைகள் - சமாதானம் சாத்தியமா? துருக்கிய படை அங்கு தொடர வேண்டும் என்கிறார் துருக்கிய அதிபர். * அமெரிக்கா வரும் கியூபர்களுக்கு தானாகவே விசா இன்றி வதிவிட அனுமதி வழங்கும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்துகிறது; கியூப அரசாங்கம் அதனை வரவேற்றுள்ளது. * உலகில் அதிக மது அருந்தும் நாடுகளில் ஒன்று தென்னாப்பிரிக்கா; அதனை மாற்றுவதற்கான ஒரு திட்டம் குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்

  9. மொஸ்கோ ஹோட்­ட­லுக்கு பாலியல் தொழி­லா­ளி­களை அழைத்துச் சென்ற டொனால்ட் ட்ரம்ப் படுக்­கையில் சிறுநீர் கழித்­தாராம்; ரஷ்ய புலனாய்வாளர்களிடம் வீடியோ உட்பட ஆதாரங்கள் உள்ளதாக செய்தி - பொய்யான செய்திகள் என ட்ரம்ப் மறுப்பு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்ப் 5 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ரஷ்ய ஹோட்­ட­­லொன்றில் விலை­மாது ஒரு­வ­ரிடம் பாலியல் உறவு கொண்­ட­தா­கவும் ஹோட்டல் அறையின் படுக்­கையில் சிறுநீர் கழித்­த­தா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் வெளி­யா­கி­யமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 'வோட்­டர்ஸ்­போர்ட்கேட்' (Watersportsgate) என இந்த சர்ச்சை குறிப்பிடப்­ப­டு­கி­றது. ட…

  10. ஒபாமாவிடம் கண்ணீருடன் விருது பெற்ற துணை ஜனாதிபதி ஜோ பிடன் : எதிர்பாராத நிகழ்வு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் துணை ஜனாதிபதி ஜோ பிடன் கண்ணீருடன் விருது பெற்றார். ஜோ பிடன், ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். எனவே, தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மிக உயரிய குடிமகனுக்கான ‘சுதந்திர ஜனாதிபதி பதக்கம்’ (Presidential Medal of Freedom) என்ற விருது வழங்கும் விழா வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது. …

  11. சி.என்.என். நிருபரிடம் ‘நீங்கள் பொய் செய்திகளை வெளியிடுபவர்கள்’ என்று சீறிய ட்ரம்ப் படம். | ராய்ட்டர்ஸ். தனக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உறவு பற்றிய தகவல்களை கசிய விட்டதற்காக நாட்டின் உளவுத்துறையையும், அதனையொட்டி ‘பொய்ச் செய்திகளை’ வெளியிட்டதாக ஊடகங்களையும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்தார். தேர்தலுக்குப் பிந்தைய தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், ரஷ்ய ஏஜென்சிகள் சிலவற்றினால் தான் விலைமாதர்களுடன் இருந்ததாக பிடிக்கப்பட்ட படம் பற்றிய செய்திகளை தனியார் அரசியல் ஆலோசகரிடமிருந்து உளவுத்துறைகள் வாங்கியதையும், ட்ரம்ப் மற்றும் அவரது ஊழியர்கள் தேர்தல் பிரச்சார காலக்கட்டங்க…

  12. முடிவுக்கு வருகிறது கியூபர்களுக்கான அமெரிக்க விசாயின்றி தங்கும் சலுகை கியூபா மக்கள் விசா இல்லாமல் குடியேறிகளாக அமெரிக்காவுக்கு வந்து தங்க அனுமதிக்கும் நீண்டகால கொள்கையை அதிபர் பராக் ஒபாமா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இதுவரை அமெரிக்கா வந்த கியூபா குடியேறிகள் அங்கு தங்கும் அனுமதி பெறுகின்றனர் 20 ஆண்டுகளாக இருந்து வருகின்ற இந்த கொள்கைப்படி,, அமெரிக்காவுக்கு குடியேறிகளாக வந்தடையும் கியூபா மக்கள், அங்கு ஓராண்டு தங்கியிருந்த பின்னர், சட்டப்படி நிரந்தரமாக தங்குகின்ற உரிமையை பெறுபவர்களாக இருந்து வந்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் அல்லது நாடு கடத்தப்படும் தங்களது மக்…

  13. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இன்னமும் சில நாட்களே இருக்கின்றன; ஆனால், அவரது முதல் சண்டை அமெரிக்க புலனாய்வு துறையுடந்தான் இருக்கப்போகிறதோ? * பனிப்பொழிவால் அவதியுறும் கிரேக்கத்தில் அகதிகள் படும் பாடு; தொடரும் பெரும் குளிரால் மேலும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று உதவிநிறுவனங்கள் எச்சரிக்கை. * நீர் அருந்த கருவிகளை செய்து பயன்படுத்தும் சிம்பான்ஸி குரங்குகள்

  14. போய் வாருங்கள் ஒபாமா! அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்குத் தொடக்கமாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது. எழுத்தாளர் நடைன் கார்டிமர் கொல்கத்தா வில் 2008 நவம்பரில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். "பாதி கறுப்பர்தான் ஒபாமா" என்றார் அவர். நோபல் பரிசு பெற்ற அந்த எழுத்தாளர் மேலும் ஒரு வரி சொன்னார். "அவர் பாதி வெள்ளையரும்கூட". ஒபாமா ஒரு கறுப்பர் என்று கொண்டாடப்படுகிறார். அவரது கணிப்பு எளிமையானது. ஆழமானது. சின்னதாக நாம் ந…

    • 2 replies
    • 452 views
  15. சிங்கம், புலி வளர்க்க தடை! ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.93 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் சிங்கம், புலி, மற்றும் சிறுத்தைகளை தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அவற்றை நாய்கள் போன்று தெருக்களிலும், கடற்கரையிலும் அவற்றை கையில் பிடித்தபடி நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அத்தகைய போட்டோக்களை சமூக வளைதளங்களிலும், இன்ஸ்டாகிராமிலும் பிரசுரித்து வருகின்றன…

    • 0 replies
    • 532 views
  16. "பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகளுக்கு தனி நீச்சல் குளம் கிடையாது" ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை ஆண்-பெண் இருபாலாருக்குமான பொது நீச்சல் குளங்களுக்கு அனுப்பி வைக்க, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.படத்தின் காப்புரிமை "பொது பள்ளி பாடத்திட்டம்" மற்றும் சமூகத்தில் குழந்தைகள் "வெற்றிகரமாக ஒன்று கூடுதல்" ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதால் அதிகாரிகள் அதை நியாயப்படுத்தியுள்ளனர். அது மத சுதந்திரத்தில் தலையீடுவதாக உள்ளது என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதே சமயம் அது மத சுதந்திரத்தை மீறுவதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்…

    • 0 replies
    • 839 views
  17. மம்தா கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 2 ஆதரவாளர்கள் உயிரிழப்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சி அலுவலகத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு மிதினிபுர் மாவட்டத்தின் கராக்பூர் பகுதியில் உள்ள உள்ள திரிணாமூல் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சில திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். கச்சா குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்ட…

  18. ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டேனா? ஆவேசத்துடன் டிரம்ப் மறுப்பு தன்னை சங்கடத்துக்குள்ளாக்கும் முக்கிய தகவல்களை ரஷ்யா வைத்துள்ளதாக கூறப்படுவதற்கு எதிராக கடுங்கோபத்துடன் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னை பயன்படுத்திக் கொள்ள ரஷ்யா எப்போதும் முயன்றதில்லை என்று கூறியுள்ளார். தாங்கள் சமரசம் செய்து கொண்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள டிரம்ப் மற்றும் புதின் அலுவலகங்கள் இது போன்ற தவறான தகவல்களை பொது மக்களிடையே கசிய அனுமதித்த உளவு முகமைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், , '' நாம் என்ன நாஜி ஜெர்மனியிலா வாழ்ந்து வருகிறோம்? என்று கேள்வியெழுப்பினார். டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் குழு…

  19. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பணியாற்றிய பின்னர் தனது பிரியாவிடை உரையை வழங்க தனது அரசியல் ஆரம்பக் களமான சிக்காக்கோவுக்கு சென்றார் ஒபாமா. * சைப்பிரஸின் எதிர்காலம் குறித்து பேச்சுக்கள் தொடர்கின்றன. பிரிந்த நாட்டின் துருக்கிய பக்க தலைவர்கள் பிபிசியிடம் பேசினார்கள். * ஜிம்பாப்வே-யின் சர்ச்சைக்குரிய காணி மறுசீரமைப்புத் திட்டத்தை அடுத்து அங்குள்ள விவசாயிகள் எப்படி தாக்குப் பிடிக்கிறார்கள்?பிபிசியின் சிறப்பு தகவல்.

  20. இரண்டாம் உலகப் போரை உலகுக்கு அறிவித்த பெண் நிருபர் மரணம் இரண்டாம் உலகப் போரை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெண் பத்திரிகையாளர் க்ளெயார் ஹொலிங்வேர்த் தனது 105வது வயதில் இன்று காலமானார். பிரித்தானிய ஊடகங்களில், உலகின் முக்கிய பிரச்சினைகளை கள நிலவரங்களுடன் தொகுத்துத் தரும் நிருபராகப் பணியாற்றிய இவர்தான், போலந்துக்குள் ஹிட்லரின் நாஸிப் படைகள் புகுந்ததை முதன்முதலாக உலகுக்கு அறிவித்தவர். இரண்டாம் உலகப் போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்ததையடுத்து போலந்துக்குச் சென்றிருந்த க்ளெயார், அங்கிருந்த இராஜாங்க அதிகாரி ஒருவரது காரை எடுத்துக்கொண்டு ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த போலந்துப் பகுதிக்குச் சென்றார். அங்கே அவர் ய…

  21. ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார் ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் தனது 82 ஆவது வயதில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கால­மானார். அந்­நாட்டில் அர­சியல் மற்றும் சமூக சீர்­தி­ருத்­த­மொன்றை வலி­யு­றுத்­தி­யதன் மூலம் அவர் அங்­குள்ள மக்­களின் மனதில் நீங்­காத இடத்தைப் பிடித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் 1994 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1999 ஆம் ஆண்டு வரை அந்­நாட்டின் வைப­வ ­ரீ­தி­யான, அதே­ச­மயம் செல்வாக்குமிக்க ஜனாதிபதி பதவியை வகித்தார். http://www.virakesari.lk/article/15334

  22. அவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம் அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயீன்ஸ்­லாந்து மாநில கடற்­க­ரையில் சிறிய ரக விமா­ன­மொன்று அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விழுந்து விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பயணம் செய்த சுமார் 20 வயது மதிக்­கத்­தக்க பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஏனைய மூவர் காய­ம­டைந்­துள்­ளனர். மிடில் தீவுக்கு அண்­மை­யி­லுள்ள கடற்­க­ரையில் இடம்­பெற்ற மேற்­படி விபத்­தை­ய­டுத்து அதில் பயணம் செய்த பெண்­ணொ­ரு­வரும் இரு ஆண்­களும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் விமான சிதை­வு­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்­டனர். …

  23. #ObamaFarewell அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த ஒபாமா! அமெரிக்க அதிபர் ஒபாமா சிக்காகோவில் ’Farewell’ உரையாற்றி வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20-ம் தேதி நிறைவடைகிறது. அதிபராக ஒபாமா பேசும் கடைசி உரை என்பதால் ஒபாமாவுக்கு பிரியாவிடையளிக்க ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டுள்ளனர். ஒபாமா பேசத் தொடங்கியதும், திரண்டிருந்த மக்கள் ’மேலும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருங்கள் ஒபாமா’, என்று கோஷமிட்டனர். அதற்கு சிரித்து கொண்டே மறுப்பு தெரிவித்துவிட்டார். ஒபாமா பேசுகையில்,’ கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை. முன்பை விட அமெரிக்கா வலிமை அடைந்துள்ளது. அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டு உணர்வை ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.